Friday, October 24, 2008

ஈழம்: தமிழ் சசியின் பேட்டி - விரைவில்.

·

பதிவுலக நண்பர்களே! ஈழப்பிரச்சினை குறித்து பதிவர் தமிழ் சசி அவர்களின் பேட்டியை விரைவில் இந்த வலைப்பூவில் வெளியிட இருக்கிறேன்.

தமிழ் சசியின் பதிவுகளை படித்து வருபவர்களுக்கு ஈழம் பற்றி அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிந்திருக்கும். ஆனால் ஈழம் குறித்து ஆழ்ந்த விசயங்களில் முன்பே தெரிபு இல்லாதவர்களுக்கு இவர் பதிவுகள் எல்லாவற்றையும் விளக்கிவிடா. எனவே நமக்கு வேண்டிய செய்திகளை கேள்விபதில் மூலம் அவரிடமிருந்து பெற்று 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிட அனுமதியை பெற்று உள்ளேன்.

13 comments:

Anonymous said...
October 24, 2008 at 10:54 PM  

Good !

Waiting.

Thamiz Priyan said...
October 24, 2008 at 11:24 PM  

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழ்சசியின் பதிவுகளில் ஈழம் தொடர்பான பகுதிகளில் நிறைய தகவல்கள் இருக்கின்றன.
கேள்வி பதிலில் வழக்கம் போல், தமிழகத்தில் இருந்து மட்டுமே பேசுவது போல் இல்லாமல், முதலில் சில அடிப்படைத் தகவல்களையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

1. மொத்த மக்கள் தொகையில் தமிழர்களின் சதவீதம்?
2. தமிழ் பேசக் கூடியவர்களில் தமிழர்கள், முஸ்லிம்கள்,மலையக மக்களின் சதவீதம் தனித்தனியே எவ்வளவு?
3. வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழ் பேசக் கூடியவர்களின் நிலை?
4. தமிழர்களில் ஒட்டுக் குழுக்கள் யார்? எத்தனை சதவீதம்?
5. etc...

மோகன் கந்தசாமி said...
October 24, 2008 at 11:30 PM  

நன்றி ராம்,

தமிழ்பிரியன்,

என்ன ஆச்சர்யம்! நானும் உங்களது கேள்விகளை போன்றே தான் தயார் செய்து அனுப்பி உள்ளேன். எனக்கும் இவற்றில் அடிப்படை அறிவு உண்டு. உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த நன்றி. வேறுசில அறிவுரைகளையும் எதிபார்க்கிறேன்.

தமிழன் said...
October 24, 2008 at 11:37 PM  

1.யார் அந்த இனத்துரோகி ஆனந்தசங்கரி?
2.நம் தமிழீழ சகோதரர்கள் உண்மையில் விடுதலை புலிகளை ஏற்றுக்கொண்டு உள்ளனரா?
3.விடுதலை புலிகளை பற்றி ஏன் இத்தனை அவதூறு பிரச்சாரம்?

தமிழன் said...
October 24, 2008 at 11:38 PM  

இதை எப்போது வெளியிடுவிர்கள் எப்படி தெரிந்து கொள்ளவது நண்பரே?

நசரேயன் said...
October 24, 2008 at 11:41 PM  

வரட்டும் நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்குறோம்

மோகன் கந்தசாமி said...
October 24, 2008 at 11:46 PM  

நண்பர் தீலிபன்,

உங்கள் ஆலோசனை கேள்விகளுக்கு நன்றி. கேள்விகளை தொடர்ந்து அனுப்பி வருகிறேன். வார இறுதியாகையால் பதில்கள் விரைவில் வரும் என்று எதிபார்க்கிறேன். எதிர் கேள்விகள் என்ற வகையில் சில வற்றையும் கேட்க வேண்டும்.

முதல் கட்ட பதில்கள் வந்ததும் பாகம்-1 -ஐ வெளியிட்டு விடுகிறேன்.

நன்றி.

மோகன் கந்தசாமி said...
October 24, 2008 at 11:46 PM  

நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...
October 25, 2008 at 12:10 AM  

ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.

1.அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் ஆதரவை தமிழீழம் எப்படி பெறப்போகிறது.

2.ஒபாமா வெற்றி பெற்றால் அமெரிக்க ஆதரவை பெற முடியுமா?

3.தனி ஈழம் கிடைக்காத பட்சத்தில் குறைந்த பட்ச மாற்றுத்தீர்வு என்ன?

4.இந்தியாவின் ஆதரவை பெற என்ன வழி?
5.அனைவரும் சமம் என்ற ஜனநாயக கோட்பாட்டை உலக சமுதாயம் சிங்கள் அரசின் மீது திணிக்க முடியுமா?
6. ஈழத்தமிழனின் துயரை ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுத்து உலகம் உணரச் செய்ய முடியுமா?.

இன்னும் பல...

மோகன் கந்தசாமி said...
October 25, 2008 at 12:36 AM  

///எப்படி தெரிந்து கொள்ளவது நண்பரே?///

திலீபன், உங்கள் மெயில் ஐடி -யை அளித்து மின்னஞ்சலில் பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள். என் வலைப்பூ முகப்பில் இதற்கு வசதி உள்ளது. பதிவிட்ட அடுத்த மணி நேரத்தில் உங்களுக்கு பதிவுகள் வந்து சேரும். நன்றி

மோகன் கந்தசாமி said...
October 25, 2008 at 12:38 AM  

நண்பர் குடுகுடுப்பை,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, உங்கள் கேள்விகளையும் இணைக்கிறேன்.

Anonymous said...
October 26, 2008 at 2:18 PM  

1. LTTE is really weak now? or SL Govt's propaganda only? (present situation)

2. What about LTTE next action?

3. Tamil side (LTTE) has good infulential persons in foregin coutries?

Please try to answer

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 2:26 AM  

Mr Edwin,

//Please try to answer//

I've included these questions too.

Thanks