Monday, October 27, 2008

கலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முகவரி..

·

கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிருந்த கலைஞர் இரு வாரங்களுக்கு முன் கிடைத்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். ஆனால் இப்போது வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டது கலைஞர் அல்ல என்றும் அது கலைஞரின் போலி என்றும் கூறுகின்றன. இனி கலைஞர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ம்ஹ்ம்ம்..துக்கம் தொண்டையை அடைப்பதால் இனி காமெடி கை கொடுக்காது. விஷயம் இதுதான். போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவது என்ற முக்கிய தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடாத ப்ரனாப்-பாசில் கூட்டறிக்கை எண்ணூறு டன் உதவிப்பொருள் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கையில் எவ்வித மாற்றமோ இன்றி பிரச்சினையை எளிதாக முடித்துக்கொண்டது காங்கிரஸ். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் பாசில் பக்ஷே எண்ணூறு டன் பரிசுப்பொருளுடன் கிளம்புகிறார்.

ஒக்கேனக்கல் திட்டத்தில் கலைஞர் அடித்த பல்டியால் மானம் மட்டும்தான் போனது. இப்போது அடிக்கும் பல்டி ஊசலாடும் தமிழனின் உயிரை துச்சமென மதிப்பதாகிறது. நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என்னும் விஷயத்தை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் இந்த குழந்தைக்கு எவரும் எடுத்துச்சொல்லாமல் விட்டுவிட்டனர் போலிருக்கு.

தமிழ்தேசிய கலைஞர்தான் கோட்டை விட்டுவிட்டார். இந்திய தேசிய கலைஞர் என்ன ஆனார். கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை குறித்தும் குள்ள புஷ்கா ப்ரனாப்ஜி அல்வா கொடுத்து விட்டு போயிருக்கிறாரே! 1974 முதல் சமீபகாலம் வரை கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நினைத்து வந்தோம். கேள்வி ஏதுமின்றி இலங்கைக்காரன் சுட்டு பிணங்களை அனுப்பிவைக்கும்போது வாய் மூடி இருந்த மத்திய அரசு சொல்லாமல் சொல்லியது நமக்கு அங்கே உரிமை இல்லை என்று. இதற்காகவே மத்திய அரசை நொங்கு எடுத்திருக்க வேண்டும். வாய்மையின் மொத்த உருவமான இலங்கையின் சிறப்பு தூதர் தந்த உறுதிமொழியை பிரனாப்ஜி நா தழுதழுக்க உங்களுக்கு ஒப்பிக்க நீங்களும் கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டீரோ!

சரி, முக்கியமானததைத்தான் விட்டுவிட்டீர்கள். சாதித்த ஒரே காரியத்தையும் ஒழுங்காய் செய்தீரா? உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? இலங்கை இராணுவம் விநியோகிக்கும் உணவுப்பொருள் வண்டியில் ஆயுதத்தை ஏற்றி அனுப்ப, புலிகள் தங்கள் வழமைபோல அதை வழியிலேயே தகர்க்க, போன வாரமே சாகாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த தமிழன் உணவுப்பொருளை கண்ணில் பார்த்து விட்டு இந்த வாரம் சாகப்போகிறான்.

ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன். எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ராஜதந்திர கோமாளித்தனம் செய்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும், நீங்களும் பெருவாரியாக வெற்றிபெறுவீர்கள் என்றா? அதீத கற்பனை அய்யா உமக்கு!

நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஒரு முறை கூலி உயர்வு கேட்டு போராடிய கோவை பஞ்சாலைத் தொழிலாளிகளுக்கு எதிராக லாக் அவுட் செய்த முதலாளிகளிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று! "நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே!". இந்த நேர்மையும் நெஞ்சுரமும் எங்கே போனது அய்யனே!

நீங்கள் நினைக்கும்போது 'சுவிட்ச் ஆன்', 'சுவிட்ச் ஆப்' செய்ய இன உணர்வு என்ன திரைச்சீலையா? தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா? டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா? நீர் டாராய் கிழிபடப்போவது உறுதி.

மிஸ்டர் ஞானி! ப்ளீஸ் கண்டின்யூ!

79 comments:

Anonymous said...
October 27, 2008 at 4:54 AM  

எனக்கு இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைகளை நினைத்தால் என்னத்த கன்னயா தான் நினைவுக்கு வருகிறார்.

செய்வோம்.... ஆனா செய்யாமாட்டோம்......

இந்திராகாந்தி காலத்து இறுமாந்த இந்தியா எங்கேப்பா..

ஆன்மீக பூமி என்பதற்காக அநியாயத்திற்கு ஆன்மீகவாதிகளாக இருக்கின்றனர்

Anonymous said...
October 27, 2008 at 5:01 AM  

lossu
the aids to the srilankan tamils would not be given through srilankan government, read the report properly.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:05 AM  

////எனக்கு இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைகளை நினைத்தால் என்னத்த கன்னயா தான் நினைவுக்கு வருகிறார்.
செய்வோம்.... ஆனா செய்யாமாட்டோம்......
இந்திராகாந்தி காலத்து இறுமாந்த இந்தியா எங்கேப்பா..
ஆன்மீக பூமி என்பதற்காக அநியாயத்திற்கு ஆன்மீகவாதிகளாக இருக்கின்றனர்////

அனானி சார்! என்ன நீங்க விஷயம் தெரியாமல் பேசுகிறீர்! எரையான்மை -ன்னு ஒன்னு இருக்கே மறந்துட்டிங்களா? அது தான் இப்ப அங்க தமிழன் டவுசர அவுத்துக்கிட்டு இருக்கு. அத மதிச்சாவனுமில்ல! இல்லன்னா பாகிஸ்தான் காரனும் சீனாக்காரனும் டங்கு வார அத்ருவானுங்க சார்! சமச்சே!

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:08 AM  

///the aids to the srilankan tamils would not be given through srilankan government, read the report properly.///

டேய் இருட்டு ஜந்து! அப்ப பிபிசி -ல வோல் உடறான்னு சொல்றியா?

Anonymous said...
October 27, 2008 at 5:10 AM  

finally spent your time in usefull ways not like this

Anonymous said...
October 27, 2008 at 5:13 AM  

போடா கண்குஸ் தலையா இத படிச்சு பாருடா

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிருபர்களிடம் கூறியதாவது:


"இலங்கையில் செய்த அமைதி பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் செய்ய நார்வே எடுத்துக்கொண்ட முயற்சி தொடர வேண்டும்' என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார். இலங்கை பிரச்னையில் ராணுவ ரீதியான தீர்வு சரியாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என பிரதமரும், நானும் பார்லிமென்ட்டில் தெரிவித்துள்ளோம்.


உயர்மட்டக் குழு தெரிவித்துள்ள அதிகார பங்கீடு, எந்த தாமதமுமின்றி அமல்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா., சபை மற்றும் இந்திய அரசு மூலம் இரண்டு லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2120&cls=row4

வசந்தத்தின் தூதுவன் said...
October 27, 2008 at 5:23 AM  

ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அனுப்புவதற்காகத் திரட்டி வைத்திருந்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி மறுத்தது கலைஞர்ர்ர்ர்ர்ர்.

அதற்காக உண்ணாவிரதம் இருந்த அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து அதனைக் கைவிடச் செய்து அந்த பொருட்களை வீணடித்தவர் கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மத்திய அரசு ராணுவ உதவி வழங்குவதை நிறுத்த ராஜபக்சேவின் அனுமதி தேவையே இல்லை. இது தன்னிச்சையாக அறிவிக்கப் பட வேண்டியது.

இந்த சாதாரண உதவியைக் கூட பெற்றுத் தராமல் அனைத்துத் தமிழர்களையும் திரட்டி, வராதவர்களைத் திட்டி, வேண்டாதவர்களைத் தீவிரவாதிப் பட்டம் கட்டி, எல்லாத்தையும் கொண்டு போய் ராஜபக்சே மற்றும் சோனியா கும்பலின் காலடியில் சமர்ப்பித்து தன் முடியைக் காத்துக் கொண்ட தமிழினத் தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்க! வாழ்க! வாழ்கவே!!!!
நம்பி பின்னால் போன தமிழரெல்லாம் வீழ்க! வீழ்க ! வீழ்கவே!!!

தலையே சுத்துதுடா சாமி என்னே ஒரு ராசதந்திரம்..

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:30 AM  

தினமலம் பேண்டு வச்சத இங்க வந்து பேண்டு வைக்கிற அனானி,

http://www.bbc.co.uk/mediaselector/ondemand/tamil/meta/tx/tamil_1545?bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&ms3=4&ms_javascript=true&bbcws=1&size=au

இத கேளு! கேட்டுட்டு போய் தினமல கக்கூசையும் க்ளீன் பண்ணு.

Unknown said...
October 27, 2008 at 5:32 AM  

//மிஸ்டர் ஞானி! ப்ளீஸ் கண்டின்யூ!//
அவர் குட்டுவாரோ இல்லை பூச்செண்டு குடுப்பாரோ தெரியாது ஆனால் தினமலர், இந்து, துக்ளக் மற்றும் அவர்கள் உறவினர்களெல்லாம் பாராட்டுவாங்கங்கிறது உறுதி.
அதுக்காகத்தானே இதெல்லாம்...

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:36 AM  

கும்ப கர்ண தூக்கம் களையும் போதே நெனச்சேன், பொதிகை செல்வன், இந்த விஷயம் ஒக்கேனக்கல் புராஜக்ட் பார்ட் டூ -அப்படின்னு. அப்படியே ஆயிடுச்சு! கலைஞரா கொக்கா?

Anonymous said...
October 27, 2008 at 5:37 AM  

முதலில் காவிரித் தண்ணீர் உரிமை கோவிந்தோ!
அப்புறம் முல்லை பெரியார் உரிமை கோவிந்தோ!கோவிந்தோ!!
அதுக்கப்புறம் ஹோகனேக்கல் உரிமை
கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!

இப்போ
கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!கோவிந்தோ!கோவிந்தோ!!கோவிந்தோ!!!


ஆனாலும் இதுக்கு கலைஞரை மட்டும் குற்றம் சொல்வது 22222222222 மச்

தமிழன் இன உணர்வு அற்று
சோற்றால் அடித்த பிண்டமாய்
வாழும் போது தலைவர் மட்டும் என்ன செய்ய முடியும்.

50 ஆண்டு பொது வாழ்க்கையில் அவர் தமிழுக்கும்,தமிழருக்கும்,தாழ்த்தபட்ட மக்களுக்கும் ஆற்றிய அரும் பணியை
மறந்து நன்றியில்லாமால் பேசுவது எழுதுவது அடுக்குமா?

இந்த 84 வயதிலும் அவரின் கடுமையான உழைப்பை கொச்சை படுத்துவது போலுள்ளது உங்கள் பதிவு.


தமிழகம் உள்ளவும்,தமிழன் உள்ளவும்
கலைஞரின் முகவரி தமிழன் நெஞ்சங்கள் தான்



ச்சும்மா ட்டமாஷ்...
தமிழ் உணர்வோடு
விளையாட்டு வேண்டாம்

Anonymous said...
October 27, 2008 at 5:37 AM  

daily thnthi
http://dailythanthi.com/article.asp?NewsID=446851&disdate=10/27/2008&advt=1

Anonymous said...
October 27, 2008 at 5:37 AM  

800 டன் நிவாரண பொருட்கள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள 2 லட்சம் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் மூலம் வழங்குவதாக இலங்கை அரசு உறுதி அளித்து இருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு 800 டன் நிவாரண பொருட்களை (உணவு, மருந்து பொருட்கள்) அனுப்பி வைக்கும். இதற்கு இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசும் நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு அனுப்பி வைக்கும்.

இந்திய அரசாங்கத்தின் நிவாரண பொருட்களை தூதர்கள் மூலம் இலங்கையில் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு தேவையான ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்யும்

http://dailythanthi.com/article.asp?NewsID=446851&disdate=10/27/2008&advt=1

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:47 AM  

டேய் அனானி!

தீர்மானத்துல சொன்னது என்ன! இப்ப நடந்தது என்ன? உதவிப்பொருள் யாரிடம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது? இலங்கை அரசிடமா? அல்லது செஞ்சிலுவை சங்கத்திடமா? நாம் இலங்கை அரசிடம் கொடுத்து அவன் செஞ்சிலுவை சங்கத்தை கூப்பிட்டு பகிர்ந்தளிக்க போறானா? இவனுக்கு எந்த உதவிக்குழுவிடம் நல்ல பேர் இருக்கு. நல்லுறவை பேணி, லெட்டர் போட்டு வரவழைச்சு, மழையினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு பாதி அனுப்பிவிட்டு மீதிய தமிழனுக்கு அனுப்பரத்துக்குள்ள, எல்லாம் முடிச்சிடும். இப்ப பிரச்சினையே யார் கொடுப்பது என்பதல்ல! யார் கொடுத்தா விநியோகம் செய்யும் வாகனத்தில் ஆயுதங்கள் கையாளப்படாது என்பது தான்.

அப்பறம்! பிபிசி வானொலி -யில் நேரு பல்கலை கழக ஆய்வாளர் சொன்னத கேட்டியா? முதல்ல அத கேளு. அப்பறமா அல்லக்கைகள் சொல்வத கேட்கலாம், படிக்கலாம்

Anonymous said...
October 27, 2008 at 5:55 AM  

உடன்பிறப்பே நமது கோரிக்கை வீண் போகவில்லை. கருணை உள்ளத்தோடு சோனியா அம்மையார் என்னோடு பேசி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் வழியில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் உடன்பிறப்பே - பொதுக்கூட்டம் மனிதச் சங்கிலி போன்ற எமது போராட்டங்கள் தகுந்த பலனைக் கொடுத்துள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு மூன்று வேளைச் சோறு போடுவதாக பிரதமர் எனக்கு உறுதியளித்துள்ளார். அதனை பிரணாப் முகர்ஜியே எனதில்லம் வந்து சொன்னார். ஆகவே எனது உடன்பிறப்பே பெருமலை போல் திரண்டெழுந்த திண்ணிய தோள்களின் போராட்டம் வெற்றியடைந்துள்ளதால் அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட பதவிகளை ராஜினிமா செய்யும் எம் முடிவை மூன்று வருடத்திற்கு ஒத்திவைக்கிறேன். இதற்கிடையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இன்று ஒன்றெனத் திரண்ட நமது கரங்கள் நாளையும் -நாளையென்றால் நாளையல்ல அதற்கான வேளை வரும் போது திரள்வது திண்ணம் - திண்ணம் - திண்ணம் - இது முரசொலியில் வரவிருக்கின்ற உடன்பிறப்புக்கான கடிதம். இத்தோடு கேள்வி பதில்ப் பகுதியிலும் இது பற்றி அவர் எழுதுவார்.


கலைஞர் வாழ்க

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 5:57 AM  

////அவர் குட்டுவாரோ இல்லை பூச்செண்டு குடுப்பாரோ தெரியாது ஆனால் தினமலர், இந்து, துக்ளக் மற்றும் அவர்கள் உறவினர்களெல்லாம் பாராட்டுவாங்கங்கிறது உறுதி.///

பெரியசாமி சார்,

நீங்க சொல்றது நூறு சதம் சரி

Anonymous said...
October 27, 2008 at 6:04 AM  

ஜெயலலிதா போட்ட வட்டத்திற்குள் தேடிப்பாருங்கள்.
அல்லது

சோனியா வீட்டு சமையலறையில் பாருங்கள்.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 6:06 AM  

/////50 ஆண்டு பொது வாழ்க்கையில் அவர் தமிழுக்கும்,தமிழருக்கும்,தாழ்த்தபட்ட மக்களுக்கும் ஆற்றிய அரும் பணியை
மறந்து நன்றியில்லாமால் பேசுவது எழுதுவது அடுக்குமா?///

இதை எந்த சூழ்நிலையிலும் மறுக்க வில்லை. வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என்று தான் கேட்கிறேன்.


///இந்த 84 வயதிலும் அவரின் கடுமையான உழைப்பை கொச்சை படுத்துவது போலுள்ளது உங்கள் பதிவு.///

என்னங்க நீங்க! என் பதிவை நீங்கள் கொச்சை படுத்துகிறீர்கள். இந்த விஷயத்தில் அவரது உழைப்பு வீண் போனது பற்றி ஏதாவது சொல்லுங்கள்.


///தமிழகம் உள்ளவும்,தமிழன் உள்ளவும்
கலைஞரின் முகவரி தமிழன் நெஞ்சங்கள் தான்///

சரி, இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி, அடுத்த ஆளை தயார் பண்ண வேணாம்? நரம்பு தளர்ந்து வேகம் போய் வெறும் விவேகம் இருந்து என்ன பண்றது.

//ச்சும்மா ட்டமாஷ்...
தமிழ் உணர்வோடு
விளையாட்டு வேண்டாம்///

தமிழ் உயிரோடு இனியும் விளையாடக்கூடாதல்லவா? அதற்குத்தான் சொல்கிறேன் நண்பா, தவறாக என்னாதேயும், ப்ளீஸ்!

Anonymous said...
October 27, 2008 at 6:09 AM  

ssu
the aids to the srilankan tamils would not be given through srilankan government, read Report'




இந்தியாவிற்கு பல தடவைகள் இலங்கை அரசு பாடம் புகட்டியுமா புத்தி தெரியவில்லை.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 6:11 AM  

////ஜெயலலிதா போட்ட வட்டத்திற்குள் தேடிப்பாருங்கள்.
அல்லது

சோனியா வீட்டு சமையலறையில் பாருங்கள்.///

ஆமா அனானி சார்! இந்நேரம் வட்டத்திலிருந்து சமயலறைக்கு ஜாகை மாறியிருக்கும்.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 6:15 AM  

////உடன்பிறப்பே நமது கோரிக்கை வீண் போகவில்லை. கருணை உள்ளத்தோடு சோனியா அம்மையார் என்னோடு பேசி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் வழியில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் உடன்பிறப்பே - பொதுக்கூட்டம் மனிதச் சங்கிலி போன்ற எமது போராட்டங்கள் தகுந்த பலனைக் கொடுத்துள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு மூன்று வேளைச் சோறு போடுவதாக பிரதமர் எனக்கு உறுதியளித்துள்ளார். அதனை பிரணாப் முகர்ஜியே எனதில்லம் வந்து சொன்னார். ஆகவே எனது உடன்பிறப்பே பெருமலை போல் திரண்டெழுந்த திண்ணிய தோள்களின் போராட்டம் வெற்றியடைந்துள்ளதால் அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட பதவிகளை ராஜினிமா செய்யும் எம் முடிவை மூன்று வருடத்திற்கு ஒத்திவைக்கிறேன். இதற்கிடையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இன்று ஒன்றெனத் திரண்ட நமது கரங்கள் நாளையும் -நாளையென்றால் நாளையல்ல அதற்கான வேளை வரும் போது திரள்வது திண்ணம் - திண்ணம் - திண்ணம் - இது முரசொலியில் வரவிருக்கின்ற உடன்பிறப்புக்கான கடிதம். இத்தோடு கேள்வி பதில்ப் பகுதியிலும் இது பற்றி அவர் எழுதுவார்.////


அனாநிசார்,

இத ஏற்கனவே சயந்தன் பதிவில் படித்து சிரித்து நொந்தும் விட்டேன். இனி என்னத்த பேசி என்னத்த பண்றது!

pt said...
October 27, 2008 at 6:22 AM  

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)


என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்


தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)


உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே


நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஜெய்ஹிந்த்!!!
வந்தே மாதரம்!!!

Anonymous said...
October 27, 2008 at 6:28 AM  

தமிழக அரசு மலிவுக்கடை:


அறிவித்தல்:

ஈழத் தமிழருக்கு இலவச அரிசி பருப்பு வழங்கப்படும்.


இலங்கை சிங்கள அரசுக்கு தமிழர்களை அழிக்கும் ஆயுதங்கள் இலவசமாக வழங்கப்படும்.



திமுக

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 6:33 AM  

////உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா ////

புரட்ச்சித்தமிழன் ஜி,

எப்பப்பாரு ஜோக்கடிக்கிரதுதான் உங்க வேலையா?

Anonymous said...
October 27, 2008 at 6:44 AM  

அமெரிக்காவில் எங்க தலிவா இருக்கீங்க அட்ரஸ் கொடுங்க

Anonymous said...
October 27, 2008 at 6:51 AM  

இனி வட இந்தியாவில் குண்டு வெடித்தால் தமிழகம் கண்டு கொள்ளக்கூடாது. //

நல்ல கதைய இருக்கே இது. நீர் போய் நியூ ஜெர்சியில் உட்கார்ந்துட்டு கண்டபடி எழுதவேண்டியதுதான். ஏன் பல தமிழன் வடக்குல வேலை பார்க்குறான். கண்டுக்காம விட்ட அவன் கதி. ஏன் நம்ம சாரே அஸ்ஸாமுல வேலை பாக்குறாவ. (சூரத்துலகூட நம்ம மதுரக்காரரு சூப்பா தோசை தள்ளூவண்டில விக்குறாரு. தமிழ்நாடுன்னதும் காசு வாங்கிக்க மாட்டன்னுடாரு)

சும்மா உணர்ச்சி வசப்படாதீங்கப்பா. யோசிச்சு கிறுக்குங்க. ஸாரி எழுதுங்க!!!

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 7:00 AM  

அட கருமம் புடிச்சவனே!

என்னை தூங்கவே விடமாட்டியா நீ?

வடக்குல வேல பாக்குற தமிழன் கதி இப்பமட்டும் நல்லா இருக்கா? எப்பவுமே ஒரே மாதிர்தான இருக்கு! ஆனா ஊன்னா ரவுண்டு கட்டி ஒதைக்கிறீங்க!, பதிலுக்கு பதில் இங்க ஒதைக்கலான்னா ஜனநாயகம், எரையான்மை, சட்டம் அப்புறம் நாகரீகம் எல்லாம் தடுக்குது!

இப்படி காவடி தூக்கரவன்லாம்! விந்திய மலைக்கு அந்தாண்ட போயிடுங்களேன்! நிம்மதியாவாவது இருப்போம்.

Anonymous said...
October 27, 2008 at 7:02 AM  

/////தமிழகம் உள்ளவும்,தமிழன் உள்ளவும்
கலைஞரின் முகவரி தமிழன் நெஞ்சங்கள் தான்///

சரி, இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி, அடுத்த ஆளை தயார் பண்ண வேணாம்? நரம்பு தளர்ந்து வேகம் போய் வெறும் விவேகம் இருந்து என்ன பண்றது.


இனம் காக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் தனது தமிழினம் காக்கும் கடமைகளை தொடர்ந்து செய்ய தனது அரசியல் வாரிசாக தளபதி ஸ்டாலின் அவ்ர்களை அறிவித்து செயல் படுத்தும்
முயற்சியில் ஒரு சில தடைகள் நாடும் நாம் அறிந்ததே.

Selva said...
October 27, 2008 at 7:08 AM  

What we had expected has taken place. Kalaignar is always kaliagnar. It is your fault to have a hope in him. The difference between kalaignar and Jeyalalitha is like the difference between Advani and Vajpay. At least now you understand. Kindly send this article to Subavee, pleae

Anonymous said...
October 27, 2008 at 7:15 AM  

//அட கருமம் புடிச்சவனே!

என்னை தூங்கவே விடமாட்டியா நீ?


இப்போ அங்க மணி என்ன மோகன் சார்

திட்டாதீங்க சார்
பாவம் அந்த மனிதன்

Anonymous said...
October 27, 2008 at 7:15 AM  

//அட கருமம் புடிச்சவனே!

என்னை தூங்கவே விடமாட்டியா நீ?


இப்போ அங்க மணி என்ன மோகன் சார்

திட்டாதீங்க சார்
பாவம் அந்த மனிதன்

TBCD said...
October 27, 2008 at 7:22 AM  

மோகன்,

இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்..அவர்களை பதவி விலகச் செய்துவிட்டால், நமக்கு வேறு வழியில்லை..எனவே பின்வாங்கல் என்று என்னால் எண்ண முடியவில்லை..

எந்த ஒரு காரியத்திற்கும் முதல் நிலை கடை நிலை என்று இருக்கும்..பார்ப்போம், மொத்தமாக அடுத்த கும்ப கர்ண தூக்கம் ஆரம்பிக்காதவரை நாம் இந்த விவகாரத்தில் முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை..

உங்கள் ஆதங்கம் உண்மை மறுப்பதற்கில்லை...அவசரம் வேண்டாம் என்று மட்டுமே சொல்லுகிறேன்..

Anonymous said...
October 27, 2008 at 8:01 AM  

ஹேய் நல்லா இருக்குப்பா உங்க நியாயம். இந்த தடவயாச்சும் ஒழுங்கா அஞ்சு வருஷம் இருந்திடலாம்னு பாத்தா விட மாட்டீங்க போலருக்கே. ரொம்ப தான் ஆசை. அப்படியே போனா உங்களுக்கு என்ன வந்திச்சு? எங்க வூட்டுல இல்ல எல்லாரும் நடுத்தெருவில நிப்போம்? - மு.கருணாநிதி & கோபாலபுரம், சி.ஐ.டி. நகருக்கு நடுவிலிருந்து.

கொழுவி said...
October 27, 2008 at 8:02 AM  

கலைஞர் பதவி விலகவில்லையே என்பதல்ல எனது வருத்தம். விலகிடவும் தேவையில்லை. ஆனால் 30 வருடமாக சோத்துக்கு அடிபட்டவன் இலங்கை தமிழன் என்பது போல முடித்து விட்டாரே என்பதுதான் வருத்தம்

அதுமட்டும்தானே இதிலொரு பயன். மற்றும்படி அரசியல் தீர்வு அது பழைய பல்லவி

Anonymous said...
October 27, 2008 at 8:04 AM  

டி.பி.சி.டி. கருணாநிதின்னா மட்டும் அவசரம் வேண்டாம்ன்னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வந்திடுவாரு. இன்னும் நாலஞ்சு விசிலடிச்சான் குஞ்சுங்க சத்தத்தையே காணுமே?

Anonymous said...
October 27, 2008 at 8:08 AM  

அது சரி, சீமான் அவன் பாட்டுக்கு உலகத் தமிழினத் தலைவராக பிரபாகரனை அனைவரும் அழைக்க வேன்டும்ன்னு சொன்னா எனக்கு கோவம் வராதா?

Anonymous said...
October 27, 2008 at 8:10 AM  

ரொம்ப பேசினீங்கன்னா உங்க மேலயும் கவித எளுதிடுவேன். சாக்கிரத.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
October 27, 2008 at 8:14 AM  

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர்,
அனைத்துக் கட்சிகளை கூட்டித் தீர்மானம் போட்டவர்,
ஓர் ஆள்(பிரணாப் முகர்ஜி) சொல்லி ஒத்துக் கொண்டுவிட்டாரே?

அந்த பசில் (பாசிச) ராஜபக்ஷே சொன்னதை நம் முதல்வரிடம் ஒப்பித்து எவ்வளவு சுலபமாக ஒப்புதல் வாங்கி விட்டார்.
(இதற்கு அந்த பாசிச ராஜபக்சேயின் தம்பியே வந்து நம் முதல்வரைச் சந்தித்திருக்கலாம். இந்த தொங்குவால் பிரணாப் தேவைப்பட்டிருக்க மாட்டார்)

வேதனை அளிக்கும் விடையங்கள்,

மத்திய அமைச்சர்கள் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்போம் என்று இன்னும் சொல்லிவருவது.

பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் திரட்டிய உணவு மற்றும் ஆடைகளை செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப மறுத்தது. பின் உண்ணாவிரதம் இருந்தவரை உறுதிமொழி கொடுத்து, அதைச் செய்யத் தவறியது.

இப்போது சிங்களனிடம், உணவு, உடை , உறையுள் இன்றித் தவிக்கும் எம் தமிழ் மக்களுக்கு உணவு அனுப்பி சோறு போடுகிறேன் என்பது.

அனைத்துலக சமூகத்தையும், தொண்டு நிறுவனங்களையும், செய்தியாளர்களையும் ஈழத்துக்கு அனுமதிப்பதைப் பற்றி வாயே திறக்காதது.

இந்திய அரசின் அதிகாரிகள் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் போன்றோரைப் பற்றி மத்திய அரசிடம் எந்த குற்றச்சாட்டோ வைக்காதது.

இதனிடையில் இந்திய அமைச்சர்கள் தாக்குதல் நிறுத்தப்படும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது.
சிங்கள அரசாங்கத்திடம் இந்திய/தமிழக அரசு எதாவது கடன் பட்டுள்ளதோ என்று கேட்கத் தோன்றுகிறது.

குழலி / Kuzhali said...
October 27, 2008 at 10:10 AM  

//ச்சும்மா ட்டமாஷ்...
தமிழ் உணர்வோடு
விளையாட்டு வேண்டாம்
//
தோடா கலைஞரோட காமெடிய சொன்னா தமிழ் உணர்வோட விளையாடுவதா? தமிழ் உணர்வு என்ன கலைஞரோட மொத்த குத்தகையா? இந்த முறை உண்மையில் தமிழ் உணர்வோடு விளையாடி கேவலப்படுத்தியது கலைஞர்தான்... இதுக்கு சப்பைக்கட்டு கேவலம் வேற... ஈழ பிரச்சினையில் இந்த முறை அத்தனை அரசியல் கட்சிகளும் தங்களின் சுயநல முகத்தை காட்டிக்கொண்டன...

Anonymous said...
October 27, 2008 at 2:46 PM  

six families escaping terror clutches in Wanni

Sri Lanka Navy has rescued 19 civilians including 3 children fleeing from LTTE tyranny in Wanni this morning (Oct 27). According to the Navy sources, Navy inshore patrol craft (IPCs), have rescued the civilians while they were battling against rough seas onboard a locally built fishing vessel (Vallam) in the South of Mandativu islet. There were 11 females and 8 males belonging to 6 families, the sources said.

The refugees have told the Navy personnel that they had got onboard the Vallam from Murukkandi in Poonaryn. They have further revealed that they had left their homes due to the inhumane harassments committed by the LTTE terrorists. According to the refugees , a large number of civilians in Wanni are desperately expecting that the security forces would soon liberate them from the terror clutches.

The Navy would provide food, medical facilities and other basic needs of the refugees until they are being handed over to the civilian welfare authorities, the sources added.

To view the photos click on the following link:
http://www.defence.lk/new.asp?fname=20081027_06

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 8:17 PM  

////அமெரிக்காவில் எங்க தலிவா இருக்கீங்க அட்ரஸ் கொடுங்க////

தமிழ்மணத்தில் இருக்கின்ற யாருக்காவது உங்களை தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க, உங்க வலைப்பூவில் பின்னூட்டமா என் அட்ரஸ் தரேன்.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 8:22 PM  

///What we had expected has taken place. Kalaignar is always kaliagnar. It is your fault to have a hope in him. The difference between kalaignar and Jeyalalitha is like the difference between Advani and Vajpay. At least now you understand. Kindly send this article to Subavee, please///

என்ன செய்வது செல்வா! திருமாவளவன் போன்றோர் தலை எடுக்கும் வரை வேறு என்ன வழி உண்டு சொல்லுங்கள். மற்ற எல்லா விஷயத்திலும் அவரைத்தவிர மாற்று ஏதும் இல்லாமல் தானே இதுநாள் வரை இருக்கின்றது!

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 8:50 PM  

டிபிசிடி,

////இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்..அவர்களை பதவி விலகச் செய்துவிட்டால், நமக்கு வேறு வழியில்லை..எனவே பின்வாங்கல் என்று என்னால் எண்ண முடியவில்லை////

பதவி விலகல் தேவையில்லை. ஆனால் அழுத்தம் கொடுக்கத்தவறியது ஏன்? இதற்கு திமுக மட்டும் காரணம் அல்ல, அன்று மதிமுக, நேற்று பாமக, இன்று கம்யூனிஸ்டுகள் என எல்லோரும் கலைஞரை கைவிட்டுவிட்ட நிலையில் காங்கிரசை மட்டுமே அவர் நம்பவேண்டியுள்ளது. பாவம், அவரும் என்ன செய்ய முடியும்? ஆனால் இது மிக மோசமான சரணடைவு அல்லவா? உணவுப்பொருள் விஷயம் எவ்வளவு அவசரம் என்று தெரியாதா? அதையேன் அந்த ஹூலிகன்களிடம் கொடுக்கவேண்டும்?

///எந்த ஒரு காரியத்திற்கும் முதல் நிலை கடை நிலை என்று இருக்கும்..பார்ப்போம், மொத்தமாக அடுத்த கும்ப கர்ண தூக்கம் ஆரம்பிக்காதவரை நாம் இந்த விவகாரத்தில் முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை..////

அதிகபட்சம் நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்கலாம். இவருக்கு பெருவாரியான வெற்றியை தந்து அடுத்த ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கச்செய்யலாம். மீண்டும் இது மாதிரியான சூழலில் இப்படித்தானே நடந்து கொள்ளப்போகிறார். விடுதலைபுலிகள் மீதான கோபத்தில் தமிழரை அவர் வஞ்சிக்கலாமா?

///அவசரம் வேண்டாம் என்று மட்டுமே சொல்லுகிறேன்..///
அந்த வீடியோக்களை மீண்டும் ஒருமுறை பாருங்களேன்!

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 8:56 PM  

திரு கொழுவி,

////கலைஞர் பதவி விலகவில்லையே என்பதல்ல எனது வருத்தம். விலகிடவும் தேவையில்லை.///

ஆமாம், பதவி விலக தேவை இல்லை.

//ஆனால் 30 வருடமாக சோத்துக்கு அடிபட்டவன் இலங்கை தமிழன் என்பது போல முடித்து விட்டாரே என்பதுதான் வருத்தம்////

வேதனை அய்யா!

///அதுமட்டும்தானே இதிலொரு பயன். மற்றும்படி அரசியல் தீர்வு அது பழைய பல்லவி////

அந்த பயனும் முழுமையாக இல்லை பாருங்கள்!

Anonymous said...
October 27, 2008 at 8:59 PM  

கலைஞரை நம்பினார் கைவிடப் படார்.

தமிழ்க அரசு சார்பில் இலங்கை தமிழர் நல நிதி திரட்டி அங்கு இன்னலுறும் சகோதரர்களை காக்கும் கலைஞர் அவ்ர்களின் தன்னலம்ற்ற சீரிய நன் முயற்சியில் அனைவரும் பங்கெடுத்து அவரது கரத்தை பலப்படுத்தவும்


விமர்சனங்கள்யும்,விவாதங்களையும் தவிர்க்கவும்.

உறவுச் சங்கிலிகள் உறுதியாகும் நேரத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்போம்

-கழகத் தொண்டன்

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 9:13 PM  

திரு ஜோதிபாரதி,

///மத்திய அமைச்சர்கள் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்போம் என்று இன்னும் சொல்லிவருவது.////

ஊமைக்குசும்பர்கள், இந்த விஷயத்தில் வாயையே திறக்க மாட்டேன் என்கிறார்களே!

////பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் திரட்டிய உணவு மற்றும் ஆடைகளை செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப மறுத்தது. பின் உண்ணாவிரதம் இருந்தவரை உறுதிமொழி கொடுத்து, அதைச் செய்யத் தவறியது.///

ராஜ தொந்திர்ர்ரி..... அல்லவா அவர்.

///அனைத்துலக சமூகத்தையும், தொண்டு நிறுவனங்களையும், செய்தியாளர்களையும் ஈழத்துக்கு அனுமதிப்பதைப் பற்றி வாயே திறக்காதது. /////


ஜெயலலிதா வாயை அடைக்கத்தானே இதெல்லாம். அப்புறம் எப்படி தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் பற்றி யோசிக்க முடியும்?. சரி, அந்த வாயாவது அடைந்ததா என்றால் அதுவும் இல்லை. இன்னமும் தமிழினத்தை காக்கும் காளி போன்று அறிக்கைகள் வந்து கொண்டுதான் உள்ளது.

///இந்திய அரசின் அதிகாரிகள் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் போன்றோரைப் பற்றி மத்திய அரசிடம் எந்த குற்றச்சாட்டோ வைக்காதது.///

முந்தய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை பிரச்சினை தொடர்பாக அறிவாலயம் வந்து விவாதிப்பதுண்டு. ஆனால் இவர் இந்தப்பக்கமே வரமாட்டார். ஏனென்றால் வந்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்று நன்றாக தெரியும். அவ்வளவு தமிழின துரோகம் செய்திருக்கிறார் இந்த நாராயணன். அவர்களை ஒரு கிழி கிழித்திருக்கலாம்.

////சிங்கள அரசாங்கத்திடம் இந்திய/தமிழக அரசு எதாவது கடன் பட்டுள்ளதோ என்று கேட்கத் தோன்றுகிறது.////

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செக் வைக்கிறாங்களாம் செக்.

Anonymous said...
October 27, 2008 at 9:16 PM  

நம்மால் அவர்களுக்காக குரல் கொடுக்கவோ, போராடவோ முடியா விட்டாலும், நமது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை அவர்கள் பிணி போக்க கொடுக்கலாமே. நமது முதல்வர் இலங்கை தமிழர் நிவாரண நிதி அறிவித்து உள்ளார். நம்மில் பலர் மென்பொருள் துறையிலோ மற்ற துறைகளிலோ நல்ல சம்பளத்தில் இருக்கலாம். தயவு செய்து நிவாரண நிதிக்கு அள்ளி கொடுங்கள். மனிதனாய் பிறந்ததர்க்கான கடமையை செய்யுங்கள்.

(நன்றி

ராஜேஷ் )

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 9:19 PM  

////தோடா கலைஞரோட காமெடிய சொன்னா தமிழ் உணர்வோட விளையாடுவதா? தமிழ் உணர்வு என்ன கலைஞரோட மொத்த குத்தகையா? ////

அதுதானே!

////இந்த முறை உண்மையில் தமிழ் உணர்வோடு விளையாடி கேவலப்படுத்தியது கலைஞர்தான்.///

நிச்சயமாக.

////ஈழ பிரச்சினையில் இந்த முறை அத்தனை அரசியல் கட்சிகளும் தங்களின் சுயநல முகத்தை காட்டிக்கொண்டன...////

பல சந்தர்ப்பங்களில் செய்தது போன்று இப்போதும் செய்துள்ளன

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 9:23 PM  

////கலைஞரை நம்பினார் கைவிடப் படார்.///

:-))

///தமிழ்க அரசு சார்பில் இலங்கை தமிழர் நல நிதி திரட்டி அங்கு இன்னலுறும் சகோதரர்களை காக்கும் கலைஞர் அவ்ர்களின் தன்னலம்ற்ற சீரிய நன் முயற்சியில் அனைவரும் பங்கெடுத்து அவரது கரத்தை பலப்படுத்தவும்
///

நிச்சயம் செய்வோம்.

////விமர்சனங்கள்யும்,விவாதங்களையும் தவிர்க்கவும்.

உறவுச் சங்கிலிகள் உறுதியாகும் நேரத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்போம்////

தவிர்க்க முடியாது நண்பா! உக்கிரத்தை குறைக்கலாம்.

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 9:25 PM  

///நம்மால் அவர்களுக்காக குரல் கொடுக்கவோ, போராடவோ முடியா விட்டாலும், நமது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை அவர்கள் பிணி போக்க கொடுக்கலாமே. நமது முதல்வர் இலங்கை தமிழர் நிவாரண நிதி அறிவித்து உள்ளார். நம்மில் பலர் மென்பொருள் துறையிலோ மற்ற துறைகளிலோ நல்ல சம்பளத்தில் இருக்கலாம். தயவு செய்து நிவாரண நிதிக்கு அள்ளி கொடுங்கள். மனிதனாய் பிறந்ததர்க்கான கடமையை செய்யுங்கள்.

(நன்றி

ராஜேஷ் )////

என் கடமையை நான் எப்போதும் ஆற்றியே வந்திருக்கிறேன் ராஜேஷ்.

ஆட்காட்டி said...
October 27, 2008 at 9:28 PM  

அந்த உணவுப் பொருட்களை தமிழ் நாட்டில் உள்ள ஏழைகளுக்கே குடுக்கலாம்.

Anonymous said...
October 27, 2008 at 10:26 PM  

//என் கடமையை நான் எப்போதும் ஆற்றியே வந்திருக்கிறேன் ராஜேஷ்.//
டீ ஆத்தறது எல்லாம் இதில் வராது மச்சி. ஓசி கண்ணி கிடைச்சா டீ ஆத்துறது காபி ஆத்துறது எல்லாம் மேட்டர் போல பேசகூடாது செல்லம்

Anonymous said...
October 27, 2008 at 10:27 PM  

தொடரும் மின்தடையால் கலங்கும் திருப்பூர் பனியன் வர்த்தகம் * அரசுக்கு எதிராக குரல் எழுப்பவும் தயக்கம்


திருப்பூர் : திருப்பூரில் தொடரும் மின்தடையால் பனியன் வர்த்தகத்தில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் அரசுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாத நிலையில் தொழிலதிபர்கள் தவிக்கின்றனர்.பனியன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டித் தரும் தொழில்நகரமான திருப்பூரில், 3,000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பனியன் தொழில் சார்ந்த டையிங், காம்பாக்டிங், எம்பிராய்டரிங் உள்ளிட்ட 5,000க்கு மேற்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பனியன் தொழிற்சாலைகள் மற்றும் அதன் சார்பு தொழிற்சாலைகளில் இயக்கத்தில் மின்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது.


பனியன் ஏற்றுமதியில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் பனியன் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்தடைகள், டீசல் விலை உயர்வு போன்ற சிரமங்களால் திருப்பூர் தொழிலதிபர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். திருப்பூரில் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை தொடரும் மின்தடையால், உற்பத்தியில் தாமதம், இயந்திரங்களுக்கு பாதிப்பு, டீசல் செலவுகள் என பல விதங்களிலும் தொழிற்சாலைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் சிறு தொழில் நிறுவனங்கள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பெரிய நிறுவனங்களும் தடுமாறி வருகின்றன.


வீடுகளுக்கு அதிகபட்சம் 600 யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தும் அரசின் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அரசின் மற்ற அறிவிப்புகளுக்காக நவ. 1ம் தேதியை தொழிலதிபர்கள் எதிர்பார்த்துள்ளனர். அரசின் நிலை என்னவென்று புரியாமல் இருப்பதும் வர்த்தகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.தொழில் துறையினரை கடுமையாகப் பாதிக்கும் வகையில் கடந்த பல மாதங்களாக திருப்பூரில் மின்தடை இருந்து வருகிறது. தொழிலுக்கு மூலாதாரமாக விளங்கும் மின்சாரத்தின் தேவை குறித்து தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் தொழில் அமைப்புகள் வலியுறுத்தி வந்தாலும் அதில் முழுமையான தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.


மின்தடை விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தை கண்டிக்க முடியாத நிலையில், தொழில் அமைப்புகள் இருந்து வருகின்றன.பனியன் தொழிலில் வாட் வரி, மூலப்பொருட்களின் விலை உயர்வு, டாலர் வீழ்ச்சி போன்ற பல பிரச்னைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளையும், சலுகைகளையும் நாட வேண்டிய நிலையில் இருப்பதால், மின் பிரச்னைக்காக அவர்களிடம் எதிர்ப்பை காட்டி அரசிடம் விரோதம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வும் தொழிலதிபர்களிடையே உள்ளது.எனினும், தொழில்துறை பாதிக்காத வகையில் தங்களுக்கு சாதகமான முறையில் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளிடம் திருப்பூர் பனியன் வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Anonymous said...
October 27, 2008 at 10:32 PM  

இலங்கை - இந்திய நெருக்கடி தணிவும் உணவு உதவி கிளப்பப்போகும் புதிய சிக்கலும்

- ஜெயபாலன்

இந்தியாவின் பிரதமர்,வெளிவிவகார அமைச்சர்.பாதுகாப்பு செயலாளர்,வெளிவிவகார செயலாளர் என ஒரு பெரும்பட்டாளமே இலங்கை அரசுடன் கடந்த இருவாரங்களாக தொடர்பு கொண்டு, இலங்கைத் தமிழர் விவகாரம் சம்பந்தமாக, இந்திய - இலங்கை இருதரப்பு உரையாடல்கள் நிகழ்ந்தன. பின்னர், 26-10-2008 இல் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட ஆலோசகரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச புதுடில்லி சென்று, இந்திய அரச உயர்மட்டத்துடன் பேசி, சில சமரச முடிவுகளுடன் கொழும்பு திரும்பியுள்ளார். தமிழ்நாடு மூட்டிவிட்ட நெருப்பால் தகித்துப்போயிருந்த புதுடில்லியை, பசிலின் வருகை நீர் ஊற்றி சற்று தணியவைத்துள்ளது. இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருடனான சந்திப்பினைத் தொடர்ந்து, அன்றைய தினமே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி சென்னைக்கு விரைந்து,கருணாநிதியை சந்தித்துப்பேசி, தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்புக்கு தண்ணீர் வார்த்துள்ளார். இதன்மூலம் தி.மு.க. உதவியுடன் மத்தியில் ஆட்சிபரிபாலனம் செய்துவந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் பாதுகாக்கப்பட்டதுடன், தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடாத்திவரும் தி.மு.க. மாநில அரசாங்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் தமிழக தி.மு.க. அரசாங்கமும் போட்டுவரும் வேசம் போலியானது என்பதை,அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவர். தமிழ் நாட்டில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களாலும், புலிகள் வீசும் பணத்துக்காக கூலிக்கு மாரடிப்பவர்களாலும் கிளப்பிவிடப்பட்ட புலி ஆதரவு கிளர்ச்சிகளால், மத்திய –மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை, அவ்வரசுகள் சாதுரியமாக முறியடித்ததுடன்,கருணாநிதி தனது வாரிசு அரசியலுக்கு சவாலாக விளங்கிய வை.கோபாலசாமியையும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையில் தள்ளியுள்ளார். இந்திய அரசைப் பொறுத்தவரையில், இலங்கை பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெளிவான நிலைப்பாடும் வேலைத்திட்டமும் உண்டு.

இலங்கையில் வாழுகின்ற எந்த இனத்தைச் சேர்ந்த மக்களாயிருந்தாலும் அவர்களின் நலன்களைவிட,அந்தநாட்டில் இருக்கின்ற அரசின் நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாப்பதே எப்பொழுதும் இந்தியாவின் கொள்கையாக இருந்துவந்துள்ளது. 1971ல் ஜே.விபியின் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி நடைபெற்றபோது, அதனை முறியடிப்பதற்கு உதவியாக இந்தியா விரைந்து வந்தது இந்தியாவின் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே. 1987ல் வடமராட்சி ‘லிபரேசன் ஒப்பிரேசன்’நடவடிக்கையின்போது, வடபகுதியில் உணவும் மருந்தும் விமானங்கள் மூலம் வீசியதும் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே. இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்த நிலைப்பாடு கருணாநிதிக்கும் நன்கு தெரியும். மத்திய அரசுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டோம் என சென்னை வந்த பிரணாப்முகர்ஜியிடம் தனது மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி சகிதம் கருணாநிதி வாக்குறுதி அளித்ததும் இதன் அடிப்படையிலேயே. ஏனெனில் கருணாநிதி இப்பொழுது வெறுமனே தி.மு.கவின் தலைவர் மட்டுமோ அல்லது தமிழக அரசின் முதலமைச்சரோ மட்டுமல்ல. அவர் இந்திய ஆளும்வர்க்கத்தின், அதாவது ஆசியாவிலேயே மிகப்பலம்வாய்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவர். எனவே இந்திய மத்திய அரசை பலவீனப்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய கடமையும் கட்டாயமும் அவருக்கும் உண்டு. இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் கருணாநிதி ஈழத்தமிழர்களினதும் உலகத்தமிழர்களினதும் பாதுகாவலன் என்ற கற்பனை உலகில் வாழ்பவர்களை என்னென்று சொல்வது? பசில் ராஜபக்சவின் புதுடில்லி விஜயத்தால் ஒருபக்கத்தில் இலங்கை மீதான இந்திய அழுத்தம் தொய்வு கண்டிருப்பினும், மறுபக்கத்தில் பாதகமான சில விடயங்களுக்கும் அத்திவாரம் இடப்பட்டுள்ளது. அதாவது வன்னியில் இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு 800 தொன் உணவு மற்றும் மருந்து பொருட்களை, இந்தியா இலங்கை அரசாங்கத்தினூடாக அல்லாது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது நிச்சயமாக எல்லாவிதத்திலும் நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் புலிகளுக்கு உணவும் மருந்தும் வழங்கும் - குளுக்கோசும் ஒட்சிசனும் ஏற்றும் - நடவடிக்கையாக அமையப்போகின்றது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத்திட்டம் வழங்கும் பொருட்களில் கைவைத்துவரும் புலிகள், இந்தியா வழங்கும் பொருட்களை கைகட்டிபார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. தமிழகத்தின் நிர்ப்பந்தத்தால் இந்தியா இந்த உதவியைச் செய்தாலும்,அதனால் ஏற்படப்போகும் விபரீத விளைவுகளையிட்டு இந்தியா சிந்திக்க தவறுமாக இருந்தால், அது‘பொல்லு கொடுத்து அடிவாங்கிய கதை’யாகத்தான் முடியும். உண்மையில் வன்னியில் வாழுகின்ற மக்களுக்கு இலங்கை அரசாங்கம் போதிய உணவுப்பொருட்களை அனுப்பிவருவதுடன்,அதனைத்தொடர்ந்து செய்வதற்கான ஆற்றலும் அதற்கு உண்டு. அந்த உண்மை இப்பொழுது வன்னிக்கான நிவாரண சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் இந்தியாவின் உதவியென்பது, ஒர் அவசியமற்ற நடவடிக்கையென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தியாவின் 800 தொன் உதவிக்கான இலாப நட்டங்களை நடைமுறையில் படித்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தினால்தான், இந்தியாவின் உணவு உதவியை ஆட்சேபம் எதுவுமில்லாமல் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கான காரணமென அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர். எனவே இந்தியாவுக்கு இருக்கும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளால் இந்த உதவியை அது வழங்கவேண்டிய அவசியசூழல் இருக்குமானால்,இலங்கை அரசினுடாக அதை வழங்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதை இந்திய அரசு சிந்திப்பது நல்லது.

Anonymous said...
October 27, 2008 at 10:47 PM  

ஏனுங்கோ உங்க திரு முகம் ஏன் எப்போதும் விள்கண்ணய் குடிச்சுது போல இருக்குது?

Anonymous said...
October 27, 2008 at 10:48 PM  

// இத கேளு! கேட்டுட்டு போய் தினமல கக்கூசையும் க்ளீன் பண்ணு.// கக்கூஸ் க்ளீன் பண்றத பத்தி தான் எப்போதும் நினைப்பு சிந்தனை ,முதல்ல உன் வீட்டு கக்கூஸை க்ளின் பண்ணுடா

Anonymous said...
October 27, 2008 at 10:51 PM  

// கொழுவி said...

கலைஞர் பதவி விலகவில்லையே என்பதல்ல எனது வருத்தம். விலகிடவும் தேவையில்லை. ஆனால் 30 வருடமாக சோத்துக்கு அடிபட்டவன் இலங்கை தமிழன் என்பது போல முடித்து விட்டாரே என்பதுதான் வருத்தம்//

த்தோடா கொழுவிக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை என்றால் போரினால் பாதிக்கபடும் மக்களுக்கு சாப்பாடு கொடுக்ககூடாது என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை.

30 வருடமாக இவர் சோத்துக்கு சண்டை போலலன்ன்னா மத்துவங்க பசியால சாவலாமா?

Anonymous said...
October 27, 2008 at 10:54 PM  

//என் கடமையை நான் எப்போதும் ஆற்றியே வந்திருக்கிறேன் ராஜேஷ்.//

ச்சும்மா ட்டமாஷ் எந்த மேட்டரா இருந்தாலும் பரபரப்பு கிட்ஸ் விள்ம்பரம் கிடைக்குனு தான் எழுதும். குண்டு வெடிப்பு மேட்டர் போது கூட சினிமா க்ளிபிஸ் எல்லாம் போட்டு மணிரத்னம் படம் க்ளைமேக்ஸ் போல காமேடி பண்ணிச்சு.

யோவ் தமிழர் பிரச்சனைன்னா உனக்கு விள்ம்பரமா போச்சா, நீ எவ்வளாவு கொடுத்தே எப்படி கொடுத்தே எங்க கொடுத்தே உன் கடமையை எல்லாம் ஆதாரம் கொண்டு நீருபிக்க வேண்டும்

மோகன் கந்தசாமி said...
October 27, 2008 at 11:30 PM  

டேய் அனானி இம்சை,

சம்பந்தம் இல்லாம பின்னூட்டம் இனி வந்துச்சுனா டெலீட் பண்ணிடுவன், உன் டைம வேஸ்ட் பண்ணாத, ஓடிப்போய்டு!

Anonymous said...
October 28, 2008 at 1:50 AM  

பெங்களூர் அருண் என்பவன் இங்கே அனானியாக இலங்கை தமிழர்களை திட்டி நிறைய கமெண்டு போட்டிருக்கிறான்

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 6:11 AM  

///பெங்களூர் அருண் என்பவன் இங்கே அனானியாக இலங்கை தமிழர்களை திட்டி நிறைய கமெண்டு போட்டிருக்கிறான்////

அருண் இனியும் தன் இம்சையை தொடர்ந்தால் அவனது டவுசர் உருவப்படும்

Arun Kumar said...
October 28, 2008 at 11:00 AM  

ஹலோ நான் தான் பெங்களூர் அருண் என்று அழைகக்படும் அருண் குமார்.

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 6:11 AM

///பெங்களூர் அருண் என்பவன் இங்கே அனானியாக இலங்கை தமிழர்களை திட்டி நிறைய கமெண்டு போட்டிருக்கிறான்////

அருண் இனியும் தன் இம்சையை தொடர்ந்தால் அவனது டவுசர் உருவப்படும்


கடந்த 120 மணி நேரமாக இணைய தொடர்பில்லாமல் விடுமுறையில் இருந்தேன்...எந்த ஊருக்கு நான் சென்றேன் என்ன செய்தேன் இதை போல விவரம் வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறேன்

நண்பரே, தேவை இல்லாமல் லக்கிலுக் போல சைக்கோகளின் தூண்டுததால் என் மேல் பாய வேண்டாம்.

எனக்கு அனுதினமும் தமிழ் வலைபூக்களை தினமும் படிக்க அவகாசமும் கிடையாது.

இந்த பதிவும் நண்பர் ஒருவர் என் மேல் புகார் பட்டியல் வாசிக்கபடுகிறது என்று சொன்னதின் பெயரில் தான் இங்கு வர நேர்ந்தது.

மேலும் ஏன் உங்களுக்கு இதை போல என் தொடர்பாக பின்னோட்டங்கள் வர காரணம் எது ?? இந்த பதிவையும் படித்து விடுங்கள்.தெரிந்து விடும்

https://www.blogger.com/comment.g?blogID=3650255165773264699&postID=4270900597712787442

நன்றி வணக்கம்...have a nice time

Anonymous said...
October 28, 2008 at 11:18 AM  

தமிழினத் தலைவர் கலைஞர் அவ்ர்கள் தனது 50 ஆண்டு காலப் பொது வாழ்வில் பெற்ற அனைத்து அனுபவங்களையும் வைத்து ,இன்று நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ,ஆதிக்க சக்திகளும் மதச் சார்பு சக்திகளும் இதில் குளிர் காய விடல் கூடாது ,என்ற திண்ணிய எண்ணத்துடன்,மிகவும் மனக் கலக்கத்துடன் தான் ராஜினமா எனும் முடிவை ஒத்தி வைத்துள்ளார்கள்.இதை தந்தை பெரியாரின் அன்புக்கு பாத்திரமான இனமானச் சிங்கம் தங்க நிகர் தலைவன் கொள்கை கோமகன் ,தமிழ் இனம் காக்கும் சமதர்மப் போராளி வீரமணி அவர்களே இதை சரியான ராஜ தந்திர நடவடிக்கை எனப் பாராட்டியுள்ளார்.

காக்காய் வாய்திறந்து கா கா எனக் கத்தும் ஆட்சி எனும் வடை கீழே விழும் , திருடலாம் எனும் நரி போல் காத்துகிடக்கும் தமிழின விரோதிகளை ஒரு போதும் தமிழ் இனம் இனி ஒரு முறை ஏமாந்து ஏற்காது.

வாழ்க கலைஞ்ர்
வாழ்க தமிழினம்
வாழ்க தமிழ்
வெல்க அவர் ராஜ தந்திரம்
ஒங்குக அவர் புகழ்

-கழகத் தொண்டன்

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 12:14 PM  

மிஸ்டர் அருண்,

யார் இப்பின்னூட்டங்கள் இட்டது என்ற அக்கறை எனக்கு இல்லை. கெட்ட வார்த்தைகள் இன்றியும் பதிவுக்கு வரும் ஏனையோரை அவதூறு செய்யாமலும் வரும் எல்லா பின்னூட்டங்களும் எனக்கு உவப்பளிப்பனவே! எழுத்து சுதந்தரத்தை கூடுமான அளவுக்கு மதிப்பவன் நான். அடாவடி பின்னூட்டங்களை வெறுக்கவா போகிறேன்! நானே அவ்வாறு பின்நூட்டமிடுபவன் தான்.

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 12:17 PM  

/////காக்காய் வாய்திறந்து கா கா எனக் கத்தும் ஆட்சி எனும் வடை கீழே விழும் , திருடலாம் எனும் நரி போல் காத்துகிடக்கும் தமிழின விரோதிகளை ஒரு போதும் தமிழ் இனம் இனி ஒரு முறை ஏமாந்து ஏற்காது.///

நல்லது! ஏற்க முயற்சி செய்கிறேன் கழக நண்பரே!

Anonymous said...
October 28, 2008 at 1:15 PM  

எனக்கு என்னப்பா தெரியும்? திரும்பத் திரும்பக் கேட்ட்டாலும், ரவுண்டு கட்டி அடிச்சாலும் எனக்குத் தெரியாது, தெரியாது. அம்மா மீது ஆணை.


pulliraaja

நசரேயன் said...
October 28, 2008 at 1:22 PM  

"தேசிய பாதுகாப்பு சட்டம்" இல்ல "பொடா"
எது வேணும் உங்களுக்கு

Madhu Ramanujam said...
October 28, 2008 at 2:19 PM  

என்னத்தை சொல்ல? கருணாநிதி பண்ணும் பல்வேறு கூத்துகளில் இதுவும் ஒன்று. ஆட்சிக்கு வந்தோமா மனைவிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தோமா என்று இல்லாமல், என்னவோ இவர் தான் ஈழத் தமிழர்களை காக்க வந்த அவதாரம் போல வெட்டி ஸ்டண்ட் எல்லாம் அடித்து... காரி உமிழ்கிறது இன்று உலகம். வாழ்க ஜனநாயகம், வாழ்க அவரின் ராஜ தந்திரம். தமிழகம் வெளங்கிடும்.

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 2:26 PM  

////"தேசிய பாதுகாப்பு சட்டம்" இல்ல "பொடா"
எது வேணும் உங்களுக்கு////

என்ன சாமி இது! என் டவுசர உருவாம உடமாட்டிங்க போலிருக்கு!

மோகன் கந்தசாமி said...
October 28, 2008 at 2:49 PM  

////என்னவோ இவர் தான் ஈழத் தமிழர்களை காக்க வந்த அவதாரம் போல வெட்டி ஸ்டண்ட் எல்லாம் அடித்து... காரி உமிழ்கிறது இன்று உலகம்.////

திரு ராமானுஜம்,

கலைஞர் அடித்தது ஸ்டண்ட் தான் என்பது எனக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர் மீது அவருக்கு அக்கறை இருந்தது உண்மைதானே! ஈழம் பற்றி அவரைப்போன்றே கண்ணோட்டம் உடையவர்கள் இப்போது அவர் அடித்த ஸ்டண்ட் -ஐ விமர்சிப்பது பொருத்தமானது. நீங்கள் பலமுறை வேறு விஷயத்திற்காக அவரை விமர்சனம் செய்ததும் பொருத்தமானதே! ஆனால் நீங்கள் அவரை இந்த விஷயத்தில் விமர்சிப்பதன் நோக்கம் என்ன? அதற்கு உங்களுக்கு தார்மீகம் இருக்கிறதா? ஈழத்தமிழர் படும் அவதி பற்றி பதிவெழுதி இருக்கிறீரா? அல்லது எங்காவது ஒரு இடத்தில் உங்கள் நிலைபாட்டை சொல்லி இருக்கிறீரா? சட்டப்படி நீங்களும் விமர்சிக்கலாம். ஆனால் அது வெறும் போலி ஆதங்கம் தான் என்பது உங்களுக்கு புரிகிறதா? இவ்விஷயத்தில் வேதனையுடன் அவரை விமர்சிக்கும் எங்களுடன் உங்களால் இணையவே முடியாது என்பதுதான் உண்மை. காரி உமிழ்வதென்றால் வேறு எதற்காவது உமிழ்ந்துகொள்ளுங்கள். இது எப்படி இருக்கிறதென்றால், சங் பரிவாரங்கள் ராமர் கோவில் கட்ட அனுமதியாத வாஜ்பேயியை நான் விமர்சிப்பது போல் உள்ளது. அதற்கு நான் வாஜ்பேயியை பாராட்டத்தான் வேண்டும். நீங்களும் கலைஞர் ஈழத்தமிழரை புறக்கணித்ததற்காக பாராட்டிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

///ஆட்சிக்கு வந்தோமா மனைவிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தோமா என்று இல்லாமல்,////

இதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானால் விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.


///என்னத்தை சொல்ல? கருணாநிதி பண்ணும் பல்வேறு கூத்துகளில் இதுவும் ஒன்று///

இதோடு நீங்கள் நிறுத்தி இருக்கலாம். எனினும் ஓரளவுக்கு வசவின்றி விமர்சித்தது பரவாயில்லை எனத்தோன்றுகிறது.

Anonymous said...
October 28, 2008 at 10:51 PM  

//திரு ராமானுஜம்,

கலைஞர் அடித்தது ஸ்டண்ட் தான் என்பது எனக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர் மீது அவருக்கு அக்கறை இருந்தது உண்மைதானே! ஈழம் பற்றி அவரைப்போன்றே கண்ணோட்டம் உடையவர்கள் இப்போது அவர் அடித்த ஸ்டண்ட் -ஐ விமர்சிப்பது பொருத்தமானது. நீங்கள் பலமுறை வேறு விஷயத்திற்காக அவரை விமர்சனம் செய்ததும் பொருத்தமானதே! ஆனால் நீங்கள் அவரை இந்த விஷயத்தில் விமர்சிப்பதன் நோக்கம் என்ன? அதற்கு உங்களுக்கு தார்மீகம் இருக்கிறதா? ஈழத்தமிழர் படும் அவதி பற்றி பதிவெழுதி இருக்கிறீரா? அல்லது எங்காவது ஒரு இடத்தில் உங்கள் நிலைபாட்டை சொல்லி இருக்கிறீரா? சட்டப்படி நீங்களும் விமர்சிக்கலாம். ஆனால் அது வெறும் போலி ஆதங்கம் தான் என்பது உங்களுக்கு புரிகிறதா? //

சரியாய் சொன்னீங்க மோஹன் சார்.
விமர்சனங்களை தொடுப்பதற்கும் ஒரு தகுதி தேவை.

இச்சமயத்தில் கலைஞரை விமர்சனம் செய்வது தமிழனர் நலனுக்கு உகந்தது அல்ல( அதுவும் இந்த மனிதர்கள்). அதை சரியாய் சொன்னீங்க.

இவர்களெல்லாம் ஆதிக்க சக்தி களின் பாத வருடிகள்.அவரை( மதவாத சக்திகளை அரியணை ஏற்றத் துடிக்கும் தலவர்களை) பூஜித்து மகிழும் இன விரோதிகள்.

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை உணர்ந்து அவரது கரத்தினைப் பலப் படுத்துவது ஒன்றே இன்றய தேவை.

அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்:

வேதனையால் விழிநீர் பெருக்கி வாடிக்கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் சகோதரர் சகோதரிகளின் இன்னல் களைய ,துயர் துடைக்க நடுவணரசின் துணையோடு தமிழினத் தலைவர் கலைஞரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழ்க அரசு திரட்டும் புனிதப் பணியாம் நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது.

தலைவர் அவர்களின் புண்ணியக் கரங்களால் தந்து ,சொந்த பணத்தில் 10 லட்சம் கொடுத்து , தொடங்கிய அரும் பணியை நாடே பார்த்து பாரட்டுகிறது.


இச்சமயத்தில் விமர்சனங்களை தவிர்த்து

தமிழர் நலம் காக்க அவரது சீரிய தலைமையில் ஒன்றுபடுவோம் நண்பர்களே.

-கழகத் தொண்டன்

மோகன் கந்தசாமி said...
October 29, 2008 at 6:34 AM  

////நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது.//

லேட்டஸ்ட் நிலவரம் தொண்ணூறு லட்சமாமே! நாமும் பங்களிப்போம்.

Anonymous said...
October 29, 2008 at 8:34 AM  

//மோகன் கந்தசாமி said...
////நலநிதித் திரட்டிற்கு இதுவரை ரூபாய் 33,06,750
குவிந்துள்ளது.//

லேட்டஸ்ட் நிலவரம் தொண்ணூறு லட்சமாமே! நாமும் பங்களிப்போம்.//


நன்றி.

Anonymous said...
October 29, 2008 at 2:47 PM  

கருணாநிதி எங்களுக்கு கைகொடுப்பாரா?

- தமிழ் நண்பர் ஒருவர் என்னை நேற்றுக் கேட்ட கேள்வி இது!

பல இலங்கைத் தமிழர் மனங்களிலும் இக் கேள்வி தற்பொழுது எழுவதில் நியாயமிருக்கிறது. இக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்னர் இது எழுவதற்கான பின்னணி பற்றி சில வார்த்தைகள்: ஸ்ரீலங்காவிற்கும் எல்ரிரியிக்கும் இடையிலான போரினால் இலங்கைத் தமிழர்கள் பேரவலங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள், இவர்களது துயர்களைத் துடைக்க இந்திய மத்தியஅரசு முன்வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாட்டுத் தலைமை கடந்த ஒக்ரோபர் 2ம்திகதி நடாத்திய ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழகத்தின் மற்றைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப் போராட்டத்தில் அதிமுக உட்பட, ஆனால் திமுகவும் காங்கிரசும் தவிர்ந்த, ஏனைய அரசியல் கட்சிகள் பங்குபற்றுவதாக இருந்தது.

எனினும், கடைசி நேரத்தில், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு உண்ணாவிரதத்தில் பங்குபற்றாது அதிமுக பின்வாங்கி விட்டது. அந்த உண்ணாவிரதத்தில்; கூடும் சிலரால் புலிகள் புகழ் பாடும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று அவர் கருதியதும், விஜயகாந்தின் தேதிமுகவினர் அதீதமான ஆரவாரத்தை காட்டக்கூடும் எனும் நிலைமை நிலவியதுவும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அதிமுக வரவில்லை என்றதும், திருமாவளவன் கலந்துகொண்டார். ராமதாசின் பாமக அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குபற்றவில்லை. அதிமுக பங்குபற்றாததினால், வைகோ அதில் அரை அக்கறைதான் காட்டியிருந்தார். நெடுமாறன் அங்கு வந்திருந்தும் அவர்பற்றி யாரும் எதுவித சிரத்தையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியலின் போக்கில் நெடுமாறனின் தாக்கம் எத்துணை என்பதனை அது கோடிட்டுக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்ற பெயரில் இந்த ஒரு நாள் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால்;, அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முன்னோடியே அது என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியன பங்குபற்றாமையினால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் அற்றுப்போய் இந்திய அரசியலில் அவ்வளவாக ஒரு பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

திடீரென, கலைஞர் கருணாநிதி, யாரும் எதிர்பாராதவிதமாக, அல்லல்படும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உதவ முன்வர வேண்டும் என்று குரல் எழுப்பினார். இது விடயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகள் அனுப்பும்படி தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஒக்ரோபர் 14ந் திகதி அவர் நடாத்திய கூட்டத்தில், இலங்கை அரசு போரை நிறுத்தி இனப்பிரச்னையின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க இந்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியதுடன், இரு வாரங்களுக்குள் இலங்கையில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தனது கட்சியின் தமிழக எம்பிக்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

கலைஞர் கருணாநிதி களம் இறங்கிய பின்னர்தான் அடங்கியிருந்த ஈழத்தமிழர் விவகாரம் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றது எனக் கூறலாம். வேறு எவருமில்லை, கலைஞர் கருணாநிதியோ அல்லது செல்வி ஜெயலலிதாவே குரல் கொடுத்தால்தான் ஏதாவது காத்திரமாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்குமென்று அரசியல் அறிந்தோருக்குத் தெரியும்.

எனவேதான், எதிர்பார்ப்புகளுடன் இப்பொழுது ஈழத்தமிழர் மத்தியில் கேட்கப்படுகிறது: கருணாநிதி எங்களுக்கு கைகொடுப்;பாரா?

இக் கேள்விக்கான விடைகளைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்:

முதலாவதாக, இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், கருணாநிதியென்றாலும், தமிழகமென்றாலும், இந்தியாவென்றாலும், யாருக்குக் கைகொடுக்க வேண்டும் என்பதற்கு நாம் விடை காண வேண்டும்; இரண்டவதாக, எதற்கு கைகொடுக்க வேண்டும் என்பதற்கு விடை காண வேண்டும்.

முதலாவதாக, யாருக்குக் கைகொடுக்க வேண்டும்?

புலிகளுக்கா?, ஈழத்தமிழர்களுக்கா?

புலிகளுக்கென்றால், அதற்கு இந்திய அரசு புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும்;; அதற்கு, ராஜீவ் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இந்திய உயர் நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள புலிகளின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த பிரபாகரனும், பொட்டம்மானும் இந்திய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்;; எந்தச் செயற்பாடுகளுக்காக புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதோ, அச் செயற்பாடுகளை தாம் இனிமேலும் தொடருவதில்லை என்று உத்தரவாதம் கொடுக்கப்படல் வேண்டும்;; அவ் உத்தரவாதங்கள் மீறப்படமாட்டாது என்று இந்திய அரசுக்கு நம்பிக்கை வர வேண்டும். - இவைகள் நடக்கும்வரை, இந்திய அரசு புலிகளுக்குக் கைகொடுக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சரி!-ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்றால், எதற்காக கை கொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு நாம் தெளிவாகவும்;, திட்டவட்டமாகவும் விடை கண்டால்தானே நாம் அவற்றைக் கேட்க முடியும்!

ஸ்ரீலங்கா இராணுவம் வன்னிப்பகுதியில் மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனக் கேட்டால், ஏன் நிறுத்த வேண்டும் என்ற மறுகேள்வி எழுகிறதல்லவா?

இந்திய அரசு தனது மண்ணிலே பொதுமக்கள் மத்தியில் குண்டுவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு பயங்கரவாத அமைப்பு எனத் தன்னாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட எல்ரிரிஈ இயக்கத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு நிறுத்த வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும்?

எனவே, நாம் கோரக்கூடியது: புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், புலிகளை அழிக்கும் சாக்கில் தமிழ்மக்கள் அழிப்பை முன்னெடுக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

இது நியாயமான கோரிக்கைதான்! - ஆனால், இந்தியா அதை எப்படி நிறைவேற்றலாம்?

ஒன்று, பொதுமக்களுக்குப் பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கலாம்;; இரண்டு, பாதிக்கப்படும் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கும்படி கேட்கலாம்;; மூன்று, இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு நியாயமானதுமானதும் நிரந்தரமானதுமானதுமான அரசியல் தீர்வை வழங்கும்படி நிர்ப்பந்திக்கலாம்.

-ஏற்கனவே இவற்றிற்கான அரசியல் ரீதியான அழுத்தங்களை இந்திய அரசு தனது அதிகாரிகள், இராஜதந்திரிகள் மூலமும், பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற மற்றைய நாடுகளை முழுதாக அண்டி ஸ்ரீலங்கா அரசு தனது செல்வாக்கு வலயத்தை விட்டு அகலாதிருக்க அவ்வப்போது இராணுவ உதவிகள் வழங்குவதன் மூலமும் செய்து வருகிறதே!

பாதிக்கப்படும் மக்களுக்கு வேண்டிய போதிய நிவாரண உதவிகளை வழங்குவது சம்பந்தமாக இலங்கை அரசு கூறுகிறது: புலிகள் அங்கு வாழும் தமிழ்மக்களைக் கேடயமாகப் உபயோகிக்கின்றனர்; பொதுசனங்களின் குடியிருப்புகள் மத்தியில் புலிகள் தங்களது தளங்களை அமைத்திருப்பதாலும், பொதுசனங்கள் மத்தியிலிருந்து முன்னேறும் இலங்கை இராணுவ நிலைகளை அவர்கள் குறிவைப்பதாலும் பேதம் தெரியாது பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இதற்கு என்ன நிவர்த்தி?

புலிகள் போரை நிறுத்துவது, அல்லது, பொதுமக்கள் போர் நடைபெறாத பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் அமைப்பது.

புலிகள் போரை நிறுத்தமாட்டார்கள்; தங்களின் ஏகபோக இருப்புக்கு போர்நிறுத்தம் அனுகூலங்களைத் தரும் என்று புலிகள் அனுமானித்தால்தான் போரை நிறுத்துவார்கள் என்பது நாம் கண்ட கடந்த கால அனுபவங்கள்.

பொதுமக்கள் யுத்தம் நடைபெறாத பிரதேசங்களுக்குச் செல்வதை புலிகள் தடைசெய்யக்கூடாது எனப் புலிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கலாம். ஆனால் இதனைச் செய்யக்கூடியது அங்கு வாழும் பொதுமக்களும், புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் வெளிநாட்டு அமைப்புகளும், தமிழகத்தின் புலிஆதரவு அரசியல்வாதிகளுமே! - செய்வார்களா?

அத்துடன், வன்னிக்கு அனுப்பப்படும் மக்களுக்கு வேண்டிய பொருட்களை அங்கு சேர்ப்பிக்க முடியாது அவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது புலிகள் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடாத்துவதாகவும், அனுப்பப்படும் பொருட்களில் கணிசமான தொகையை புலிகள் சுவீகாரம் செய்து கொள்வதாகவும் இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. இக் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என நிரூபிக்கவும், பொதுமக்களுக்கு வேண்டிய உணவு, உடைகள் அவர்களைச் சென்றடைவதற்கும் அவற்றினைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தாங்கள் தாக்கமாட்டோம் என்றும், அப் பொருட்கள் அனைத்தும் பொதுமக்களைச் சேருவதற்கான நடைமுறைகள் வெளிப்டையாக அமுலாக்கப்படும் என்றும் புலிகள் உத்தரவாதங்கள் அளிக்க வேண்டும். இதனைச் செய்யக்கூடியதற்கான அழுத்தங்களை புலிகளுக்குக் கொடுக்கக்கூடியவர்களும் அங்கு வாழும் பொதுமக்களும், புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் வெளிநாட்டு அமைப்புகளும், தமிழகத்தின் புலி ஆதரவு அரசியல்வாதிகளுமே!- செய்வார்களா?

இவற்றினைச் செய்தால் - இவற்றினைச் செய்வதாக புலிகள் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஊடாகவாவது புலிகள் உறுதியாகத் தெரிவித்தால் - யுத்த பிரதேசங்களை விட்டு வெளியேறும் பொதுமக்கள் எதுவித இம்சைகளுமின்றி போதிய நிவாரண உதவிகளுடன் தற்காலிகமாகத் தங்குவதற்கு இலங்கை அரசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தும்படி நாம் கோரலாம்.

அடுத்ததாக, இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான ஒரு நியாயமானதுமானதும் நிரந்தரமானதுமானதுமான அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்குவது சம்பந்தமாக இந்தியாவின் நிர்ப்பந்தம் பற்றிப் பார்ப்போம்.

எனினும், அதற்கு முன்னர் என்ன அரசியல் தீர்வுக்கு கருணாநிதி கைகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்?

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், ‘தனித் தமிழ்ஈழம் ஏற்பட்டால் அது இந்தியாவுக்குத்தான் பாதுகாப்பு’ என்று தனது சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது நகைப்புக்குரியது! - மலிவான பகட்டுப் பேச்சு! அது போல், ‘தமிழ்நாடு தனியாகப் பிரிவது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது’ என்று யாராவது கூறினால் எப்படி இருக்கும்!

-அதை விட்டு விடயத்திற்கு வருவோம்.

மேலெழுந்தவாரியாக ‘தமிழர்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை வேண்டும்’ என்று கேட்பதில் பிரயோசனமுமில்லை, அர்த்தமுமில்லை.- அந்தச் சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்க வேண்டும்;; என்ன அரசியல் தீர்வு வேண்டும் என்று விரிவாகவும் தீர்க்கமாகவும் வெளிப்படுத்தல் வேண்டும்.

சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இலங்கையிலிருந்து பிரிந்து தமிழ்ஈழம் என்ற தனிநாட்டுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கும்படி இந்தியாவை நாம் கோர முடியாது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அதிகாரப் பகிர்வு’ என்று கடந்த முப்பது ஆண்டுகாலமாக எதுவித சந்தேகத்துக்கும் இடமின்றி இந்தியா கூறிவருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனித் தமிழ்ஈழம் சாத்தியமாவது என்றால் அது இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தில் வெல்வதன் மூலம்தான் நடைமுறையாகும். ஈழத்தமிழர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்பதை இந்தியா அங்கீகரிக்க மறுத்துள்ளதோடு இராணுவ ரீதியிலான அணுகுமுறைகளின் மூலம் இனப் பிரச்னைக்கு இறுதித் தீர்வு காண முடியாது என்பதுவும் இந்தியாவின் நிலைப்பாடாகும்;- அது இலங்கை அரசுக்கு மட்டுமான அறிவுறுத்தல் அல்ல, புலிகளுக்கும் சேர்த்துத்தான்!

பேச்சு வாhத்தைகளின் மூலம் எந்த ஸ்ரீலங்கா அரசும் தனித் தமிழ்ஈழத்தைப் பிரித்துத் தந்துவிடப் போவதில்லை. ‘தமிழ்ஈழம் வேண்டுமா’ என்று கேட்டால், எந்தத் தமிழன் வேண்டாம் என்பான்? ‘தனி மாளிகை’ வேண்டுமா என்று கேட்டால் எந்த மனிதன் மறுதலிப்பான்? ஆனால், அது தற்போதைய நடைமுறை யதார்த்தத்தில,; இன்றைய பூகோள அரசியல் சூழலில் சாத்தியமா என்று பார்க்க வேண்டாமா?; இந்தியாவை மீறி எந்தச் சர்வதேசநாடு தனி ஈழத்திற்கு ஆதரவு தந்துவிடப் போகிறது? எல்ரிரிஈயையே தடைசெய்த சர்;வதேச நாடுகள் தனி ஈழத்திற்கு மட்டும் ஆதரவு தந்து விடப் போகிறாதா?- யாராவது பகற்கனவு காண விரும்பினால் அவர்களை யார் தடுக்க முடியும்! அவர்களுக்கு அது ஒரு நல்ல பொழுது போக்காகவும் இருக்கக்கூடும், அதுவும் யுத்தசூழலுக்கு அப்பால் வசதியாக இருந்துகொண்டு காரசாரமாகப் பேசுவோருக்கும், மனம் விரும்பிய போக்கில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோருக்கும், கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் அதில் ஒரு களிப்பிருக்கும். - ஆனால், இது மேன்மேலும் சொந்த மண்ணில் இன்னமும் இருக்கும் தமிழர்;களுக்கு அழிவுகளை ஏற்படுத்தி, அவர்;களின் இருப்பையே ஒட்டுமொத்தமாக அழிக்க முயலும் சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணைபோகும் பகற்கனவல்லவா? பாதிக்கப்படும், இன்னமும் பாதிக்கப்படப்போகும் யுத்தபூமியல் வாழும் - வாழ வேண்டிய நிர்ப்பந்தம் கொண்டுள்ள - மக்களைப் பற்றி நாம் கிஞ்சித்தேனும் இதயசுத்தியுடன் கரிசனை கொள்ள வேண்டாமா?

அது மட்டுமல்ல, தமிழ்ஈழம் என்றால் கிழக்கும் வடக்கும், அம்பாறை உட்பட, சேர்ந்த நிலப்பகுதிதானே!- கிழக்கை மறுபடியும் ஆயுதப் போராட்டத்தினாலோ, கொரில்லாத் தாக்குதல்களாலோ மீட்பது என்பது சாத்தியமா? எண்ணற்ற, பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக வேண்டும்;, எல்லைகளைப் பாதுகாக்க பல்லாயிரம் போர்;வீரர்கள், பெருவாரியான ஆயுத உபகரணங்கள் தேவையாகும்.- இதெல்லாம் என்ன விளையாட்டா?

தமிழீழம் வேண்டாம், அதிகாரப் பகிர்வுதான் வேண்டுமென்றால், வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்திற்கா அல்லது வடக்கு - கிழக்கை வௌ;வேறாகக் கொண்ட மாகாணங்களுக்கா?

வடக்கு- கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு என்றால், நாம் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இரு வருடங்களாக ஏற்படுத்தப்பட்டுவிட்ட வடக்கு-கிழக்கு பிரிவை மீண்டும் எப்படி ஒட்டப்போகின்றோம்? இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாதவாறு செய்துவிட்டு, அதனை நிர்;மூலமாக்குவதற்கு எல்லாவகையிலும் காரணமாகிவிட்டு, காலம் கடந்த நிலையில் இப்பொழுது அந்த இணைப்புக்கான அழுத்தத்தை ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்கும்படி இந்திய அரசை நாம் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது?

இதற்கு இந்தியாதான் முன்வந்தாலும், கிழக்கில் நடைபெற்ற சமீபகால மாறுதல்களின் பின்னர்- அவற்றிற்கு சிங்களப் பேரினவாதிகளும் ஒரு காரணம், அங்கு செயற்படுபவர்களில் சிலர்; ஆயுததாரிகள் என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்க (வடக்கில் மட்டும் என்ன வாழுதாம்!)- கிழக்கு மக்களில் பெரும்பான்மையோர் இணைப்புக்கு இப்பொழுது ஒப்புதல் அளிக்கத் தயாராக இருப்பார்களா?- அரசியல் ரீதியாக அதற்கான காலம் கனிந்திருக்கின்றதா?

வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு அங்கு வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கால கட்டத்தில் இணைப்பை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் தலைவர்;கள் இப்பொழுது அதனை - முஸ்லிம் மக்களை யாழ்நகரை விட்டும் மன்னாரை விட்டும் ஓட விரட்டியது, காத்தான்குடிப் படுகொலைகள், ஆகிய இன்னோரன்ன கசப்பான அனுபவங்களின் பின்னர், தனியான கிழக்கில் அவர்களது அதிகாரம் காத்திரமானதாக இருக்கும் என கிழக்கில் நடந்த சமீபத்திய தேர்தல்கள் அவர்களுக்கு உணர்த்திய நிலையில் - இணைப்பை ஆதரிப்பார்களா?

அம்பாறை மாவட்டதில் வாழும் சிங்களமக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

இக் கேள்விகள் அனைத்தையும் நாம் கேட்டு அவற்றிற்கான சரியான விடைகளை முதலில் காணவேண்டும். இவற்றில் எவற்றிற்கும் புலிகளின் யுத்தம் விடை பெற்றுத்தரமாட்டாது என்பதையும் நாம் தீர்க்கமாகக் கண்டுகொண்டோம்.

வெறுமனே உணர்ச்சிவசப்படாது, அறிவுபூர்வமாக, கடந்து வந்த பாதைகளையும், இலங்கையின் சமூக அரசியல் நிலைமைகளையும், சர்;வதேச பூகோள அரசியல் யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டு, யாருக்குக் கைகொடுக்க வேண்டும், என்னத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்று தெளிவாகவும், திட்டவட்டமாகவும் நாம் தெரிவிக்க வேண்டும.;

இல்லாவிட்டால், பாவம் கருணாநிதி எப்படிக் கைகொடுப்பார்? கருணாநிதி மட்டுமல்ல, எவர்தான் எப்படிக் கைகொடுக்க முடியும்??

Anonymous said...
October 30, 2008 at 6:46 AM  

request to all good supporters.
please stop your quarrels and unite under the leadership of our great tamil leader karunanithi.

it is the right time to donate liberally to chief minister's releif fund.

now in srilanka the tamils, our brothers are suffering .


please unite
please help

please forget the past.
please awake arise and unite to help the needy people.

both central and state government ruling parties are trying their best to do good to tamils of sri lanka.

now tamil nadu is standing as one man under the the great laeadership of our beloved.chief minister.


please request other polical leaders also to support our C.M in this case.

"onru paddaal uNdu vaazvu
nammil orrumai neenkiil
anaivarukkum thaazvu''

long live kalaigar
long live tamil

Anonymous said...
November 4, 2008 at 6:02 AM  

//ஹலோ நான் தான் பெங்களூர் அருண் என்று அழைகக்படும் அருண் குமார்.//

ஹலோ பெங்களூர் அருண் நீங்கதானா அது. கூகிளில் பெங்களூர் அருண் என்று அடித்து தேடினாலே உங்க வண்டவாளங்கள் காட்டாற்று வெள்ளமுன்னு அடிச்சிக்கிட்டு வருதே. கோவி கண்ணனை கேட்டாலும் உங்க புகழ் பாடுறாரு. லக்கிலுக்கும் புலம்பறாரு.

லக்கியோட இந்த பதிவில் வந்த கொண்டை நீங்கதானே? :)

http://www.luckylookonline.com/2007/09/blog-post_12.html

Unknown said...
November 7, 2008 at 11:15 PM  

ஐயா,

உங்களுடைய இந்தப் பதிவை, புதுவையினின்றும் வெளிவரும் மாத இதழான "நற்றமிழ்" - நளி (கார்த்திகை) மாத இதழில் வெளியிடுகிறோம்.

சில அயல்மொழிச் சொற்களை மட்டும் தமிழாக்கி வெளியிட்டுள்ளோம்.

உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறோம்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
சா.செ.

Unknown said...
November 9, 2008 at 2:05 AM  

உங்கள் முகவரியைத் தெரிவித்தால் மேற்குறித்த இதழை விடுப்போம்.


எம் மின்னஞ்சல் முகவரி:

eraisezhiyan@gmail.com

நன்றி.

அன்புடன்,
சா.செ.

நசரேயன் said...
November 9, 2008 at 7:08 PM  

விலாசம் கிடைச்சதா இல்லையா ?