tag:blogger.com,1999:blog-8176016436053452024-02-20T05:19:44.661-05:00ச்சும்மா ட்டமாஷ்...Unknownnoreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-817601643605345.post-35783139499641441912009-09-17T20:59:00.005-04:002009-09-17T21:23:44.513-04:00போலிடோண்டு விவகாரம்-பேட்டி-1,செந்தழல் ரவி,பகுதி3<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b>பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.<br /><br />உரிமைத்துறப்பு:<i>தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br /><font style='color:blue'>15. TBCD உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?</font><br /><br />குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?<br /><br /><font style='color:blue'>16. TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்? </font><br /><br />நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.<br /><br /><font style='color:blue'>17. நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?</font><br /><br />விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.<br /><br /><font style='color:blue'>18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?</font><br /><br />எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?<br /><br /><font style='color:blue'>19. சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?</font><br /><br />தெரியாது.<br /><br /><font style='color:blue'>20. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?</font><br /><br />உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.<br /><br /><font style='color:blue'>21. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?</font><br /><br />என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான். <br /><br />மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.<br /><br />ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.<br /><br /><font style='color:blue'>22. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?</font><br /><br />உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும். <br /></div><br /><center>[முற்றும்]</center>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-817601643605345.post-34738375104870332362009-09-17T20:39:00.007-04:002009-09-18T13:19:00.356-04:00போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 2<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b>பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.<br /><br />உரிமைத்துறப்பு:<i>தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br /><font style='color:blue'>6. அவனது தொடர்பில் நீங்கள் பதிவுகள் எழுதியுள்ளீர்களா? ஆம் என்றால் எத்தனை? அவை எம்மாதிரியானவை?</font><br /><br />விடாது கருப்பு யார் என்று கண்டறியவேண்டு என்ற ஆவலில் இமெயில் தொடர்பை ஏற்படுத்தி, அந்த சமயத்தில் என்னுடைய நன்பர் ஒருவர் சொன்ன ஒரு கருத்தாக்கத்தை பதிவாக்கினேன். வோல்கா நதியில் இருந்து வந்த அறிவாளிகள் ரஷ்யர்கள், சுகோய் விமானத்தை அந்தரத்திலேயே பல்டி அடிக்கவைக்கும் அவர்கள் தான் பார்பனர்கள் என்று எழுதினேன். அதன் பின் வேறு எந்த பதிவும் எழுதவில்லை. ஆனால் பிரச்சினையில் நானும் விடாது கருப்புவின் ஒரு ஆசிரியர் என்று காட்ட போலி டோண்டு முனைந்தபோது இதனையும் பயன்படுத்தினான்.<br /><br />இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை விளக்கவேண்டும். முகமூடி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருப்பார். போலி டோண்டுவின் அல்லக்கை நீ என்று நான் நம்பவில்லை. ஆனால் போலி டோண்டுவை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக நீ சென்ற தூரம் அருவருப்பானது என்று. என் மனதில் எப்போதும் அரித்துக்கொண்டிருப்பது இது. போலி டோண்டு முயன்று நிறுவியது போல டோண்டு சாரின் மனைவி மகள் படத்தை நான் போலி டோண்டுவுக்கு அளிக்கவில்லை. போலி டோண்டு தளத்தில் எந்த ஆபாச பதிவும் எழுதவில்லை. யாருக்கும் எந்த ஆபாச பின்னூட்டமும் போடவில்லை. <br /><br />போலி டோண்டு எபிசோடுக்கு முன்பே அல்லது இடையிலோ, எதிர் கருத்து சொல்பவர்களை கொஞ்சம் அரகண்ட் ஆக எதிர்கொண்டது உண்மை. ஆனால் ஆபாச பதிவு எழுதவோ, ஆபாச பின்னூட்டம் போடவோ என்னுடைய மனது ஒப்புக்கொள்ளாது என்பதை முகமூடிக்கு தெளிவுபடுத்த ஆசை.<br /><br /><font style='color:blue'>போலி நடத்திய குழுமத்தில் பிறரது மடல் முகவரியை அவர்கள் அறியாமலேயே இணைக்க பொறிவைப்பது போன்ற மின்மடல்கள் பலருக்கும் வந்தன. அம்மடலில் இருக்கும் கார்பன் காப்பி முகவரிகளில் doondu@gmail.com -யும் இருக்கும். அம்மடல்களுக்கு 'ரிப்ளை ஆல்' கொடுக்கும்போது அது போலிக்கும் சென்று, பிறகு அவர்களும் அவன் நடத்தும் குழுமத்தில் உறுப்பினர்போல் இணைக்கப்படுவர். உங்களுக்கும் இதுபோன்ற மடல்கள் வந்ததா?</font><br /><br />உண்மை. இருபத்தைந்து மின்னஞ்சல்களில் நடுவில் டூண்டு என்ற ஐடியும் தொக்கி நிற்கும், ஆனால் அதன் டிஸ்ப்ளே பெயர் டோண்டு என்று இருக்கும். ஆக ஒரு ஓவர் லுக் செய்துவிட்டு ரிப்ளை செய்தீர்கள் என்றால் நீங்கள் டூண்டுவுக்கு மின்னஞ்சல் செய்வது போன்றே தோற்றப்பாட்டுடன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும்.<br /><br />இதில் எனக்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.<br /><br />போலி டோண்டுவை நான் பொது தளத்தில் எதிர்க்க ஆரப்பித்த பின், என்னுடைய நிறுவனம் தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. என்னுடைய மின் அஞ்சல் ravindran.antonysamy@lgsonfindia.com என்பதில் இருந்து ravindran@lge.com என்று மாறிவிட்டது. <br /><br />திடீரென ஒருநாள் லக்கிலுக் போன் செய்து, உங்கள் மின்னஞ்சல் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டிருக்கிறான் பாருங்கள் போலி. நீங்கள் அப்படி மின்னஞ்சல் அனுப்பினீர்களா என்று கேட்டான். டூண்டு தளத்தை திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அப்படியே ravindran.antonysamy@lgsonfindia.com என்ற மின்னஞ்சலில் இருந்து டூண்டு ஜிமெயிலுக்கு மின் அஞ்சல் போன மாதிரி ஒரு ஸ்க்ரீன்ஷாட். அதில் ஜிமெயிலில் வரும் ஐக்கான்கள் உட்பட பர்பெக்டாக இருந்தது கண்டு அதிர்ந்தேன். இது ஒரு எடுத்துக்காட்டு.<br /><br /><font style='color:blue'>7. ravindran.antonysamy@lgsoftindia.com என்ற முகவரியில் இருந்து அவ்விதமான மடல் ஒன்று சிலருக்கு சென்றுள்ளது. அதில்doondu@gmail.com என்ற போலியின் முகவரியும் cc -யில் இருந்தது. இது பற்றிய உங்கள் விளக்கம் என்ன?</font><br /><br />வேறு ஒருவர் மின்னஞ்சலை போல உருவாக்கி அனுப்பும் அளவுக்கு அவனுக்கு தொழில்நுட்ப அறிவு உண்டு.<br /><br /><font style='color:blue'> 8.ஆபாசமாக எழுதியது, உங்களை தாக்கியது, பதிவுலகின் மீது அக்கறை இவற்றில் எது மூர்த்திக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற என்னத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?</font><br /><br />என்னைப்பொறுத்தவரை, மிகுந்த சுயநலத்தோடு, என்னை தாக்கியமைக்கு முதலில் அவனுக்கு தண்டனை தரவேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால், அவனது ஒவ்வொரு ஆபாச தாக்குதல் வார்த்தைகளும் இரண்டு நாளைக்கு உள்ளத்தை விட்டு அகலாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள் போல உறுத்திக்கொண்டிருக்கும். மற்ற இரண்டுக்கும் பதில் அளிக்கவிருப்பமில்லை.<br /><br /><font style='color:blue'>9. ஆபாசமாக எழுதியது மூர்த்தி மட்டுமல்ல என்கிறபோது வேறு எவர்மீதேல்லாம் புகார் அளித்துள்ளீர்கள்? வேறு யாரும் அவ்வாறு அளித்துள்ளார்களா? ஆம் எனில் அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன?</font><br /><br />மூர்த்தியின் எல்லை மீறிய செயல் புகார் அளிக்க காரணம். பெங்களூர் தமிழர்களுக்கு பிரச்சனையான ஒரு நேரத்தில், என்னுடையது போல ஆர்க்குட் முகவரி ஒன்றை உருவாக்கி, அதில் என்னுடைய தொலைபேசி எண்ணையும் இட்டு, அதன் மூலமாக கன்னட சலுவளி சங்கங்கள், கன்னட வலைப்பதிவர் கூட்டமைப்புகள், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஆர்க்குட்டர்களுக்கு, கன்னடன் எல்லாம் முட்டாள்கள், தமிழன் ஒவ்வொருவனும் ஒரு கன்னடனை கொல்லவேண்டும் என்கிற ரீதியில் நூற்றுக்கனக்கான இடங்களில் எழுதினான்.<br /><br />அப்படி எழுதும்போது, என்னுடைய கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட என் மனைவியும் இது போன்ற குழுமங்களில் உறுப்பினர் என்பதால் என்னுடைய கவனத்துக்கு உடனே வர, நாங்கள் இதனை பெங்களூர் காவல் அதிகாரிகளிடம் கொண்டு சென்று, அதன் பிறகு அவர்களுடைய அறிவுரையின் பேரில் சென்னை காவல் நிலையம் வந்து புகார் தந்தோம்.<br /><br />மூர்த்தி மீது மட்டும்தான் புகார் அளித்தோம். பாதிக்கப்பட்ட உண்மைத்தமிழனும், டோண்டுவும் இதில் இணைந்துகொண்டார்கள். உண்மைத்தமிழன் அண்ணனை முதலில் சந்தித்து, புகாரை தட்டச்சினோம். வழக்குரைஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனை சந்தித்தி அவருடைய சட்ட ரீதியான ஆதரவையும் பெற்றேன்.<br /><br /><font style='color:blue'>10. போலியால் ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளானது தவிர்த்து வேறு பல வழிகளிலும் தொல்லைக்குல்லானதாக தெரிவித்துள்ளீர்கள். அவை எவ்விதமானவை?</font><br />முந்தைய பதில் இதற்கும் பொருந்தும். திருமதி துளசி கோபாலிடம் மின்னஞ்சல் அனுப்பி டோண்டு மனைவி மகள் படத்தை பெற்று ஆபாச பதிவு எழுதியதாகவும், போலி டோண்டுவோடு தொடர்பில் இருந்ததாக போலி மின்னஞ்சல் ஸ்க்ரீன் ஷாட்கள் மூலமும், விடாது கருப்பு தளத்தில் நான் ஆசிரியர் என்பது போன்ற கட்டமைக்கப்பட்ட பிம்பமும், வலைப்பதிவின் மூலம் நான் ஆண்டுகணக்கில் பெற்ற நன்மதிப்பை தூள்தூளக்க போதுமானதாக இருந்தது. திருமதி துளசியும், நான் மதிக்கும் வாத்தியார் அய்யாவும், சிவஞானம் ஜியும், காசி சாரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு எப்படி உண்மைகளை புரியவைப்பது என்று குழம்பியே பெரும் மன உளைச்சல் அடைந்தேன். மேலும் நான்கு மாத கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு சென்று புகார் தரவேண்டிய அலைச்சலுக்கும் உள்ளானதால் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கப்பட்டேன். மேலும் என்னுடைய அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, மனித வள அதிகாரிகளிடம் மூர்த்தி சொன்னது என்ன தெரியுமா ? ரவி என்பவர் அலுவலக நேரத்தில் இணையத்தில் பார்ப்பணர்களை தாக்கி எழுதுகிறார் என்பது. இதனால் அவர்கள் என் மீது வைத்திருந்த நன்மதிப்பும் உடைந்து தூளானது.<br /><font style='color:blue'>11. பார்பநீயப் பதிவர்களால் மிகுதியாக வெறுக்கப்படும் நீங்கள் டோண்டுவுடன் எவ்வாறு நெருங்கிநீர்கள் என்று கூற முடியுமா? 'ஊசி ஏற்றுவதுபோல்' உங்களை தாக்கிய பதிவர்கள் அல்லது பதிவுகள் எவை?</font><br /><br />இணையத்தில் பார்ப்பணீயப்பதிவர்கள் என்று நான் யாரையும் கருதவில்லை. அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், ஜடாயு, ம்யூஸ் இந்துத்துவம் எழுதுவார்கள். அதில் உள்ள சில கருத்துக்களை எதிர்த்துள்ளேன், அவர்களும் என்னை பதிவு போட்டு குமுறியுள்ளார்கள். பொதுவாக முகமூடி எழுதும் நான்கு வரியில் நாற்பது உள்குத்துகள் இருக்கும். ஒருமுறை ஒரு இந்துத்துவ பதிவில் 'ரவீந்திரன் அந்தோனிசாமி' என்று என்னுடைய முழு பெயரை எழுதியதன் மூலம், நீ கிறிஸ்தவ மதம், அதனால் கருத்து சொல்ல வந்துவிட்டாயா என்பது போல கேட்டார். என்ன தான் நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்று தலைபாடாக சொன்னாலும், இந்துத்துவ பதிவர்கள் என்னை மதத்தை வைத்து தாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள். ஒருமுறை முத்து தமிழினி சொன்னார். முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும் என்று. அதுபோல.<br /><br /><font style='color:blue'>12. 'முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும்'- இது பற்றி உதாரணம் தந்து விளக்க முடியுமா?</font><br />இந்த இடத்தில் தேவை இல்லாதது இது. ஏற்கனவே சொல்லிவிட்டேன்.<br /><br /><font style='color:blue'>13.டோண்டு பற்றி சாதரணமாக பலருக்கும் அப்போது தெரிந்திருந்த நிலையில் உங்களுக்கு தெரிந்தது என்ன?</font><br /><br />மற்றவர்களுக்கு தெரிந்தது தான் எனக்கும். ஆனால், அவருக்கு தெரிந்த சில தனிப்பட்ட தகவல்கள் போலி டோண்டுவிடம் சென்றுவிடும். நான் ஒருமுறை பெங்களூர் கே ஆர் புரம் பிக் பஸாரில் இருந்தேன். அப்போது டோண்டுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. என்னுடைய மனைவி ஜெர்மன் படிக்கவேண்டும் என்பதை பற்றி விசாரிக்க நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அழைத்திருந்தார். அப்போது என்னுடைய மனைவி என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டார். சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய மனைவியின் சமூகத்தை சொல்லி திட்டி போலி டோண்டுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.<br /><br /><font style='color:blue'>14. பதிவுலகில் போலிடோண்டு தொடர்பாக நடக்கும் ஒவ்வொரு சச்சரவுகளின் போதும் கோவிகன்ணனை நீங்கள் தாக்கிவந்துள்ளீர்கள். அவரும் எதிபதிவுகள் இட்டுள்ளார். மூர்த்தியுடனான முந்தய பழக்கங்களில் நீங்கள் இருவரும் எவ்விதம் மாறுபடுகிறீர்கள் என்று கூறமுடியுமா?</font><br /><br />மூர்த்தி தான் போலி டோண்டு என்று ஆயிரம் முறை நிரூபித்த பின்னும், மூர்த்தி என்னுடைய நன்பர், அவர் போலியா என்று தெரியாது. என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதிய விடாது கருப்பை பார்த்து தன்னுடைய பெரியார் பற்றிய அறிவை வளர்த்தேன் என்றெல்லாம் சொன்னால், கோபம் வருமா வராதா ? <br /></div> <br /><center><[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com26tag:blogger.com,1999:blog-817601643605345.post-7318387850655516482009-09-17T20:25:00.005-04:002009-09-17T20:57:04.064-04:00போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 1<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b>தொடர் பேட்டியின் முதலில் பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி வெளியாகிறது. தொடர்ந்து சிலரது பேட்டிகளும், எஞ்சிய பாகங்களும் வலையேற்றப் படும். இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.<br /><br />உரிமைத்துறப்பு:<i>தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br /><font style='color:blue'>1.மூர்த்தியுடன் உங்கள் நட்பு முறிந்தபோது அவன் எவ்வாறு பதிவுகளில் எழுதிவந்தான்? ஆபாசங்களை தொடங்கியிருந்தானா? இல்லையா?</font><br /><br />ஆபாச சைபர் கிரிமினல் மூர்த்தியுடன் 'நட்பு' என்ற சொல் அருவருப்பை தருகிறது. நான் பதிவுலகின் உள்ளே நுழைந்தபோதே மூர்த்தி ஆபாசங்களை தொடங்கியிருந்தான். டோண்டு பதிவுக்கு பின்னூட்டினால், ஆபாச அர்ச்சனைகள் பின்ன்னூட்டமாக வரும். டோண்டு அவர்கள் ஒவ்வொரு பதிவாக சென்று, தன்னுடைய கண்டுபிடிப்பான எலிக்குட்டி சோதனை பற்றி விளக்கிக்கொண்டிருப்பார். என்னுடைய இரண்டாவது பதிவில் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html பின்னூட்டம் இட்ட ஒரே ஆளும் அவர்தான். போலி டோண்டு இவரா அவரா என்று என்னுடைய சம காலத்தில் பதிவுலகுக்கு வந்த லக்கிலுக்கும் நானும் அரட்டையில் விவாதித்துக்கொண்டிருப்போம். அதற்கு அடுத்த வாரத்தில் Doondu என்ற நபர் தான் போலி என்று கண்டுகொண்டேன். சாதாரனமான பின்னூட்டங்கள் வரும் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_26.html (இதில் Doondu வை நான் போலி என்றே விளித்து எழுதியுள்ளதை பார்க்கலாம்) மற்றும் <br />http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_25.html போன்ற பதிவுகளை பாருங்கள். இதே நேரத்தில், போலி டோண்டு தளத்தில் இருந்து வரும் பின்னூட்டங்களின் மூலம், டோண்டு என்பவர், ஆண் பெண் கற்புநிலை பற்றி கேவலமாக எழுதுவதாகவும், சாதி வேறுபாட்டை மருபடி கொண்டுவர முயல்வதாகவும், இதனை தாங்கள் ஒரு குழு அமைத்து எதிர்த்து வருவதாகவும் அறிவித்தனர். டோண்டு பதிவில் பின்னூட்டம் எதுவும் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது அந்த பின்னூட்டங்கள். போலி டோண்டு யார் என்று கண்டுபிடிக்க ஆவல் இருந்ததால், டோண்டு பதிவில் பின்னூட்டங்கள் எதுவும் போடாமல் அமைதி காத்தேன். அதனால் என்னுடைய மின்னஞ்சலும், அவர்களுடைய லிஸ்டில் சேர்ந்தது. இது தான் நீங்கள் சொல்லும் தொடர்பு. மற்றபடி நடவடிக்கைகளை அறிய முயன்று, டோண்டுவை எதிர்ப்பது போன்று ஒன்றிரண்டு மின்னஞ்சல்களும் என்னுடைய முகவரியில் இருந்து அனுப்பியுள்ளேன். <br /><br /><font style='color:blue'> 2. நட்பு முறிய உடனடிக் காரணம் என்ன? </font><br /><br />சென்ற கேள்வியின் நீட்சியாக இதற்கு பதில் அளிக்கலாம். இந்த நேரத்தில் நான் பார்ப்பணீய எதிர்ப்பு, வெங்காயம், பெரியார், கடவுள் நம்பிக்கை துறப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்று கொஞ்சம் ட்ரான்ஸ்பார்ம் ஆகியிருந்தேன்.<br /><br />ஜெயராமனை கேள்வி எழுப்பி பதிவு http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_22.html, இந்த பதிவில் ஜெயராமன் சொல்லியிருப்பது உண்மையான உண்மைகளே. என்னுடைய புரிதல் தவறு என்று பின்னால் உணர்ந்தேன்.<br /><br />டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று கும்மியடித்த டோண்டு மற்றும் ம்யூஸை நோக்கி http://tvpravi.blogspot.com/2006/08/blog-post_19.html , இந்த பதிவின் பின்னூட்டத்தில் கும்மிகளும் ஆரம்பம்.<br /><br />விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று நம்பி http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_28.html அவரது விடாப்பிடியான தேவையில்லாத பார்ப்பன எதிர்ப்பை சாடும் விதத்தில். இதில் விடாது கருப்பு மூர்த்தியின் பின்னூட்டத்தில், பார்ப்பன ஜாதியை தாழ்ந்த சாதி என்று எழுதியதை பார்த்தவுடன், விடாது கருப்புவின் உண்மையான நோக்கத்தில் சந்தேகம் வந்தது. அவனுக்கும் மூர்த்திக்கும் தொடர்பு இருக்கும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தேன்.<br /><br />இருந்தாலும், அவ்வப்போது வரும் பார்வேர்டு பின்னூட்டங்களை படிப்பது, மற்றும் போலி யார் என்று ஷார்ட் லிஸ்ட் செய்ய முயல்வது, வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் என்ற முயற்சி, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிய முயற்சி, திடீரென ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, ஓடிப்போறேன்யா பதிவுலகத்தில் இருந்து என்று ஒரு பதிவு போட்டுவிட்டு அப்புறம் அமைதி, பிறகு ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இராது என்பதுபோல மீண்டும் மொக்கைகள்.<br /><br />எல்லோரும் அய்யோ அம்மா என்று புலம்பும் ஆபாச அர்ச்சனைகள் எனக்கு வருவதில்லை, காரணம் டோண்டு பதிவில் பொதுவாக நான் பின்னூட்டம் போடுவதில்லை. ஒருவகையில் பயம், ஒருவகையில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணம், ஒருவகையில், போலியார் சாதி ஒழிப்பு விடுதலை இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட டோண்டு என்ற கிழட்டுப்பார்ப்பன சாதிவெறி மிருகம் எக்கேடோ கெட்டுப்போவுது என்ற அலட்சியம். இருந்தாலும் டோண்டு ஏதாவது தவிர்க்கமுடியாத வகையில் பதிவை போட்டுவிடுவார், அதில் பின்னூட்டம் போட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் பின்னூட்டம் போட்டோம் என்றாலும், அதற்கும் இரண்டொரு ஆபாச அர்ச்சனைகள் வரும். வேலைப்பளுவும், வெவ்வேறு திசைகளில் பயணிக்கவேண்டிய கட்டாயங்களும் அதனை தொடர்ந்து பாலோ செய்யவிடாமல் தடுத்தன.<br /><br />இதன்பின் விடாது கருப்புவுக்கு எதிராக விட்டது சிகப்புவும், மூர்த்தியின் இன்னொரு தளமான ஸ்பெஷல் ஆப்புவும், மூர்த்தியின் போலி தளமான கரு.மூர்த்தி என்ற தளமும், டூண்டு தளத்தின் தினம் ஒரு ஆபாச அர்ச்சனைகளும் ஆரம்பமாயின. வஜ்ரா சங்கர், என்றென்றும் அன்புடன் பாலா, அன்னியன் ரமணி, முகமூடி, திருமலை, காசி என்று போலி மூர்த்தியை கருத்தளவில் எதிர்த்தவர்கள் அத்துனைபேருக்கும் போலி தளங்கள், டோண்டு பதிவில் பின்னூட்டம் போட்டதால் கே எஸ் அதியமானுக்கு போலி தளம், அரவிந்தன் நீலகண்டனுக்கு போலி தளம் என்று டாப் கியர் எடுத்திருந்தது போலி பிரச்சினை.<br /><br />ராபின்ஹூட் ஒரு படி மேலே போய், மூர்த்தியின் திருமண போட்டோவை இணையத்தில் வெளியிட்டு, போலி டோண்டு என்பது மூர்த்தி தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். ராபின்ஹூட் மகேஷ், நீங்கள் ஏற்கனவே அவர் பெயரை ஒரு பதிவில் குறிப்பிட்டுவிட்டதாக நியாபகம், பெங்களூரில் இருப்பதால், அது அருண் ஆக இருக்ககூடும் என்று மூர்த்தி சந்தேகப்பட்டு, அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே என்னையும் அவனது சந்தேக வட்டத்தினுள் கொண்டுவந்திருந்தான்.<br /><br />இந்த குறிப்பிட்ட பதிவை நான் இட்டது தான் நானும் இந்த சுழலில் சிக்க காரணம். http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html இந்த பதிவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல்களுக்கு உள்ளானேன். அவை பொதுவாக வருவன போல் அல்லாமல் என்னுடைய மிக அதீதமான தனிப்பட்ட தகவல்களோடு இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டேன். இந்த நேரத்தில் மூர்த்தி என்பவர் தான் போலி டோண்டு என்றும், கோவி கண்ணன் அவர் நன்பர் என்றும் அறிந்துகொண்டேன். கோவி கண்ணனும், தன்னுடைய சட்னிவடை என்ற பதிவை பற்றி சொல்லியிருந்தார், அதிலும் ஆபாச தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. என்னுடைய இந்த பதிவில் ஆபாச அர்ச்சனை செய்தது போலி டோண்டு மூர்த்தி தான் என்று கோவியாரிடம் சொல்ல, இல்லை என்று அவர் சாதித்தார். அதற்குள் போலி டோண்டுவை தொலைபேசியில் அழைத்து ஒரு பிரபல பதிவர் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். அது நான் தான் என்றும் அவனது சந்தேகம். என்னுடைய நம்பரை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கோவி கண்ணன் அளித்தார். மேலும் என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன். <br /><br />கிட்டத்தட்ட பெண்குரலில் ஒரு அழைப்பு வந்தது, அதில் தான் தான் போலியார் என்றும், என்னுடைய பதிவில் ஆபாச பின்னூட்டங்களிட்டது பார்ப்பணர்களின் வேலை என்றும், உன்னுடைய ஸ்டேட் கவுண்டரில் என்னுடைய ஐபி இல்லை, அதாவது அதற்குள் கோவியார் அதனை போலி மூர்த்தியிடம் பாஸ் செய்திருந்தார், ஆகவே தமிழ் இணைய பிதாவான தன்னிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்ரு எச்சரித்தார் போலியார். கொஞ்சம் கூட ஆண்மையற்ற அந்த குரல் போலியுடையதாக இருக்காது என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் போலிக்கு கொடுக்கப்பட்டிருந்த பில்டப் அப்படி.<br /><br />அதன்பின் டோண்டுவுக்கு ஒரு பின்னூட்டம் இட, ஆட்டோமெட்டிக்காக உருவானது என்னுடைய போலி வலைப்பதிவும், http://tvpravi.blogspot.com/2007/07/blog-post.html போலி பின்னூட்டங்களும். <br /><br />இவன் தான் போலி என்று தெரிந்துவிட்டதால்<br /><br />மலேசியா மனநோயாளி என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html<br />ரீட் நோட்டிபை மூலம் அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை விடாது கருப்புவும், டூண்டுவும் ஓரே ஐபியில் இருந்து திறந்ததால் விடாது செருப்பு என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_8094.html<br />அப்போது போலியார் என்றெல்லாம் எழுதி லக்கிலுக் பதிவு எழுதியதால் லக்கிலுக் மீதும் டென்ஷன், இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம் http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_6734.html, பின்னால் லக்கிலுக் பதிவு நீக்கப்பட்டது. அதன்பிறகு லக்கிலுக்கையும் க்ளோஸாக வாட்ச் செய்து, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டுகொண்டதால் மட்டுமே அவருடன் நட்பை தொடர்ந்தேன். <br /><br />டோண்டு ராகவன் ஒரு பதிவில் சொன்னது போல ப்ரவுணி புள்ளிகளுக்காக லக்கிலுக் போலி டோண்டு மூர்த்தியுடன் இணைந்தாரா, அதன் பின் மூர்த்தியால் ப்ளாக் மெயில் செய்யப்பட்டாரா என்பது எல்லாம் எனக்கு தெரியாது.<br /><br /><font style='color:blue'>3. 'அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான்' என்று கூறுகிறீர்கள். எப்படி அனுப்பினான்? மடலிலா. அரட்டையிலா அல்லது தொலைபேசியிலா? அந்த அசைன்மேன்டின் உள்ளடக்கம் என்ன? அவன் ஏன் உங்களுக்கு அனுப்பி இருந்தான்?</font><br /><br />அரட்டையில் இல்லை. மடலில். <br /><br /><font style='color:blue'> 4. 'என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.' என்று கூறுவதில் உள்ள முரணை விளக்குங்கள்? யாரென்றே தெரியாத நபரிடம், அதுவும் ஆபாசங்களை செய்துவரும் நபருக்கு எவ்வாறு பாஸ்வேர்டை தந்தீர்கள்? இது உலகில் எவருமே செய்யத்துணியாத ஒன்று அல்லவா? மேலும் உங்கள் ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வைத்து போலி என்ன செய்தான்?</font><br /><br />இது என்ன ஸ்விஸ் வங்கி பாஸ்வேர்டா யாருமே செய்யத்துணியாத என்று பில்டப் எல்லாம் ? அதுவும் எனக்கு நன்கு பழக்கமான கோவியார் கேட்கிறாரே என்று கொடுத்தேன். அவன் அதை வைத்து என்ன செய்தான் என்று தெரியது.<br /><br /><font style='color:blue'> 5.போலியின் குணாதிசியம் பற்றி உங்கள் தெரிந்தவை என்ன?</font><br />கேள்விக்கு கேள்வி சைக்கோ என்ற வார்த்தைக்கு என்ன குணாதிசியங்கள் அகராதியில் உள்ளன ? </div> <br /><center>[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-817601643605345.post-31356352507661031652009-09-16T00:38:00.003-04:002009-09-16T00:45:22.347-04:00போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 5<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b>சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஐந்தாவது பாகம் வெளியாகிறது. பேட்டிகளுக்குப் பிறகு மீண்டும் அவ்விரண்டு பகுதிகளும் வெளியாகும்.<br /><br />உரிமைத்துறப்பு:<i>தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br /><br />போலிடோண்டு ஒரு திராவிடப் பதிவர் என்றும் அவன் பார்ப்பனீயப் பதிவர்களால் தாக்கப்பட்டான் என்றும் அவன் பதிலுக்கு ஆபாசமாக தாக்கத்தொடங்கினான் என்றும் ஒற்றை வரி கருத்துகள் புதிய பதிவர்களிடம் இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் விஷயம் அதைவிட சிக்கலானது. கருத்தியல் கூறுகள் ஏதும் அவனது எழுத்தில் இல்லை. ஒரு மனநலன் பிறழ்ந்தவன் போல் ஆபாசங்களை வாரியிறைத்து வந்துள்ளான். எவ்வளவு திடமானது கொண்டவரையும் அவை ஆடிப்போகச்செய்யக் கூடியவை. உதாரணத்திற்கு <br /><br /><center><div style='background-color:black;color:black;width:400px;'>////அடேய் தேவுடியா மகனே முது்துப்பேட்டை பரக்கத்...ஒன் பொன்டாட்டி கூதில என் செங்கோலை பாய்ச்ச...டோண்டு என்ன உன் அம்மாள போட்டு ஒழுத்தானாடா அவசாரி மகனே?/////</div></center><br /><br />இத்தகு ஆளுக்கு தீவிரமான கொள்கைகள் ஏதும் இருக்கும் என்று எவரும் கருத முடியாது. அவனது ஈகோவுக்கு தீனிகள் கிடைக்கும்போது அவன் மூர்க்கமானான். இவனது ஆபாசங்களை ஒப்பிட்டால் பிறரது ஆபாசங்கள் வீச்சு குறைந்தவையே எனினும் அவைகளுக்கு ஆபாசங்களே. இவனுடன் மல்லுக்கு நின்றவர்கள் உண்மையில் இது எதில் போய் முடியும் என்று அப்போது அறியாமலேயே விளையாடியுள்ளனர். ஆனால் அவர்களில் டோண்டுவைத்தவிர எவரும் அவனை முடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. அதை செய்தவர்கள் எப்போதோ அவனுடன் ஏற்பட்ட குறுகிய கால தொடர்பால் அல்லது விளைவுகளை எதிர்நோக்காமல் ஏற்பட்ட பழக்கத்தால் கூனிக் குறுகியவர்களும், அவனால் தாங்கொணாத் துயருக்கு ஆளானவர்களுமே. <br /><br />முதலில் இத்தகு அழிச்சாட்டியங்களுக்கு சொந்தக்காரனான போலியின் காலத்தை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம். 1) ஆபாசங்களின்றி டோண்டுவை சீண்டிய காலம், 2) பிறகு போலித்தளங்கள் தொடங்கியது, 3) அடையாளங்களை திருடி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு தாக்கியது, 4) பதிவுகளுக்கு வெளியே தாக்குதல்கள் நடத்தியது என கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து 5) இறுதியாக விசாரணையில் ஓய்ந்து போயிருக்கிறான்.<br /><br />இரண்டாயிரத்து ஐந்து இறுதி மற்றும் இரண்டாயிரத்து ஆறு தொடக்கப் பகுதிகளில் டோண்டுவின் பெயரில் பலரது தளங்களில் பின்னூட்டங்கள் இட்டுவந்தான். அப்போது எழுதிவந்த கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்கும் இவ்வாறு இட்டுவந்தான். அதில் இருந்த உள்ளடக்கம் வித்தியாசங்களின்றி ஒரே மாதிரியாகவே இருக்கும். அப்போது அவனை யாவரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. டோண்டு பெண்களின் கற்பு பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டபோது அதை அவரது குடும்பப் பெண்களுடன் தொடர்பு படுத்தி முதல் ஆபாசப் பின்னூட்டம் இட்டான் ஆபாச பின்னூட்டம் ஒன்றை இட்டான். வழக்கம்போலவே இதையும் எல்லோருடைய பதிவுகளிலும் வேறு வேறு பெயர்களில் இடத் தொடங்கினான். <br /><br />தமிழ்மணத்தின் பின்னூட்டத் திரட்டியில் கணிசமான பகுதியை இந்த ஆபாசப் பின்னூட்டங்கள் ஆக்கிரமித்து வந்தன. போலியின் தொல்லை அதிகமாகவே டோண்டு இதை தடுக்க மெனக்கிட ஆரம்பித்தார். ஒவ்வொரு பதிவிற்கும் சென்று பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வேளையில் ஈடுபடலானார். பலருக்கும் பின்னூட்ட மட்டுறுத்தல் என்பதையே அப்போதுதான் முதன் முதலாக அறிகின்றனர். எனினும் திறந்து கிடக்கும் பதிவுகளில் தன் வேலையை தொடர்ந்து காட்டிக்கொண்டுதான் வந்துள்ளான் போலி. தினம் தினம் புதிதாக வரும் பதிவர்களுக்கு முதலில் போலி சென்று டோண்டுவை அர்ச்சிக்க, பின்னாலேயே டோண்டு சென்று மட்டுறுத்தலை அறிவுறுத்த என்று இருவரும் வேலை பிழைப்பின்றி இதையே செய்து வந்திருந்தனர். இதுவரையிலும் இவர்களது அக்கப்போர் இருவர் சம்பத்தப்பட்டது என்ற மட்டத்திலேயே இருந்து வந்தது. <br /><br />தமிழ்மணத்தில் இணைந்திருந்த பதிவுகளில் மட்டுமே இவ்வாறு போலி தொடர்ந்து செயல்பட தமிழ்மணத்தின் வழியாக போலியை கட்டுப்படுத்த டோண்டு முயற்சி செய்கிறார். இதுதான் இந்த இருவர் பிரச்சினை மூன்றாம் நபருக்கும் பிரச்சினையாக மாறியதன் தொடக்கம். மட்டுறுத்தல் செய்யப்பட்ட பதிவுகளில் மட்டும் பின்னூட்டம் திரட்ட வேண்டும் என்று தமிழ்மண நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். முதலில் மறுத்த நிர்வாகம் டோண்டுவிற்கு ஆதரவு பதிவர்கள் மற்றும் சில நிர்வாகிகளின் மூலம் தமிழ்மணத்திலும் மட்டுறுத்தல் கொண்டுவரப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இதை பெருமையாக பலரிடத்திலும் பேச ஆரம்பித்தார். போலிக்கு போலிடோண்டு என்ற பெயரிடப்பட்டு எல்லாராலும் அவ்வாறே வழங்கப்படத் தொடங்கியது. இது போலிக்கு ஆத்திரத்தை கிளப்பவும், டோண்டுவைத் தாக்க வேறொரு உபாயத்தை தேடத் தொடங்கினான்.<br /><br />முதல் முயற்சியாக போலிடோண்டு தளத்தை doondu.blogspot.com ஆரம்பித்து டோண்டுவின் படத்தை இட்டு ஆபாசமாக எழுத ஆரம்பித்தான். டோண்டு வலைத்தளம் போலவே இருக்கும் அத்தளத்தில் டோண்டு படத்தில் கிடா மீசையை வரைந்து, தலைப்பையும், துனைத்தலைப்பையும் ஆபாசமாக மாற்றி அமோகமாக தம் வேலையைத் தொடங்கினான். டோண்டு எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் அதில் ஆபாசமாக எதிர்பதிவை இடுவான். பதிவர் சந்திப்பு குறித்த இடுகைகள் அவனது போளித்தளத்தில் சிறப்பு கவணம் பெரும். எதிலும் சளைக்காத டோண்டு அவனை இக்னோர் செய்வதை விடுத்து அவனது சீண்டவும் ஆரம்பித்தார். இதில் டோண்டுவிற்கு ஆதரவு கூடியதும் அதை ஒழிக்க அடுத்த திட்டத்தை தீட்டினான். இதன் பிறகுதான் டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் எல்லோரையும் தாக்கத்தொடங்கியது.<br /><br />டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு முதலில் நல்லபடியாக ஒரு பின்னூட்டம் இட்டு அவருக்கு பின்னூட்டமிட வேண்டாம் என கேட்டுக்கொள்வான். மறுப்பவர்களுக்கு அடுத்து ஒரு எச்சரிக்கை மடலை அனுப்புவான். அதில் சில சமயம் அவ்வெச்சரிக்கையை மறுப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நிராகரிப்பவர்களுக்கு தனியாக அவர்கள் பெயரில் ஒருதளத்தை தொடங்குவான். ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனியாக போலித்தளமோ அல்லது வெறும் பின்னூட்ட அர்ச்சனையோ கிடைக்கும். இவ்வாறு இருபதுக்கும் மேற்பட்ட தளங்களை நடத்திவந்தான். இதனால் டோண்டுவிற்கு பின்னூட்ட வரவு குறைந்தது. எனவே அவர் போலியாக சில ஐடி -களை உருவாக்கி பின்னூட்டங்களை இட்டுக்கொண்டார். செர்வாண்டிஸ், முரளி மனோகர், கட்டபொம்மன் போன்றவை அவை. இவ்வாறாக டோண்டுவிற்கு நண்பர்கள் குறைய, போலி டோண்டுவிற்கு எதிரிகள் அதிகமாயினர்.<br /><br />போலியை அஞ்சாமல் தாகிவந்த ஒருசில ஆரிய பதிவர்கள் இப்போது தங்களை மறைத்துக்கொண்டு தாக்க வேண்டியதாகிப் போனது. குழுமங்களில் கூடியும் தனியாகவும் போலியுடன் மல்லுக்கட்டத்தொடன்கினர். திராவிடப் பதிவர்கள் பெரும்பாலானவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. சிலர் இதற்காக வருத்தப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை. எனவே இவர்களை பயந்தான்கொள்ளிகள் என்று டோண்டு அழைக்கலானார். இது குறித்து ஒரு மூத்த பதிவரை கேட்டபோது,"டோண்டுவிற்கு ஆதரவளித்தல் என் பெயரில் ஆபாச தளம் உருவாகும், பிறர் பதில் தாக்குதல் செய்வதைப் போல மல்லுகட்ட எனக்கு விருப்பமில்லை; சும்மாதான் இருக்க வேண்டும். அதற்கு இப்போதே சும்மா இருந்து விடுவேன். ஒரு ஆபாச தளமாவது மிஞ்சும்" என்றார். <br /><br />இவ்வாறு போலிடோண்டு vs டோண்டு + டோண்டு நண்பர்கள் என்று பிரச்சினை பெரிதானது. இந்த காலகட்டத்தில் போலி தனியாக இருந்தாலும் அவனது பலம் ஆபாசத்தாகுதல்தான். அணு ஆயுத வல்லரசு போல் எல்லோரையும் மிரட்டி வந்தான். அவனது பக்கபலம் அவனது தொழில் நுட்ப அறிவு. ஒருமுறை, போலியை மிரட்டும் தொனியில், அவனை அழிக்கப் போவதாக அமேரிக்காவில் வசிக்கும் ஒரு பதிவர் சூளுரைத்தார். தனி டொமைனில் எழுதிவந்த அவரது விபரங்களை டொமைன் ஓனரை அறியும் உத்திகளை பயன்படுத்தி அவரது விபரங்களை போலித்தளத்தில் வலையேற்றினான். அத்துடன் அவர் வெளியேறிவிட்டார். இவ்வாறு வெறியாட்டம் போட்டுவந்த போலிடோண்டுவிற்கு ஆபாசமும் தொழில் நுட்பமும் நெடுநாளைக்கு கைகொடுக்காது என்ற எண்ணம் ஏனோ ஏற்படத்தொடங்கியது. இதனால் தமக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேளையிலும் சில உத்திகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.</div><br /><center>[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-817601643605345.post-58223350785679952172009-09-14T22:07:00.008-04:002009-09-16T00:42:44.743-04:00போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 2<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b><a href='http://mohankandasami.blogspot.com/2009/09/blog-post.html'>சென்ற பதிவினை </a>தொடர்ந்து இது இரண்டாம் பகுதி.<br /><br />உரிமைத்துறப்பு:<i>தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br />மூர்த்தி தமிழ் வலைப்பூக்களின் மூத்த பதிவர்களில் ஒருவர். தமிழ் வலைப்பூக்கள் உருவான காலக்கட்டத்தில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் இவரும் ஒருவர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் இலக்கியம், இணையம் தொடர்பாக நடந்த கூட்டங்களுக்கு மூர்த்தி கட்டாயம் வருவார். ஒரு வலைப்பூ நடத்தி வந்தார். அவரது வலைப்பூவில் சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. முத்தமிழ் மன்றம் என்ற கருத்து மன்றத்தை நிறுவிய நிறுவனர்களில் மூர்த்தியும் ஒருவர். தேன்கூடு திரட்டி நடத்தி வந்த சாகரன் வடிவமைத்து தந்த மன்றம் இது. ஆனால் பிற்பாடு அதே தேன்கூடு சாகரனையே போலி டோண்டு ஆபாசமாக அர்ச்சித்தது வேறுகதை.<br /><br />வெங்கடேஷின் கமல் பதிவுக்கு அடுத்து அடுக்கடுக்காக மூர்த்தி மீது தாக்குதல்கள் நடைபெற்றது. ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்படைந்த மூர்த்தி போலி டோண்டுவாக உருமாற்றம் அடைந்திருக்கிறார். இது ஒரே இரவில் நடந்த விஷயமில்லை. ‘நான் இதுபோல மாறியதற்கு காரணம் என்மீது புகார் கொடுத்தவரே’ என்று பிற்பாடு போலிஸ் விசாரணையில் மூர்த்தி ஒப்புகொண்டதாக சொல்கிறார்கள்.<br /><br />போலி டோண்டுவாக மூர்த்தி டோண்டுவை தாக்கு தாக்குவென்று தாக்க, டோண்டுவின் சாதிவெறி மீது வெறுப்பு இருந்தவர்களை உள்ளூற திருப்தி படுத்தியது. டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட, சும்மா இருந்தவர்கள் அல்லக்கைகள் ஆக்கப்பட்டார்கள்.<br /><br />போலி டோண்டு வடிவிலான ஆபாசதாக்குதல்கள் மட்டும் தனக்கு ஆதரவினை பெற்றுதராது என்பதை மூர்த்தி உணர்ந்தார். விடாது கருப்பு என்றொரு வலைப்பூவை உருவாக்கி பெரியார் கருத்துகளை பதிய ஆரம்பித்தார். ஆனாலும் இடை இடையே டோண்டுவையும், பிராமணர்களையும் தாக்கி சூடான பதிவுகள் இடம்பெறும். இப்போது அழிக்கப்பட்டுவிட்ட இந்த வலைப்பூ மட்டும் இருந்தால் பல திராவிட பதிவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கக்கூடும். அன்று இந்த விடாது கருப்பு பதிவுக்கு ஆதரவாக செயல்பட்ட பல திராவிட பதிவர்கள் மற்றும் நண்பர்களை அல்லக்கை என்று குறைகூறி டோண்டுவுக்கு ஆதரவாக மாறிபோயிருக்கிறார்கள். இரு ஆபாசங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்ததற்கு சிலருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக அல்லது நியாயத்தை நம்பும் எண்ணம் கொண்ட பாலபாரதி, முத்து தமிழினி, இன்ன பிற பதிவர்களைபோல் இவர்களும் ஒதுங்கிப் போய் இருக்கலாம் என்ற கருத்து இப்போது பலரிடமும் இருக்கிறது.<br /><br />போலி டோண்டு, விடாது கருப்பு ஆகிய பதிவுகளோடு சேர்த்து சுமார் இருபது ஆபாச வலைபூக்களை மூர்த்தி நடத்தியதாக தெரிகிறது. டோண்டு குழு போலிசில் அளித்த புகாரில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகமானது. எல்லா வலைப்பூக்களையும் நடத்தியதாக போலிஸிடம் ஒப்புக்கொண்ட மூர்த்தி சாருநிவேதிதாவின் ஈமெயில் ஐடியை மட்டும் தான் ஹேக் செய்யவில்லை என்று விசாரணையில் கூறியிருக்கிறார். மூர்த்தி மீது பழிபோட யாராவது இந்த வேலையை செய்திருக்கலாம் என்று ஒரு தகவல் கசிகிறது. (இது இப்பதிவரளவில் உறுதிப் படுத்தப்படாத தகவல்).<br /><br />மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முன்பு அவ்வாறு கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை. பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி. குழலியுடன் மூர்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு அல்லது போலி குழலியை தாக்கத்தொடங்கிய பிறகு மூர்த்திதான் போலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததுடன் போலியை தம் ஆதரவாளர்களுடன் எதிர்கொண்டிருந்த டோண்டு வுக்கு ஆதரவு தர தொடங்கினார். காவல் துறையில் போலியை அடையாளப்படுத்த கோவிகண்ணனை கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார். அப்போது மூர்த்திதான் போலி என்பது தமக்கு தெரியாது என்பது கோவிகண்ணனின் தற்போதைய வாதம். அதை உறுதிபடுத்துவது தனது வேலையல்ல என்கிறார். அவரது வாதம் மற்றும் உறுதிப் படுத்த மறுத்தது போன்றவையே அவர்மீதான குழலி மற்றும் செந்தழல் ரவி ஆகியோரது வெறுப்பிற்கு காரணம். இதற்கு ஆதாரங்களாக பலவற்றை ஏற்கனவே கூறியுள்ளனர். அதேசமயம் மூர்த்தியுடன் இவர்களது நட்பை விளக்குவதை விட தன்னை நிரூபிப்பதே தாம் விரும்புவதாக சில விளக்கங்களையும் கோவிகண்ணன் வெளியிட்டுள்ளார். எனினும் இதுபற்றிய ஓயாத சச்சரவுகள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன. <br /><br /> 2006ல் வலைப்பதிய ஆரம்பித்த லக்கிலுக் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். அப்போது குழலி, முத்து தமிழினி, முத்துகுமரன் ஆகிய மூவரும் திராவிட தமிழர்கள் என்றொரு கூட்டுவலைபூவை நடத்தி கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஒரு கூகிள் குழுமமும் இருந்தது. லக்கிலுக் அந்த குழுமத்தில் இருந்தார். லக்கிலுக்கின் அதிரடி செயல்பாடுகளை கண்ட திராவிட தமிழர்கள் அவரையும் தங்கள் குழுவின் பொறுப்பாளராக சேர்த்து கொண்டார்கள். இது ஆரிய பதிவர்கள் ஒன்றுகூடி ஆபாசமாக நடத்திவந்த விட்டது சிகப்பு என்ற பெயர்கொண்ட குழுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. செந்தழல் ரவியைப் போலவே லக்கிலுக்கும் மூர்த்தியுடன் நட்பில் இருந்தார். போலி ஆபாசங்களை அரங்கேற்றத் தொடங்கியபிறகு அல்லது தாங்களும் தாக்குதலுக்கு ஆளான பிறகு அந்நட்பை தொடர்ந்தார்களா என்பதே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்.<br /><br />டோண்டுவுடன் சேர்ந்து தாக்குதல்கள் நடத்திய பதிவர்களுடன் டோண்டுவுக்கு இருந்த தொடர்பில் எவ்வித மர்மமும் இல்லை. ஆனால் அவர்கள் யார் என்பதில் மர்மம் நீடித்தது. பல தளங்களை நடத்தியவர்கள் யாரென்று உறுதிப்படுத்தக் கூறி யாரிடமும் யாரும் கோரவில்லை என்று தெரிகிறது. அவர்கள் மீது புகாரை டோண்டுவும் தரவில்லை. புதிதாக டோண்டுவுக்கு அவருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியவர்களும் அதை கோரவில்லை. காவல்துறைக்கு விஷயம் சென்றதும் அப்பதிவுகள் நின்றுவிட்டன. அவர்களின் செயல்பாடுகள் கூட்டாக இருந்தன. பிளவுகள் இல்லை. ஒருவர்மீது ஒருவருக்கு காழ்ப்போ தனிப்பட்ட மனக்கசப்போ இல்லை. ஆனால் மூர்த்தியோ தம் ஆதரவாளர்களை தன செயல்பாடுகளால் இழந்தார். <br /><br />அதே நேரத்தில் ஜயராமன் என்பவன் போலிடோண்டு பாணியில் ஒரு பெண் பதிவரை ஆபாசமாக எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருந்தான். இவனை தகுந்த ஆதாரங்களோடு பிடித்தவர் பாலபாரதி. ஜயராமனுக்கு அந்த பெண் பதிவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை தந்து உதவியர்கள் டோண்டுவும், அவரது சீடர் என்றென்றும் பாலாவும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு சல்மா அயூப் ஆபரேஷன் என்று பாலபாரதி பெயர் இட்டிருந்தார். டோண்டுவின் அல்லக்கை என்று எதிரணியினரால் அழைக்கப்பட்ட அவன் ஆதாரங்களோடு மாட்டிகொண்டதில் பதட்டம் அடைந்தார் டோண்டு. போலி என்ன செய்தானோ அதையே டோண்டுவும் அவரது அல்லக்கைகளும் செய்துவந்தார்கள் என்பது அப்போது வெட்டவெளிச்சமானது. டோண்டு தன்னுடைய சக இந்துத்துவா நண்பர்களின் உதவியை நாடினார். ஜயராமனை அவர்கள் காப்பாற்ற பல கட்டுகதைகளை வெளியிட்டார்கள். அவற்றில் ஒன்றுதான் லக்கிலுக் அடியாள்களை வைத்து மிரட்டி ஜயராமனிடம் கையெழுத்து வாங்கியது. உண்மையில் லக்கிலுக்குக்கும் அந்த ஆபரேஷனுக்கு சம்பந்தம் எதுவுமில்லை. இதற்கான ஆதாரம் ரெகார்ட் ஆகியிருப்பதாக தெரிகிறது. <br /><br />இதே காலக்கட்டத்தில் ராபின்ஹூட் என்று ஒரு பதிவர் மூர்த்தியின் மனைவி போட்டோவை வலைப்பூவில் ஏற்றி நிலைமையை மோசமாக்கினார். பதிலுக்கு போலி, டோண்டுவின் மகள் போட்டோவை வலையில் ஏற்றினார். டோண்டுவின் மெயில் ஐடியில் ஒரே ஒரு எழுத்தை கூடுதலாக சேர்த்து எல்லா பதிவர்களும் டோண்டு அனுப்புவது போல சாட் ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தான் போலி. பல பதிவர்களும் ஒரிஜினல் டோண்டு என்று நினைத்து சாட் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அதுபோல தொடர்பில் இருந்த ஒரு பெண் பதிவரிடம் இருந்து இந்த போட்டோவை பெற்றானாம் போலி. போலியை போலி பாணியிலேயே மடக்கிய ராபின்ஹூட் ஒரு பெங்களூர் பதிவர். அவரது இயற்பெயர் மகேஷ். தமிழில் அவருக்கு வேறு வலைப்பூ இருக்கிறதா போன்ற விவரங்கள் தெரியவில்லை.</div><br /><br /><center>[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com47tag:blogger.com,1999:blog-817601643605345.post-52342471967980054502009-09-13T21:33:00.004-04:002009-09-13T23:16:42.222-04:00போலி டோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><b>கடந்த சிலநாட்களாக தமிழ் வலையுலகை அல்லோகலப் படுத்திவரும் போலி டோண்டு விவகாரம் பதிவர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாசகர்கள் மத்தியிலும் சில எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம், அவமானம், பதற்றம், பயம், நிம்மதி, அங்கலாய்ப்பு, அருவருப்பு என சில உணர்வுகளை உருவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த விவகாரம் காவல் துறை சம்பந்தப்பட்ட ஒன்றாகிப் போனபின் பல போலித்தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வலைப்பூக்களும் புதிய பதிவர்களால் நிரம்பி ஆரோக்கிய பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும் அவ்வப்போது புதிய பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிலராலும், வேண்டுமென்ற பிரச்சினையை கிளர வேண்டும் எண்ணத்தில் சிலராலும் இப்பிரச்சினை தூண்டப்பட்டு வருகிறது. ஓராண்டுக்குமுன் பதிவர் இளா -வால் இவ்வாறு ஒருமுறை தூண்டப்பட்டது. தற்போது சிறில் அலெக்ஸ் எழுதிய பதிவால் புதிய பதிவர்களுக்கு அவ்விவகாரம் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது. <br /><br />பெரும்பாலும் இவ்விவகாரம் குறித்து, இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பத்தப் பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் கருதுவது 'இது தற்போது தேவையற்ற பிரச்சினை' என்பதாகும். ஆனால் அக்கருத்து இப்பிரச்சினை குறித்து முழுமையாக அறியாமலோ அல்லது எதுவுமே தெரியாமலோ இவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன. <br /><br />உரிமைத்துறப்பு: <i> தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.</i></b><br /><br />இந்த கதை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. டோண்டு உட்பட பலரது தளங்களில் இதுபற்றிய செய்திகள் இருந்தாலும் அனைத்தும் சார்புக்கதைகளே. ஒரு முழுமையான விசாரணையை பலரிடம் மேற்கொண்டதின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்படுகிறது. <br /><br />18-11-2004 அன்று நேசமுடன் வெங்கடேஷ் என்பவரால் எழுதப்பட்ட கமலகாசன் பற்றிய பதிவு (<a href='http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1'>http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1</a>) ஒன்று இவ் விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அப்பதிவில் கமலகாசனை சிலாகிக்கும் ஆசிரியர் அவரது குறிப்பிட்ட இரு பலங்கள் வேறு எவரிடமும் இல்லாதவை என்றும் அவருக்கு அடுத்து அரவிந்தசாமி, மாதவன் ஆகியோரிடம் அவற்றை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். <br /><br />///கமலுக்குப் பின் நான் இருவரை அதுபோன்ற ரிஸ்க் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவர் அரவிந்தசாமி. அவருக்கும் கமலைப் போலவே பேசும் முகம், கண்கள். கமலைவிட ஸ்மார்ட்டாய், வெள்ளைவெளேர் என்று வேறு இருந்தார்./////<br /><br />////மற்றொருவர், மாதவன். இவரும் பாப்புலர் ஹீரோவின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றவர். /////பாப்புலர் ஹீரோ பிம்பத்தில் இருந்து சட்டென ஒரு கேரக்டர் ஹிரோ உயரத்துக்கு இவர் போகவேண்டும். அதற்கான அத்தனை வளங்களும் அவரிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ////<br /><br />பதிவர் ஒரு பிராமணர் என்பதை பின்னூட்டங்களில் அறிய முடிகிறது. பிராமணல்லாதோரை விட பிராமணருக்கு கூடுதல் தகுதிகள் உள்ளன என்பதுபோன்று இணையத்திலும் இதழ்களிலும் எழுதப்பட்ட பதிவுகளும், கட்டுரைகளும் எண்ணற்றவை இருந்தாலும் இப்பதிவுதான் போலி டோண்டு விவகாரத்திற்கு ஆணிவேர். அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார். சூத்திரனை சோற்றுக்கு போய் மாடு மேய்க்கச் சொல்லும் ஒரு பின்னூட்டத்திற்கும் பொறுமையாகவே பதில் அளிக்கிறார். ஆனால் அவரது கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு வந்த அனானிமஸ் பின்னூட்டங்கள் அவரை மூர்க்கமாகவும் ஆபாசமாகவும் தாக்கியுள்ளன. <br /><br />இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது. வழிப்போக்கனாக அங்கு கண்ணியமாக வாதிட்டது மூர்த்தி தானா என்பதை உறுதிகூட செய்யாமல், அது மூர்த்தியே தான் என்று முத்திரை குத்தி மாற்றி மாற்றி அடுத்தடுத்து அவரவர் வலைப்பதிவில் கும்மியிருக்கிறார்கள் பிராமண பிரியர்கள். சம்பந்தபட்ட சுட்டிகள் இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை, பலரும் பதிவுகளை அழித்துவிட்டார்கள். அவை கிடைத்தால் இன்றைய புனித பிம்பங்கள் அப்போது எவ்வளவு புனிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து தன் மீது குத்தப்பட்ட ஆபாச முத்திரை மூர்த்தியை மூர்க்கம் கொள்ள செய்தது.<br /><br />இவ்வாறு உருவாக்கப்பட்ட போலியின் பொதுவான செயல்பாடு எதுவாக இருந்தது? டோண்டுவின் பதிவில் யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என்று பகிரங்கமாக மிரட்டப்பட்டார்கள். மீறி பின்னூட்டம் இட்டவர்களின் பதிவுகளுக்கு ஆபாச பின்னூட்டங்கள் வரும். இந்த பின்னூட்டங்களையும் டோண்டு பெயரிலேயே போட்டதால் மூர்த்திக்கு போலி டோண்டு என்று பெயர் சூட்டப்பட்டது. பலரும் இந்த சாக்கடையில் கல்லெறிய தயங்கி ஒதுங்கி நின்றார்கள். <br /><br />பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர். ஆனால் டோண்டுவால் பிரச்சினை பெரிதானது. பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக டி.பி.ஆர் ஜோசப், சிவஞானம்ஜி ஆகிய மூத்த பதிவர்களை சொல்லலாம். இவர்களை பற்றி போலியிடம் டோண்டுவே போட்டு கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, டோண்டு பின்னூட்டமிடும் அப்பாவி பதிவர்கள் டோண்டுவுக்கு பதில் பின்னூட்டமிடும்போது அவர்கள் போலி டோண்டுவால் தாக்கப்பட்டார்கள். இதற்கிடையே, டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் இடையில் ஆபாச சேட்டிங் பலமுறை நடந்துள்ளன. பதிவர் சந்திப்பு ஒன்றில் ‘மூர்த்தி தேவடியா மகன் போனில் திட்டினான்’ என்று டோண்டு சொன்னதை சந்திப்பில் கலந்துகொண்ட, இவ்விஷயத்தில் சம்பந்தப்படாத பதிவர்கள் மூலம் அறியப்படுகிறது. <br /><br />போலியும் டோண்டுவும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக மாய்ந்துக் கொள்ளும்போது ஒதுங்கி நின்றவர்கள் பயந்தான்கொள்ளிகளாக கருதப்பட்டனர். பலர் பதிவெழுதுவதை நிறுத்தினர். ஆனால் சிலர் போலியின் அல்லக்கைகளாக பெயர்சூட்டப்பட்டனர். போலியுடன் தம் தொடர்பை மறுத்த அல்லது துண்டித்துக்கொண்ட பலரும் அப்பெயரை பெற்றுக்கொண்டனர். அப்பெயர் பெற்றவர்களில் சிலர் பிறகு போலியிடம் தமக்கேற்பட்ட மனக்கசப்புகளால் தம் ஆதரவை டோண்டுவுக்கு வழங்கத் தொடங்கினர். போலியை போலி பாணியிலேயே தொடர்ந்து தாக்கி வந்த பலருக்கு டோண்டுவிடம் இருந்து என்ன பட்டம் கிடைத்தது என்று தெரியவில்லை. இதன் பிறகு ஆபாசமாகத் தாக்கிக் கொண்டவர்கள் மற்றும் அமைதியாக இருந்தவர்கள் என்று இருந்த இரு பிரிவு மாட்டிக்கொண்டவர்கள், மாட்டிவிடுபவர்கள் என்று மாறிப்போனது. <br /><br />இந்நிலையில் தமக்கு ஆதரவு திரட்ட டோண்டு செய்த சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. சென்னையில் பதிவர் சந்திப்பு என்று அறிவிப்பார். ஏழெட்டு பேர் விபரம் தெரியாமல் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் கூடுவார்கள். போண்டா சாப்பிடுவார்கள். அன்று மாலையே பதிவர் சந்திப்பு பதிவு ஒன்றை டோண்டு போடுவார். சந்திப்பில் போலியை ஒழிப்பது எப்படி என்று பேசியதாக எழுதுவார். இது போதாதா? சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவர் பெயரிலும் போலி தளம் ஆரம்பித்து விடுவான் போலி டோண்டு. இவ்வாறாக டோண்டு – போலி டோண்டு என்ற இரு நபருக்கும் மட்டுமே இருந்த பிரச்சினையை மிக கவனமாக போலி டோண்டு – தமிழ் பதிவர்கள் என்று வளர்த்தெடுக்க டோண்டு பிரயத்தனப்பட்டார். 2005, 2006 மற்றும் 2007 ஆகிய மூன்றாண்டுகளில் போலி டோண்டு தமிழ் வலைப்பூக்களில் கடுமையான வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறான். சகட்டுமேனிக்கு கண்ணில் கண்ட எல்லோரையுமே ஆபாசமாக அர்ச்சித்து மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறான்.<br /><br />எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார். </div><br /><br /><center>[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com50tag:blogger.com,1999:blog-817601643605345.post-82470039202503108172009-06-16T01:43:00.006-04:002009-06-16T02:05:21.445-04:00அல்னார் நரம்பும் அல்லக்கையும்.<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'>நட்சத்திர வாய்ப்பை முழுதாக பயன்படுத்தாத பதிவர்களில் நானும் ஒருவன் என்பது வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் தமிழ்மணத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெகுநாட்கள் ஆவலாக எதிபார்த்த ஒன்று; ஏற்கனவே நிலுவையில் இருக்கும் பதிவுகளை வலை ஏற்றவே வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது கவலையாக உள்ளது. தா. பாண்டியனின் பேட்டியை வலை ஏற்ற ஆயத்தமாகும் முன் அது காலாவதி ஆகிப்போனது கொடுமை. MLA ரவிக்குமாரின் பேட்டி தட்டச்சு செய்யப்படாமல் கிடக்கிறது. மேலும், என் சில கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்த பதில்கள் மொழி பெயர்கப்படாமல் உள்ளன. அதுமட்டுமல்லாமல், செந்தழல் ரவியின் பேட்டி முழுமையாக கைக்கு வரவில்லை. மிகுந்த பிரயத்தனம் செய்து அனுமதி பெற்ற தமிழச்சியின் பேட்டிக்கு கேள்விகள் தயாரிக்கமலே இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் ரஃப் காப்பி என்னும் அளவிலேயே கிடக்கின்றன. இதற்கிடையே 'கவிச்சை' என்னும் வலைப்பூவை உருவாக்கி இந்தியாவிலுள்ள நண்பரிடம் அதை முற்றாக ஒப்படைத்து என் பதிவுகளை தட்டச்சு செய்து வலையேற்ற கோரியிருந்தேன். சில பதிவுகளுக்கு பிறகு அதிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது. <br /><br />பத்து வருடங்களுக்குள்ளாகவே கணிப்பொறி சார்ந்த பணி எனக்கு மிகுந்த சேதாரத்தை செய்துவிட்டதாகவே உணர்கிறேன். தொடர்ச்சியாக கணிப்பொறி முன் அமர்ந்திருந்தால் கழுத்து தசைகள் அதீதமாக சோர்வுற்று தலையின் மொத்த எடையும் கழுத்துப்புற தண்டு வடத்தின் மீது வீழ்ந்து நரம்புகளை அழுத்துகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நரம்புகளில் ஒன்றான அல்னார் நரம்பு சிறிது நேரத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மரக்கச்செய்து விடுகின்றன. வெறும் மூன்று விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்வது இயலாத காரியம். தொடர்ந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு பெரும் அவதியைத்தருமே ஒழிய முக்கிய பணிகள் முடங்கிப் போகும். <br /><br />ஊரில் சிறிதுகாலம் இயல் முறை மருத்துவராக நான் பணி புரிந்தபோது இது போன்ற பிணிகளை தீர்த்திருக்கிறேன். எனினும் இதை காசால்ஜியாவாக முற்றும் வரை விட்டுவைத்திருப்பது கொடுமைதான். என் நலனில் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இதற்காக என்னை கடிந்து கொள்வது உண்டு. பதிவுலகிலும் அக்கறை கொண்ட தோழர்களின் பட்டியல் இருக்கிறது. ஆச்சர்யமாக,இப்போது அந்த பட்டியலில் புதிதாக ஒரு நண்பர் இணைந்திருக்கிறார். அவருக்கு என் பதிவுகள் சுவாரசியமில்லாமல் இருப்பது மிகுந்த கவலையைத் தந்திருக்கிறது. காற்று வாங்கும் நிலையில் என் வலைப்பூவை நான் வைத்திருப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்!. கடிந்து கொள்கிறார். பதிவு எழுத மேட்டர் இல்லை என்று நான் சொன்ன சால்ஜாப்பை கேட்டு அவருக்கு கோபம் கூட வருகிறது. ஆனால் என்ன முயன்றாலும் எனக்கு அவரைப் போல சுவாரசியமாக எழுதவே வராது என்று அவர் புரிந்து கொள்ளவே இல்லை. <br /><br />தற்போதைய தமிழ்மண சூப்பர் ஸ்டார் பரிசல்காரனும் நானும் ஒரே சமயத்தில் பதிவெழுத வந்தோம். ஒன்னரை வருடத்தில் அவர் சென்றுள்ள தூரத்தில் பகுதி அளவு கூட நான் முயற்சிக்க வில்லை. ஏனெனில் சுட்டுப்போட்டாலும் எனக்கு வரவே வராத வகைமாதிரி அவருடையது. சுவாரசியமாக எழுதவேண்டுமானால் பஜார் புத்தகங்கள் முதல் பன்னாட்டு இலக்கியங்கள் வரை நிறைய படிக்கவேண்டும். நான் படித்ததெல்லாம் பத்திரிக்கைகளும் படிப்பு சம்பந்தமான ஆய்வு புத்தகங்களும்தான். அவற்றில் இருக்கும் மொன்னையான எழுத்து நடை தான் எனக்கு கைகூடி உள்ளது. பதிவுகள் தவிர்த்து வேறெங்கும் எழுதியதில்லை. பல்கலைக்கழக உள்சுற்று சஞ்சிகைகளில் வாரம் ஒருமுறை எதையாவது எழுதியாகவேண்டும். எவரையும் கவர்ந்தாக வேண்டியதில்லை. நாலைந்து பெருசுகளை திருப்தி படுத்தினால் போதும். இந்நிலையில் சுவாரசியமான பதிவுகளுக்கு நான் எங்கே போவது? நானும் உடன் பிறப்பு பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது சுண்டி இழுக்கும் எழுத்து நடை எனக்கு வாய்க்கவே இல்லையே! <br /><br />மேலும், தமிழ்மணத்தில் இணையும் முன்பே, ஏன் பதிவெழுதும் முன்பே பல பதிவர்களை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அசுரன், திராவிட தமிழர்கள், கோவிகண்ணன், லக்கிலுக், குழலி, வரவனையான், ரவி, பொட்'டீ'கடை சத்யா, டிபிசிடி, தமிழ் சசி, செல்லா, தமிழச்சி, கிழுமத்தூரார் என்று பலரையும் புக் மார்க் செய்து வைத்ததுண்டு. ஆனால் எவர் நடையையும் நான் சுவீகரிக்கவில்லை. கிழுமத்தூரார் போல் எழுதுவதாக குசும்பனும் கோவியும் கூறியதுண்டு. பொட்'டீ'கடை சத்யாவை ஒத்தது என்று ரவி ஒரு முறை சொன்னார். ஆனால் உண்மையில் என் பதிவுகள் பரீட்சை விடைத்தாளில் இருக்கும் வாக்கியங்களை போன்றவை. ஆனால், ஊடே மிகை உணர்ச்சிகள் நிறைந்த வாரிகளை மெனக்கெட்டு திணிப்பது உண்டு. பதிவுகளை சுவாரசியமாக்க எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான். என் விமர்சனப் பதிவுகள் அவ்வகையானவை. அடாவடி நிறைந்தவை. அளப்பரையானவை. மேலும் அவை விரும்பியே செய்யப்பட்டவை. எனினும் சத்தியாவின் பதிவுகளை ஒப்பிட்டால் எனது பதிவுகள் வெறுமையானவை என்பதை எளிதில் உணரலாம். <br /><br />ஆனால், சிலருக்கு அவரது பதிவுகள் ஏற்படுத்தாத எரிச்சலை என் பதிவுகள் ஏற்படுத்துகின்றன. திமுக -வை விமர்சித்தும் அதன் தலைவரை செத்துதொலையச் சொல்லியும் அவர் எழுதியபோது வராத கோபம் இந்த அல்லக்கைக்கு என் மீது வருகிறது. ஏன் அவரைப்போய் நொட்ட வேண்டியதுதானே?! அது முடியாது! ஏனென்றால் அவர் விமர்சித்தது திமுக -வை மட்டும். நான் அல்லக்கைகளின் நிலைப்பாட்டையும் சேர்த்து கேள்வி கேட்பது குடைச்சலைத் தருகிறது போலும். குடைச்சல் தாழாமல் அழும்போது மட்டும் திமுக -வின் பதிவுலக அறங்காவலர் போல பிஸ்த்து கிளம்புகிறது. திமுக எனக்கு பதிவுலக வாழ்வு தருவதாக அதை நம்பியே வாழும் அடிவருடிகள் கூறுவது விந்தைதான். திமுக கருணாநிதியின் தனி சொத்தாகியது போல் பதிவுலகில் அது இவருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதோ ஒருவேளை! <br /><br />வன்மமும், வக்கிரமும், வசவும் நிறைந்த அறிக்கைகளுக்காக அதை விரும்பாதவர்களால் கருணாநிதி தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். இதிலெல்லாம் அனுபவம் நிறைய உண்டு அவருக்கு. நம் டமாஷ் பாண்டிகள் அடுத்தமுறை அறிவாலயத்திற்கு காவடி தூக்கும்போது தனி மனித தாக்குதல் குறித்த வரையறையை அவரிடமே பயின்றுவிட்டு வரலாம். இல்லாவிட்டால் எப்போதும்போல் பாப்பான் மாட்டினால் கும்மிக் கொண்டு பொழுதை ஓட்டலாம். இவற்றையெல்லாம் விட இன்னொரு வழியுமுண்டு. கொஞ்சம் கஷ்டமானது. உணவில் சிறிது உப்பை சேர்த்து அருந்திப் பார்க்கலாம். ஒரு முயற்சிதான்! முடியாவிட்டால் பரவாயில்லை, இருக்கவே இருக்கு எலும்புத் துண்டு. அதைக் கவ்விக்கொண்டு, வருவோர் போவோர் மீது விழுந்து பிடுங்கலாம்.</div>Unknownnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-817601643605345.post-42762247819963508562009-06-13T12:50:00.013-04:002009-10-11T16:08:44.332-04:00திமுக வின் எதிர்காலம்<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><img src='http://www.antya.com/upload/7/dmk.thumbnail.jpg' style='float:left;margin-right:5px;'/><b><i>இந்த வலைப்பூவில் லக்கி லுக், மதிபாலா மற்றும் புதுகை அப்துல்லா ஆகியோர் திமுக -வின் தோற்றம், வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றி கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் உயர்வு நவிற்சி (அல்லது நடுவு நிலைமை!?) கொண்டவைதாக இருந்தன என்பதாக பின்னூட்டங்கள் வந்தன. ஆனால் திமுக -வின் அசமந்தங்களையும், அச்சுபிச்சுகளையும் விமர்சிக்கும் பதிவை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. பதிவர் உண்மைத்தமிழனிடம் இதுபற்றி ஒருவருடத்திற்கு முன்பே கேட்டிருந்தேன். அவர் நேரம் வாய்க்கும்போது தருவதாக கூறியிருக்கிறார். எனினும் இப்பதிவு அந்நோக்கில் சிறிது தூரம் செல்கிறது.</i></b><br /><br />அறிஞர் அண்ணாவின் மறைவு எவ்வாறு தமிழகத்தின் அரசியலை மாற்றியது என்பது பலரால் வெவேறு தளங்களில் அலசப்பட்டுள்ளன. அவருக்குப்பின் கட்சி எவ்வாறு கைமாறி இறுதியில் தனியுடமையானது என்பதும் வேண்டியமட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. எனினும் இவை எல்லாம் மாறப்போவதில்லை. இன்னும் எவ்வளவு மோசமாக அல்லது அசிங்கமாக திரியும் என்று வேண்டுமானால் எதிர்வு கூறலாம். <br /><br /><img src='http://im.rediff.com/news/2009/apr/27dmk.jpg' style='float:left;margin-right:11px;'/>ஒப்பீட்டளவில் அறுபது ஆண்டுகாலம் என்பது ஜனநாயகப் பரிணாமத்திற்கு மிகக்குறைவு. உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் இன்னும் குழந்தைதான் என்றாலும் அது ஒரு சவலைக் குழந்தை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்னும் நூறாண்டுகாலம் வளர்ந்தபின்னும் அது சவலையாகத் தான் இருக்கும். அடிப்படை நேர்மை இல்லாத கட்சிகள் நிறைந்த மக்களாட்சியில் ஒன்று மற்றதற்கு முன் உதாரணமாக அமைந்து, சுயநலத்தைப் பொறுத்த அளவில் எங்கும் ஒரே கூட்டுக்கும்மியாக உள்ளது. அதிலுள்ள ஓட்டைகள் அனைத்தும் அகலமானவை. ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன. பெரும்கட்சிகளிடம் அவை ஏகலைவன் போல் பாடம் கற்றுக்கொள்கின்றன. பித்தலாட்ட அரசியலை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்றவை திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி. காமராஜர் தொடங்கிவைத்த வாரிசு அரசியல் திமுக வை குட்டிச்சுவராக்கி உள்ளது. <br /><br />இந்திராவை காமராஜர் அரசியலுக்கு அழைத்தார். பொறுக்கித்தனங்கள் தான் அரசியல் என்று கருதிய சஞ்சீவ் போலல்லாமல் ராஜீவும் சோனியாவும் காங்கிரசாரின் வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு வந்தார்களாம்!. ஆனால் திமுகவில் இருக்கும் வாரிசுகளை யார் வற்புறுத்தி அழைத்தார்கள்? இவர்களில் எவராவது தம் அரசியல் தத்துவம், திராவிடக் கொள்கையில் தமக்குள்ள பிடிப்பு, முக்கிய பிரச்சினைகளான இட ஒதுக்கீடு, ஈழம் மற்றும் மாநில சுயாட்சி போன்றவற்றில் தங்கள் நிலைப்பாடு பற்றி எங்காவது பேசியிருக்கிறார்களா? இவர்கள் கையில் திமுக எவ்வாறு இருக்கும் என்று யோசித்தால் அது கடந்த சில வருடங்களாக எவ்வாறு சுரனையற்றதாக இருக்கிறதோ அதுபோல் அப்படியே தொடரும் என்பது புரியும். <br /><br /><img src='http://1.bp.blogspot.com/_o7Y_cJ7W-9A/SXgacUphjNI/AAAAAAAAAnk/1zq_PjdIiCU/s400/M.K.Kanimozhi+M.P-Brother+M.K.Azhkiri+and+M.K.Stalin+.+DMK+Leaders.jpg' style='float:right;margin-left:10px;'/>மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் அவரைப்பற்றி உடன்பிறப்புகளுக்கே முழுதாகத் தெரியுமா என்பது கேள்விக்குறியே! திராவிடம் குறித்து அவர் மேடையில் எங்காவது பேசினாரா என்பதுபற்றியும் தகவல் இல்லை. முதல்வரானால் மத்திய அரசிடம் இவர் எதை வலியுறுத்துவார்? அதிக நிதி வேண்டும் அல்லது குறிப்பிட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என வலியுறுத்தக்கூடும். நிதிக்கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ இவரது தலையீடு அல்லது வலியுறுத்தல் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. <br /><br />மாநில சுயாட்சியை பொறுத்தவரையில், ஒருமுறை மணி சங்கர் அய்யர் கூட்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்டாலின். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாநில உள்ளாட்சிதுறையின் அதிகாரத்தில் தலையிடுகிறது என்று அப்போது கருணாநிதி குற்றம் சாட்டினார். அந்த குறிப்பிட்ட மத்திய அரசின் பிரச்சினைக்குரிய தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஆட்சி நிர்வாகத்தை பொறுத்தவரையில் சிறப்பாக செயல் படுபவர் என்றாலும் தமிழின அரசியலை கைவிட்டுவிட்டு ஒரு மொன்னை அரசியலைச் செய்ய ஒரு திமுக தேவையில்லை. திமுகவில் மிச்சமிருக்கும் சிறிது வீரியமும் இவரால் சிதையும் என உறுதியாக நம்பலாம்.<br /><br />திமுகவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கிய பொறுப்பில் மூன்று பேர் இருக்கிறார்கள். தயாநிதி மாறனைப் பற்றி நான் எதைக்கூறினாலும் அது புதிய செய்தியாக இருக்காது. பதிவர் குசும்பன் கூறியது போல் இவர் ஒரு 'பவுடர் பாண்டி' என்பதற்கு மேல் இவர் கொள்கை ரீதியாக எதையும் கிழிக்கப் போவதில்லை. அவரது தந்தையார் எழுதிய மாநில சுயாட்சி பற்றிய புத்தகங்களையாவது இவர் படித்திருப்பாரா என்பது சந்தேகமே! அதிக பட்சம் வட இந்தியாவில் மீடியா நண்பர்களை பிடித்துக்கொண்டு எதிர்காலத்தில் திமுகவிற்கு குடைச்சலைத்தரலாம். தவிர்த்து, திமுகவின் கொள்கைகளை மன்றங்களில் எடுத்தியம்பி கட்சிக்கு வலு சேர்ப்பார் என்று யாரும் நம்பவில்லை.<br /><br />இடஒதுக்கீடு பற்றிய விவாதமொன்றில் பார்ப்பனிய குஞ்சுகளிடம் கனிமொழி சீரியதைப் பார்த்தவர்கள் நிச்சயம் இவரை நாடாளுமன்றத்திற்கு தகுதியான ஆள் என கணித்திருப்பார்கள். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவத்தில் இவர் உரைத்த பொய்களும், ஈழம் பற்றிய கேள்விகளுக்கு உளரியவைகளும் இவர் தம் தேவைகளுக்கு நேர்மையை அடகு வைப்பார் என்பது தெளிவானது. பதவிகளுக்காக தம் இட ஒதுக்கீடு கொள்கையை கைவிட மாட்டார் என்பது நிச்சயமில்லை. அழகிரி பற்றி நாம் அறிந்ததெல்லாம் பணப்பட்டுவாடா அரசியலும் அடிதடியும்தான். ஈழத்துயருக்கு மத்தியில் ஆடம்பர விழாக்களில் பொழுதைக் கழித்தவர். இவர் என்ன திராவிடத்தை நிலைநாட்டப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை கருணாநிதிக்கு தெரிந்திருக்கலாம். அவரது காலத்திற்குள் அதை தெளிவு படுத்துகிறாரா என்று பார்க்கலாம்!!<br /><br />இவர்களையெல்லாம் விட நம் உடன்பிறப்புகள் தான் கிலியை ஏற்படுத்துகிறார்கள். தலைமையின் முடிவுகளில் இவர்களின் பங்கு என்று எதுவும் இல்லை என்றாலும் இவர்களின் எதிர்வினைகள் தலைமைக்கு சிறிது யோசனையைத் தரக்கூடும். ஆனால் இவர்கள் எப்போதும்போல அடிவருடிக்கொண்டே இருப்பின் திமுக இன்னும் மோசமான அரசியலை எவ்வித கூச்சமின்றி திமுக தொடரும் என்பது திண்ணம். <br /><br /><center><img src='http://www.hindu.com/2006/05/12/images/2006051224920301.jpg'/></center><br /><br />இனி திமுகவிற்கு எவ்வித தனிச்சிறப்புகளும் இல்லை. ஏனைய கட்சிகளில் இதுவும் ஒன்று அவ்வளவே. மேலும், எதிர்காலம் கட்சித்தலைமை(களு)க்கு சிறப்பாக இருக்கக் கூடும். ஆனால் கட்சிக்கோ, உண்மைத் தொண்டர்களுக்கோ அல்லது திராவிட கொள்கையாளர்களுக்கோ எவ்வித நம்பிக்கையையும் அது தரப்போவதில்லை. கூடவே, பார்ப்பனிய எதிர்ப்பு, திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசவோ அதை சொல்லி ஓட்டு கேட்கவோ எவ்வித அருகதையும் அதற்கு இல்லை.</div>Unknownnoreply@blogger.com50tag:blogger.com,1999:blog-817601643605345.post-7530907373965609862009-06-11T20:32:00.004-04:002009-07-03T00:45:34.797-04:00என் பிகருக்கு கல்யாணம் அல்லது கந்தசாமி பெண் பார்த்த கதை<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'>நேற்று விடியற்காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேசாத என் அம்மா அழைத்திருந்தார். எனது திருமண முயற்சிகளில் சொர்ந்துபோனவர் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று எல்லாவற்றையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்தமுறை கூட என் திருமண விஷயமாக எங்களிருவருக்கும் பெருத்த சண்டையாகி தொலைபேசி இணைப்பை பாதியிலேயே துண்டித்திருந்தார். இம்முறை அழைப்பு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை சொல்வார் என்று நினைத்திருந்தேன். <br /><br />"டேய், இதுதான் ஃபோன் நம்பர். அஞ்சே அஞ்சு நிமிஷந்தான், அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பேசினன்னு தெருஞ்சுதுன்னா கொன்னுடுவேன்!" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதற்கு முன் பலமுறை பெண் பார்த்து படங்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை திறந்து கூட பார்க்காமலே "அந்த அஞ்சு நிமிஷ மேட்டர் என்னாச்சு என்று தான் கேட்பேன். நான் முதலில் ஒகே சொன்னால் அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்பார். இது வேலைக்காகாது, முதலில் அஞ்சு நிமிஷம், பிறகுதான் ஓகே என்று வாதிட்டுப் பார்த்தேன். விடாப்பிடியாக நிராகரித்துவிட்டு அடுத்த பெண் தேட ஆரம்பித்துவிடுவார். பெண் அழகாக இருந்தால் நான் அஞ்சு நிமிஷ மேட்டர் பற்றி எதுவும் பேச மாட்டேன் என நினைத்துவிட்டார் போலிருக்கு.<br /><br />நல்ல ஃபிகரெல்லாம் இப்படியே கைநழுவிப்போக, வேறொரு உபாயம் செய்தேன். சும்மானாச்சும் ஓகே சொல்லி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு பிறகு பிடித்தால் ஒப்புக்கொள்வோம், இல்லாவிட்டால் இழுவையாக நீட்டி பிறகு மறுத்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஒரு சுமாரான ஃபிகர் படம் வந்தபோது ஓகே சொல்லிவிட்டு அஞ்சு நிமிஷத்திற்கு அனுமதி வாங்கினேன். நிச்சயம் நிராகரிக்கும் எண்ணத்துடன் பேச்சை தொடங்கினேன். <br /><br />என்ன பேசினோம் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குள் என் மனசாட்சி.<br /><br /><font style='color:blue'>"ஹலோ!, நான் மோகன் பேசறேன், நியூ ஜெசியிலேர்ந்து, மிஸ். கவிதாகிட்ட பேசமுடியுமா?"</font><br /><br />"ஹாங்... நான்தான் பேசறேன், எப்படி இருக்கீங்க? அப்பா எட்டு மணிக்கு போன் பண்ணுவீங்கன்னு சொன்னாரு?!" <br /><br /><font style='color:blue'>(எட்டு அஞ்சு தான ஆகுது! இதுவே லேட்டா?) ஏன், வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?</font><br /><br />அதெல்லாம் இல்ல, ஃபிரன்ஸ் கால் பண்ணுவாங்க, மிஸ் பண்ண முடியாது!<br /><br /><font style='color:blue'>(நியூஜெர்சி கால் -ஐ விட சைதாபேட்டை கால் முக்கியமா?) அப்படியா? சாரி!</font><br /><br />"சரி விடுங்க! ஃபோன்ல பேசினா ஒன்னு கேட்கனும்னு இருந்தேன், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா!"<br /><br /><font style='color:blue'>(வாட் ஏ டெட்லி கொஸ்டின் ?!?)"சிகரெட்டா! நானா!..ஏன் கேட்கிறீங்க!"</font><br /><br />"சும்மாதான் கேட்டேன்"<br /><br /><font style='color:blue'>"இல்ல தம் அடிக்கமாட்டேன்!"</font><br /><br />"அப்புறம் ஏன் உங்களுக்கு தொண்டை பெருசாயிருக்கு?"<br /><br /><font style='color:blue'>"தொண்டையா?, சிகரெட் பிடிச்சா தொண்டை பெருசாகும்னு யாரு சொன்னா?,(பயங்கர கண்டுபிடிப்பா இருக்கே!) உதடுதான் கறுப்பாகும்!" </font><br /><br />"ஆமாம் உங்க உதடு கருப்பாதான் இருக்கு! நீங்க சிகரெட் பிடிப்பீங்கதான?"<br /><br /><font style='color:blue'>(என்னங்கடா இது!!)"இத பத்தி அப்புறம் பேசுவோம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"</font><br /><br />"நீங்கதான சம்பாதிக்கப் போறிங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அத சொல்லுங்க!"<br /><br /><font style='color:blue'>"MS" </font><br /><br />"எந்த ஃபீல்டு?" <br /><br /><font style='color:blue'>(ம்ம்..என்ஃபீல்டு)" ஐடி"</font><br /><br />"என்ன டெக்னாலஜி"<br /><br /><font style='color:blue'>"ஜெ2ஈஈ"</font><br /><br />"ஒ! அப்படியா? ஸ்பெஸிபிக்கா என்ன?"<br /><br /><font style='color:blue'>(ஏன், வேற வேல வாங்கித்தரப் போறியா!) "Struts, Hibernate"</font><br /><br />"Struts ஒண்ணா டூவா"<br /><br /><font style='color:blue'>(ஆஹா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?!!?) "ஒன் பாயின்ட்..."</font><br /><br />"ஓல்டு டெக்னாலஜி" -இன்னுமா அப்டேட் பண்ணல?"<br /><br /><font style='color:blue'>"(சரி, அந்த வெள்ளக்காரன்கிட்ட மாத்த சொல்றேன்!) சரி உங்களப் பத்தி சொல்லுங்களேன்!"</font><br /><br />அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?<br /><br /><font style='color:blue'>"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?" </font><br /><br />"அங்க யாரையாவது லவ் பண்ணிங்களா!"<br /><br /><font style='color:blue'>"(லவ்தான!!) ஆமா, இப்ப ஒரு ஸ்பானிஷ் காரிய லவ் பண்றேன்! இதுக்கு முன்னாடி ஒரு கருப்பிய லவ் பண்ணேன், அதுக்கு முன்னாடி..."</font><br /><br />"சும்மா கத உடாதிங்க, நீங்க ஒரு தொட நடுங்கின்னு உங்கம்மா சொல்லிட்டாங்க!"<br /><br /><font style='color:blue'>"சரி... நிறைய பேசிட்டம்னு நினைக்கிறேன்... என் அம்மா கிட்ட சொல்லி உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்!, வச்சிடவா?"</font><br /><br />"அதெல்லாம் வேணா எதுக்கு! நான் எங்கப்பாகிட்ட என் முடிவ சொல்லிட்டேன்!" <br /><br /><font style='color:blue'>"(முடிவே பண்ணியாச்சா!)என்ன சொன்னீங்க!"</font><br /><br />"வேற இடம் பாக்க சொல்லி!"<br /><br /><font style='color:blue'>"வேற எடமா? அப்பறம் என்ன ம்ம்..மசி... எதுக்கு போன் ல பேசின!"</font><br /><br />"எனக்கு இஷ்டமில்ல, உங்க வீட்லதான் திரும்ப திரும்ப கால் பண்ணாங்க!"<br /><br /><font style='color:blue'>"ஆ.!!?!?..."</font><br /><br />அப்போது பல்பு வாங்கியவன்தான், அதன் பிறகு இந்த அஞ்சு நிமிஷ மேட்டர் வேலைக்காகாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் இந்த முறை எப்படியாவது தெளிவா பேசிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்து, மனதிற்குள் ஓரிரு முறை சொல்லிப்பார்த்து இருக்கிறேன். என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது. இம்முறை எப்படியும் ஃபிகர மடிச்சிட... மன்னிக்கவும் பெண்ணிற்கு பிடித்த மாதிரி பேசி அசத்த வேண்டும். இந்த முறையும் பல்பு வாங்கினால் அம்மா பார்க்கும் பெண்ணை ஃபோட்டோ <br />பார்க்காமலே கூட திருமணம் செய்ய வேண்டிவரலாம். <br /><br />நம் பதிவுலகில் தங்க மணிகள் பற்றிய அனுபவப்பதிவுகள் நிறைய வந்துள்ளன. திருமணத்திற்கு முன் இவ்வாறு பல்பு வாங்கி பிறகு மீண்டவர்கள் யாராவது இருந்தால் ஐடியா கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அதான் ஒரு சிறு மொக்கை. பொறுத்ததருள்வீராக! தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை என்று ஏதாவது பஜார் புத்தக மேதாவிகள் சொல்லக்கூடும். இதற்கும் ஒரு மாப்பு கேட்டுக்கிறேன்!</div>Unknownnoreply@blogger.com44tag:blogger.com,1999:blog-817601643605345.post-8158691775708982532009-06-08T21:06:00.016-04:002009-06-08T21:50:12.547-04:00இந்தியா, எரிச்சலூட்டும் கோமாளி<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><img src='http://www.irancartoon.ir/gallery/albums/album92/manmohan_singh_Thomas_Anton.jpg' style='width:30%;height:30%;float:left;margin-right:10px;'/><b><i>எனது மற்றொரு வலைப்பூவான <a href='http://kavichai.blogspot.com/' target='_blank'>'கவிச்சை'</a> -யில் வெளிட்ட பதிவை மீண்டும் இங்கு மீள் பதிவிடுகிறேன்.</i></b><br /><br />இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. இதற்கு அன்றும் இன்றும் அது தந்து வரும் ஒரே பதில் தேச நலன்.<br /><br />அப்படி என்ன இந்திய தேச நலனை காங்கிரஸ் கட்டிக் காத்துவிட்டது என்றால் தொன்னூறுகளில் மொத்தமாக திவாலாகி துண்டு துண்டாக சிதறவிருந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை மீட்டது ஒன்றுதான். ஏனைய எல்லா சந்தர்பங்களிலும் எதையாவது செய்து எங்காவது சூடு பட்டுக்கொண்டு மக்களை இம்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவது என்பதைத் தவிர மாற்று கொள்கைகளை தேர்ந்தெடுக்க இந்தியா தயாரில்லை அல்லது தைரியமில்லை. தமிழர் நலனை ஒழித்து காஷ்மீரத்தை காப்பதும் இலங்கைக்கு உதவி சீனாவை கட்டுப்படுத்துவதும் தான் இந்தியாவிற்கு தற்போதுள்ள ஒரே வழி என்ற கருத்தை எனது பேராசிரியர் மறுக்கிறார்.<br /><br /><img src='http://www.hinduonnet.com/fline/fl2506/images/20080328250601702.jpg' style='width:50%;height:50%;float:right;margin-left:10px;'/>2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.<br /><br />விடுதலைப் புலிகள் வெற்றிகளை குவித்தபோது அமெரிக்க போர்கப்பல் மத்திய ஆசியப் பகுதியில் நங்கூரமிட்டது. இதனால் நம் கடல் பகுதியில் சீனாவின் எதிர் நடவடிக்கையை எதிர்பார்த்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச்சொன்னது இந்திய அரசு. இதற்கு பதிலாக வேறு உபாயங்களை கண்டிருக்க முடியும் என்றாலும் புலிகள் உடனடியாக கேட்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தது இந்தியா.<br /><br />அதுபோல் இந்தியாவின் மின்சார தேவை என்ற முற்றிலும் லாஜிக் இல்லாத காரணத்தை கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா இன்று அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளது. தில்லுமுல்லுகள் என்று அந்த ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றையும் குறிப்பிடமுடியாத நிலையில் என்னவோ பரம ரகசியம் போல் பதுங்கிப் பதுங்கி முக்காடு போட்டவாறு அதை டீல் செய்தது. கடைசியில் ஒப்பந்த வரைவை நம் கண்ணில் காட்டியபோது இதற்குத்தானா இந்த பீட்டர் என்று எண்ணத்தோன்றியது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, அதிரடி தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்பு ஏற்பட்டால்தான் ஒப்பந்தம் <img src='http://www.smh.com.au/ffximage/2008/08/22/manmohansingh_narrowweb__300x383,0.jpg' style='width:30%;height:30%;float:left;margin-right:10px;'/>அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.<br /><br />இந்தியாவின் கோமாளித்தனத்தை இந்திய மேதாவிகள் வானளாவ புகழ்ந்தாலும் விஷயமறிந்தவர்கள் தலையிலடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். பாஜக ஆட்சியில், ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தை முழு அளவில் தயாராக நிறுத்தி, போர் பயம் காட்டி, சர்வதேசத்தை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது இந்தியா. பத்துவருட ராணுவ பராமரிப்புச் செலவை ஒருவருடத்தில் முடித்துவிட்டு பலனேதுமின்றி படைகளை பின்வாங்கியது. சர்வதேச ஊடகங்கள் எல்லாம் எள்ளி நகையாடிய தருணத்தில் இந்திய வலது சாரி ஊடகங்கள் (வேறு எந்த சாரி -யிலாவது ஊடகங்கள் இருக்கின்றனவா?) வெற்றி முரசு கொட்டின அல்லது குதம் கிழிந்து அவஸ்தை பட்டன. இம்மாதிரியான கோமாளித்தனங்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் பலமுறை செய்திருந்தாலும் இந்திய குடிமகன் என்ற ரீதியில் நாமும் சப்பைகட்டி விட்டு நமக்குள் சிரித்துக்கொள்வதொடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இன்று ஐநா -வில் அடிக்கும் அடுத்த கேலிக்கூத்து நம் வயிறெரியச் செய்கிறது.<br /><br />லட்சக்கணக்கில் தங்கள் குடிமக்கள் தெருக்களில் ஆர்பாட்டம் செய்துவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின. (அவையெல்லாம் ஜனநாயக நாடுகளாம்! மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு<img src='http://www.daijiworld.com/images1/George_Fernandes.jpg' style='width:120px;height:120px;float:right;margin-left:10px;'/><img src='http://www.topnews.in/files/Jaswant-Singh101.jpg' style='width:120px;height:120px;float:right;margin-left:10px;'/><img src='http://www.thehindu.com/2006/02/01/images/2006020117871601.jpg' style='width:120px;height:120px;float:right;margin-left:10px;'/> சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.<br /><br />இப்போது மொத்த பேரும் ஈழப்பேரழிவிற்கு இந்தியாவை ஒற்றை பொறுப்பாளி (அதுதானே உண்மை!) ஆக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தேசிய இன பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கருதினாலும் இது பற்றி எச்சரிக்கையாகக் கூட வாய்திறக்கவில்லை. ஏற்கனவே மதக்கலவரங்கள் பற்றி இங்கிலாந்து அமைச்சர் ஏதோ 'இந்திய தேசியம்... இந்து-முஸ்லிம்... மாநில அரசு... இந்திய ஒன்றியம்... என்றெல்லாம் வார்த்தைகள் போட்டு அறிக்கை வெளியிட்டுவிட அதற்கு பதிலடியாக இந்தியா 'ராபர்ட் கிளைவ்... கிழக்கிந்திய கம்பெனி... அஸ்தமனம் ஆகிவிட்ட பிரிட்டன்... என்றெல்லாம் வார்த்தைகளைப் போட்டு எதிர் அறிக்கை விட்டு பொரிந்து தள்ளிவிட்டது. இனி எக்கேடு கேட்டாலும் இவர்கள் தலையிடப் போவதில்லை.<br /><br />இவ்வாறு இந்தியா என்னும் பித்துக்குளி செய்யும் வேலைகள் எல்லாம் தமிழனை காவு வாங்கிக்கொண்டிருக்க, இந்தியாவில் தூண்டப்பட்டு விட வாய்ப்புகள் நிறைய உள்ள தேசிய இன பிரச்சினையை அதன் தலையில் எத்தி, நியாபகம் ஊட்டி, தன்<img src='http://www.independent.co.uk/multimedia/archive/00175/tamil_175797s.jpg' style='width:50%;height:50%;float:right;margin-left:10px;'/> சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.</div>Unknownnoreply@blogger.com26tag:blogger.com,1999:blog-817601643605345.post-42220624277862898592009-06-06T17:56:00.009-04:002009-06-07T23:34:08.451-04:00கருணாநிதியிடம் 32 -கேள்விகள்<div style='font-size:12px;text-align:justify;text-indent:20px'><img src='http://lh6.ggpht.com/_lCykH_IyqZA/Shn0lxNZqBI/AAAAAAAAAJc/Eo-onXm4rTE/karunanithi%20(2).jpg' style='margin-right:10px;float:left'/><b><i><br />தமிழ்மணத்தின் அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை வெளியிடுகிறேன். 'முப்பத்திரண்டு கேள்விகள்' என்ற இந்த சங்கிலித்தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த கோவி கண்ணனுக்கு ஒரு நன்றி. அக்கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதைவிட நம் தமிழினத்தலைவர், தமிழக முதல்வர், திமுக தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பதில் அளிப்பது சாலப் பொருத்தம் என நான் கருதியதன் விளைவே இந்த இம்சை.</b></i><br /><br /><font style='color:blue'>1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?</font><br />எனது உண்மையான பெயர் தட்சிணா மூர்த்தி. தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன். இது மட்டும் என்ன தமிழ் பெயரா என்று கேட்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே!. மேலும், கருணாநிதி என்று விளித்தால் பிடிக்காது கலைஞர் கருணாநிதி என்று அழைத்தால் பிடிக்கும். <br /><br /><font style='color:blue'>2.கடைசியாக அழுதது எப்போது?</font><br />நிஜமாக அழுததா அல்லது முதலைக் கண்ணீர் வடித்ததா? நிஜமாக அழுதது பல ஆண்டுகளுக்கு முன். பொய்யாக அழுதது நேற்று சாயுங்காலம். இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன். அது இரவு கலைஞர் செய்திகளில் வரும்.<br /><br /><font style='color:blue'>3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?</font><br />எனக்கு பிடிக்காமலா!! ஆனால் ஆரியர்களுக்கு இந்த தமிழனின் கையெழுத்து பிடிப்பதில்லை. பிடித்திருந்தால் நான் அனுப்பிய ஒரு கடிதத்தையாவது டெல்லிக்கார ஆரியர்கள் படித்திருப்பார்களே! எனவே தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்.<br /><br /><font style='color:blue'>4.பிடித்த மதிய உணவு!</font><br />உண்ணா விரதத்திற்கு முன் ரெண்டு இட்லி. உண்ணாவிரதத்திற்கு பின் கொஞ்சம் ஜூஸ். தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.<br /><br /><font style='color:blue'>5. நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?</font><br />உடனேவெல்லாம் வைக்க முடியாது. ஜாதி ஓட்டு வைத்திருக்க வேண்டும். கொடுக்கிற சீட்டை வாங்கிக்கணும். நான் சொல்லும்போது 'தமிழ் தமிழ்' என்று தெருவில் இறங்கி கத்தவேண்டும். நான் போதும் என்றால் உடனே நிறுத்தவேண்டும். இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.<br /><br /><font style='color:blue'>6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?</font><br />சேதுக்கடல், ஹோக்கேனக்கள் அருவி இரண்டும் பிடிக்கும். அதில் வந்து சேர வேண்டிய பணம் வரும் வரை பிடிக்கும். மற்ற படி அவற்றில் குளிக்கவேல்லாம் பிடிக்காது.<br /><br /><font style='color:blue'>7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?</font><br />சட்டைப் பையை கவனிப்பேன். கட்சி நிதிக்கு கூட காசில்லாதவர்களை கவனித்து என்ன செய்வது? <br /><br /><font style='color:blue'>8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன? </font><br />எனது நடிப்பாற்றல், திரைக்கதை புருடா வசனம் எழுதுவது போன்றவை எனக்கு பிடிக்கும். ஆனால் எனது பிள்ளைகளிடம் என் பருப்பு வேகுவதில்லை. இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.<br /><br /><font style='color:blue'>9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம் என்ன?</font><br />சரிபாதி என்று சொல்லமுடியாது. சரி குவாட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் பிடித்தது ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் இருப்பது. பிடிக்காதது எப்போதும் சண்டை போடும் பிள்ளைகளை பெற்றது.<br /><br /><font style='color:blue'>10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?</font><br />எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.<br /><br /><font style='color:blue'>11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?</font><br />வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் மஞ்சள் துண்டு. நான் தோள் துண்டிற்காக வேட்டியை இழந்துவிட்டேன் என்று விமர்சிக்கிறார்கள். அந்த நெசவாளர்கள் ... சாரி ... வசவாளர்கள் வாழ்க!!!<br /><br /><font style='color:blue'>12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க!</font><br />நான் எங்கே பாட்டு கேட்கிறேன்??!! என் பாட்டைத்தான் ஊரே கேட்கிறதே!!! இதோ நீங்களும் கேளுங்கள்!!<br /><br />"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது <br />கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா"<br /><br /><font style='color:blue'>13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?</font><br />ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு தங்கப் பேனாவை பரிசளியுங்கள். பிறகு எந்த வண்ண பேனாவாக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறேன்!<br /><br /><font style='color:blue'>14.பிடித்த மணம்?</font><br />பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.<br /><br /><font style='color:blue'>15.நீங்க அழைக்க விருக்கும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?</font><br /><br />உடன் பருப்பு: இவரை அறிவாலயம் வாசலில் நிற்க வைத்து டவுசர் கிழித்தாலும் அசராமல், அகலாமல் அங்கேயே நிற்பார். இதுதான் இவரை அழைக்க காரணம்.<br /><br />குத்து தெலுங்கினி: இவர் நிரம்ப யோசிப்பதால் லாஜிக் இல்லாமல் திமுக -வை ஆதரிப்பார். <br /><br />பொடி டப்பா: இவர் திமுக -வை ஆதரிக்க எந்த காரணமும் தேவை இல்லை. அதனால் இவரை அழைக்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.<br /><br /><font style='color:blue'>16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?</font><br />ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !<br /><br /><font style='color:blue'>17.பிடித்த விளையாட்டு?</font><br />தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும். எல்லா உடன்பிறப்புகளுக்கும் இது பிடிக்க வேண்டும்.<br /><br /><font style='color:blue'>18.கண்ணாடி அணிபவரா?</font><br />என்னய்யா கேள்வி இது!! அதை அணியவில்லை என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டரியல் ஆகும் பொது அது கண்ணில் தெரிந்துவிடாதா?!!<br /><br /><font style='color:blue'>19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?</font><br />திரைக்கதை எழுதுவதோடு சரி. அதை படத்தில் பார்த்து ஆயுளை குறைத்துக் கொள்ள என்னால் முடியாது. அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே! அத்திரைப் படங்களை பார்க்கும் அனைவருக்கும் என் இதயத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் இலவச இடமுண்டு. அவசர ஆம்புலன்ஸ் வசதியோடு!<br /><br /><font style='color:blue'>20.கடைசியாக பார்த்த படம்?</font><br />கடைசியாக பார்த்த குத்தாட்டம் எதுவென்று கேட்டால் சரியாக இருக்கும். மானாட மயிலாட வெண் திரையில் வெளியிட்டால் அதை பார்ப்பேன். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமருக்கும் அன்னை சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.<br /><br /><font style='color:blue'>22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?</font><br />நேரு எழுதிய இராமாயணம்.<br /><br /><font style='color:blue'>23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?</font><br />டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தையெல்லாம் மாற்றுவது இல்லை. கொள்கையை மட்டும் தான் மாற்றுவேன். அடிக்கடி!!<br /><br /><font style='color:blue'>24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்!</font> <br />ஷெல்லடிக்கும் போது மக்கள் அலறும் சத்தம் மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சதா அடித்துக்கொண்டு எழுப்பும் சத்தம் பிடிக்காது.<br /><br /><font style='color:blue'>25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு!</font><br />வேறெங்கே! டெல்லிதான்.<br /><br /><font style='color:blue'>26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?</font><br />எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பதாக உலகம் இன்னும் நம்புகிறது.<br /><br /><font style='color:blue'>27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்?</font><br />நான் தமிழினத் தலைவர் என்பதை உடன்பிறப்புகளே ஏற்க மறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!<br /><br /><font style='color:blue'>28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்?</font><br />உள்ளே வேறு சாத்தான் வேண்டுமா? நாங்களே அப்படித்தான்.<br /><br /><font style='color:blue'>29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?</font><br />டெல்லியும் ஜன்பத் இல்லமும்.<br /><br /><font style='color:blue'>30.எப்படி இருக்கணும்னு ஆசை?</font><br />இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. ஆனால் எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு என்பதை அடக்கத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.<br /><br /><font style='color:blue'>31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?</font><br />அவர்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. நிம்மதியாக உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது.<br /><br /><font style='color:blue'>32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க!!</font><br />வாழ்க்கை ஒரு வட்டிக் கடை போன்றது. தேவையற்றதை அடகு வைத்து தேவையானதை பெறலாம். அவை மீண்டும் தேவைப்படும் போது மீட்டுக்கொள்ளலாம். இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி. கொள்கையை அடகு வைத்து மூழ்கிவிட்டதால் மீட்க முடியாமலே போய் விட்டது வேதனை.<br /><br /></div>Unknownnoreply@blogger.com134tag:blogger.com,1999:blog-817601643605345.post-59499020962982395662009-05-25T00:50:00.002-04:002009-05-25T00:57:11.525-04:00புனுகைத் தெளித்து ஒப்பேற்றி...எருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா? இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா? எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்...<br /><center><a href='http://kavichai.blogspot.com/2009/05/blog-post.html'>தொடர்ந்து படிக்க...</a></center><br>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-817601643605345.post-5455305426163290642009-05-17T23:06:00.001-04:002009-05-17T23:09:53.984-04:00"ரொம்ப ஆடாதீங்கடா!" அல்லது "படுத்திக்கொண்டே கெலித்த கொலைஞர்"<div style='font-size:14px;text-align:justify'>இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அதன் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி, அல்லாது அது தொடர்ந்து செய்து வரும் தமிழின துரோகத்துக்கு கிடைத்த அங்கீகாரமல்ல என்பதை கருணாநிதி அறிந்திருப்பார். ஆனால் இந்த அல்லக்கைகள் அதை புரிந்துகொள்ளாது அடிக்கும் கூத்திருக்கிறதே! அது சல்பேட்டா அடித்துவிட்டு பாடைமுன் போடும் டப்பாங்குத்திற்கு சமானம். <br /><br />அறிவாலயம் வாசலில் வேர்கடலை விற்பவன், பேங்க் லோனுக்கு கமிசன் வாங்கித்தருபவன், சத்துணவு முட்டையை திருடித் தின்பவன், டாஸ்மார்க் கணக்கை செட்டில் பண்றவன், கள்ள ஓட்டுக்கு ஆள் புடிப்பவன், கவர்ல அமவுண்ட் போட்டு வீட்டுக்கு வீடு டெலிவரி பண்றவன், ரோட் காண்ட்ராக்ட்டில் எடுபிடி வேலை செய்றவன், முற்போக்கு அடையாளத்திற்கு அண்டிப்பிழைப்பவன், ரொம்ப யோசித்து தோல் தடிச்சவன் என்று ஆங்காங்கே களியாட்டம் போடும் கலகக் கண்மணிகள் எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பு அல் இல்லாமல் அரண்டு போய் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், விடிந்தால் ஒரு நாடகம், போசாய அதற்கு ஒரு சப்பை கட்டு என்று கட்சித்தலைமை செய்து வந்த தத்துபித்துகளுக்காக இவர்கள் இணையம் எங்கும் அடிவாங்கிக் கொண்டிருந்தார்களல்லவா? இன்று இவர்கள் போடும் எக்காளம் வெற்றி கொண்டாட்டமல்ல! தலை தப்பியதற்கான ஆட்டம். </div><br /><br /><center>(தொடரும்)</center>Unknownnoreply@blogger.com43tag:blogger.com,1999:blog-817601643605345.post-55197610593368150692009-04-27T21:56:00.005-04:002009-04-27T22:20:22.051-04:00கருணாநிதி - ஓரங்க நாடகம்<div style='font-size:14px;text-align:justify'><b>அண்ணா சமாதியில் தலைவர் தலுக்காக அமர்ந்து விட, விஷயம் தெரிந்ததும் ஸ்டாலின் பதைபதைத்துப் போய் கோபாலபுரத்திற்கு தொலைபேசுகிறார்.</b><br /><br /><b>ஸ்டாலின்:</b> <font style='color:blue'>அம்மா! அம்மா! ஐயய்யோ! இவரு திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரும்மா!!!</font><br /><br /><b>தயாளு:</b> <font style='color:black'>என்னாச்சுப்பா! யாரு ஆரம்பிச்சிட்டா!</font><br /><br /><b>ஸ்டாலின்:</b> <font style='color:blue'>அப்பாதான்மா!! அவருக்கு நீயே கால் போட்டு பேசு! நான் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்!!!</font><br /><br /><b>(கருணாநிதியின் செல் போனுக்கு தயாளு டயல் செய்கிறார்)</b><br /><br /><b>கருணாநிதி:</b><font style='color:black'> அதெல்லாம் நிறுத்த முடியாது. சாயந்தரம் வரை... ச்சே சாகும் வரை உண்ணா விரதம்தான்...</font><br /><br /><b>தயாளு:</b><font style='color:blue'> ஐயோ! நாந்தாங்க பேசுறேன். என்ன இதெல்லாம்?!!</font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:black'>அட நீயா!! நான் டெல்லி காலுக்கு வெயிட் பண்ணறேன், உன்கிட்ட அப்புறம் பேசறேன், போன வை..</font><br /><br /><b>தயாளு:</b> <font style='color:blue'>என்னமோ போங்கோ! மதியத்துக்குள்ள டிவியில சீரியல் வந்துடனும், சொல்லிட்டேன், ஆமா!</font><br /><br /><b>ராமநாதன்:</b> <font style='color:black'>அய்யா! டெல்லியிலருந்து கால்...</font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:blue'>ரொம்ப நன்றி சோனியாஜி! என் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிப்பளித்து போரை நிறுத்தியதற்கு நன்றி. "மேரா பாரத் மாக்கான், ஜெய் ஹிந்த்!!!"</font><br /><br /><b>சோனியாஜி:</b><font style='color:black'> இருங்க அவசரப் படாதிங்க! முந்தாநாள் ஒத்துகிட்டவர் இப்ப முரண்டு பிடிக்கிறார் ராஜ பக்சே!... நாங்கதான் உண்ணாவிரதத்திற்கு டைம் சொல்றோம்னு சொன்னோமே! அதுக்குள்ள ஏன் திடீர்னு ஆரம்பிச்சிங்க! </font><br /><br /><b>கருணாநிதி:</b><font style='color:blue'> ஏதோ தெரியாம ஆரம்பிச்சிட்டேன்... அம்மா தாயே நீங்கதான் காப்பாத்தனும்!!</font><br /><br /><b>சோனியா:</b> <font style='color:black'>உங்களோட ஒரே ரோதனையா போச்சு! நீங்க என்னடான்னா இங்க உண்ணாவிரதம் இருந்து உசுர வாங்குறீங்க! அவர் சீனாவில போய் உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்டுறாரு! கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!</font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:blue'>நீங்க எதுக்கு ஜெயலலிதாவுக்கு நம்ம பிளானை கசிய விட்டீங்க? அதுனாலதான் நான் அவசர அவசரமா....</font><br /><br /><b>சோனியா:</b> <font style='color:black'>நான் எங்க கசிய விட்டேன், ரா -வில் இருக்கிற ஜெ விசுவாசி எவனோ இந்த வேலையை செஞ்சிருக்கான். </font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:blue'>அதெல்லாம் இருக்கட்டும், நாங்க என்ன போர் நிறுத்தமா கேட்டோம், போர் நிறுத்தம்னு அறிக்கைதான கேட்டோம், அதுகூட ராஜபக்சேவால் முடியாதாமா? தமிழனை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டாரா</font><br /><br /><b>சோனியா:</b> <font style='color:black'>சரி.. சரி.. எல்லாரும் சேர்ந்து பிளானையே குழப்பிட்டீங்க! இனிமேலாவது ஒத்திகைப்படி நடந்துக்குங்க! "போர் நிறுத்தம் பெற்றாயிற்று, உண்ணாவிரதம் வாபஸ்" -னு தங்கபாலுவை கூப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிங்க! அதுக்குள்ள நாங்க கொழும்புக்கு கால் போட்டு பாக்கறோம்!</font><br /><br /><b>(10 ஜன்பத் ரோடு, டெல்லி - இத்தாலி மொழியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சோனியா திட்ட, மன்மோகன் சிங் அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் கொழும்புக்கு கால் செய்கிறார்)</b><br /><br /><b>சிங்:</b><font style='color:blue'> ஹலோ!</font><br /><br /><b>பக்சே:</b><font style='color:black'> ம்ம்... இப்ப என்ன!</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:blue'>टाइटलर मामले में ठुकरा दी थी अधिकारियों की राय</font><br /> <br /><b>பக்சே:</b> <font style='color:black'>No</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:blue'> मनमोहन पर जूता फेंकने का प्रयास</font><br /> <br /><b>பக்சே:</b><font style='color:black'> No</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:blue'> जूता फेंकने वाले को मनमोहन ने किया माफ</font><br /><br /><b>பக்சே:</b><font style='color:black'> No</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:blue'>अच्छा चुनावी शिगूफा है काले धन का मुद्दा</font><br /> <br /><b>பக்சே:</b><font style='color:black'> No</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:blue'> सद्दाम के नक्शेकदम पर मायावती </font><br /><br /><b>பக்சே:</b> <font style='color:blue'>මේ සුනාමියේ සුන්බුන් මතින් නැගිටි අධිෂ්ඨානයේ කතාව කියා පාන තවත් සංකේතයකි. සුනාමියෙන් පානදුරයට කළ ලොකුම විපත වුයේ සුමංගල විද්යාලයට වූ හානියයි. පානදුරේ ශ්රී සුමංගල විද්යාලය නැවත ගොඩනඟා දීමට ඒ අතර ජපන් රජය ඉදිරිපත් විය. එහෙත් ඔවුන් කියා සිටියේ සුනාමි අනතුරු කලාපයෙන් පිටත භූමියක මේ විදුහල ගොඩනඟන්නේ නම් පමණක් ඒ සඳහා රුපියල් ලක්ෂ 5000ක මුදලක් ප්රදානය කිරීමට කැමැති බවයි.</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:black'><i>(எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?)</i> ரொம்ப நன்றி ஜி, நாங்க இங்க "போர் நிறுத்தம்" -னு அறிவிச்சிடறோம். எப்பவும்போல அங்க உங்க வேலைய அறிக்கையில காட்டுங்க! <i>(உங்கள எவன் கேட்க முடியும்?)</i> அடுத்த வாட்டி 'வென் ஜியாபோ' வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க!!!</font><br /><br /><b>(எல்லாம் இனிதே முடிந்ததாக எல்லோரும் அவரவர் இடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்)</b><br /><br /><b>சோனியா:</b> <font style='color:blue'>எப்பா! எவ்ளோ இம்சை இந்தாளு கூட! எலக்சன் முடிஞ்சதும் இந்தாள முதல்ல வீட்டுக்கு அனுப்பனும்!</font><br /><br /><b>சிங்:</b> <font style='color:black'>ஏம்பா செக்ரட்டரி, மொழி பெயர்க்கச்சொல்லி ஒரு சிங்கள டெக்ஸ்ட் கொடுத்தேனே, என்னாப்பா ஆச்சு!!!</font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:blue'>ராம நாதா!! அந்த கெட்டி சட்னி எடுத்துட்டுவா!</font><br /><br /><b>தயாளு:</b> <font style='color:black'>நல்லவேளை, சீரியல் மிஸ்ஸாகல!!</font><br /><br /><b>உடன்பிறப்பு: </b><font style='color:blue'>தலைவா! உங்க கூட சேர்ந்து மத்தியானம் வரை கொலை பட்னி இருந்தோமே! எங்கே தலைவா எங்கள் பிரியாணி??</font><br /><br /><b>(எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரத்திற்கு ஒரு கால் வருகிறது)</b><br /><br /><b>சிபிசிஐடி:</b><font style='color:black'> சார், இங்க ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் "ராஜ பக்சேவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவருவேன்" -அப்படின்னு முழங்கறாங்க சார்!!!</font><br /><br /><b>கருணாநிதி:</b> <font style='color:blue'>அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு, "ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" அறிக்கை கொடு. (நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க போலருக்கே!!!)</font></div>Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-817601643605345.post-64347146300138667032009-04-19T21:52:00.002-04:002009-04-19T22:30:24.274-04:00தமிழச்சியின் பேட்டி<img src='http://web.njit.edu/~kd28/blog/thamizhachi.jpg' style='float:left;margin-right:10px;'/><div style='font-size:14px;text-align:justify'>பதிவுலகில் பெரியாரியல் மற்றும் சர்ச்சையியல்(!) என்றால் நினைவுக்கு வருபவர் பதிவர் தமிழச்சி அவர்கள். தத்துவார்த்த ரீதியிலான விவாதம் என்றாலும் அடாவடிகள் என்றாலும் அசராமல் அடித்து ஆடக்கூடியவர். அவரது நண்பர்களின் எண்ணிக்கைக்கு நிகராக வைரிகளின் எண்ணிக்கை உண்டு. பெண்ணியம் தொடர்பாகவும் பெரியாரின் பெண்ணுரிமை கருத்துக்கள் சார்ந்தும் தமிழச்சியின் பதிவுகள் இணைய உலகில் மிகப் பிரபலம். <br /><br />மின்னஞ்சல் வழியிலான அவரது நேர்காணலை 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் தொடராக வெளியிடவிருக்கிறேன். சர்ச்சைக்குரிய கேள்விகளையும், தத்துவார்த்த விளக்கங்களையும் உள்ளடக்கியதாக அவரது பேட்டி இருக்கும். விரைவில் அவரது பேட்டியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.</div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-817601643605345.post-67862477879374909662009-04-05T21:17:00.011-04:002009-04-05T21:39:18.892-04:00திருமா வெளியிட்ட ரகசியம்<img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumavalavan.jpg' style='float:left;margin-right:10px;'/><div style='font-size:14px;text-align:justify'>ஆட்சியை கலைக்க சதி என்று திமுக போலியாக பலமுறை அலறிய போதெல்லாம் நம்பிய மக்கள் மெய்யாகவே ஒரு சதிவலை பின்னப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. இப்போதும் திமுக கூப்பாடு போடத்தான் செய்தது. எனினும் பலனில்லை. தமிழின துரோகி என்ற பட்டம் கிட்டத்தட்ட கொடுக்கப் பட்டுவிட்டது. பாவம், "புலிவருது! புலிவருது!" -என்று பொய்யாக ஓலமிட்டபோது உதவிக்கு வந்த கூட்டம், உண்மையில் புலி வந்தபோது வாளாவிருந்துவிட்டது. <br /><br />திருமா தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இச்சதி பற்றி குறிப்பிட்டபோது திமுக கூறியதில் உண்மை இருப்பது உறுதியானது. அதிமுக + மதிமுக -வின் அறுபத்தியாறு சீட்டுகளுடன் காங்கிரஸ் மற்றும் பாமகவின் உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசை அமைக்க ஒரு சதி நடந்ததாக அவர் கூறுகிறார். இம்மாதிரியான அரசியல் டிராமாக்கள் புதிதல்ல; ஜனநாயக நடைமுறைகள்தான். மேலும் திமுக -வின் கடந்தகால செயல்பாடுகள் இம்மாதியானவைதான் என்றாலும் இந்த சதியை நடத்த முயன்ற நேரம் மற்றும் முனைந்தோரின் வாய்ச்சவடால்கள் போன்றவை அம்பலத்திற்கு முக்கியமானவை.<br /><br />ஈழத்திற்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடந்த நேரம் எல்லோரும் காங்கிரசை கரித்துக்கொண்டிருந்த போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மத்தியில் உள்ளதுபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் தலைமை ஏற்கவேண்டும் என்று ஒருவர் பினாத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் தமிழனின் தீராத்துயராகிய ஜெயலலிதா ஈழத்திற்கெதிரான அறிக்கைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க பாடுபட்டவர் நம் தமிழ்க்குடி சொங்கி அவர்கள். ஈழத்து ரட்சகன் போல் தம்மை காட்டிக்கொண்ட ராமதாஸ் காகிரசுக்கு ஆதரவாக இதை அப்போது செய்தார். அப்போதேன்றால் 1947 -இல் அல்ல. வெறும் ஓரிரு மாதங்களுக்கு முன். இன்று காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கண்டுபிடித்து கூறி நமக்கு விழிப்புணர்வேற்றிவிட்டு கூட்டணி மாறி இருக்கிறார். <br /><br />திருமா மேலும் கூறுகிறார்: "காங்கிரஸ் கூட்டணி தேவையா? இப்படி ஒரு துயரான ஆட்சியில் நாம் தொடரவேண்டுமா? என்ற எண்ணம் கலைஞருக்கு ஏற்பட்டது, மீண்டும் தேர்தலில் வெல்ல திமுகவால் முடியும் என்று அவர் நம்பினார்." ஆட்சியை இழக்க அவர் தயாராக இருந்தாலும் ஆட்சி கவிழ்ந்ததும் தேர்தலை நடத்தவிடாமல், எஞ்சிய காலத்திற்கு காங்கிரஸ் தலைமையில் இடைக்கால ஆட்சியமைக்க பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக கருணாநிதி தன்னிடம் கூறியதாக பேட்டியில் திருமா குறிப்பிடுகிறார். ("நானா துரோகி?" என்ற தலைப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டது நினைவிருக்கலாம்). மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் முழுமையாக காங்கிரஸ் கையிலும், அரசுகளின் சிண்டு ஜெயலலிதா கையிலும், எட்டப்பனின் சிரிப்பு ராமதாஸ் வாயிலும், திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் திரு திரு விழிப்பை வைகோவின் கண்களிலும் பார்க்க தமிழன் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?<br /><br />எல்லாம் சரி. ஆனால், ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? கருணாநிதியின் மனிதச் சங்கிலி என்ற சிறு நாடகத்திற்கே தமிழ்நாடெங்கும் பேரெழுச்சி பொங்கியது நமக்கு தெரியும். ஆட்சியை இழந்திருந்தால் அவர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து பெரும்பான்மை பெற்றிருப்பார். காங்கிரசுடன் சேர்த்து ஜெயாவையும், வெளியுறவு அமைச்சகத்தில் இருட்டுக்குசு விட்டுக்கொண்டிருக்கும் ஜந்துக்களையும் ஒருங்கே டர்ராக்கி இருக்கலாம். இதை நடக்கவிடாமல் செய்தது யார்? ஈழத்திற்காக பாரம் சுமக்கும் மருத்துவர் அய்யா அவர்கள். திமுக -வை பழி வாங்குகிறாராம்!! அதற்காக துரோகிகளை ஆட்சியிலமர்த்த முயன்றுள்ளார். புலிகளை பழிவாங்க ஈழ மக்களை பலிவாங்கும் காங்கிரசிற்கும் திமுகவை பழிவாங்க துரோக ஆட்சிக்கு துணைபோகும் ராமதாசுக்கும் வித்தியாசங்கள் ஏதும் உளதா? திமுக வை பழிவாங்க ராமதாசுக்கு அப்படி என்ன தேவை? ஆட்சியில் குறை கண்டுபிடிக்கிறேன் என்று கூறிக்கொண்டு எல்லா நலத்திட்டங்களிலும் ஆற்று மணலை வாரிப் போட்டவர் இவர். இடஒதுக்கீட்டின் பலனை மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்த்த பாமக -வை வன்னியப் பெருமை பேசும் சாதிப் பார்ப்பனர்கள் கையில் இன்று முழுமையாக கொடுத்துவிட்டார். காடுவெட்டி குரு போன்ற சாதியவாதிகளுக்காக திமுக -வை பழிவாங்குகிறார். இவரை நம்பினால் ஈழத்தமிழன் மட்டுமல்ல இங்குள்ள உண்மைத்தமிழனும் சிங்கி அடிக்கவேண்டியதுதான். நல்லவேளையாக மூன்றாவது அணியும் தோன்றிய கணத்திலேயே முடிந்துபோனது.<br /><br />மூன்றாவது அணி அமைக்க முழுமூச்சாக பாடுபட்டவர் யாரென்று நமக்கு தெரியும். அவ்வணியில் இணைய மதிமுக விற்கு உள்ள பிரச்சினைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் வெற்றிபெறும் கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி தோற்றுக்கொண்டிருக்கும் கட்சி அது. அணி அமைந்த பிறகு அக்கட்சியை அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கமுடியும். ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமகவிற்கு என்ன தடை? அதன் தலைமையில்தான் கூட்டணி என்று திருமா கூறிக்கொண்டிருந்தார். அதை ஏற்க மறுத்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பை நிர்மூலமாகியது யார்? உலகத்தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் பாமக -வை.<br /><br />திமுக -வை சுழற்றும் சாட்டை காங்கிரஸ் கையில் சிக்கியது பாமகாவால். தேர்தல் நடக்கவிருந்த வாய்ப்பை கெடுத்தது பாமக. மூன்றாவது அணியை சிதைத்தும் அக்கட்சியே. பழியை காங்கிரஸ் மீது போட்டு நாடகமாடும் கருணாநிதிக்கும், கருணாநிதி மீது போட்டு ஓட்டு பொறுக்கும் ராமதாசுக்கும் ஒரே பெயர் தான். அது என்ன?!?! </div>Unknownnoreply@blogger.com23tag:blogger.com,1999:blog-817601643605345.post-37918403648376632942009-04-01T00:41:00.002-04:002009-04-01T01:10:20.900-04:00தரும(மற்ற) புரி - நாங்களும் ரவுடிதாண்டா!<div style='font-size:14px;text-align:justify'>ஈகைத்தருமம் நிறைந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சிசெய்த பகுதிகளை உள்ளடக்கியது இன்றைய தருமபுரி மாவட்டம் என்று நாம் படித்திருப்போம். நான் அங்கு படித்த ஓரிரு வருடங்களில் தருமபுரி நகரம் தருமம் நிறைந்த நகரமா என்பதை அறிய முடியாவிட்டாலும் அது ஒரு ரவுடிகள் நிறைந்த இடம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வீட்டுக்கொரு ரவுடி என்ற பாரம்பரியத்தைக் கொண்டது அந்நகரம். நெசவாளர் காலனி முனுசாமி, வென்னாம்பட்டி ரவி, பள்ளித்தெரு ராஜா, பஸ்டாண்டு ரசாக், டி.ஆர் -ஐ தாக்கிய எஸ்.ஆர், ஸ்டேடியம் ஜிம் குமார், என்று பலர் அங்கு ரவுடிப் பள்ளிகள் நடத்தி சேவை செய்து வந்தனர். அரசியல் ரவுடிகளை விட சுயேச்சை ரவுடிகளுக்கு நல்ல மவுசு இருந்தது. இவர்கள் தவிர காக்கி உடையில் பல ரவுடிகள் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் இருந்தார்கள்.<br /><br />இவர்களில் ஜிம் குமார் தான் எனது ஜிம் மாஸ்டர். பள்ளித்தெரு ராஜா -வுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. இவர்கள் தவிர ஆராயி என்ற பொம்பள ரவுடி ஒருவர் ரயில்வே ஸ்டேசன் அருகில் இருந்தார். வெகு குறுகிய காலமே இவர் அப்பகுதியை ஆட்சி செய்தார். திடீரென ஒருநாள் அவர் காணாமல் போய்விட்டார். ரொம்ப கவர்ச்சியான ரவுடியாகிய இவருக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் பணம் கறப்பதுதான் முக்கிய தொழில். இரவு ஒன்பது மணியானதும் ரயில்வே ஸ்டேசன் சாலையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சிலம்பம் பயிற்சி செய்வார். சேலையை வேட்டிபோல் மடித்து கட்டிக்கொண்டு ஓரிரு அல்லக்கைகளுக்கு கற்றுத்தருவார். <br /><br />ஒருமுறை சில ஆந்திரா மாணவர்கள் ஆராயியிடம் மாட்டிக்கொண்டனர். பணம் பறித்துக்கொண்டு சிலர் கன்னத்தில் அறையும் கொடுத்திருக்கிறார். அவர்களில் கொஞ்சம் தைரியமான மாணவர் ஒருவர் "உன் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். உடனே கோபத்தின் உச்ச்சிக்கே போய்விட்ட ஆராயி தன் மார்பை திறந்து காட்டி இருபுறத்திலும் பச்சை குத்தியிருந்த தன் பெயரை பார்த்து படித்துக்கொள் என்று சொல்லிவிட்டாராம். பார்த்து பயந்துபோய் அலறிவிட்டார்கள் அம்மாணவர்கள். ஒரு துடுக்கான மாணவர் தனக்கு தமிழ் சரியாக படிக்கத்தெரியாது என்றும் அதனால் பொறுமையாக பார்த்து படித்து பெயரை தெரிந்து கொள்வதற்காக இன்னொருமுறை திறந்து காட்டச்சொல்லி கேட்டிருக்கிறார். செமைக்கடுப்பான ஆராயி அவரை அடித்து துவைத்துவிட்டார்.<br /><br /><br />பெரும்பாலும் போலீஸ்காரர்களுக்கு உற்ற தோழர்களாகத்தான் ரவுடிகள் இருப்பார்கள் என்பது உலக வழக்கு. ஆச்சர்யமான ஒருவிசயம் என்னவென்றால் போலீஸ்காரர்களுக்கும் பள்ளித்தெரு ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தும். மனிதர்களில் வேறுபாடு பாராட்டாமல் எல்லோரையும் ஒரே விதமாக மொக்கை போடும் இவரது இயல்பு தான் அதற்கு காரணம். போலீஸ்காரர்கள் இவரது தலையைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். <br /><br />அரசு மருத்துவமனைக்கு பின்னால் ஒருபகுதியில் நான் எனது கல்லூரி நண்பர்களுடன் தங்கி இருந்த சமயத்தில் ரயிலடித் தெருவில் ஒரு சூதாட்ட கிளப் இருந்தது. காலையில் இருந்து மாலை ஆறுமணிவரை சீட்டாடிய களைப்பில் நம்ம பள்ளித்தெரு ராஜா கிளப்புக்கு வெளியே ஒருமணிநேரம் ரெஸ்ட் எடுப்பார். ஆறுமணி வாக்கில் நான் வீட்டுக்கு வரும்போது என்னைப் பிடித்துவைத்து ஒருமணிநேரம் மொக்கை போட்டுவிட்டுத்தான் அடுத்த இரவு ரவுண்டுக்கு சீட்டாட செல்வார். அதேபோல் காலையில் ஒன்பது மணிக்கும் ஒரு மொக்கை உண்டு. <br /><br />அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு காலையில் ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலையை ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் செய்துவந்தார். மகா வெகுளியான அந்தப் பெண் குண்டலப்பட்டியிலிருந்து காலையில் தருமபுரி வந்து அப்பகுதியில் இருந்த சுமார் முப்பது கடைகளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்துவிட்டு மாலைவரை வேறெங்கோ வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வார். அந்த சீட்டாட்ட கிளப்புக்கும் அவர்தான் தண்ணீர் பிடித்து வைப்பார். அரசு மருத்துவமனையில் அச்சமயம் பணியாற்றி வந்த கண்ணன் என்ற ஆப்டீசியன் அந்த கிளப்பில் சீட்டாடி பணத்தை விடுவது வழக்கம். தண்ணீர் வைக்க அந்த பெண் கிளப்புக்கு சென்றால் அவ்வப்போது அவரிடம் சில்மிஷம் செய்யும் வேலையை இவர் நெடுநாளாக செய்து வந்திருக்கிறார். நம்ம ராஜா அங்கு இல்லாவிட்டால் கண்ணனுடன் சேர்ந்து சில மைனர் குஞ்சுகள் அப்பெண்ணை அலரவைப்பார்கள். இதனால் அப்பெண் தினமும் என்னிடம் வந்து ராஜா கிளப்புக்கு வந்துவிட்டாரா என்று கேட்டுவிட்டுத்தான் அங்கு தண்ணீர் வைக்க செல்வார். சமயங்களில் வெகுநேரமாகியும் ராஜா அங்கு வந்திருக்க மாட்டார். அந்நாட்களில் அப்பெண் பயந்து பயந்து அங்கு சென்று வருவார். எனக்கு எப்போதும் காலை வகுப்புகள் அரசு மருத்துவ மனையிலும் மாலை வகுப்புகள் பெரியாம்பட்டி கல்லூரியிலும் நடக்கும். காலை வகுப்புகளை பெரும்பாலும் கட் அடித்துவிட்டு கிளப்புக்கு எதிரில் இருக்கும் எங்கள் வாடிக்கையான செட்டிநாடு மெஸ்ஸில் ஆச்சியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பேன். இதனால் கிளப் சங்கதிகளும் அப்பெண் பற்றியும் எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.<br /><br />அப்பகுதியில் இருத்த ஒரு ஜவுளிகடையில் புதிதாக ஒரு டைலர் வந்திருந்தார். வெகு அபூர்வமாக பேசுவார். அவரை பார்த்தாலே நோன்ஜான்களுக்குக் கூட அடித்து பணம் பிடுங்கத்தோன்றும். சவுத் -இலிருந்து வந்தவராம். அநாதை என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட மனிதர் திடீரென்று ஒருநாளில் இருந்து எங்கள் மெஸ்சுக்கு காலையில் வந்து என்னை தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டுப் போகும் வழக்கத்தை மேற்கொண்டார். இது எனக்கு வினோதமாக தோன்றினாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் அவரை கேட்கவில்லை. அவரும் அதற்குமேல் எதுவும் பேசமாட்டார்.<br /><br />ஒருமுறை ஜி.எம் தியேட்டருக்கு நண்பர்கள் ஏழெட்டு பேராக இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல முதல் அரைமணி நேரத்திலேயே நான் மட்டும் தனியாக வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தியேட்டரில் இருந்து யாரோ என்னை தொடர்ந்து வருவதுபோல் தோன்றினாலும் வீட்டுக்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன். அந்த டைலர் என்னை தொடர்ந்து வந்து அருகில் நெருங்கினார். முகம் உப்பியிருந்தது. நிறைய அழுதிருப்பார் போல இருந்தது. "என்னங்க ஆயிற்று, என்ன விஷயம், ஏன் என்னை தொடர்கிறீர்கள் என்று கேட்டேன்?" பொலபொலவென அழ ஆரம்பித்த அந்த டைலர் தன் மனைவியின் தாலியை ஆப்டீசியன் கண்ணன் பறித்துக் கொண்டதாகவும் மேலும் தன் மனைவியின் சீலையை அவிழ்த்து அவமானப் படுத்தியுதாகவும் சொன்னார். நான் கண்ணனுடன் மருத்துவமையில் பணிபுரிவதாக நினைத்து என்னிடம் சொன்னார் போலிருக்கு. எனினும் அவர் இந்த விசயத்தைச் சொன்னவுடன் எனக்கு கோபத்தில் தலை பாரமாகிவிட்டது. வெறியில் பற்கள் இறுகின. கண்ணனின் கதையை இன்றோடு முடமாக்குவது என்று முடிவெடுத்தேன். சினிமா விட்டு நண்பர்கள் வருவதற்குள் இதை சமயோசிதமாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன்.<br /><br />எனது பைக்கில் அவரை அழைத்துக் கொண்டு நேராக பள்ளித் தெருவுக்குப் போனேன். ராஜா இந்நேரம் குடித்துவிட்டு தன்னிலை மறந்து இருப்பாரென்று நன்றாக தெரியும். அவரை அணுகுவது ஆபத்தானதும் கூட. போகும் வழியில் அவரிடம் மீதிக்கதையைக் கேட்டுக்கொண்டேன். அந்த தண்ணீர் எடுத்து வைக்கும் பெண்ணை இவர் சில நாட்களுக்கு முன்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். என்னைப் பற்றி அந்த பெண் நல்லவிதமாக அவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தினமும் காலையில் ஏன் என்னை தேடி வந்து அவர் வணக்கம் வைத்துவிட்டு செல்கிறார் என்று புரிந்தது. <br /><br />பயங்கர மப்பில் இருந்தாலும் ராஜா என்னைப் பார்த்ததும் "வாடா, இங்க என்ன பண்ற? இவன் யாரு?" என்றார். நான் விசயத்தை முழு மூச்சில் ஆவேசத்துடன் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. வழக்கமான மொக்கையுடன் போதையில் வேறு ஏதோ பேச ஆரம்பித்தார். கடுப்பாக இருந்தாலும் பத்துநிமிடம் குறுக்கே எதுவும் பேசாமல் பொறுமையாக மொக்கையை கேட்டேன். இதற்குமேல் இங்கே வேலையாகாது என்று நினைத்து "அண்ணே! வந்து..." என்று அரைமனதுடன் மீண்டும் விஷயத்தை ஆரம்பித்தேன். இருந்தாற்போல் இருந்து திடீரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "அதான் சொல்லிட்டல்ல, திரும்ப எதுக்குடா சொல்ற!" என்று முறைத்தார். பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; "வண்டியை எடுடா என்று கூறி" பின்னால் அமர்ந்து கொண்டார். "அண்ணே அவரும் என்கூட வந்தாருக்காரு, வண்டியில அவரும் வரட்டும்னே!" என்றேன். "அவன் எதுக்குடா?" என்றார். "என்னது, அவன் எதுக்கா! அவருக்குக்காகத்தானே உன்னையே பாக்க வந்தேன்!" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் கதையை அவருக்கு சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தேன். நான் திரும்ப சொல்வது மொக்கை போல் தெரிந்தது போலிருக்கு அவருக்கு. "சரி சரி அவனையும் ஏறச்சொல்லு! என்றார். <br /><br />கண்ணன் வீட்டில் வண்டியை நிறுத்தியதும் "நீ வீட்டுக்கு போ, நான் அப்பறமா வரேன்" என்று சொல்லிவிட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் ஏதாவது செய்வார் என்று கூட்டிவந்தால் இவர் அவனுடன் சேர்ந்து சீட்டாட வந்தவர் போல் கூலாக என்னை போகச்சொல்லுகிறாரே என்று ஏமாற்றமாக இருந்தது. கயவர்கள் பற்றி கலைஞரிடம் மக்கள் முறையிட்டால் அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து வெறுப்பேற்றுவது போல அந்த சூழல் இருந்தது. அங்கேயே நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவனுடன் சேர்ந்து வெளியே வந்தார். கண்ணன் சிரித்த முகத்துடன் வந்தான். டைலாரைப் பார்த்ததும் நக்கலாக "என்னடா, இங்க என்ன பண்ற? கட்டச்சி வீட்ல இருக்காளா? வா அவள பார்க்க போவோம்" என்றான். நான் அவரைப் பார்த்தேன். அவரது கண்ணில் பயம் தொற்றிக் கொண்டது. அவர் வீட்டிற்கு ஓட ஆரம்பித்தார். எதுவும் பேசாமல் இருந்த ராஜா எட்டி அவர் சட்டையை பிடித்தார். <br /><br />"ஆஹா நிலைமை வேறுமாதிரியாகப் போகிறதே" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஒரு புதிய திட்டத்தை வகுத்தேன். நண்பர்களை இப்போது அழைக்க நேரமில்லை. போதையில் இருக்கும் ராஜா மற்றும் கண்ணனை இந்த டைலர் தனியாக சமாளிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சமாளித்தாக வேண்டும் என நினைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடந்தேன். டைலரின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டு ராஜா முன்னாள் நடந்தார். கண்ணன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.<br /><br />மெலிதாக எரியும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அந்தப்பெண் மூலையில் படுத்திருந்தார். கண்ணனும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர். பின்னால் நானும் டைலரும் திகிலுடன் சென்றோம். ராஜாவுக்கு உள்ளே சரியாக எதுவும் தெரியவில்லை போல. "யேய்!!" என்று கத்தினார். ராஜாவுடன் கண்ணனைப் பார்த்ததும் அந்தப் பெண் வீல் வீல் என அலற ஆரம்பித்தார். எனக்கு அது பலியாட்டின் கனைப்பை போல் அபாயமாகத் தோன்றியது. டைலரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார். இனியும் தாமதிக்க முடியாது என்றெண்ணி இருவரையும் விளக்கிவிட்டு ஒரே ஓட்டமாக அப்பெண்ணை நெருங்கினேன். என்னைப்பார்த்ததும் கன நேரத்தில் ஓடிவந்து என் பின்னால் நின்றுகொண்டார். என் சட்டையை பின்புறமாக கொத்தாக பிடித்துக்கொண்டு "அண்ணா காப்பாத்துங்கண்ணா, காப்பாத்துங்கண்ணா!" என்று பதற ஆரம்பித்தார். ஈழக் கொடுமைகள் தொடர்பான வீடியோவில் பள்ளிச்சிறுமிகள் போர் விமானங்களைக் கண்டு வீறிட்டு அலறும்போது நமக்கு எப்படி மனம் பதைபதைக்குமோ அதுபோன்ற பதைப்பு எனக்கு அப்போது ஏற்பட்டது. இனி உயிரே போனாலும் இப்பெண்ணை எவனும் தொட அனுமதிக்கக் கூடாது என்று முடுவேடுத்தேன். அவரது உதறல் எனக்கு எச்சரிக்கை உணர்வையும் ஆவேசத்தையும் வரவழைத்துவிட்டது. அப்பெண்ணை ஒரு மூலைக்கு நகர்த்தி அரணாக நின்றுகொண்டேன்.<br /><br />தான் அப்பெண்ணை தாக்கப்போவதாக நான் நினைக்கிறேனென்று ராஜா புரிந்து கொண்டார். போதையும் தெளிந்திருந்தது. "நீ ஏன்டா பேயறைந்த மாதிரி நிக்கிற" என்று என்னைப் பார்த்து சொன்னவாறே கண்ணன் தலையில் ஒரு எத்து எத்தினார். முடியை கொத்தாக பிடித்து இழுத்துவந்து அப்பெண்ணின் காலருகே அவனை கிடத்தினார். அப்பெண் இப்போது என் பின்னாலிருந்து வெளியே வந்து என் கையைப் இருகப்பற்றிக்கொண்டார். ராஜா எத்த காலை தூக்கியதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு மீண்டும் அப்பெண்ணின் காலில் விழுந்தான் கண்ணன். "எங்கடா அந்த தாலி?" என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த அரைப்பவுன் தாலியை பாக்கேட்டிலிருந்து அப்பெண்ணின் காலுக்கடியில் வைத்தான் கண்ணன். பிறகு எங்கள் மூவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு கதவை சாத்தி அரைமணிநேரம் கண்ணனை அடித்தார். பிறகுதான் சற்று நிம்மதியாய் இருந்தது.<br /><br />ஒருவழியாக வெளியே வந்த ராஜா வண்டி சாவியை கேட்டார். பள்ளித்தேருவுக்குப் போன எந்த வண்டியும் திரும்ப வராது என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றாலும் எதுவும் பேசாமல் சாவியை கொடுத்தேன். திரும்பவும் கண்ணனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கோ போனார். இன்னமும் திகில் விலகாத இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனேன். உடனடியாக ஆச்சிக்கு போன் செய்து செட்டியாருக்கு தெரியாமல் ஒருநிமிடம் வந்துபோகும்படி சொன்னேன். <br /><br />அவர் வந்ததும் நான் சுருக்கமாக சொன்ன அந்த கதையைக் கேட்டு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். "உனக்கென்ன பயித்தியமா, இதெல்லாம் உனக்கு தேவையா?" என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டார். பின்னாலே செட்டியாரும் வந்துவிட அவருக்கு ஆச்சியே அவரது வெர்சன் கதையை சொல்ல ஆரம்பித்தார். ராஜா எடுத்துச் சென்ற வண்டிக்காக செட்டியார் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே விஷயம் தெரிந்து நண்பர்கள் தியேட்டரில் இருந்து வந்துவிட்டனர். "நாமே கண்ணனை துவைச்சி தொங்கப் போட்டிருக்கலாம், ராஜாவை கூப்பிட்டு பிரச்சினையை ஏன் பெரிசு பண்ணின?" என்று நண்பர்கள் பேச ஆரம்பித்தனர். ("அடப்பாவிகளா! நல்லது நினைச்சி ஏதாவது செஞ்சா ஏண்டா திட்டறிங்க !") கொஞ்ச நேரத்தில் கண்ணன் வண்டியை எடுத்துவந்து வீட்டில் பார்க் செய்துவிட்டு, சைடு லாக் போட்டுவிட்டு சாவியை வெளியிலிருந்தே வீசிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். ராஜா சொல்லி அனுப்பி இருப்பார் போலிருக்கு.<br /><br />சிறிது நேரத்தில் அனைவரும் என்னை கும்முவதை நிறுத்திவிட்டு அவ்விருவரையும் தேற்ற ஆரம்பித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டதை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டனர். செட்டியார் தனது ஆதிகாலத்து மகிந்திரா வேனை எடுத்துக்கொண்டு வந்தார். அனைவரும் தொபபூர் பஞ்சாபி தாபா சென்று அவர்களுக்கு திருமண விருந்தைக் கொடுத்தோம். பிறகு வேனில் ஏற்றி இருவரையும் குண்டலபட்டி அனுப்பிவைத்தோம். கடைசியாக வேனில் ஏறும்போது அப்பெண் என்னிடம் அவரது பாட்டி மீன் குழம்பு நன்றாக செய்வார் என்றும் குண்டலப்பட்டி ஒருமுறை நான் வரவேண்டும் என்றும் சொன்னார். டைலர் வழக்கம்போல் "வணக்கம் சார்" என்று மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறிக்கொண்டார். <br /><br />எனக்கு சீ ஃபுட் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்று நான் அப்பெண்ணிடம் ஏனோ சொல்லவில்லை.</div>Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-817601643605345.post-69192988605206426032009-03-27T22:57:00.011-04:002009-03-27T23:50:06.140-04:00இழவு வீட்டில் சீட்டுக்கச்சேரி<img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumavalavan.jpg' style='float:left;margin-right:10px;'/><div style='font-size:14px;text-align:justify'><br /><br /><br />இறந்து கிடக்கும் ஈழத்தமிழனின் தீராப் பகையாளி ஒருவர் அவன் இழவை எடுக்க வீடுதேடி வந்திருக்கிறார். சும்மா வரவில்லை, கையில் சீட்டுக்கட்டுடன் வந்திருக்கிறார். இதுவரை பிணத்தின் அருகில் நின்று கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உறவினர் ஒருவர் சீட்டுகட்டை கண்டதும் கடைசியாக ஒருமுறை மூக்கை சிந்திவிட்டு தனக்கும் ஒரு கை போடச்சொல்லி சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார். இழவு வீட்டில் ஆரவாரமாக அரங்கேறும் சீட்டுக்கச்சேரி பிணத்தின் அருகாமையால் எவ்விதத்திலும் சோடை போகவில்லை. பகையாளி நபருடன் இழவு வீட்டுக்கு மீண்டும் வந்த முன்னாள் உறவினர் ஒருவர் எல்லோருக்கும் ரம்மி சேர்த்து கொடுத்துக் கொண்டு ஆட்டத்தின் விறுவிறுப்பு குன்றாமல் பார்த்துக் கொள்கிறார். <br /><br />இவ்வளவையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தலைவர் வெகுண்டெழுந்துவிட்டார். இழவு வீட்டில் இவர்கள் நடத்தும் சீட்டு கச்சேரி அவருக்கு மிகுந்த வேகாளத்தை உருவாக்குகிறது. தான் பலமுறை அழைத்தும் சீட்டாட வராதவர்கள் இப்போது மும்முரமாக ஆட்டத்தில் லயித்துவிட்டார்களே என்பதுதான் இவரது கோபம். இழவு விழுந்தது தன் வீட்டில்தான் என்பதை சுத்தமாக மறந்துபோனார் இந்த பிதாமகர். ஒரு பொறாமைக்காரியின் முனகலைப் போல பொறுமுகிறார். <br /><br />இதற்கிடையே பிணத்தை எடுக்கவிடாமல் அழிச்சாட்டியம் செய்யும் கடன்காரனை எப்படி சமாளிப்பது? மழுப்பலான பதிலை கடன்காரனுக்கு தந்தவாறே உள்ளக்குமுறலை அடக்கிக்கொண்டு பிணத்தை அடக்கம் செய்ய ஆகவேண்டியதை பார்த்துகொண்டிருக்கிறார் ஒரு நபர். எதிர்காலம் பற்றிய அயர்ச்சியுடனும் நிகழ்காலப் பொறுப்புடனும் அந்த நபர் நடந்து கொள்ளும்விதம் இழவு கொடுக்க வந்த அந்த சிறு கூட்டத்தின் மனத உருகச் செய்துவிடுகிறது.<br /><br /><center>-------------------</center><br /><br />சமீபகாலமாக வலையுலக உடன்பிறப்புகளின் பதிவுகளை நோட்டம்விட்டால் அவர்கள் ஒருகருத்தை விடாமல் அங்கலாய்ப்பது புரியும். அம்மா ஆட்சியில் அடங்கி இருப்பவர்கள் இவர்களது ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்களாம்!!. இந்திய கூட்டமைப்பு தரும் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தை இவர்கள் என்னவோ கோபாலபுரத்தின் கொல்லைப் புறத்தில் உற்பத்திசெய்து அறிவாலையம் வழியாக டிஸ்ட்ரிபியூட் செய்கிறவர்கள் போல ஒரே பெருமிதம்தான் போங்கோ!! அம்மா ஆட்சியானாலும் அவங்க ஆண்டை ஆட்சியானாலும் சமூக அக்கறை உள்ளவர்களை கட்டிப்போட முடியாது. இவர்களை எதைச்செய்தாலும் சட்டவிரோதமாகத்தான் செய்யவேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சமூக விரோதிகளுக்கும் சட்டவிரோதங்களுக்கும் சராசரி இந்தியன் பயந்த காலம் மலையேறிவிட்டது என்பதை பெரிய அண்ணன்கள் புரிந்துகொள்ளவேண்டும்.<br /><br />கூடவே சிலர் ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு எனவும் அது கருணாநிதிக்கு வேண்டியது இல்லை என்றும் அருட்பேருரை நிகழ்த்துகிறார்கள். விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வேறுவேறு என்று கூறிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இவர்கள் உண்மையில் இருவரும் ஒருவரே என்பதை ஆணித்தரமாக நம்புகிறவர்களாவர். போரில் ஈழத்தமிழன் செத்தாலும் விடுதலைப்புலி செத்தாலும் அதை வேறுபடுத்தி பார்க்காத ஜடங்கள். அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம். </div>Unknownnoreply@blogger.com26tag:blogger.com,1999:blog-817601643605345.post-37078427674123351922009-03-10T23:15:00.007-04:002009-03-12T21:05:52.391-04:00தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருணாநிதி கைது!<div style='font-size:11px;text-align:justify'><i><b>சென்னை: 12 மார்ச், 3011: தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வருணாநிதி இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்ததற்காகவும், தமிழுணர்வாளர்களை ஒடுக்கியதற்காகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் குற்றவாளிக்கு அவர் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் மன்ற குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அவ்வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.</b></i><br /><br /><p style='color:black;'><font style='color:green'>வருணாநிதி:</font> மக்கள் மன்றம்..., விச்சித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. மோசமான அரசியல்வாதிகளை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் அவ்வளவு மோசமான அரசியல்வாதியும் அல்ல. தமிழக அரசியலிலே, சர்வசாதாரணமாக தென்படக்கூடிய அரசியல் வியாதிகளிலே நானும் ஒருவன். ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்தேன். தமிழுணர்வாளர்களை ஒடுக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. ஈழ ஆதரவிலே குழப்பம் விளைவித்தேன். ஆதரவு கூடாது என்பதற்காக அல்ல. திமுக அரசு கவிழக்கூடாது என்பதற்காக. தமிழுனர்வாளர்களை ஒடுக்கினேன். அவர்கள் உண்மைத்தமிழர்கள் என்பதற்காக அல்ல. தமிழுணர்வு கிளர்ந்து அது காங்கிரஸ்காரன் டவுசரை கிழிக்கக்கூடாது என்பதற்காக.</p><p style='color:black;'><b><i>(அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வருணாநிதியிடம் ஏதோ சொல்ல முனைகிறார்.)</i></b></p><p style='color:black;'><font style='color:green'>வருணாநிதி:</font> உனக்கேன் இவ்வளவு அக்கறை. காங்கிரஸ்காரனுக்கே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே என் குடும்ப நலமும் கலந்திருக்கிறது. கட்சிக்காக தங்கள் குடும்பத்தை மறந்து கட்சி நலனே கதி என்று கிடக்கிறார்களே உண்மைத்தொண்டர்கள், அவர்களைபோல் அல்ல. </p><p style='color:black;'> இதற்கே இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே, இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையிலே சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் அவன் நடத்தி வந்துள்ள நாடகங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். எளிதாக கரவொலியை பெற்றதில்லை நான். அரிதாரம் பூசி நடிக்க வேண்டியிருந்தது. எளிதாக ஓட்டுகளை பெற்றதில்லை நான். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டியிருந்தது. கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள். </p><p style='color:black;'> தமிழகத்திலே, திருக்குவலையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். ஊரை ஏய்த்து சொத்து சேர்க்க இன்னொரு ஊர். தமிழக அரசியலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சென்னை...! கட்சியை எனக்கு தாரைவார்த்தது. காங்கிரஸ் கூட்டணியை தந்தது. இன்று கூட்டணிக்கு ஆளாய் பறக்கிறாளே என் தங்கை 'சாணி'யா அவளை ஜெயிக்க வைக்க மீண்டும் மக்களிடம் ஓடோடி வந்தேன். மோசடி அரசியல் அரசியல் செய்து ஓட்டு பொறுக்குகிறாளே, இதோ இந்த ஜாலக்காரி பயலலிதா, இவளது அரசியல் சதிவலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஓட்டு வங்கியை பறிகொடுத்தேன், ஆட்சியை இழந்தேன், கடைசியில் பதவிப் பைத்தியமாக மாறினேன். கூட்டணிக்கு வந்த தங்கையை சந்தித்தேன். பல் பிடுங்கிய பாம்பாக. ஆம். பொக்கையாக! </p><p style='color:black;'> தங்கையின் பெயரோ 'சாணி'யா! டெரரான பெயர். கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கண்ணிலோ பழியுணர்வு, கையிலே தமிழன் ரத்தம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அலைந்தாள், அவளுக்காக நான் அலைந்தேன். அவளுக்கு கூட்டணி ஆசை காட்டினர் பலர். அவர்களில் பேராசை பிடித்த சிலர் கைமாறாக அதிக இடங்கள் கேட்டனர். பம்மாத்து அரசியல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறானே இந்த கொடியவன் விஜயகோந்து, ஐஸ் வைத்து மடக்கமுயன்றான் என் தங்கையை. நான் மட்டும் தடுத்திராவிட்டால் அவள் அப்போதே அவனுடன் கூட்டணியை அறிவித்திருப்பாள். அவளது பதிவிரதம் பற்றி கேள்வி எழுப்பியவர்களும் கூட்டணிக்காக வந்தனர், தீவிரவாதத்தின் பெயரால், இந்திய தேசியத்தின் பெயரால். பிரதியுபகாரமாக என்னை கூட்டணியிலிருந்து கழட்டி விடச்சொன்னார்கள். மாநில அளவில் பிரச்சனை செய்தாலும் டெல்லியிலாவது என்னுடன் அனுசரணையாக இருந்திருப்பார்கள் காங்கிரசார். அவர்களை தூண்டிவிட்டது பயலலிதாதான்.</p><p style='color:black;'> நிம்மதியிழந்த என்தங்கை அரசியலைவிட்டே செல்ல முடிவெடுத்தாள். காங்கிரசை செல்வாக்கற்ற தமிழ்நாட்டிலே அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. அவளே அழித்து முடித்து விட்டாள். சொந்த கட்சியையே அழிக்க முயல்வது ஒன்றும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அகிம்சா மூர்த்தி, ஜீவ காருண்ய சீலர், அவரே சுதந்திரத்திற்குபின் காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதத்தான் 'சாணி'யாவும் செய்து கொண்டிருக்கிறாள். அது எப்படி குற்றமாகும்?</p><p style='color:black;'> கூட்டணிக்காக பாமக விரட்டியது, பயந்தோடினாள்; தேமுதிக துரத்தியது, மீண்டும் ஓடினாள்; அதிமுக என் தங்கையை பயமுறுத்தியது; ஓடினாள், ஓடினாள், அறிவாலயத்தின் குட்டிச்சுவர் வரை ஓடினாள். திமுகவிற்கு வேறு நாதியில்லாததால் கூட்டணியை தொடர்ந்தாள். </p><p style='color:blue;'><font style='color:green'>வக்கீல்:</font> குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.</p><p style='color:black;'><font style='color:green'>வருணாநிதி:</font> இல்லை அதுவும் என் வழக்குதான். காங்கிரஸ் இலங்கைக்கு ஆயுதம் தந்தது ஒரு குற்றம், ஈழ ஆதரவில் நான் குழப்பம் விளைவித்தது ஒரு குற்றம், தமிழுனர்வாளர்களை ஒடுக்கியது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார், யார் காரணம்? அப்பாவிகள் ஈழத்திலே சாகிறார்களே, அது யார் குற்றம்? எங்களின் குற்றமா? அல்லது எங்கள் மீது அபரிதமான நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்களே, அவர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர்த்தது யார் குற்றம்? குடும்பத்துக்கு ஒருபவுன் வாங்கும் வாக்காளர்கள் குற்றமா? அல்லது வாக்குகளை வாங்கி குடும்பத்துக்கு பதவிகள் தரும் எங்களின் குற்றமா? இந்த அரசியல் பெருச்சாளிகள் களையப்படும்வரை ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் படும் துயர் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் அரசியல் வரலாற்றில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் சுயநலம், சூழ்ச்சி, அக்கிரமம் நிறைந்த அரசியல் தத்துவம். </p><p style='color:blue;'><font style='color:green'>நீதிபதி:</font> உன்வாதம் பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் உன் மீது குற்றம் சாட்டி கூண்டிலேற்றினால், நீ எங்கள் மீதே குற்றம் சுமத்தக்கூடாது. எங்கள் பிட்டை எடுத்து எங்களுக்கே போடுவது டகால்டி வேலை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ உன்னை தமிழினத்தலைவர் என்று நீயே கூறிக்கொள்றாய் என்பது உண்மையா?</p><p style='color:black;'><font style='color:green'>வருணாநிதி:</font> என்னை தமிழினத்தலைவர் என்பது உங்களுக்கே வேடிக்கையாய் தெரியவில்லை!!?!</p><p><b><i>வழக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதிவரை ஒத்தி வைக்கப் படுகிறது.</i></b></p></div>Unknownnoreply@blogger.com29tag:blogger.com,1999:blog-817601643605345.post-10535815264855932252009-03-05T22:58:00.004-05:002009-03-05T23:38:35.128-05:00ஜெ - சசி, ஓரங்க நாடகம்<div style='font-size:12px;text-align:justify'><br /><i><b>ஈழ(இலங்கை)த் தமிழருக்காக வரும் பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான உரையை முந்தைய நாள் இரவு வரை தயாரிக்காமல் இருந்தால் எவ்வாறு தவித்துப் போவார் என்று யோசித்து பார்த்ததில்...</b></i><br /><br /><p style='color:blue;'>சசி: யக்கா! என்னா இது, விளையாட்டா?</p><p>ஜெ: என்னடி சொல்ற?</p><br><p style='color:blue;'>சசி: உண்ணாவிரதம் -ன்னா என்னன்னு தெரியுமா? நீபாட்டுக்கு அறிக்கை உட்டிருக்க!</p><br><p>ஜெ: ஓ! அதுவா? உன்னாவிரதம்னா பொதுவிடத்துல போய் சாப்பிடாம ஒக்காந்திருக்கனுண்டி, அதுதான் உண்ணாவிரதம்!</p><br><p style='color:blue;'>சசி: செங்கோட்டையன் வேறமாதிரி சொல்ராருக்கா?</p><br><p>ஜெ: வெளங்காத வெண்ணை என்னா சொல்லுது?</p><br><p style='color:blue;'>சசி: பொதுவிடத்துல மட்டுமில்ல, மறைவாக்கூட சாப்பிடக் கூடாதாம்!</p><br><p>ஜெ: அதுக்கென்ன இப்ப, ஒருவேள சாப்பிடாம இருக்க மாட்டியா?</p><br><p style='color:blue;'>சசி: நான் இருப்பேன், நீங்க இருப்பீங்களா?</p><br><p>ஜெ: அதுக்கென்ன பண்றது, இருந்துதான் ஆகணும், சும்மா வருவாளா சுகுமாரி?</p><br><p style='color:blue;'>சசி: யாரு சுகுமாரி? அவ எதுக்கு இங்க வரணும்? அதுவும் சும்மா!, அதுதான் நான் இருக்கேனே! அவ வேற எதுக்கு?</p><br><p>ஜெ: இவ ஒருத்தி, கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி! நானே ஒரு பெரிய கவலையில இருக்கேன்! சும்மா நொய் நொய் -னு!</p><br><p style='color:blue;'>சசி: என்னக்கா கவலை? அதான் பட்டினி கிடக்கரத பத்தியே நீங்க கவலை படல! சோத்துக் கவலையைவிட பெரிய கவலை என்ன?</p><br><p>ஜெ: காலையில உண்ணாவிரத மேடையில என்ன பேசறதுன்னு தெரியலையே? அறிக்கை எழுதித் தர பசங்கள வேற மத்தியானமே துரத்தி உட்டாச்சி, இப்ப என்ன பண்றது?</p><br><p style='color:blue;'>சசி: விடுக்கா, நாமே ஏதாவது யோசிப்போம்.</p><br><p>ஜெ: என்ன நக்கலா?..., அதெல்லாம் வேலைக்காவது, எவனுக்காவது ஃபோன் பண்ணு! எவன் எடுத்தாலும் நாலு வரி சொல்லச் சொல்லி ஒரு பேப்பர்ல எழுதிக்கோ!</p><br><p style='color:blue;'>சசி: சரிக்கா!... </p><br><p><i><b>(யாருக்கோ ஃ போன் பண்ணுகிறார்)</b></i></p><br><p style='color:blue;'>சசி: யக்கா... காழியூர் நாராயணன் லைன்ல இருக்கார்... பேசுறியா?</p><br><p>ஜெ: நடு ராத்திரியில தூங்காம என்னா பண்ணுது அந்த இம்சை... சரி நீயே பேசு, அவன் சொல்றத எழுதிக்கோ!</p><br><p style='color:red;'><br />எதிர் முனை: நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில்...</p><br><p style='color:blue;'>சசி: யோவ்... உண்ணாவிரத மேடையில பேசறத்துக்கு ஏதாவது சொல்லுய்யான்னா, பல்லு வெளக்க நல்லநேரம் பாக்க சொன்ன மாதிரி நீ பாட்டுக்கு அடிச்சு உடற...</p><br><p style='color:red;'>எதிர்முனை: ஒ! அப்படியா? நீங்க சொல்லவே இல்லையே, சரி... எதுக்கு உண்ணாவிரதம்?, எத பத்தி பேசணும்?</p><br><p style='color:blue;'>சசி: ஒரு நிமிஷம் இரு!..., யக்கா எதுக்கு உண்ணாவிரதம் -னு கேட்கறார்?</p><br><p>ஜெ: கிழிஞ்சுது... அந்தாள ஃபோனை வச்சிட்டு போய் தூங்கச் சொல்லுடி... இருக்குற இம்சையில இவனுங்க வேற!,</p><br><p style='color:blue;'>சசி: யக்கா, யாரோ மோகன் கந்தசாமியாம், பிளாக் எல்லாம் எழுதறாராம், ஏதாவது உதவி வேணுமான்னு கேட்கறார்.</p><br><p>ஜெ: சரி, ஸ்பீக்கர் -ல போடு<p style='color:red;'>ஸ்பீக்கர்: என்னமா நல்லாருக்கீங்களா? சாப்டிங்களா? உடம்ப பாத்துக்குங்க! ஆப்பரேசன் பண்ண உடம்பு, ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, எந்த உதவி வேனுன்னானும் ஃபோன் பண்ணுங்க, ஃபோன் பண்ண முடியலன்னா நம்ப நர்ஸ் சசி கிட்ட சொல்லுங்க, அவங்க எனக்கு போன் பண்ணி சொல்வாங்க, சரியா?... </p><br><p style='color:blue;'>சசி: யோவ்... என்னய்யா பேசுற நீ? நீ யாருகிட்ட பேசற தெரியுமா?</p><br><p style='color:red;'>ஸ்பீக்கர்: தெரியுமே! எங்கம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, நீங்க நர்ஸ் சசி தானே?</p><br><p>ஜெ: டேய்! ஏண்டா இம்சை பண்றீங்க, ஃபோன வைடா!</p><br><p style='color:red;'>ஸ்பீக்கர்: கவலைபடாதிங்கம்மா நான் இருக்கேன், நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன், சசி ஒழுங்கா பாத்துக்கலன்னா சொல்லுங்க வேற நர்ஸ அப்பாயிண்ட் பண்ணிடலாம், எனக்கு நீங்கதான் முக்கியம், அப்பறம்...</p><br><p><b><i>(சசி ஓடிவந்து ஸ்பீக்கரை கட் பண்ணுகிறார்)</i></b></p><br><p>ஜெ: யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...</p><br><p style='color:blue;'>சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?</p><br><p>ஜெ: வேணான்னா விடவா போற, சொல்லு!</p><br><p style='color:blue;'>சசி: பேசாம அறிவாலயத்துக்கே ஃபோன் பண்ணிடுவோமா?</p><br><p>ஜெ: சரி போடு, ஆனா பேசறது யாருன்னு சொல்லாத!</p><br><p style='color:blue;'>சசி: சரிக்கா...</p><br><p><b><i>(ஃபோன் செய்கிறார்)</i></b></p><br><p style='color:blue;'>சசி: ஹலோ, அறிவாலயமா?</p><br><p style='color:red;'>எதிர்முனை: ஆமா, நீங்க யாரு? என்ன விஷயம்?</p><br><p style='color:blue;'>சசி: நாங்க அன்டார்ட்டிகா தமிழ்ச் சங்கத்தில் இருந்து பேசறோம், தலைவருக்கு பாராட்டு விழா நடத்தனும், டேட் கிடைக்குமா? </p><br><p style='color:red;'>எதிர்முனை: நிச்சயமா கிடைக்கும், எங்க விழா நடத்தப் போறீங்க?</p><br><p style='color:blue;'>சசி: ஆர்ட்டிக் பெருங்கடல் நடுவுல மேடை போட்டுறலாம்...</p><br><p style='color:red;'>எதிர்முனை: என்ன நக்கலா?... நடுக்கடல்ல வச்சா எப்படிங்க வரமுடியும்? கடற்கரையில வைங்க... கட்டவுட், சீரியல் லைட்டெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?</p><br><p style='color:blue;'>சசி: அது இருக்கட்டுங்க, விழா மலர்ல போடறத்துக்கு தலைவர் உரை வேணும், அதை வாங்கி கொடுங்க, முதல்ல அச்சடிச்சிடறோம், தலைவர் கையால வெளியிட்டிடலாம்...</p><br><p style='color:red;'>எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?</p><br><p style='color:blue;'>சசி: டெம்ப்ளேட்டா?</p><br><p style='color:red;'>எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...</p><br><p style='color:blue;'>சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...</p><br><p style='color:red;'>எதிர்முனை: சொல்றேன் எழுதிக்குங்க...</p><br><p style='color:blue;'>"ஈழத்தில் தினம் தினம் செத்து மடியும் எம்குல கொழுந்துகளை காக்க என் இன்னுயிரையும் தருவேன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம்; கங்கை கொண்டான், கடாரம் வென்றான்...</p><br><p style='color:red;'>சசி: (ரிசீவரில் கைவைத்து பொத்திய படி) யக்கா... மேட்டர் கெடைச்சிடுச்சி...நிம்மதியா போய் தூங்கு... நான் முழுசா எழுதி வைக்கிறேன், காலையில மனப்பாடம் பண்ணிக்கலாம்...</p><br><p><b><i>(தொடர்ந்து பேசச்சொல்லி சசிக்கு சைகை காட்டிவிட்டு பூனைபோல(?) நடந்து படுக்கைக்கு செல்கிறார் ஜெ)</i></b></p></div>Unknownnoreply@blogger.com45tag:blogger.com,1999:blog-817601643605345.post-62925792222467090622009-03-05T00:10:00.004-05:002009-03-05T00:23:09.423-05:00செந்தழல் ரவி: "திமுக ஒரு கீஞ்ச டவுசர்"<div style='text-align:justify;text-justify:newspaper'><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravi.png' style='float:left;margin-right:10px;'/><p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>வ</font>லையுலக ஜாம்பவானும் ஜனதா கட்சி உறுப்பினருமான திரு. செந்தழல் ரவி அவர்கள் திமுக -வை ஒரு கிழிந்த கீழாடை என்று விமர்சனம் செய்கிறார். அவர் நமது வலைப்பூவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு திமுக -வை சாடுகிறார். மேலும் அவர் கூறுகையில், "அந்த கீஞ்ச டவுசரை அணிந்திருப்பதும் அம்மனக்கட்டையாய் அலைவதும் ஒன்றுதான் என்கிறார்". அவரது பேட்டியிலிருந்து...</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>மு</font>தலிலேயே அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுவிடுகிறேன். போலி டோண்டுவுடன் சேர்ந்து நீங்களும் பதிவெழுதினீர்களா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>நீ</font>ண்ட காலம் கழித்து மீண்டும் போலி தொடர்பான கேள்வியை சந்திக்கிறேன். பெரும்பாலான புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்(டோண்டுவை தெரியும்). போலி டோண்டு சம்பந்தமான விடயங்களை போலி டோண்டுவே மறந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று அனைவரும் நம்பியிருந்த காலத்தில் ஒரு பதிவை எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். ரஷ்யர்களும் பார்ப்பனர்களே என்ற ஹிஸ்டரி பதிவு அது வோல்காவிலிருந்து கங்கைவரையின் பாதிப்பு. அது விடாது கருப்பு தளத்தில் வெளியானது. <br />ஆனால் பின்னாளில் இந்த பிரச்சினை தீப்பற்றி எழுந்தபோது, அந்த ஒரே பதிவுக்காக என்னையும் அந்த பதிவின் ஆசிரியர் என்ற அளவில் மதிப்பளிக்கப்பட்டது (!!) அது மட்டுமா, போலி சார் செய்த பல பணிகளில் (!!) என்னையும் ஒரு கூட்டாளியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது சில பலரால் நம்பவும் பட்டது. ஆனால் என்னிடம் யாரும் இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை என்பது உண்மை. நீங்கள் கேட்டதால் சொல்லிவிட்டேன். அதே சமயம் செத்து சுண்ணாம்பாய் போன இந்த விடயங்களில் உண்மையை (?) மறைத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>சி</font>ங்கப்பூருக்கும் பெங்களூருக்கும் பனிப்போர் இருப்பது பற்றி தெரியாதவர்களுக்காக அவ்வப்போது காண்டுப் பதிவுகள் எழுதி தெரியப்படுத்துகிறீர்கள். இந்த சேவை இனியும் தொடருமா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>தொ</font>டர வேண்டாம் என்று தான் இப்போதைக்கு நினைக்கிறேன். தொப்பையும் தொந்தியுமாக அசிங்கமாக இருக்கும் ஒரு வயசானவரிடம் போய் எதுக்கு வேண்டாத வம்பு. ஹி ஹி...(விழுந்து விழுந்து சிரிக்கிறார்). மொபைலை கழுத்தில் மாட்டுவதாக நான் ஓட்டியதில் இருந்து மொபைலை பாக்கெட்டில் வைக்கிறார் போல. அந்த மொபைல் தொலையாமல் இருக்க 1001 வயசு கொடைக்கானல் குஜிலிசாமியை வேண்டுகிறேன். <br /> <br />இந்த பனிப்போருக்கு அடிப்படை காரணம் அடிப்படை நேர்மையின்மை தான் என்றாலும் இவரால் மனக்காயத்துக்கு உள்ளானதுதான் என்னுடைய கோபங்களுக்கு காரணம். 'காலம்' அதை மாற்றும் என்று நினைக்கிறேன்.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>போ</font>லிடோண்டு பிரச்சினைதான் முடிந்துவிட்டதே! நீங்கள் ஏன் இன்னும் பார்ப்பன அடியை வருடிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த காலத்தில் பார்ப்பனீய அடிவருடிகள் பார்ப்பனரை 'சுவாமி' என்று அழைப்பார்கள். இந்த காலத்தில் அவர்களை 'ஸார்' என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சுரணையே கிடையாதா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ம</font>றுபடியுமா?. <br /><br />பார்ப்பணீயம் என்பது போலிடோண்டுவில் ஆரம்பித்து, போலிடோண்டுவில் முடிவதில்லையே. இன்றைக்கும் இரட்டைக்குவளை முறைகளும், ஊருக்கு வெளியே சேரிகளும் இருந்துகொண்டேதானே இருக்கிறது? சாதியம் மற்றும் தன்னுடைய பிறவியால் பெருமை அடைவது பலரிடம் இன்றும் இருந்துகொண்டுதானே இருக்கிறது ? இணையத்தை மட்டும் சொல்லவில்லை, பொது தளத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். எப்படி கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு தெரியாமலேயே நம்முள் பெற்றோர்களால் புகுத்தப்படுகிறதோ, அதே போல இந்த உயர்சாதீயமும் புகுத்தப்படுகிறதே? பார்ப்பணீயம் என்பதை பல தளங்களில் விளக்கியிருக்கிறார்கள், நானும் முயற்சி செய்திருக்கிறேன். பார்ப்பணீய சக்திகளை அடியோடு வெறுத்து ஒதுக்கவே நான் விரும்புகிறேன். நான் நினைப்பது சரி என்றால் நீங்கள் யாரை குறித்து கேட்கிறீர்கள் என்று விளங்குகிறது. அவர்' போன்றவர்களை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் காமெடி பீஸ் ஆக எடுத்துக்கொள்வதே பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பதற்கு சமம் ஆகும்.<img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>சு</font>ரணை பற்றிய கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, எஸ்கேப்பாகாமல் பதில் சொல்லுங்கள்.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>அ</font>ய்யோ தாங்கலைடா சாமீ....(சுவற்றில் முட்டிக் கொள்கிறார்). சுரணை இல்லாதவர்கள் என்று யாரை சொல்கிறீர்கள் ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களையா ? அல்லது அவர்களை அடிவருடுபவர்களையா ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களுகு சுரணை என்பது சிறிதும் இருக்காது என்பது ஊர் அறிந்த (??) ரகசியம். தீட்டு என்பார்கள். தொட்டுவிட்டால் இரண்டு முறை குளிப்பார்கள். ஆனால் கை நீட்டி காசு வாங்க வேண்டும் என்றால் தீட்டு எங்கோ பறந்துவிடும். "நாய் வித்த காசு குலைக்கவாடா போவுது அம்பீ" என்றும் "மீன் வித்த காசு வீச்சமா அடிக்கப்போவுது" என்றும் பல பழமொழிகளை உருவாக்கி பூசி மெழுகுவார்கள். வீட்டிலே குளிச்சு பூஜை முடிச்சுட்டாத்தான் சாப்பிடுவார்கள், ஆனால் ட்ரெயினில் பல்லு கூட விளக்காமல் காபியை ஷாப்பிடுவார்கள்.<br /> <br />ஆக சமயத்துக்கு தகுந்த மாதிரி, ஆபீஸ்ல ப்ளக்ஸி டைமிங் என்று ஒன்று உண்டு அல்லவா, அது மாதிரி ப்ளக்ஸி ஆச்சாரம் கடைபிடிப்பார்கள். எண்ட் ஆப் த டே, பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு நோ சுரணைஸ். <br /> <br />அதே சமயம் இந்த பார்ப்பண அம்பிகள், அம்மாஞ்சிகளாக இருப்பதலேயே, அய்யோ அப்பா, சரக்கா, நானா, அய்யகோ, பொண்ணுங்க எல்லாம் சிகரெட்டு ஊதறாளுங்க தெரியுமா? நான் ரொம்ப நல்லவன் என்று எல்லாம் நவீன பெண்ணடிமைத்தனத்தையும், கட்டுப்பெட்டித்தனத்தையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பொது தளத்தில் வைப்பார்கள். இந்த விதத்தில் பார்த்தால் வரவணையானிடம் கடன் வாங்கி கிங்ஸ் புகைத்த டோண்டு சார் ரொம்ப நல்லவர் </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>இ</font>ப்போதெல்லாம் திமுக -காரன் என்று வெளியே சொன்னால் கேவலமாக பார்க்கிறார்களாம். இந்நிலையில் நீங்கள் ஜனதா காட்சியில் இருந்து திமுக -வுக்கு தாவப் போகிறீர்கள் என்ற செய்திகள் வருகின்றன. அதை நீங்கள் மறு பரிசீலனை செய்யக் கூடாதா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>தி</font>ருத்தம்... நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சார்ந்தவன் என்று அனைவருக்கும் தெரிந்ததே. சூ.சாமி மற்றும் அவருடைய கட்சியின் ஓரே பெண் உறுப்பினரான சந்திரலேகா நடத்தும் ஜனதா கட்சியில் என்னை இணைத்து இந்த கேள்வியை எழுப்பியதில் இருந்து எப்படிப்பட்ட நுண் அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. அதே சமயம், லக்கிலூக், வரவணையான் போன்ற திராவிட முன்னேற்றக்கழக தோழர்களின் கடுமையான பரப்புரையால் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டை பெறலாம் என்ற முன் முயற்சியில் ஈடுபட முனைந்தபோது, ஈழ பிரச்சினையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலையால் அதனை தள்ளிப்போட்டிருக்கிறேன்.<br /><br />மேலும் இன்றைய தேதியில் திமுக ஒரு கீஞ்சி போன டவுசர், அதை அணிவதும் அம்மனகட்டையாய் அலைவதும் ஒன்றுதான்"</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>நீ</font>ங்க ஜனதா கட்சியில் இல்லையென்றால் அக்கட்சியின்<u> <a href='http://web.njit.edu/~kd28/blog/ravi/janatha.html' target='_blank'>அதிகாரப் பூர்வ வலைதளத்தில்</a></u> உங்கள் பெயர் <u> <a href='http://web.njit.edu/~kd28/blog/ravi/members.html' target='_blank'>உறுப்பினராக</a></u> சேர்க்கப் பட்டுள்ளதே எப்படி?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>வெ</font>ளக்கெண்ணை மாதிரி கேள்விகள் கேட்காமல் உருப்படியாய் வேறு ஏதாவது கேட்கவும். மொக்கை போடுவதில் எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை. சீரியசாய் எதுவும் கேட்க தோன்றவில்லை என்றால் தி ஹிந்து பத்திரிக்கையை ஒரு முறை படிக்கவும். தானாய் சீரியசாகி விடுவீர்கள். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>தி</font>முக -வுக்கு கூலிவாங்காமல் மாரடிக்கும் <u><a href='http://abiappa.blogspot.com/2009/03/2.html' target='_blank'>'உடன் பருப்பு'</a></u>, <u><a href='http://udanpirappu.blogspot.com/2009/01/blog-post_26.html' target='_blank'>'குத்து தெலுங்கினி'</a></u> மற்றும் <u><a href='http://muthuvintamil.blogspot.com/2009/01/blog-post_28.html' target='_blank'>'பொடி டப்பா'</a></u> போன்றோரை கேவலமாக திட்டி ஓரிரு வார்த்தைகள் கூறமுடியுமா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>தில் ஒரு கொடுமை என்னவென்றால், இப்போது தி.மு.க ஆட்சி மட்டும் இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி (மம்மி ஆட்சி) இருந்தது என்றால், திருமா, சீமான், நெடுமாறன், கொளத்தூர் மணி என்று அனைவரையும், ஏதாவது த்ராபை சட்டத்தை வைத்து உள்ளே அனுப்பியிருந்திருப்பார்கள். திமுக இருப்பதால் அட்லீஸ் திமுக ஒழிக என்றாவது கோஷம் இடமுடிகிறது. ஆனால் திமுகவும் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலை நாட்டுவதிலேயே குறியாக நிற்கிறது. கைகளில் அதிகாரம் இல்லை என்றால் ஆப்பு என்பது அவர்களுக்கு லேட்டாக புரிந்துவிட்டது என்றும் கொள்ளலாம். ஏற்கனவே ஈழ பிரச்சினைக்காக ஆட்சியை இழந்து ஒரு கந்தாயமும் பெயரவில்லை என்பதும் அவர்களுக்கு நினைவில் வந்து தொலைத்திருந்திருக்கலாம். இல்லையென்றால் இன்னோரு "அய்யோ கொல்றாங்களே" சீனரி ஆகியிருக்கும். முக்காவாசி ஈழ ஆதரவு உண்ணாவிரதங்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தான் நடந்தேறியிருக்கும்.<br /> <br />மேலும் குடும்பம் பெரிதாகிவிட்டது. அனைவரும் இணைந்துவிட்டதால் இதயம் இனித்து கண்களும் பனித்து, எல்லாருக்கும் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்து சமாதானப்படுத்த முடியுமா என்ன? அட்லீஸ்ட் ஒரு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியாவது தரவேண்டாமா?<br /> <br />இந்த கேள்வியில் பக்கி லூக் பெயர் இல்லாதது ஆச்சர்யம் தான். ஆனால் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கும் அவரே எரிச்சலடைந்து ஒரு நடுநிலை பதிவு போட்டுவிட்டது தான் காரணம் என்றால், வைரம் இங்கிலிஷினி, பபி பொப்பாவை கூட ஒரு நடுநிலை பதிவு போடுமாறு என்னால் கேட்டுக்கொள்ளமுடியும். கிடன் திருப்புவிடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>த</font>மிழகத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரே நபர் ஜெயலலிதா தான். அதன் பிறகு உங்கள் கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு தெரியும் என்ற பேச்சு அடிபடுகிறது. உங்களுக்கு தெரியுமா? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>அ</font>ய்யகோ... இந்த கொடுமையை கேட்க நாதியில்லையா? இந்த கேள்வி உண்மையில்லை என்பது ஊருக்கே தெரியும். அவரது கட்சியில் சந்திரிக்காவை தவிர யாரும் இல்லை என்பது சோ ராமசாமிக்கே தெரியும். <br />அப்படி இருக்கையில் அவர் கட்சியில் (?) என்னை இணைத்து மீண்டும் கேள்வியா? <br />ஜெயலலிதா சர்ச் பார்க்கு பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட்டீர்கள். சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே தெரியும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஊ.ஓ.து.பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய துவக்க) படிப்பை ஆரம்பித்த நான் ஏழாவது படிக்கும்போது ஆங்கில பாடத்தில் பள்ளியிலேயே முதல் மாணவனாக (நூத்துக்கு இருபத்து எட்டு) வாங்கியவன்.<br /> <br />பா(ல).பா(ரதி).பிளாக் ஷீப் அவி எனி உல். <br />எஸ்ஸார் எஸ்ஸார் திரீ பேக்ஸ் புல். <br />குவாட்டர் பார் வால் பையன். <br />குவாட்டர் பார் வரவணையான். <br />குவாட்டர் பார் ஜ்யோராம் சுந்தர். <br />ஆல் அதர் சரக்கு ஒன்லி பார் மீ...<br />எப்புடி ரைஸு...சாரி ரைம்ஸு...</p> <img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>டெ</font>புடேஷனுக்காக ஐரோப்பா பயணத்தில் இருக்கிறீர்கள். இந்திய சிலிகான் வேலியில் ஓணான் அடிப்பதற்கும் ஐரோப்பிய வேலியில் ஓணான் அடிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>ந்த கேள்விக்கு சீரியசாகவே பதில் சொல்ல முடியும். அலுவலகத்தில் எதிர்ப்பட்டால் புன்னகை பூக்கிறார்கள்...வணக்கம் செலுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஏற்படும் இடையூறுகளை தங்கள் பிரச்சினை போல விசாரித்து தீர்வு சொல்கிறார்கள். உதவும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளிகள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாலு மணி நேரம் வேலை பார்த்தாலும், மெயில், பிலாகு போன்றவற்றில் நேரத்தை செலவிடாமல் முழுமையாக பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். <br /> <br />ஓனான் என்றவுடன் சின்ன வயதில் ஓனான் அடித்தது நியாபகம் வந்து தொலைகிறது. ஓனானை அடித்து புதைத்து வைத்து ரெண்டு நாள் கழித்து எடுத்தால் அந்த குழியில் ஒரு ரூபாய் இருக்கும் என்று என்னுடைய சகோதரன் சொன்னதால் நூற்றுக்கணக்கான ஓனான்களை குழிக்குள் அனுப்பினேன். கடைசி வரை பத்து பைசா கூட கிடைக்கவில்லை..ஓனான் ஸ்கெலட்டன்கள் தான் கிடைத்தது. <br /> </p> <img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>அ</font>ட்டு பிகரை டாவடிப்போர் சங்கத்துக்கும் ராம் சேனாவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த நார்வே தூதுக் குழு முயற்சி செய்துவருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில், அக்குழுவை சங்கத்தின் சார்பில் ரகசியமாக சந்திப்பதற்காகத்தான் இப்போது நார்வே சென்றுள்ளீர்கள் என்று துக்ளக் செய்தி வெளியிட்டுள்ளது. இதை மறுக்கிறீர்களா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/ravi/ravilogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>நானூத்தைம்பது சந்தா கட்டிய வாசகர்களுக்காக வெளிவரும் துக்ளக் இதழோடு என்னை சம்பந்தப்படுத்தி, அந்த கந்தாயத்தில் என்னைப்பற்றிய செய்தி என்று சிரீலங்கா அரசாங்கம் போன்றதொரு போலி பரப்புரையை செய்வதை கண்டதும் வாழை மரத்தில் தூக்கிலிட்டுக்கொள்ளலாம் போலுள்ளது. <br /> <br />அட்டு பிகர் கூட கிடைக்காதவன் தான் இப்போது ராம் சேனாவில் இருக்கிறான் என்பது உண்மை என்றாலும், அந்த அட்டு இந்துத்துவ கம்பேனிக்கு சமாதானம் செய்துவைப்பதைவிட மாட்டு மூத்திர கூல் ட்ரிங்சை குடித்து தொலையலாம்</p><br /><br /><p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>செ</font>ந்தழல் ரவி போன்றவர்களிடம் பேட்டி காண்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் திடீரென கடுப்பாகி ஏக வசனத்தில் திட்டிவிடுவார்கள். அது போன்ற சூழல் இந்த பேட்டியிலும் ஏற்பட்டது. எனக்கு தாவு தீர்ந்து போய் பதிலுக்கு நானும் திட்ட, ஒரே கலவரமாகிப் போனது. அந்த சம்பவத்தை வரி மாறாமல் அடுத்து பகுதியில் வெளியிடுகிறேன்.</p></div><br /><br /><center>[தொடரும்]</center>Unknownnoreply@blogger.com51tag:blogger.com,1999:blog-817601643605345.post-50915094028309733612009-03-02T23:27:00.009-05:002009-03-03T00:38:09.256-05:00ஈலட்டமிளர் பிளாட்ஃபார்ம் -க்கு ஸ்கோப் என்ன?<div style='font-size:14px;text-align:justify'><br /><i><b>மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)</b></i><br /><br /><br /><b>காட்சி 1:</b><br />அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.<br /><br /><font style='color:blue'><br />அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!</font><br /><br /><b>காட்சி 2:</b><br />புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.<br /><br /><font style='color:blue'>மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?</font><br /><br /><b>காட்சி 3:</b><br />தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!<br /><br /><font style='color:blue'>அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்! </font><br /><br />மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?<br /><br /><font style='color:blue'><br />அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!</font><br /><br />திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?<br /><br /><font style='color:blue'>டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!</font><br /><br /><b>காட்சி 4:</b><br />வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...<br /><br /><font style='color:blue'>சார், மே ஐ கமின்?</font><br /><br />வாங்க தோழர், என்ன விஷயம்?<br /><br /><font style='color:blue'>ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?</font><br /><br />ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.<br /><br /><font style='color:blue'>நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?</font><br /><br />கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!<br /><br /><font style='color:blue'>அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!</font></div>Unknownnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-817601643605345.post-47852359237052270522009-03-02T00:02:00.007-05:002009-03-02T01:08:12.658-05:00முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி<div style='text-align:justify;text-justify:newspaper'><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/saththiri.jpg' style='float:left;margin-right:10px;'/><p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>வி</font>டுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.<p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>ப</font>ணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வி</font>டுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>நா</font>ன் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன். <br /> </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>போ</font>ராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>போ</font>ராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வி</font>டுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>வி</font>டுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வி</font>டுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>வி</font>டுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ச</font>ர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ச</font>ர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>அ</font>டேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>அ</font>டேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>த</font>மிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>த</font>மிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>த</font>மிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ஊ</font>றிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான். </p><br><br><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ச</font>கோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>எ</font>டுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.<br /><u>(<a href='http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html'>சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.</a></u>)</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ரா</font>ஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ரா</font>ஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ஈ</font>ழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>உ</font>ண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>த</font>னிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>த</font>மிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது. </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>த</font>னிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>1</font>905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>மு</font>ஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்! </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>மு</font>ஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>தா</font>ழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>8</font>0களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ம</font>க்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>அ</font>தாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வ</font>லைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>த</font>மிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>நீ</font>ங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>நா</font>ன் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>உ</font>ங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/saththiri/sathirilogo.jpg' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>நா</font>ன் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன். </p></div>Unknownnoreply@blogger.com60tag:blogger.com,1999:blog-817601643605345.post-25102362648511074052009-02-26T22:42:00.008-05:002009-02-27T09:05:39.991-05:00தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 3<div style='text-align:justify;text-justify:newspaper'><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumavalavan.jpg' style='float:left;margin-right:10px;'/><p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>வி</font>டுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களது பேட்டியின் மூன்றாம் பகுதியுடன் தொடர் நிறைவு பெறுகிறது. வேண்டுகோளின் பேரில் பேட்டியின் ஒலிவடிவம் மின்மடலாக அனுப்பிவைக்கப்படும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வி</font> டுதலைப் புலிகளின் தற்போதைய பின்னடைவு எத்தகையது? இதில் இந்திய, இலங்கை அரசுகள் நிம்மதி களிப்பை அடைய உண்மையில் ஏதேனும் இருக்கிறதா? புலிகள் எதற்காகவாவது காத்திருக்கிறார்களா? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>பா</font>கிஸ்தான், இந்திய உட்பட பல்வேறு நாட்டு படையினரை எதிர்த்து புலிகள் தனியாக போரிட்டு வருகிறார்கள். படைவீரர்களின் எண்ணிக்கை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதுகிறோம். இது செட் பேக் அல்ல. ஒரு போர்த்தந்திரம். இதை இந்திய அரசும், சிங்கள அரசும் தங்களது வெற்றியாகக் கருதுகின்றன. நிலப்பகுதிகள் சிங்களபடையினர் கைகளுக்கு மாறுவது உண்டு. பிறகு மீண்டும் புலிகள் கைப்பற்றுவார்கள். தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மீது விடுதலை சிறுத்தைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுப்பார்கள்.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><br /><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>மு</font>ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் அல்ல என்று நிரூபிக்க விடுதலை புலிகளும் முயற்சிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை அறிந்து கொள்ள காங்கிரசும் விரும்பவில்லை. இவற்றிற்கு என்ன காரணம்?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>து ஒரு முக்கியமான கேள்வி. படுகொலை நடந்த சமயத்தில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அம்மறுப்பு அறிக்கையோடு அவ்விசயம் நின்றுவிட்டது. பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரன் அதை ஒரு துன்பியலான சம்பவம் என்பதோடு சுருக்கிவிட்டார். தங்கள் நிலையை விளக்க ஏன் அவர்கள் முன்வரவில்லை <div style='width:250px;height:533px;font-size:15pt;text-align:center;font-weight:bold;float:right;margin:5px'>ஈழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.</div>என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவை பகைத்துக் கொள்ளவே கூடாது என்று நினைப்பவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ராஜீவ் காந்தி கொலையை செய்திருப்பார்களா என்பதுதான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி. இதை வெளிப்படையாக விளக்கி இருக்கவேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் கருத்துமாகும்.</p><p style='text-indent:30px;'>உண்மையான குற்றவாளிகளை அறிந்துகொள்ள காங்கிரஸ் ஏன் விரும்பவில்லை என்ற கேள்வியும் எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு. நரசிம்மராவ் பிரதமராவதற்காக அவரது நண்பர் சந்திராசாமி அமெரிக்க உளவு நிறுவனத்துடன் சேர்ந்து சதி செய்து இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. சுப்பிரமணியன் சாமி எழுதிய புத்தகத்தில் படுகொலையில் சோனியா காந்தி அம்மையாருக்கே தொடர்பிருக்கும் என்று எழுதியிருக்கிறார். அது அச்சில் வந்திருக்கிறது.</p><p style='text-indent:30px;'>காங்கிரஸ்காரனே ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்தான் என்பது வெளிப்பட்டுப் போனால் அது காங்கிரசுக்கே பேரிழப்பாகும். இதுதான் உண்மைநிலையை அறிய காங்கிரஸ் விரும்பாததன் அரசியல் காரணம் ஆகும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ஒ</font>டுக்கப்பட்டோர் நலன், ஈழம் தொடர்பில் திமுக அனுதாபிகளை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்துவிட்டது. இனி திராவிட அரசியலில் ஒரு உறுதிப்பாட்டை கைகொள்வதன் மூலம் திமுக -விற்கு ஒரு முழுமையான மாற்று நீங்கள் என்பது அறுதியாகுமல்லவா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ஈ</font>ழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆனால் அதற்காக திமுக -விற்கு மாற்று விடுதலை சிறுத்தைகள் தான் என்று சொல்லிக்கொள்ளவோ காட்டிக்கொள்ளவோ நாங்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் உண்மையான, நேர்மையான ஈடுபாடு போன்றவற்றால் உங்களைப்போன்ற தமிழ்சொந்தங்கள் ஒரு அரசியல் அங்கீராம் அளித்தாலே அதை ஒரு மகத்தான வெற்றியாக நாங்கள் கருதி மகிழ்ச்சியடைவோம். எதிர்காலத்தில் நீங்கள் சொல்லுகிற இடத்தை விடுதலை சிறுத்தைகள் அடையும், தமிழகத்தில் ஒரு முன்னிலை அரசியல் சக்தியாக எழுச்சி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>அ</font>னைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும்போதே ஒடுக்கப்பட்டவர்களின் நலனை காத்து நிற்க முடியுமா? பகுஜன் சமாஜ் கட்சி -யை எவ்வாறு எதிர் கொள்ளுவீர்கள்?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>வி</font>டுதலை சிறுத்தைகள் தற்போது அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் மொழியை காப்பதில், தமிழ் இனத்தை காப்பதில், தமிழ் மண்ணைக் காப்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து செயல் திட்டங்களை வகுத்து போராடி வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் முன் முயற்சியில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, நாடுதழுவிய அளவில் எழுச்சியை உருவாக்கியது. இப்போது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு தளம் விரிவடைந்துள்ளது. தலித்துகளின் நன்மதிப்பை பெற்றுள்ள எங்கள் இயக்கம் இவற்றால் மேலும் மத்திப்பை அடையும். பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை பின்னுக்கு தள்ள முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. அதை எதிர்கொள்ளுவதில் சிக்கலும் இல்லை.</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>வ</font> லையுலகில் இன்றைய தேதியில் மிக நல்ல சிந்தனைப்போக்கும், பல விவாதங்களும் நடைபெறுகின்றன. இவற்றை நீங்கள் அவதானிகின்றீர்களா? எனில், அவற்றை விடுதலை சிறுத்தைகள் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்? </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>ணைய தளங்களில் நடைபெறும் விவாதங்களை தொடர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெறவில்லையென்றாலும் அவ்வப்போது அதை அறிந்து கொண்டு வருகிறோம். இணையத்தளங்களில் இயங்கும் தோழர்களோடு கலந்து உரையாடுகிறோம். இனி வரும் காலங்களில் இணையதள ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளவும், ஈடுபாடு கொள்ளவும் விடுதலை சிறுத்தைகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதை தோழமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொடர்ந்து உங்களைப் போன்றோர் எங்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டு நேர்முகத்தை நிறைவு செய்கிறேன். அடுத்தமுறை நேரில் சந்திக்கும்போது விரிவாக பேசுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.</p><p style='text-indent:30px;font-weight:bold;'><font style='font-size:13pt'>வி</font>டுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர் தமிழ்வேந்தன் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்தார்; அவரது இறுதி அஞ்சலிக்காக கடலூர் சென்று கொண்டிருந்த வழியில் திருமா அவர்கள் நமக்காக பேட்டி அளித்துள்ளார். தற்போதைய சூழலில், தினமும் ஓரிரு மணி நேரங்களே உறங்க வாய்க்கும் நிலையில் அவர் தனது ஓய்வு நேரத்தை கணிசமாக நமக்கு அளித்ததற்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்</p></div>Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-817601643605345.post-13328851917226928062009-02-24T22:27:00.014-05:002009-02-25T17:27:00.838-05:00தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 2<div style='text-align:justify;text-justify:newspaper'><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumavalavan.jpg' style='float:left;margin-right:10px;'/><p style='text-indent:30px;font-weight:bold;font-style: italic'><font style='font-size:13pt'>தொ</font>ல். திருமாவின் பேட்டியின் இரண்டாம் பகுதி இப்பதிவில் வெளியாகின்றது. நேர்முகத்தின் ஒலிவடிவம் இறுதிப் பகுதியுடன் சேர்த்து வெளியாகும்.</p><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>தி</font>முக கூட்டணியில் இருப்பதனால், விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் வீரியம் இருக்காது என்ற ஐயப்பாட்டுக்கு விடையளிக்கையில் <b>"பிறர் விரும்புவதற்கு ஏற்றவாறெல்லாம் செயல்பட விடுதலை சிறுத்தைகள் ஒன்றும் தொங்கு சதைகள் அல்ல. தனித்து இயங்கவும், சிந்திக்கவும் விடுதலை சிறுத்தைகளுக்கு வலிமையும் உரிமையும் உண்டு" என்று கூறுகிறார் திருமா.</b> திமுகவோ அல்லது வேறெந்த கட்சியோ விடுதலை சிறுத்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது.</p><p style='text-indent:30px;color:blue;'><a href='http://mohankandasami.blogspot.com/2009/02/1.html'><u>சென்ற பதிவின்</u></a> பேட்டியின் தொடர்ச்சி...</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><br /><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>மு</font>த்துகுமாரின் மரணத்திற்குப் பிறகு ஈழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க முடியுமா? இல்லை என்றால் அவரவர் அணியில் இருந்து தேர்தலை சந்திப்பதால் ஈழப் பிரச்சினையில் என்ன திருப்பம் வந்துவிடப் போகிறது?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>மு</font>த்துக்குமாரின் மரணத்திற்குப் பிறகு தமிழீழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கக் கூடிய அணியில் அதிமுக -வை இணைக்க முடியாது என்பது அறிந்த செய்தி. பாமக, மதிமுக, இந்திய பொதுவுடைமை கட்சி, பாஜக ஆகியவை தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஐயா நெடுமாறன் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்துள்ளது மகத்தான ஒன்று. இந்த அணி <div style='width:250px;height:270px;font-size:15pt;text-align:center;font-weight:bold;float:right;margin:5px'>பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.</div> அப்படியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நியாயமானதுதான். ஆனால் எந்தளவுக்கு அது நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. தேர்தலில் வெல்வதுதான் முக்கிய இலக்கு. தனித்து நின்றால் வெற்றி பெறமுடியாது. பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும். முத்துகுமாரால் ஏற்பட்ட இந்த இணைப்பு எதிவரும் நாடாளுமன்றத்தேர்தலால் சிதைந்து போய்விடக் கூடாது என்று உங்களைப் போலவே நாங்களும் எண்ணுகிறோம். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>உ</font>ண்ணாவிரத மேடையில் நீங்கள் பேசியபோது இனி காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறினீர்கள். எனில், நீங்கள் தற்போது உள்ள அணியில் தொடர்ந்துகொண்டே எவ்வாறு தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள்?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>உ</font>ண்ணாவிரத மேடையில் இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது உண்மை.காங்கிரஸ் கட்சியை அம்பலப் படுத்துவோம், தனிமைப் படுத்துவோம் என்று சொன்னது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகத்தான். அது ஏனோ நடைபெறவில்லை. மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான். இந்நிலையில் திமுகவும் காங்கிரசும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் உங்கள் நிலை என்ன என்பதுதான் உங்கள் கேள்வி. திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தனித்தே இதுவரையில் இயங்கிவருகிறோம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும், என்னை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் திமுக வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.<p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>மா</font>நில அளவில் திமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது. தேசிய அளவில் அக்கூட்டணியில் உள்ள பாமக போலல்லாமல் பல சிறிய கட்சிகள் மாநில அளவில் கூட்டணியில் உள்ளன. காங்கிரசுடன் அவற்றிற்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பட்டியலில் விடுதலை சிறுத்தைகளும் அடங்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன். எனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எங்களுக்கு தொடர்பில்லை. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்தான் நாங்கள் இணைந்திருக்கிறோம். எதிவரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இதே கூட்டணியில் நீடிக்க நேர்ந்தால் அது எங்களுக்கு எந்த நெருக்கடியும் தராது. ஒருவேளை காங்கிரசுக்கு அஞ்சி விடுதலைசிறுத்தைகளை திமுக கைவிட்டால் தனித்தே தேர்தலை சந்திப்போமே ஒழிய ஈழத்தமிழருக்கு எதிரான அதிமுகவோடு தேர்தல் உறவை விரும்பமாட்டோம். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>மொ</font>ழிப்போர்களால் பலனடைந்த திமுக இந்திய அரசியலில் தமிழர் நலனை பெரும்பாலான சமயங்களில் காத்து வந்துள்ளது. இன்று ஈழம் தொடர்பாக அக்கட்சி வெளிப்படையாக கைவிரித்துவிட்ட நிலையில், தற்போதைய ஈழ ஆதரவை ஒன்று திரட்டி விடுதலை சிறுத்தைகளை முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக்க முடியுமா?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ஈ</font>ழப் தொடர்பாக திமுக வெளிப்படையாக கைவிரித்துவிட்டது; இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளது எங்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது. விடுதலை சிறுத்தைகள் தமிழர்களின் தனித்துவமான பிரதிநிதிகளாக நாங்கள் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் மட்டுமே போராடி ஈழத் தமிழருக்கு உறுதுணையாக இருக்கமுடியாது. தமிழீழ ஆதரவு என்பது ஒட்டுமொத்த தமிழரின் ஆதரவாக இருக்கவேண்டும். விடுதலை சிறுத்தைகளை விட மூத்த கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. அவர்களை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பங்களிக்கும். ஈழத்தமிழர்கள் ஒரு சுமூகமான அரசியல் தீர்வை காணும் வரை எல்லோருடனும் இணைந்து செயல்படுவது எமது கடமை என உணர்கிறோம். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>ச</font>மீபத்தில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினீர்கள். தனி ஈழம் தவிர்த்த எந்த தீர்வும் ஏற்க முடியாதா? தமிழீழம் வேண்டுமானால் விடுதலைப் புலிகளை ஆதரித்தாக வேண்டும். போராட்டங்கள் மூலம் சர்வதேசத்தில் ஈட்டப்படவிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவை எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மாற்றிவிட முடியும்?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>த</font>மிழீழத்தை தவிர எந்தத்தீர்வையும் ஈழச்சிக்கலில் காணமுடியாது. தனிஈழம் ஒன்றே நிரந்தரத் தீர்வு. ராணுவத்தைக் கொண்டு ஈழப்போராட்டத்தை நசுக்கி விடமுடியும் என்று சிங்கள இனவெறி அரசு நம்புகிறது. தனிஈழத்திற்கு சிங்கள அரசை எவ்வாறு உடன்பட வைக்க முடியும், பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை எப்படி பெறமுடியும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. அதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுப்படுத்தினால் தான் முடியும். ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ அல்ல. விடுதலை புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்; அதை தமிழகம், தமிழீழம் தாண்டி அனைத்துத் தமிழரும் அதை ஏற்கிறார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினால்தான் சிங்கள இனவெறி நடத்துகிற கொடூரமான அடக்குமுறையை தடுக்கமுடியும். பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வுகான்கிற அழுத்தத்தை கொடுக்கமுடியும். <div style='width:250px;height:540px;font-size:15pt;text-align:center;font-weight:bold;float:left;margin:5px'>இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்</div>எனவே நமது போராட்டம் சர்வதேசத்திலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டமாக அமைந்திடவேண்டும். அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் மீது கூட்டாக விதித்துள்ள தடையை நீக்கவைக்க முடியும். வெளிப்படையாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதன் மூலம் தான் சிங்கள அரசை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும். </p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/mylogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;text-indent:30px;'/><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>அ</font>ன்று, இந்திய அரசு போராளிகளை ஊக்குவித்ததும் தன் நலனுக்கே! இப்போது அவர்களை நசுக்குவதும் அதன் நலனுக்கே! எனில், இந்திய தேசியத்தில் தமிழக தமிழரின் நிலை என்ன?</p><img src='http://web.njit.edu/~kd28/blog/thiruma/thirumalogo.png' style='float:left;margin-right:5px;margin-bottom:0px;'/><p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>இ</font>ந்திய அரசு போராளிகளுக்கு ஆயுத பயுற்சி மட்டுமல்லாமல் ஆயுதங்களையும் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜெயவர்த்தனே அரசு இந்திய அரசுக்கு பணியவில்லை என்பதனால் இந்திய அரசு போராளிக்குழுக்களை ஆதரித்தது. இந்திய அரசின் ஆதிக்கத்தை இலங்கை வரை விரிவு படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவிட்டது, பலம் பெற்றுவிட்டார்கள் என்ற நிலையில் இலங்கை அரசு இந்திய அரசின் உதவியை நாடியது. அவ்வாறு நாடியபோது புலிகளை நசுக்குவதில் தீவிரம் காட்டத்தொடங்கியது. புலிகளை ஆதரித்தால் இலங்கைக்கு இந்தியா பகைநாடாகும். இந்தியாவின் பகைநாடுகளின் ஆதரவு இலங்கைக்குக் கிடைக்கும். பகைநாடுகள் இலங்கையில் ராணுவத்தளம் அமைக்கும். அது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு கணக்குப் போட்டு சிங்கள அரசை வலிந்து வலிந்து வலிந்து ஆதரிக்கிறது. <p style='text-indent:30px;'><font style='font-size:13pt'>ப</font>கைநாடுகளை பணிய வைக்க போராளிகளை ஆதரித்த இந்திய அரசு இன்று நேரடியாகவே களத்தில் இறங்கி தமிழர்களை அழித்தொழிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்திய தேசியத்தில் தமிழகத்தமிழரின் நிலை என்ன என்பது உங்கள் கேள்வியாக உள்ளது. மிகவும் சரியான கேள்வி. தமிழகத் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், உணர்வுகள் அவமதிக்கப் படுகின்றன. கோரிக்கைகள் புந்தள்ளப் படுகின்றன. காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழருக்கு எதிராக செயல்படுகிறது. பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் ஆந்திர அரசை கண்டிக்க முன்வரவில்லை. இவ்வாறு இந்தியாவிற்குள்ளேயே உள்ள விவகாரங்களில் இந்திய அரசு தமிழருக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர் விவகாரத்தில் முற்றிலும் எதிராக இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்.</p></div><br /><center>[தொடரும்]</center><br /><p style='text-indent:30px;color:blue;'><font style='font-size:13pt'>அ</font>டுத்த பகுதி விரைவில்...</p>Unknownnoreply@blogger.com6