Saturday, July 26, 2008

குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

·


மக்கள் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றி பெறாது என்ற அரிச்சுவடி கூட தெரியாத சில அடிப்படைவாத முட்டாள்களே! உங்களுக்கு பிரச்சினையின் மையம் எதுவென்று விளக்க ஒரு மக்கள் தலைவனும் இல்லையா? எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேல் முஸ்லீமல்லாதோர் வாழும் நாட்டில் அவர்களுக்கெதிரான வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. முதலில் உங்கள் எதிரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் உங்கள் எதிரிகள் பலசாலிகள் அல்ல. எண்ணிக்கையும் மிகக்குறைவு. ஆனால் அவர்கள் மிகக் கொடூரமான சூத்திர தாரிகள். ஒட்டுன்னியைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அடுத்தவனை ஏய்த்து, அவன் உழைப்பில் வாழும் சமூக ஒட்டுண்ணிகள் பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? இனப்பெருக்கம் மட்டும்தான் அவைக்கு தெரியும். உண்ணுவது, உறைவது, உபாதைகளையும் அரிப்புகளையும் தீர்த்துக்கொள்வது அடுத்தவர் தயவில் தான். அவ்வொட்டுன்னிகளை ஆதார உயிர்களில் இருந்து பிரித்து பார்க்கத்தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

2002 படுகொலைகளில் பாதிக்கப்பட்டது யார்? படுகொலைகளுக்கு காரணமான அந்த ரயில் எரிப்பில் இறந்தவர்கள் யார்? இரண்டுமே அந்த சமூக ஒட்டுண்ணிகள் அல்ல. ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரிகள். ஐம்பது வருட காஷ்மீர பிரச்சினையானாலும் சரி! இன்றைய இந்தியாவின் துரதிஷ்ட சூழ்நிலையானாலும் சரி! அவர்கள் தான் உங்களுக்கும் எதிரிகள். அவர்களின் வலிமை என்ன? அவர்களின் திரைமறைவு வேலைகள் என்ன? அவர்களுக்கு எதிரான வியூகம் ஏதேனும் உள்ளதா உங்களிடம்? நிச்சயமாக இல்லை.

அவர்களின் வலிமையே அரசியல் அதிகாரமும் ஏவலாட்களுடனான அவர்கள் அணுகுமுறையும்தான். அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரத்திற்கு எதிராக என்ன செய்துள்ளீர்கள் நீங்கள்? வன்னியர் சமுதாயத்தை விட எண்ணிக்கையில் அதிகமான நீங்கள் அவர்கள் போல பதினேழு எம்.எல்.ஏ. -க்கள் வைத்திருக்கிறீர்களா? அவர்களிடம் ஆறு எம்.பி. -க்களும் இரு மத்திய மந்திரிகளும் உள்ளனர். இது எப்படி சாத்தியம்? சாதியம் என்பது கேவலம் என்று கருதப்படுவதாக சொல்லக்கூடிய தமிழகத்தில்தான் வன்னியர்கள் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதுநாள் வரை அடுத்தவன் கையையே எதிர் பார்த்துவந்த பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியை இன்று நீங்களும் காண்கிறீர்கள் தானே?
தமிழ் தேசிய உணர்வு தானே தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தந்தது! 40 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல், இன்று தமிழனுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியும் தானே! ஆனால் தமிழருக்குள்ளே உயர்சாதியினரிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியை இப்போது பார்த்து வருகிறோம்.

ஆகவே, அரசியல் எழுச்சி பெறுங்கள். மத ஒற்றுமை, தேச பக்தி போன்ற சமூக விழுமியங்களை அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவ்விழுமியங்களை போதிக்கும் எந்த அரசியல்கட்சியும் தன்னளவில் பின்பற்றுவதில்லை. எனவே, உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள்.

இன்று நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்களின் அடிப்படை பிரச்சினை என்ன என்பது நாம் அறிவோம்தானே! அவர்களைப் பார்த்து மீண்டுமொரு முறை கூறுவோம். "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

சில கொண்டைகள் கேட்க்கக்கூடும், "உனக்கேன் அக்கறை, அவர்களுக்கு இல்லாத அக்கறை" என்று. சில முஸ்லீம் நண்பர்கள் கேட்க்கக்கூடும், "இந்த ஈரோட்டு வேலையெல்லாம் உங்களுக்குள்ளே வச்சிக்கோ, அதிங்க பிரசங்கி வேலை வேண்டாம்" என. அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்று தான். "என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"

81 comments:

கோவி.கண்ணன் said...
July 26, 2008 at 10:46 PM  

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், அதிகாரவர்கமே ஒழிக்கப்பட வேண்டியவை, அப்பாவி மக்கள் அல்ல.

எரிமலை வெடித்து சிதறியது போல் குமுறி இருக்கிறீர்கள்.

மோகன் கந்தசாமி said...
July 26, 2008 at 10:57 PM  

நண்பர் கோவி,
///சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், அதிகாரவர்கமே ஒழிக்கப்பட வேண்டியவை, அப்பாவி மக்கள் அல்ல.///
ஆமாம் கண்ணன். இவ்வளவுக்குப் பிறகும் சிலருக்கு புரிவதில்லை.

///எரிமலை வெடித்து சிதறியது போல் குமுறி இருக்கிறீர்கள்.///
நேர்பேச்சில் எவர் நோகும்படியும் நான் பேசுவதில்லை நண்பரே!

நன்றி கோவி.கண்ணன்.

கிரி said...
July 26, 2008 at 11:07 PM  

//சாதியம் என்பது கேவலம் என்று கருதப்படுவதாக சொல்லக்கூடிய தமிழகத்தில்தான் வன்னியர்கள் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதுநாள் வரை அடுத்தவன் கையையே எதிர் பார்த்துவந்த பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியை இன்று நீங்களும் காண்கிறீர்கள் தானே?//

இதெல்லாம் இவர்கள் கூட்டணியால் போடும் ஆட்டமே! தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்பது என் கருத்து.

//உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள். //

எல்லோரும் திருடர்கள் இதில் கம்மியாக திருடுபவரை தேட வேண்டியுள்ளது

//இன்று நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//

இருந்தும் தொடர்ந்து பாதிக்கபடுகிறோம் பாதிக்கப்போடுவோம்

//அவர்களைப் பார்த்து மீண்டுமொரு முறை கூறுவோம். "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"//

செவிடன் காதுல சங்கூதுன மாதிரி தான்.

மோகன் கந்தசாமி said...
July 26, 2008 at 11:27 PM  

கிரி,
////இதெல்லாம் இவர்கள் கூட்டணியால் போடும் ஆட்டமே! தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்பது என் கருத்து.////
முஸ்லீம் நண்பர்கள் ஜனநாயகத்தில் எது சாத்தியமோ அதன் படி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் புத்திசாலித்தனம். தப்பிப்பிழைத்து வாழனுமா அல்லது அரசியலில் நல்ல பேர் வாங்குறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு ரயோட் -ல் மாட்டி சாகனுமா? எனக்கென்னவோ அரசியல் சாக்கடையில் கலக்க மனமின்றி அவர்கள் வன்முறையை தேர்ந்தெடுத்தது போல் தோன்றவில்லை.

///எல்லோரும் திருடர்கள் இதில் கம்மியாக திருடுபவரை தேட வேண்டியுள்ளது ///
வேறு வழியே இல்லை கிரி. அல்லது கோர் கம்மூநிஷ்ட்டுகள் போல் புரட்சி வரும் வரை வெயிட் பண்ணலாம்.

////இருந்தும் தொடர்ந்து பாதிக்கபடுகிறோம் பாதிக்கப்போடுவோம் ////
:-(

///செவிடன் காதுல சங்கூதுன மாதிரி தான்.///
ரொம்ப கஷ்டம்

முரளிகண்ணன் said...
July 26, 2008 at 11:44 PM  

\\என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"
\\
நல்ல கருத்து மோகன்

மோகன் கந்தசாமி said...
July 26, 2008 at 11:48 PM  

////\\என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"
\\
நல்ல கருத்து மோகன்/////

மிக்க நன்றி முரளி கண்ணன்.

Anonymous said...
July 27, 2008 at 12:04 AM  

tamilish.com la muthal pakkaththil ungal intha post paarthen. naan manathil ninaiththathai inge solli irukkenga.

ungalathu vanniyar patriya uthaaranam, sinthikka vaikka koodia ondru.

tamila netla eluthravangalai ippa thaan muthan muthala paarkiren. ungal post kalukku subscribe pannum vasathi irukkaa? eppadi?

Unknown said...
July 27, 2008 at 12:18 AM  

இப்போதுதான் தமிழிஷ்.காம் தளத்தில் உங்கள் பதிவை படித்துவிட்டு வோட் போட்டு விட்டு வந்தேன்.

ரொம்ப ஆக்ரோஷமாக இருந்தாலும் மிக அர்த்தத்தோட சொல்லி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...
July 27, 2008 at 1:06 AM  

//அதிகாரவர்கமே ஒழிக்கப்பட வேண்டியவை//

You mean Karunanidhi,Sonia Gamdhi and co?Why this hatred towards them?

Anonymous said...
July 27, 2008 at 1:21 AM  

What a vicious,wicked,pathological and third rate son of a bitch you are Kandasemi?

Anonymous said...
July 27, 2008 at 1:31 AM  

உங்கள் கோபம் புரிகிறது, ஆனால் யாரையோ திட்டுகிறேன் என்று ஒட்டு மொத்த இனத்தையும் திட்டுவது சிறு பிள்ளை செயல், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தீவிரவாதிகளுக்கு தலைவன் ஒருவன் தமிழ் நாட்டில் வேண்டுமென்றா? அல்லது முஸ்லீம் சமுதாயத்துக்கு வேண்டுமென்றா? தமிழ் நாட்டில் முஸ்லீம் இனத்தவருக்கு ஒரு நல்ல தலைவன் வந்து விட்டால் குஜராத்தில் குண்டு வெடிக்காதா? சிரிப்புதான் வருகிறது..!

Anonymous said...
July 27, 2008 at 1:43 AM  

நீங்கள் சொல்வது மிகச்சரி!

இதுபோன்ற செயல்களால் மக்களிடமிருந்துதான் விலகிச்செல்வார்கள். நிலமையை மேலும் சிக்காலாக்கும்.

Unknown said...
July 27, 2008 at 1:57 AM  

TRUE...

everything you said correctly...

:(...

What they terrorist want it? Nothing, just they like peoples should not be happy. Shit… they are keeping muslim name and all bad names comes to muslims only. They never ever think about this.

Thanks for nice post.
--Mastan

Unknown said...
July 27, 2008 at 2:21 AM  

Mohan Kandasamy well said. Do not care for the criticisms of No.9. If one tests the pathology of this critic, you will find his real colour and his intention in criticising you.

ராஜ நடராஜன் said...
July 27, 2008 at 2:54 AM  

என்ன கோபம் டாய்ன்னு அனல் பறக்குது?

Abdul Haleem said...
July 27, 2008 at 3:27 AM  

"குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?""

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 3:34 AM  

நன்றி திரு சுந்தரம்,

///ungalathu vanniyar patriya uthaaranam, sinthikka vaikka koodia ondru. ///
நான் சாதி அடையாளங்களை வெறுப்பவன். ஆனால் அதன் பெயரால் ஒடுக்கப்பட்டால் அப்பெயருடன் எழுச்சி பெறுவது நியாயமானதே.

///tamila netla eluthravangalai ippa thaan muthan muthala paarkiren. ungal post kalukku subscribe pannum vasathi irukkaa? eppadi?///
ஈ-மெயில் அளித்து மின் சந்தா பெறுங்கள்.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 3:36 AM  

////இப்போதுதான் தமிழிஷ்.காம் தளத்தில் உங்கள் பதிவை படித்துவிட்டு வோட் போட்டு விட்டு வந்தேன்.

ரொம்ப ஆக்ரோஷமாக இருந்தாலும் மிக அர்த்தத்தோட சொல்லி இருக்கிறீர்கள்./////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கரிகாலன்.

Anonymous said...
July 27, 2008 at 3:36 AM  

உங்களுடைய கோபத்தில் உண்மை இருப்பதால் நல்லவர்கள் யாரும் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நல்ல பதிவு, பொறுத்தமான படங்கள்.
நன்றி நண்பரே !

rapp said...
July 27, 2008 at 4:15 AM  

ரொம்ப ரொம்ப சரியா எங்க எல்லார் சார்பிலும் உங்க கோபம் கலந்த உண்மையான வருத்தத்தை எடுத்து வைத்துள்ளீர்கள் மோகன். அதெப்படி தனக்கு துளியளவுக் கூட பரிச்சயமில்லாத, கண்ணுக்குத் தெரியா அப்பாவிகளை கொன்று, அதில் விளையும் கலகங்களை வைத்து பிழைப்பு நடத்தத் தோன்றுகிறதோ, கேடு கேடு கேடு இதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுபவர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:23 AM  

நண்பர் முத்து,

நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுபவனல்ல. இவ்வகை சொல்லாடலில் ஆணித்தரமாக கருத்துக்களை சொல்ல முடியும் என நம்புகிறேன். அடாவடி விமர்சனமும் அங்கீகரிக்கப்பட்டதுதான்.

////உங்கள் கோபம் புரிகிறது////
எனது கோபத்தை சம்பத்தப்பட்டவர்கள் பொருட்படுத்த தேவையில்லை. இந்த நாட்டில் குண்டு வெடிப்பது தவிர வேறு ஆப்சனே இல்லாதுபோனால் அவர்கள் செயல்களை நியாயப்படுத்த முடியும். நிலைமை அப்படி இல்லையே!

////ஒட்டு மொத்த இனத்தையும் திட்டுவது சிறு பிள்ளை செயல்////
திட்டவில்லை, இதற்கு ஒட்டு மொத்த இனத்தையும் பொறுப்பாக்குகிறேன். அரசியல் எழுச்சி மூலம் பிரச்சினையை இன்னும் தீர்க்காமல் இவ்வகை செயல்களுக்கு வாய்ப்பளித்ததற்காக அந்த சமூகத்தை குறை கூறுகிறேன்.

////நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தீவிரவாதிகளுக்கு தலைவன் ஒருவன் தமிழ் நாட்டில் வேண்டுமென்றா? ////
இது என்ன வகை புரிதல் முத்து? தீவிரவாதிகளுக்கு தலைவன் ஒருவன் வேண்டும் என்று நான் எப்போது சொன்னேன்? தமிழக உதாரணம் ஒன்றை சொன்னால் பிரச்சினையை தமிழக தலைவன் ஒருவன் தான் தீர்க்க முடியும் என்று சொன்னதாக அர்த்தம் கொள்வது சிறுபிள்ளைத்தனம். அரசியல் அதிகாரம் பெறுவதுதான் இதற்கு தீர்வு என்று சொல்கின்றேன்.

////தமிழ் நாட்டில் முஸ்லீம் இனத்தவருக்கு ஒரு நல்ல தலைவன் வந்து விட்டால் குஜராத்தில் குண்டு வெடிக்காதா? சிரிப்புதான் வருகிறது..!///
நல்லது சிரியுங்கள்! மற்றொருமுறை பதிவை படித்துவிட்டு சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வரை தாராளமாக சிரியுங்கள்.

நன்றி.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:27 AM  

நவீன்,

////இதுபோன்ற செயல்களால் மக்களிடமிருந்துதான் விலகிச்செல்வார்கள். நிலமையை மேலும் சிக்காலாக்கும்.///
மிகச்சரி, மொத்த பேருமே இதை புரிந்துகொள்ள வேண்டும்.

புதுகை.அப்துல்லா said...
July 27, 2008 at 4:31 AM  

நானும் அந்த சமுதாயத்தில் இருந்து வந்தவன் என்பதால் சொல்கிறேன்...மோகன் சொல்லி இருப்பது பெரும்பாலும் உண்மை.அதேபோல என் போன்ற 99 சதவிகித இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தையும் வன்முறையை அடியோடு வெறுப்பதும் உண்மை. வீரப்பன் என்ற கடத்தக்காரன் ஒரு இஸ்லாமிய டி.எஸ்.பி யை கொன்றபோது அது ஒரு ஹிந்து செய்ததாகப் பார்க்கப்படவில்லை.ஒரு கிரிமினலின் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் யாரோ ஒரு முஸ்லிம் கிரிமினல் செல்வராஜ் என்ற காவலரைக் கொன்றது கிரிமினலின் செயலாக பார்க்கப்படாமல் இஸ்லாமியர்களின் செயலாக பார்க்கப்பட்டு கோவையில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
காரணம் மோகன் சொன்ன அந்த கொடூரமான சூத்திர தாரிகள்.உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள் என்று மோகன் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது.காரணம் அது 100 சத விகிதம் உண்மை. முத்து என்பவர் அவருடைய பின்னூட்டத்தில் தமிழ் நாட்டில் முஸ்லீம் இனத்தவருக்கு ஒரு நல்ல தலைவன் வந்து விட்டால் குஜராத்தில் குண்டு வெடிக்காதா? சிரிப்புதான் வருகிறது..!என்றார். மோகன் நீங்கள் சொன்னது இந்திய அள்வில் பொருந்தும் என்பதை அவர் உணரவே இல்லை. தமிழக அள்விலும் சரி இந்திய அளவிலும் சரி காயிதே மில்லத் அவர்களுக்குப் பின் ஆளுமையுள்ள எந்தத் தலைவனும் தோன்றவில்லை என்பது இன்றைக்கு இஸ்லாமியர்கலிடையே மிகவும் பின்னடைவாய் உள்ளது. இன்றைக்கு முஸ்லிம்களுக்கு நடக்கின்ற பிரச்சனைகளுக்கு யார் சூத்திரதாரிகளோ அவர்கள் தான் பிற்பட்டோர்,மிகவும் பிற்பட்டோர் மற்றும் தாழ்தப்பட்டோர் சந்திக்கும் பிரச்சனைகளின் சூத்திரதாரிகள். இது புரியாமல் உங்களிடம் சில முஸ்லீம் நண்பர்கள் "இந்த ஈரோட்டு வேலையெல்லாம் உங்களுக்குள்ளே வச்சிக்கோ, அதிக பிரசங்கி வேலை வேண்டாம்" என
சொன்னால் அவர்களுக்கு பெரியார் மாத்திரம் அல்ல எதுவுமே தெரியாத ஓரறிவு,ஈரரிவு உயிர் இனங்கள் என்ற
முடிவிற்கே நான் வரவேண்டி இருக்கும்.


டேய் குண்டு வைக்கிற நாய்ங்களா....போடா போய் புள்ள குட்டிங்கள எட்டாவதோட நிறுத்தி விசா எடுத்து அரேபியாவுக்கு கக்கூஸ் கழுவ அனுப்பாம மேல படிக்க வைக்கிற வழியப்பாரு. அதவுட்டுட்டு அப்பாவியான எவன் எவன் வீட்டு தாலியவோ அருக்காத.. உனக்கு குண்டு வைக்கத்தான் தெரிஞ்சு இருக்கு, குரான் ஒழுங்காத் தெரியல. அது தெரிஞ்சா குண்டு வைக்க மாட்ட.போய் அதயாவது முழுசா படி

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:31 AM  

மஸ்தான்,

////they are keeping muslim name and all bad names comes to muslims only///
நம் பதற்றமே இதுதான். மொத்த இனத்தையும் முத்திரை குத்த ஒரு கும்பல் காத்திருக்கிறது என்பதை ஏன் இவர்கள் அறிவதில்லை?

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:32 AM  

///Mohan Kandasamy well said. Do not care for the criticisms of No.9. If one tests the pathology of this critic, you will find his real colour and his intention in criticising you.////

ஆதரவுக்கு நன்றி S

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:36 AM  

ராஜ நடராஜன்,
////என்ன கோபம் டாய்ன்னு அனல் பறக்குது?///

கோபமல்ல நண்பரே, பரிவு.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:44 AM  

திரு புதுவலசை,
///"குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?""///
ஒரு சிலர் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களை வழக்கம் போல் ஏசிவிட்டு நம் மக்களுக்கு அரசியல் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைவோம் நாம். அவர்களுக்கு வாய்ப்பு இல்லாது போகும்.

வருகைக்கு நன்றி.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:46 AM  

////உங்களுடைய கோபத்தில் உண்மை இருப்பதால் நல்லவர்கள் யாரும் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நல்ல பதிவு, பொறுத்தமான படங்கள்.
நன்றி நண்பரே !////
ஆதரவிற்கு நன்றி அனானி!

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:57 AM  

ஹாய் வெட்டி ஆபிசர்,

நலமா?

////ரொம்ப ரொம்ப சரியா எங்க எல்லார் சார்பிலும் உங்க கோபம் கலந்த உண்மையான வருத்தத்தை எடுத்து வைத்துள்ளீர்கள் மோகன். அதெப்படி தனக்கு துளியளவுக் கூட பரிச்சயமில்லாத, கண்ணுக்குத் தெரியா அப்பாவிகளை கொன்று, அதில் விளையும் கலகங்களை வைத்து பிழைப்பு நடத்தத் தோன்றுகிறதோ, கேடு கேடு கேடு இதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுபவர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ///

வேறு வழியே இல்லாத கையறு நிலைமையில் இருப்பதை போல் நினைத்துக் கொள்கிறார்கள் சிலர். அதிகாரத்தில் இருக்கும் அந்த சிறு குழுவை மொத்தமாக அகற்ற உறுதி கொள்ளவேண்டுமே ஒழிய குண்டு வெடிப்பதில் பிரச்சினை தீராது.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 5:31 AM  

ஹாய் புதுகை!

நலமா?

////வீரப்பன் என்ற கடத்தக்காரன் ஒரு இஸ்லாமிய டி.எஸ்.பி யை கொன்றபோது அது ஒரு ஹிந்து செய்ததாகப் பார்க்கப்படவில்லை.ஒரு கிரிமினலின் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் யாரோ ஒரு முஸ்லிம் கிரிமினல் செல்வராஜ் என்ற காவலரைக் கொன்றது கிரிமினலின் செயலாக பார்க்கப்படாமல் இஸ்லாமியர்களின் செயலாக பார்க்கப்பட்டு கோவையில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.////

அருமை!. பிரச்சினையின் முடிச்சே இங்குதான் இருக்கிறது. தாம் எதிரியாய் கருதுபவரை எல்லோருக்கும் பொது எதிரியாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள குள்ள நரிகள் இன்னும் அதிகாரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் இவற்றை யாராலும் நெருங்கவே முடியாது.

///தமிழக அள்விலும் சரி இந்திய அளவிலும் சரி காயிதே மில்லத் அவர்களுக்குப் பின் ஆளுமையுள்ள எந்தத் தலைவனும் தோன்றவில்லை என்பது இன்றைக்கு இஸ்லாமியர்கலிடையே மிகவும் பின்னடைவாய் உள்ளது////
புதுகை, இதுதான் நான் சொல்லவருவதும். இந்தியா முழுவதும் ஒற்றை அடையாளத்தை உடைய முஸ்லீம் சமுதாயத்தை ஒரு அணியில் இணைப்பது கடினமல்ல என்றே நினைக்கிறேன். எனினும் மக்கள் தலைவர் ஒருவர் தோன்றுவதில் சுணக்கம் ஏன் என அரசியல் பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். கவனத்தை அங்கே செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது.

///டேய் குண்டு வைக்கிற நாய்ங்களா....போடா போய் புள்ள குட்டிங்கள எட்டாவதோட நிறுத்தி விசா எடுத்து அரேபியாவுக்கு கக்கூஸ் கழுவ அனுப்பாம மேல படிக்க வைக்கிற வழியப்பாரு////
இந்த டெசிபல் மட்டுமல்ல இந்த எண்ண ஓட்டம்தான் என் பதிவிலும் இருக்கிறது. இதைச்சொல்ல உரிமையும் பரிவும் எனக்குண்டு.

மிக மிக அருமையான கருத்துக்கள். நன்றி புதுகை அப்துல்லா!

Naina said...
July 27, 2008 at 8:47 AM  

ஐயா!
நடுநிலை உணர்வுள்ள போல் தெரியும் தாங்களே இஸ்லாமியர்கள் அப்பாவி சகோதர சகோதரிகளின் உயிரை அநியாயமாக பறித்து விட்டதாக எழுதியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த சண்டாளர்களை மனித குல துரோகிகள் என்பதே சரியான சொல்வாகும். சமுதாயத்தால் இனம் காணப்பட கூடாது.

இன்னொறு வேதனையான தகவல், குண்டு வெடிக்கும் போதே ISI சதியென்றும், முஜாஹிதீன்கள் என்றும் காவல்துறையினர் கூறிவிட்டு அதே கையோடு மூடிவிடுவது தான் நடந்து வருகிறது. திறந்த மனத்தோடு, நடுநிலை சிந்தனையோடு விசாரணைகள் நடத்தப்படாததால் உண்மை கொடியவர்களை இதுவரையிலும் நாம் இனம் கண்டதில்லை. நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றதும் இல்லை.

இச்சண்டாளர்களுக்கு சமுதாய முத்திரை தராமல் தயவு தாட்சணியமில்லாமல் தண்டிக்கபட வேண்டும். இவர்களின் கொட்டம் வோரோடும் வேரடி மண்ணோடும் நீக்கப்பட வேண்டும். அதற்குரிய நல்ல சூழல் உருவாக வேண்டும் என்ற ஆவலுடன்.......

நெய்னா முஹம்மது

Anonymous said...
July 27, 2008 at 10:56 AM  

இதப்போல் எழுத்தில்தான் உங்களால் கூப்பாடு போட முடியும். இப்பிடியான சம்பவங்கள் இந்தியாவின் மாற்றமுடியாத தலைவிதி

Anonymous said...
July 27, 2008 at 11:34 AM  

//sundar said...
இதப்போல் எழுத்தில்தான் உங்களால் கூப்பாடு போட முடியும். இப்பிடியான சம்பவங்கள் இந்தியாவின் மாற்றமுடியாத தலைவிதி//

atleast avar eluththilaavathu kooppadu poduraar. athai kooda kilikka mudiyatha, ottu kooda podaamal veettil thoongum jenmangal niraya irukkindrana.

@mohan kanthasamy
I read your post in tamilish as all time popular no.3 . verum kopam mattum kattaamal , arththamulla seithi pottirukeenga. valthukkal. thodarnthu eluthungal .

Anonymous said...
July 27, 2008 at 12:12 PM  

////வீரப்பன் என்ற கடத்தக்காரன் ஒரு இஸ்லாமிய டி.எஸ்.பி யை கொன்றபோது அது ஒரு ஹிந்து செய்ததாகப் பார்க்கப்படவில்லை.ஒரு கிரிமினலின் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் யாரோ ஒரு முஸ்லிம் கிரிமினல் செல்வராஜ் என்ற காவலரைக் கொன்றது கிரிமினலின் செயலாக பார்க்கப்படாமல் இஸ்லாமியர்களின் செயலாக பார்க்கப்பட்டு கோவையில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.////



அருமை!. பிரச்சினையின் முடிச்சே இங்குதான் இருக்கிறது. தாம் எதிரியாய் கருதுபவரை எல்லோருக்கும் பொது எதிரியாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள குள்ள நரிகள் இன்னும் அதிகாரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன.//

ஐயா, வீரப்பனின் அஜெண்டா இந்துமதத்தை காப்பது அல்ல!

ஆனால் இஸ்லாத்தையும் இஸ்லாமியரை காக்கவே குண்டு வைப்பதாக தீவிரவாதிகள் ஈமெயில் அனுப்பும் போதுதான் இஸ்லாமும் தீவிரவாதமும் இணையாக்கப் படுகின்றது.
அதனை பிற மத வெறியர்கள் உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

அது சரி said...
July 27, 2008 at 1:25 PM  

நீங்கள் சொல்வது சரி என்றாலும், பிரச்சினையை over-simplifய் செய்து விட்டதாக தோன்றுகிறது.

குண்டுவைப்பவர்களின் நோக்கம் அரசுக்கு எதிர்ப்பு காட்டுவது என்றால், அது ஒரு இடத்தில் மட்டும் இருக்கும். ஆனால், அமெரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியா, இந்தொனேசியா, கோயம்புத்தூர், பெங்களூர் என்று பல இடங்களில் குண்டு வெடிப்பதற்கு காரணம் அரசியலோ, இன ரீதியான எழுச்சியோ இல்லை.

குண்டு வைப்பவர்களின் நோக்கம் அகில உலகத்தையும் ஒரு ஆஃப்கன் நாடு போல ஆக்குவது. அதாவது எல்லாரும் தாடி வளர்க்க வேண்டும். எவனும் குளிக்க கூடாது. எந்த பெண்ணும் எழுத படிக்க தெரிந்திருக்க கூடாது‍‍ ‍‍‍இப்படி, மனித நாகரீகத்தை பின்னொக்கி கொண்டு செல்லும் வெறி!

ஆக, இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. இது நாகரீகத்திற்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையில் நடக்கும் போர்!

அது சரி said...
July 27, 2008 at 1:35 PM  

இவர்கள் முஸ்லிம்களுக்காக செய்வதாக சொன்னாலும், இவர்களால் எந்த முஸ்லிமுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆஃப்கனையும், பாகிஸ்தானையும் குட்டி சுவராக்கியவர்கள் இவர்கள் தான்.

உண்மையில், இவர்களால், இஸ்லாமிய சமுதாயத்திற்கே அதிக பிரச்சினைகள். முஸ்லிம்களுக்கும் இவர்களுக்கும் எந்த பெரிய தொடர்பும் இல்லை. முஸ்லிம்களும் மற்ற எல்லாரையும் போல தங்களது சொந்த வாழ்க்கை பிரச்சினையை தான் கவனிக்கிறார்கலே ஒழிய, குண்டு வெடிப்பதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.

மோடியின் கொலை வெறிக்கும், இன்டியாவின் இன்துக்க‌ளுக்கும் எப்ப‌டி தொட‌ர்பில்லையோ அது போல‌ முஸ்லிம்க‌ளுக்கும் இன்த‌ காட்டு மிரான்டிக‌ளுக்கும் தொட‌ர்பில்லை.

இது உல‌க‌ம் த‌ழுவிய‌ பிர‌ச்சினை. இத‌ற்கு இன்தியா ம‌ட்டும் தீர்வு காண‌ முடியாது.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 2:43 PM  

நண்பர் நைனா!

////நடுநிலை உணர்வுள்ள போல் தெரியும் தாங்களே இஸ்லாமியர்கள் அப்பாவி சகோதர சகோதரிகளின் உயிரை அநியாயமாக பறித்து விட்டதாக எழுதியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது////
யார் இதை செய்தார்கள் என்று இன்னும் நான் அறிந்து கொள்ளவில்லை. ISI -ஆக இருக்கலாம், காஷ்மீர் இயக்கங்களாக இருக்கலாம், மனம் வெறுத்த முஸ்லீம் இளைஞர்களாக இருக்கலாம், அல்லது இந்து மத தீவரவாதிகளாக கூட இருக்கலாம். காரணம் யாராக இருந்தாலும் இதற்கு வாய்ப்பளிப்பது முஸ்லிம்களின் தவறு. எங்கும் அரசியல் அனாதைகள் போல் அடிவாங்குவது, ஈனஸ்வரத்தில் சிறு எதிர்ப்பை காட்டிவிட்டு மொத்தமாக படுகொலைகளுக்கு ஆளாவது போன்றவை மனம் பதறச்செய்கின்றன. அரசியல் அதிகாரம் பெற்றால் மேற்கண்ட நான்குபேரும் சற்று யோசிப்பார்கள் அல்லவா?

////திறந்த மனத்தோடு, நடுநிலை சிந்தனையோடு விசாரணைகள் நடத்தப்படாததால் உண்மை கொடியவர்களை இதுவரையிலும் நாம் இனம் கண்டதில்லை. நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றதும் இல்லை.////

உண்மைதான். ஒரு இந்து அமைப்பு தாங்களே குண்டு வைத்துக்கொண்ட கதையும் உண்டு இங்கே (ஆனால் இந்த இரு குண்டு வெடிப்புகளும் அப்படி தோன்றவில்லை).

///இவர்களின் கொட்டம் வோரோடும் வேரடி மண்ணோடும் நீக்கப்பட வேண்டும். அதற்குரிய நல்ல சூழல் உருவாக வேண்டும் என்ற ஆவலுடன்///
அது நம்கையில் தான் உள்ளது. நம் சகோதரர்களின் கையறு நிலையை போக்குவோம்.

Anonymous said...
July 27, 2008 at 2:50 PM  

//ஆக, இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. இது நாகரீகத்திற்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையில் நடக்கும் போர்!//

Clash of civilizations. A valued point!

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 2:50 PM  

சுந்தர்,

///இதப்போல் எழுத்தில்தான் உங்களால் கூப்பாடு போட முடியும். இப்பிடியான சம்பவங்கள் இந்தியாவின் மாற்றமுடியாத தலைவிதி///
உண்மைதான். என்னால் கூப்பாடு மட்டுமே முடியும. குண்டுவெடிப்புகளை என்னால் தடுக்க முடியாது. குண்டு வெடிப்பவர்கள் உணரவேண்டும். முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்றுத்தரவும் முடியாது. அவர்கள்தான் களத்தில் இறங்கவேண்டும்.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 2:55 PM  

சுப்பு,
///atleast avar eluththilaavathu kooppadu poduraar. athai kooda kilikka mudiyatha, ottu kooda podaamal veettil thoongum jenmangal niraya irukkindrana.///
ஆதரவுக்கு நன்றி.

///I read your post in tamilish as all time popular no.3 . verum kopam mattum kattaamal , arththamulla seithi pottirukeenga. valthukkal. thodarnthu eluthungal .////
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுப்பு.

கயல்விழி said...
July 27, 2008 at 2:59 PM  

மோகன் கந்தசாமி,

டெம்ப்ளேட் மாடிஃபை பண்ணலாமே, ஃபயர் பாக்ஸில் படிக்க முடியல. :)
தலைப்பை மட்டும் வைத்து: ஆமாம் திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்!

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 3:07 PM  

அனானி,

////ஐயா, வீரப்பனின் அஜெண்டா இந்துமதத்தை காப்பது அல்ல!///
காவலரை கொன்ற அந்த கிரிமினலின் அஜண்டாவும் இஸ்லாத்தை காப்பது அல்ல. ஆனால் அவனை முஸ்லீம் பிரதிநிதியாக பாவித்து முஸ்லிம்களை கொன்றது நியாயமா?

///ஆனால் இஸ்லாத்தையும் இஸ்லாமியரை காக்கவே குண்டு வைப்பதாக தீவிரவாதிகள் ஈமெயில் அனுப்பும் போதுதான் இஸ்லாமும் தீவிரவாதமும் இணையாக்கப் படுகின்றது. அதனை பிற மத வெறியர்கள் உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.////
தொடர்ந்து அவர்களை வெறுப்பேற்றி, அவர்கள் நிலை தடுமாறும்போது படுகொலைகளை நிகழ்த்தி இறுதியில் அரசியல் ஆதாயமும் பெற்று விடுகின்றனர் மத வெறியர்கள்.

புதுகை.அப்துல்லா said...
July 27, 2008 at 3:19 PM  

ஆனால் இஸ்லாத்தையும் இஸ்லாமியரை காக்கவே குண்டு வைப்பதாக தீவிரவாதிகள் ஈமெயில் அனுப்பும் போதுதான் இஸ்லாமும் தீவிரவாதமும் //

என் சிற்றறிவிற்கு எட்டியவரை அப்படி செய்பவன் இஸ்லாமியன் மாத்திரம் அல்ல மனிதனே அல்ல. தன்னைப் போல வாழும் உரிமை படைத்த சக மனிதனின் வாழ்வை எந்தக் காரணமும் இன்றி பறிப்பவன் மனிதனே அல்ல எனும் போது அந்த விபச்சாரி மகனுக்கு எங்கிருந்து வந்தது மதம். இதை உங்களைப் போன்றவர்களும் உணரவில்லை என்பது தான் என் வருத்தம். இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் காக்க என்று இமெயில் அனுப்புதால் இனைக்கப்படுகின்றது என்கிறீர்களே நான் ஒன்று கேட்கிறேன், இந்துக்களைக் காக்க இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இஸ்லாமியர்கலையும் வேரருக்க வேண்டும் என்று சொன்ன பிரவீன் தொக்காடியாவின் குரலை இந்துமதத்தின் ஓட்டு மொத்த குரல்லாக நான் எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்தால் நான் பைத்தியம் இல்லையா? அப்படி என்றால் அந்தப் இமெயிலுக்கு தீவிரவாதத்தையும் இஸ்லாத்தையும் இணைப்பவர்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

புதுகை.அப்துல்லா said...
July 27, 2008 at 3:31 PM  

உண்மைதான். ஒரு இந்து அமைப்பு தாங்களே குண்டு வைத்துக்கொண்ட கதையும் உண்டு இங்கே (ஆனால் உண்மைதான். ஒரு இந்து அமைப்பு தாங்களே குண்டு வைத்துக்கொண்ட கதையும் உண்டு இங்கே (ஆனால் இந்த இரு குண்டு வெடிப்புகளும் அப்படி தோன்றவில்லை).

//

உண்மை தான் மோகன். தென்காசியில் சமீபத்தில் r.s.s. அமைப்பினர் தங்கள் அலுவலகத்தில் குண்டு வைத்து பழியை இஸ்லாமியர்களின் தலையில் சுமத்துவதற்காக அலுவலகத்தில் குண்டை பதுக்கி வைத்து இருந்த போது எதிர்பாராதவிதமாக வெடித்து மாட்டிக் கொணடனர்.ஆனால் இந்த இரு குண்டு வெடிப்புகளும் எனக்கும் அப்படி தோன்றவில்லை

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:03 PM  

நண்பர் அதுசரி,

/////குண்டுவைப்பவர்களின் நோக்கம் அரசுக்கு எதிர்ப்பு காட்டுவது என்றால், அது ஒரு இடத்தில் மட்டும் இருக்கும். ஆனால், அமெரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியா, இந்தொனேசியா, கோயம்புத்தூர், பெங்களூர் என்று பல இடங்களில் குண்டு வெடிப்பதற்கு காரணம் அரசியலோ, இன ரீதியான எழுச்சியோ இல்லை////

இந்தியாவில் தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தனிநாடு கேட்டோம், இலங்கையில் தனி நாடு கேட்டு வருகிறோம், மலேசியாவில் சமஉரிமை கேட்டு கலகம் செய்கிறோம். இதனால் தமிழன் ஒரு பிரிவினைவாதியாக அர்த்தம் கொள்ளமுடியுமா? சுயமரியாதை கிடைத்தால் தமிழன் எங்கு வேண்டுமானாலும் பிரச்சினையின்றி வாழ்ந்துவிடுவான். அதுபோல் பலநாடுகளில் நடக்கும் குண்டு வெடிப்புக்குப்பின் சில காரணங்கள் இருக்கின்றன. (எல்லாவற்றையும் நான் ஏற்கவில்லை). இனத்தையே முத்திரை குத்திவிட முடியாது. எங்கெங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு டிக்னிட்டி பாதிக்கப்படுகிறதோ அங்கோ அல்லது அது சார்ந்த இடங்களிலோ குண்டு வெடிக்கிறது. பிரச்சினையை குண்டு வெடித்து தீர்க்க முடியும் என நம்புவதுதான் தவறு. இந்தியாவை பொறுத்த வரை குண்டு வெடிக்கத்தேவையில்லை. சகல தில்லுமுல்லுகளையும் செய்தாவது அரசியல் அதிகாரம் பெற்றால் ஒரு பயலும் ஒன்றும் செய்யமுடியாது.

குஜராத் படுகொலைக்கு காரணம் என்ன?
இந்துக்கள் உணர்ச்சிவசப்பட்டதாலா? உணர்ச்சிவசப்படுவது இயல்பென்றாலும் படுகொலைகளை நிகழ்த்த தைரியம் கொடுத்தது அரசு எந்திரமே! அவ்வெந்திரத்தை இயக்கும் உரிமையில் முஸ்லிம்களுக்கும் பங்கிருந்திருந்தால் படுகொலைகள் நிகழ்ந்திருக்காது.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:36 PM  

நண்பர் அதுசரி,

///குண்டு வைப்பவர்களின் நோக்கம் அகில உலகத்தையும் ஒரு ஆஃப்கன் நாடு போல ஆக்குவது. அதாவது எல்லாரும் தாடி வளர்க்க வேண்டும். எவனும் குளிக்க கூடாது. எந்த பெண்ணும் எழுத படிக்க தெரிந்திருக்க கூடாது‍‍ ‍‍‍இப்படி, மனித நாகரீகத்தை பின்னொக்கி கொண்டு செல்லும் வெறி!////

அமெரிக்க மாடல் ஜனநாயத்தை உலகெங்கும் பரப்புவதாக கூறிக்கொண்டு அமேரிக்கா போடும் ஆட்டம் கொடூரமாக இருக்கிறது. அமெரிக்காவின் எண்ணம் ஈடேராது. சோவியத் தனது சிந்தாந்தத்தை பரப்ப பக்கத்து நாடுகளை ஆக்கிரமித்தது. சோவியத் நோக்கம் தோற்றுவிட்டது. இதுபோல் முஸ்லிம்களும் செய்கிறார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை எனத்தெரியவில்லை. எனினும் அவ்வாவல் நிறைவேறாது. பிறருடன் வாழ்ந்தாக வேண்டிய நாடுகளில் முஸ்லிம்கள் அதிகாத்தை பகிர்ந்து கொண்டு சுமூகமாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

///ஆக, இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. இது நாகரீகத்திற்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையில் நடக்கும் போர்!///
இந்திய அளவில் காட்டுமிராண்டித்தனத்தை புகுத்தத்தான் குண்டு வெடிக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. உலகின் வேறொரு பகுதியில் அவ்வாறு செய்பவர்கள் பயன்படுத்தும் ஆயுதத்தையே இங்கு இவர்கள் கைகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினை வேறானது. தொன்நூருகளுக்கு முன்பு இவ்வாறு குண்டு வெடிக்க வில்லை. காஷ்மீரத்தில் நடந்தவை வேறு காரணங்கள். அதன் பொருட்டு மற்ற இடங்களில் நடப்பவை தொன்நூருகளுக்கு பிறகுதான். வேறு காரணங்களுக்கு நடப்பவையும் தொன்நூருகளுக்கு பிறகுதான். அந்த வேறு காரங்களுக்கு காரணகர்த்தாக்கள் யார்? இந்துமத வெறியர்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் இயக்கத்தை முன்னெடுக்காமல் சிலர் தீய வழியில் செல்ல நேர்ந்த்ததுக்கு காரணம் யார்? இந்திய முஸ்லிம்கள்.

////முஸ்லிம்களும் மற்ற எல்லாரையும் போல தங்களது சொந்த வாழ்க்கை பிரச்சினையை தான் கவனிக்கிறார்கலே ஒழிய, குண்டு வெடிப்பதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. ////
நேரடி சம்பந்தமில்லை. பொதுப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் சொந்தப்பிரச்சினையை கவனித்துக்கொண்டு எல்லா சந்தர்பத்திலும் அடிவாங்கிக்கொண்டு இளைஞர்களை விரக்திக்கு தள்ளிவிடுகிறார்கள். அரசியல் தீர்வை தேடாமல் இளைஞர்கள் சிலர் குண்டு வைக்க கிளம்பிவிடுகிறார்கள்.

Anonymous said...
July 27, 2008 at 4:40 PM  

//குண்டு வைப்பவர்களின் நோக்கம் அகில உலகத்தையும் ஒரு ஆஃப்கன் நாடு போல ஆக்குவது. அதாவது எல்லாரும் தாடி வளர்க்க வேண்டும். எவனும் குளிக்க கூடாது. எந்த பெண்ணும் எழுத படிக்க தெரிந்திருக்க கூடாது‍‍ ‍‍‍இப்படி, மனித நாகரீகத்தை பின்னொக்கி கொண்டு செல்லும் வெறி!

ஆக, இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. இது நாகரீகத்திற்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையில் நடக்கும் போர்!//
-அது சரி
மிக சரியான கருத்து

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:48 PM  

////இது உல‌க‌ம் த‌ழுவிய‌ பிர‌ச்சினை. இத‌ற்கு இன்தியா ம‌ட்டும் தீர்வு காண‌ முடியாது.///

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருக்கும் இரு பிரச்சினைகளும்(காஷ்மீரம், இனப்படுகொலைகள்) உலகம் தழுவிய பிரச்சினையில் வர வாய்ப்பேஇல்லை. இந்தியப்பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வே சரி. முன்னுதாரணம் இருக்கின்றது.

///Clash of civilizations. A valued point!//
இந்தியாவில் எந்த clash -ம் இல்லை. நடப்பது clash of two uncivilized in the battle field and with the instrument of innocents.

மோகன் கந்தசாமி said...
July 27, 2008 at 4:53 PM  

////டெம்ப்ளேட் மாடிஃபை பண்ணலாமே, ஃபயர் பாக்ஸில் படிக்க முடியல. :)///
விரைவில் செய்கிறேன் கயல்விழி!

///தலைப்பை மட்டும் வைத்து: ஆமாம் திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்!///
திருந்தாத ஜென்மங்களும் திருந்த விடாத ஜென்மங்களும் பொதுஜனத்தை பற்றிய அக்கறை அற்ற ஜென்மங்களாவர்.

நன்றி.

*** said...
July 27, 2008 at 5:07 PM  

///ஐயா, வீரப்பனின் அஜெண்டா இந்துமதத்தை காப்பது அல்ல!///
காவலரை கொன்ற அந்த கிரிமினலின் அஜண்டாவும் இஸ்லாத்தை காப்பது அல்ல. ஆனால் அவனை முஸ்லீம் பிரதிநிதியாக பாவித்து முஸ்லிம்களை கொன்றது நியாயமா?//

நான் நியாயம் என்று எங்கு சாமி சொன்னேன்.ஏன் இது முஸ்லிம் தீவிரவாதம் எனப்படுகிறது என்கிற காரணத்தைதான் சொன்னேன்.

ஏன் தமிழ்நாட்டில் எந்தக் கிறுத்துவரும் இதுவரை ஒரு இந்துவைக் கொலை செய்ததில்லையா?
அப்போதெல்லாம் ஏன் மதக் கலவரம் மூளவில்லை?

நான் கோவைகாரன்.அங்கு நடந்த விடயம் நன்றாக அறிவேன்.ஒரு கொலைகாரர்கள் முஸ்லிம் அமைப்பினை சேர்ந்தவர்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான் பகுதியில் செக் போஸ்ட் போடப்பட்டு கண்கானிக்ப்பட்டது.இதற்கு காரணம் அங்குள்ள மசூதியில் இருந்து நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன, ஒரு ரகசியத் தகவல் அடிப்படையில்.

தேர்தல் வந்தது. அப்போது கோவை ராமநாதன் எம்பியாக போட்டியிட்டவர், கலைஞர் ஆட்சி வந்தால் செக் போஸ்ட் நீக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.கலைஞர் வென்று ஆட்சிக்கு வந்தார்.

தேர்தல் முடிவு வந்ததும்,ராமநாதன் கண்ணசைக்க முஸ்லிம் இயக்கத்தினரே செக் போஸ்டை பிய்த்துப் போட்டனர். அது தவிர அப்பகுதியில் ரோந்து சென்ற போலிஸாரை முஸ்லிம் இயக்த்தினர் அவமானப்படுத்தினர். பொறுத்து பொறுத்து பார்த்த போலிஸ் தம்மவர் கொல்லப்பட்டதும் பொறுமை இழந்தது. இந்து இயகத்தினரிட்ம் சிக்னல் தரப்பட்டது. என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுங்கள் என்று. இது முஸ்லிம்களை பயமுறுத்த போலிஸ் ஆசியுடன் நடந்த விடயம்.

இதையும் நான் சரி எனச் சொல்லவில்லை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் பிஜேபி மட்டுமல்லது ஓட்டு மொத்தமாக அரசியல்வியாதிகளும் இப்பிரச்ச்னைக்கு காரணம் என்பதே

*** said...
July 27, 2008 at 5:18 PM  

புதுகை சகோதரரே,

நான் ஒட்டு மொத்த இஸ்லாமியரும் காரணம் எனச் சொல்லவில்லை. குண்டுவைப்போர் என்ன காரணத்தை முன்னிருத்துகின்றரோ அந்தக் காரணம்தானே உலகத்தாரால் எடுத்துக் கொள்ளப்படும். அதைதான் சுட்டிக் காட்டினேன்.

சில நாட்களுக்கு முன்பு Darool Uloom அமைப்பு தீவிரவாதம் Unislamic என அறீவித்தது. நீரும் ஒத்த கருத்தினை சொல்கிறீர்.உம்மை காயப்படுத்த நான் அதை எழுதவில்லை.

புதுகை.அப்துல்லா said...
July 27, 2008 at 9:16 PM  

மறத்தமிழன் said...
நான் ஒட்டு மொத்த இஸ்லாமியரும் காரணம் எனச் சொல்லவில்லை. //

thankyou for understanding us

கோவை விஜய் said...
July 27, 2008 at 10:15 PM  

குண்டு கலாச்சாரம் மறைந்து அனைத்து மக்களும் சமதானமாய் சந்தோஷமாய் வாழும் நாளுக்கு காத்திருப்போம்.

மிக நல்ல பதிவு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Anonymous said...
July 28, 2008 at 4:42 PM  

Why are attacks by Islamic groups called Islamist terrorism? Other terror groups like the LTTE (Tamil Tigers) or the IRA (Irish Republican Army) have Hindus or Christians but are not called Hindu or Christian terrorists?

It is undoubtedly true that there are other terrorists as well, for instance the Naxalites or Maoists. The reason why the adjective 'Islamists' is used is that no other terror group invokes religious sanction or quotes religious texts to justify their acts. In fact, the Tamil Tigers has Hindus as well as Christians (their spokesperson for many years was Anton Balasingham, a Christian). Neither has the IRA nor Tamil Tigers ever quoted any religious scriptures to justify their actions, the Islamists have and continue to do so. The link between religious places and schools to these acts, is also well established.

Finally, the Islamist terrorists themselves have time and again openly admitted the religious nature of their ultimate goal -- Islamisation. It would be dishonest if this reality is ignored.

courtesy:http://www.rediff.com/news/2008/jun/11athale.htm

gundumama said...
July 29, 2008 at 5:08 AM  

super.. kalakureenga thalaiva..

ippo thaan ungaloda blog paarka mudinchathu.. impressive.. nalla nachhunu yezhuthureenga..

Anonymous said...
July 29, 2008 at 7:47 AM  

'ஆனால் யாரோ ஒரு முஸ்லிம் கிரிமினல் செல்வராஜ் என்ற காவலரைக் கொன்றது கிரிமினலின் செயலாக பார்க்கப்படாமல் இஸ்லாமியர்களின் செயலாக பார்க்கப்பட்டு கோவையில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.'

கோவையில் அல்-உம்மா அமைப்பு இருந்தது. முஸ்லீம்களுக்கும்
காவலர்களுக்கும் பிரச்சினை
இருந்தது.செல்வராஜ் என்ற
காவலரை கொன்றதில் இந்தப்
பிண்ணனி முக்கியமானது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்
அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,
மதுரை பரமசிவம் கொலை உட்பட
பலவற்றில் இஸ்லாமிய தீவிரவாத
அமைப்புகள் ஈடுபட்டன.இதன்
உச்சகட்டம் பிப்ரவரி 1998ல்
கோவையில் நடந்த தொடர்
குண்டு வெடிப்பு சம்பவங்கள்.
எனவே ஏதோ இஸ்லாமியர்கள்
எதுவும் செய்யவில்லை என்று
எழுத வேண்டாம்.மாறாக உலக
இஸ்லாமிய தீவிரவாதத்தின்
ஒரு கண்ணிதான் தமிழ்நாட்டிலும்,
இந்தியாவிலும் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள்.

Anonymous said...
July 29, 2008 at 7:50 AM  

'இவர்கள் முஸ்லிம்களுக்காக செய்வதாக சொன்னாலும், இவர்களால் எந்த முஸ்லிமுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆஃப்கனையும், பாகிஸ்தானையும் குட்டி சுவராக்கியவர்கள் இவர்கள் தான்'.

100% உண்மை.எத்தனை முஸ்லீம்கள்
இதை ஏற்பார்கள்.தமிழில் உள்ள இஸ்லாமிய இணையதளங்கள் தலிபான் ஆதரவாக
உள்ளன.யூத வெறுப்பையும் அவற்றில்
காணலாம்.இஸ்லாமிய பிற்போக்குவாதமும்,தீவிரவாதமும்
ஒன்றையொன்று சார்ந்திருப்பவை.

Bharath said...
July 29, 2008 at 9:34 AM  

மோகன்,

very insightful article.. ஆனால் வன்னியரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. வன்னியர்கள் ஒரு குழுவாய் இருந்ததால்(Geographic location) அவ‌ர்களின் எழுச்சி சாத்தியமானது.. முஸ்லிம்கள் பரவலாக வாழ்கிறார்கள்.. முஸ்லிம்கள் எங்கெல்லாம் குழுவாய் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஒரு representative இருக்கிறார்.. Unfortunately that is not enough.. முஸ்லிம்களின் நிலமை, தலித்களின் நிலையை ஒத்ததே.. நீங்கள் சொல்லும் அரசியல் அதிகாரம் practical solution அல்ல.
தமிழ்நாடு போல் "favorable" state ல் கூட "இஸ்லாமிக்" தீவிரவாதம் தலைதூக்க காரணம், படிப்பறிவின்மையே... அவர்களுக்கு இடஒதுக்கீடு மட்டும் கொடுத்து வோட்டரிசியல் செய்யாமல், அவர்களின் அடிப்படை தகுதியை மேம்படுத்துவதே இதற்கான solution ஆக அமையும் என்று நினைக்கிறேன்..

வால்பையன் said...
July 29, 2008 at 6:15 PM  

உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத்து போகிறேன் மோகன்.

வால்பையன்

வால்பையன் said...
July 29, 2008 at 6:21 PM  

//தேர்தல் முடிவு வந்ததும்,ராமநாதன் கண்ணசைக்க முஸ்லிம் இயக்கத்தினரே செக் போஸ்டை பிய்த்துப் போட்டனர். அது தவிர அப்பகுதியில் ரோந்து சென்ற போலிஸாரை முஸ்லிம் இயக்த்தினர் அவமானப்படுத்தினர். பொறுத்து பொறுத்து பார்த்த போலிஸ் தம்மவர் கொல்லப்பட்டதும் பொறுமை இழந்தது. இந்து இயகத்தினரிட்ம் சிக்னல் தரப்பட்டது. என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுங்கள் என்று. இது முஸ்லிம்களை பயமுறுத்த போலிஸ் ஆசியுடன் நடந்த விடயம்.//

இந்த மாதிரி அரசியல் பண்றதுக்கு பதிலா பிட்சை எடுக்கலாம்.

வால்பையன்

Anonymous said...
July 29, 2008 at 6:32 PM  

இங்கு பதிவிட்டவர்கள் படிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. இந்தக் கலவரங்கள் என்னமோ பிஜேபி போன்ற கட்சிகளினால் தூண்டப்பட்டு வருகின்றன என்றால் அது தவறு.

ஜிகாத், ஜிகாதி பற்றிப் படியுங்கள். காஃபீருக்கான தண்டனைப் பற்றி படியுங்கள். அல்-ஜஸீரா வெளியிட்டிருக்கும் பின் லேடனின் பேட்டியைப் படியுங்கள் (இந்திய தேசியக் கொடியை எரிக்கும் நிகழ்ச்சி அதில் இருக்கும்). காஷ்மீர பண்டிட்களின் இனப் படுகொலை பற்றி படியுங்கள். மொகலாயர்கள் இந்துக்கள் மேல் விதித்த ஜிஸியா வரி பற்றிப் படியுங்கள். மதறாஸாவில் சொல்லித்தரும் பாடங்கள் பற்றிப் படியுங்கள்.

குஜராத் இப்பொழுது இருப்பதற்கும் 2002-க்கு முன்னால் இருப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிப் படியுங்கள்.

இதன் வேர் ஆழமானது. அதைக் கிள்ளி எறிய முடியாது. ஒன்று நீங்கள் இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதத்துடன் இயைந்து வாழ வேண்டும். அதாவது உங்களையோ அல்லது உங்களை சார்ந்தவர்களையோ அது பாதிக்காத வரை. அல்லது அதை எதிர்த்துப் போராட வேண்டும். சிலுவைப் போரோ, பாலஸ்தீன பிரச்சினையோ அல்லது இந்துத்வ பதிலடிகளோ அவற்றின் எதிரொலிகளே.

Anonymous said...
July 29, 2008 at 9:31 PM  

//இங்கு பதிவிட்டவர்கள் படிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. இந்தக் கலவரங்கள் என்னமோ பிஜேபி போன்ற கட்சிகளினால் தூண்டப்பட்டு வருகின்றன என்றால் அது தவறு.

... சிலுவைப் போரோ, பாலஸ்தீன பிரச்சினையோ அல்லது இந்துத்வ பதிலடிகளோ அவற்றின் எதிரொலிகளே.//

பிஜேபி யின் கொள்ளுதாத்தாவான இந்துமகா சபா ஆரம்பிக்கப்பட்டதே (1915-ல்) முஸ்லிம் லீக்கிற்க்கு பதிலடி தரத்தான். ஆக முஸ்லிம் லீக் ஆரம்பிக்காமல் மதசார்பற்ற காங்கிரஸிற்கு ஆதரவு தந்திருந்தால் இன்று பிஜேபி இல்லை.

இந்துக்களா படையெடுத்து அரேபியாவிற்கு போனார்கள்? பிரச்சனையை எப்போதும் ஆரம்பிப்பது முஸ்லிகள். அதற்கு கிருத்துவர், யூதர் அல்லது இந்துக்கள் பதிலடி கொடுத்தால் அதை காரணம் காட்டி அவர்களை ஒழிக்க முற்படுவதுதான் முஸ்லிம் வழக்கம்.

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 10:13 PM  

திரு மறத்தமிழன்,

////நான் நியாயம் என்று எங்கு சாமி சொன்னேன்.ஏன் இது முஸ்லிம் தீவிரவாதம் எனப்படுகிறது என்கிற காரணத்தைதான் சொன்னேன்.////

புதுகை சொன்னது என்ன? இந்து கிரிமினல்
முஸ்லீம் காவலரை கொன்றான். வேறு பிரச்சினையில் முஸ்லீம் கிரிமினல் இந்து காவலரை கொன்றான். இறுதியில் 18 முஸ்லிம்கள் இறந்தனர்.

இதற்கு பதில் சொல்கையில் முஸ்லீம் தீவிரவாதம் பற்றி பேசினால் அந்த கொலைகளை நியாயப்படுத்துதல் அன்றி வேறென்ன? அல்லது உலகெங்கும் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பதிலடி இந்த 18 கொலைகளா? Stranded incidents -களை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட காரணம் என்ன? முஸ்லிம்களை மொத்தமாக தீவிரவாதிகளாக சித்தரித்து விட்டதுதான் காரணம்.

குண்டு வைப்பவர்களைத்தான் "முஸ்லீம் தீவிரவாதிகள்" என்கிறோம், அப்பாவிகளை அல்ல என்றால் முஸ்லீம் அப்பாவிகள் கலவரத்தில் இறக்கும்போது தீவிரவாதிகளின் செயல்பாடுகளை காரணம் சொல்லக்கூடாது.

////ஏன் தமிழ்நாட்டில் எந்தக் கிறுத்துவரும் இதுவரை ஒரு இந்துவைக் கொலை செய்ததில்லையா? அப்போதெல்லாம் ஏன் மதக் கலவரம் மூளவில்லை?////

மதத்திற்கு சம்பந்தமில்லாத கொலைகளை எல்லா சமூகத்தவரும் தினமும் எங்காவாது செய்துகொண்டுதான் வருகிறார்கள். அவையெல்லாம் காவல் துறை சம்பந்தப்பட்ட சிறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். எந்த கிருத்துவரும் வந்தே மாதரம் என்று கத்திக்கொண்டு இந்து குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில்லை. ஆனால் சில இந்துக்கள் காலகாலமாக பிற மதத்தினரை இப்படி சர்வ சாதாரணமாக கொலை செய்துதான் வருகிறார்கள். கிருத்துவர்களுக்கு எதிராக கலவரங்கள் பெரிய அளவில் நடைபெறாததற்கு காரணம் அவர்கள் எதிர்வினையாற்றும் முறை வேறு. இதே பெங்களூரில் எஸ்.எம்.கிரிஷ்ணா ஆட்சியில் சர்ச்சில் குண்டு வைத்தவர்கள் யார் என்று தெரியுமா? அவ்வாறு வைத்தவர்கள் எந்த மதத்தை காப்பாற்றுவதாக ஓலமிட்டார்கள்? அப்போது அருள் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? "நாங்கள் இத்தருணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை, முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்துவோம்" என்றார். டிவி, ரேடியோ, நியூஸ் பேப்பர், போது கூட்டம் என அனைத்திலும் மதவெறி பிரச்சாரம் செய்யவில்லை, இப்போது சில ரத்த வெறியர்கள் செய்து வருவதைப்போல.

/////கொலைகாரர்கள் முஸ்லிம் அமைப்பினை சேர்ந்தவர்கள்.////
////அங்குள்ள மசூதியில் இருந்து நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன, ஒரு ரகசியத் தகவல் அடிப்படையில்.////
////தேர்தல் முடிவு வந்ததும்,ராமநாதன் கண்ணசைக்க முஸ்லிம் இயக்கத்தினரே செக் போஸ்டை பிய்த்துப் போட்டனர். /////
////பொறுத்து பொறுத்து பார்த்த போலிஸ் தம்மவர் கொல்லப்பட்டதும் பொறுமை இழந்தது./////
////இந்து இயகத்தினரிட்ம் சிக்னல் தரப்பட்டது. என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுங்கள் என்று. இது முஸ்லிம்களை பயமுறுத்த போலிஸ் ஆசியுடன் நடந்த விடயம்./////
////இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் பிஜேபி மட்டுமல்லது ஓட்டு மொத்தமாக அரசியல்வியாதிகளும் இப்பிரச்ச்னைக்கு காரணம்////

எல்லாம் சரி, இதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதானே?, எவன் கண்ணசைத்தால் என்ன? கிரிமினல்களையும் ஆயுத பதுக்கல் காரர்களையும் போட்டு குமுற வேண்டியதுதானே! இதெல்லாம் போலீசுக்கு சொல்லியா தர வேண்டும்? பொய் வழக்கு போடுவது, காவல் நிலையத்தில் கற்பழிப்பது, கிரிமினல்களுடன் கைகோர்த்து கொள்ளை அடிப்பது என எப்படி ஆட்டம் போட்டாலும் தம் மீது யாராவது கை வைத்து விட்டால் எவருக்கும் கட்டுப்படாது. அரசியல்வாதிகளாக இருந்தாலும் துவம்சம்தான். இந்நிலையில் இந்து அமைப்பினரை நாட வேண்டிய அவசியம் என்ன? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மதக்கலவரமாக திசை மாற்றியது ஏன்? மாற்றியது யார்? எந்த அரசியல்வாதி அவ்வாறு செய்தான்? முழுக்க முழுக்க இது கையாலாகாத போலீசும், இந்து வெறியர்களும் செய்த வேலைகள். மற்ற அரசியல் வாதிகளை பிஜேபி -யோ, பிஜேபி ஊதுகுழல்களோ குறைசொல்வது விஷமத்தனம்! முழுக்கவும் நான் பதிவில் குறிப்பிட்ட சூத்திரதாரிகள் செய்த வேலையே!

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 10:18 PM  

திரு விஜய்,
////குண்டு கலாச்சாரம் மறைந்து அனைத்து மக்களும் சமதானமாய் சந்தோஷமாய் வாழும் நாளுக்கு காத்திருப்போம்.

மிக நல்ல பதிவு.////
மிக்க நன்றி, உங்கள் பாராட்டத்தக்க பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 11:13 PM  

//////Why are attacks by Islamic groups called Islamist terrorism? Other terror groups like the LTTE (Tamil Tigers) or the IRA (Irish Republican Army) have Hindus or Christians but are not called Hindu or Christian terrorists?////

Great! But the question you conveniently forget to ask is why the fundamentalists who comfortably sit in the power corridor time to time and constantly seed religious hatred among people are also not called terrorists. The reason is that their terrorism is different. The way they act against other religion is different from others. They campaign religious hatred on others among the innocent people and use them in riots. Since these fundamentalists completely occupy the whole media, they can call anybody in whichever name they want. And they are law-proof, because the Indian bureaucracy belongs to them since independence and they acquired power in the last 15 years.

////It is undoubtedly true that there are other terrorists as well,////

It is undoubtedly true there are some other terrorists as well.

//for instance the Naxalites or Maoists.//

For instance RSS, VHP, Bajrangthal, Hindu Munnani etc

//// The reason why the adjective 'Islamists' is used is that no other terror group invokes religious sanction or quotes religious texts to justify their acts./////

Why these RSS, VHP, Bajrangthal, Hindu Munnani are not called terrorists even though they invoke religious sanction or quotes religious texts to justify their acts is that they occupy the power and media.

//// The link between religious places and schools to these acts, is also well established.///

The link between the Hindu Mutts and these religious acts like riots is also well established.

//// Finally, the Islamist terrorists themselves have time and again openly admitted the religious nature of their ultimate goal -- Islamisation. ///

Finally, the Hindu terrorists themselves time and again openly admitted the religious nature of their ultimate goal is “Hindustan is only for the Hindus”

///It would be dishonest if this reality is ignored.///
I second this.

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 11:15 PM  

/////super.. kalakureenga thalaiva..
ippo thaan ungaloda blog paarka mudinchathu.. impressive.. nalla nachhunu yezhuthureenga..///
நன்றி குண்டுமாமா!, பேரே வித்தியாசமா இருக்கு! மீண்டும் வாருங்கள்.
.

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 11:25 PM  

///கோவையில் அல்-உம்மா அமைப்பு இருந்தது. முஸ்லீம்களுக்கும்
காவலர்களுக்கும் பிரச்சினை
இருந்தது.செல்வராஜ் என்ற
காவலரை கொன்றதில் இந்தப்
பிண்ணனி முக்கியமானது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்
அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,
மதுரை பரமசிவம் கொலை உட்பட
பலவற்றில் இஸ்லாமிய தீவிரவாத
அமைப்புகள் ஈடுபட்டன.இதன்
உச்சகட்டம் பிப்ரவரி 1998ல்
கோவையில் நடந்த தொடர்
குண்டு வெடிப்பு சம்பவங்கள்.
எனவே ஏதோ இஸ்லாமியர்கள்
எதுவும் செய்யவில்லை என்று
எழுத வேண்டாம்////

இஸ்லாமியர்கள் எதுவும் செய்யவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் இவையெல்லாம் தொன்நூருகளுக்கு பிறகே நடக்க வேண்டிய அவசியம் என்ன? தொன்நூருகளுக்கு முன்பான காஷிமீர் குண்டு வெடிப்புகளுக்கும், படுகொலைகளுக்கும் காஷ்மீர் பிரச்சினை மட்டுமே காரணம். இப்போதைய குண்டு வெடிப்புகளுக்கு இந்து மத வெறியர்கள்தான் மறைமுக காரணம்.

மோகன் கந்தசாமி said...
July 29, 2008 at 11:35 PM  

////தமிழில் உள்ள இஸ்லாமிய இணையதளங்கள் தலிபான் ஆதரவாக
உள்ளன.யூத வெறுப்பையும் அவற்றில்
காணலாம்.///
ஆதரவு நிலை எடுப்பது தவறென்று சொல்ல முடியாது! தீவிரவாத செயல்களில் ஈடுபடும்போதுதான் தவறாகின்றது. இந்தியாவில் தமிழ் வெறுப்பில்லாத ஆங்கில எலக்ட்ரானிக் மீடியா சிலவற்றை கூறுங்கள் பார்போம். ரொம்ப கஷ்டம். இசுரேலிய ஆதரவாளர்களும் இங்கு இருக்கத்தானே செய்கின்றனர்.

///இஸ்லாமிய பிற்போக்குவாதமும்,தீவிரவாதமும்
ஒன்றையொன்று சார்ந்திருப்பவை.///
இது கூட ஓரளவுக்குத்தான் உண்மை. மக்கள் தலைவன் ஒருவனால் தீர்க்க முடிந்த பிரச்சினைதான் இது.

Anonymous said...
July 29, 2008 at 11:35 PM  

//for instance the Naxalites or Maoists.//

For instance RSS, VHP, Bajrangthal, Hindu Munnani etc//

You cannot compare apples with Oranges. RSS, VHP can be compared with DK / Muslim League etc. An outfit with religious interests or anti-religious interests.

Naxalites, SIMI, Lakshar-e-toiba have ideology based on anhiliation.

Again... Godhra is organized by a group with a cunning motivation and the reciprocation is by another group.

If you want to know the power lobbies seeding religious hatreds you have to track back to the birth of Indian Muslim League and the proclamation of Mohammed Ali Jinnah who openly said 'Muslims cannot live with Hindus'. That is how the State of Pakisthan is formed. And in the same line Kashmir may become an autonmous country in the future.

Let us forget about the sovereignity of the Country. Let Kashmir go. Let us forget the inidividual rights for following a religion. Majority of Indians get converted to Muslims. Will these things end even after that? No way.

You cannot compare Hindu or for the sake of comparison even Sikh religion with Islam. Hindu religion never advocates conversion. It does not even an instituition by itself. Its not the same case with Islam or any abhramian religion. They are well orchestrated and instituitionlized. That is where more danger is. When an instituition has a hatred in their fundamental philosophy you have to face the brunt on it.

Finally - If you want to claim the 'so called secularist' image even at this juncture of tragedy (9 more bombs diffused in Surat), Please go ahead and have the whole pie for you. Hail Secularists!

Anonymous said...
July 29, 2008 at 11:39 PM  

//தொன்நூருகளுக்கு முன்பான காஷிமீர் குண்டு வெடிப்புகளுக்கும், படுகொலைகளுக்கும் காஷ்மீர் பிரச்சினை மட்டுமே காரணம். //

This is what is called Goebbels Propoganda. Isnt it Islamic fundamentalists a reason for Kashmir issue? Please, please, please read the history before you make your comments.

மோகன் கந்தசாமி said...
July 30, 2008 at 12:04 AM  

நண்பர் அனலிஸ்ட்,

/////ஆனால் வன்னியரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. வன்னியர்கள் ஒரு குழுவாய் இருந்ததால்(Geographic location) அவ‌ர்களின் எழுச்சி சாத்தியமானது.. முஸ்லிம்கள் பரவலாக வாழ்கிறார்கள்.. ////

இதற்கும் இந்திய ஸ்டைல் ஜனநாயகத்தில் ஒரு தீர்வு உண்டல்லாவா? கூட்டணி மூலம் அதிகாரத்தை பங்கு போடலாம். சில தொகுதிகளில் தங்கள் வாக்குகளின்றி எவரும் ஜெயிக்க முடியாதபடி அரசியல் செய்யலாம். இன்றும் பல இடங்களில் அவர்கள் ஓட்டை பெற கட்சிகள் ஆளாய் பறப்பதை பார்க்கிறோம். இந்த நிலைமையை தக்க வைப்பதோடல்லாமல் மேலும் விஸ்தரிக்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு ஓரளவுக்கு பிரச்சினை குறைவுதான், எனினும் இங்கும் அதிகாரத்தில் இவர்களுக்கு தகுந்த பிரதிநித்துவம் இல்லை எனலாம்.
எது எப்படியாயினும் அரசியல் தீர்வே நிரந்தரம் என்பது என் கருத்து.

மிக்க நன்றி.

மோகன் கந்தசாமி said...
July 30, 2008 at 12:18 AM  

ஹாய் வால் பையன்,

////உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத்து போகிறேன் மோகன்////
ஆதரவிற்கு நன்றி

///இந்த மாதிரி அரசியல் பண்றதுக்கு பதிலா பிட்சை எடுக்கலாம்.///
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசம் இல்லை எனலாம். இங்கு மத வெறி அமைப்புகளே பிரச்சினை செய்பவர்கள். திக, திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றை வடமாநில பாஜக போல மத அரசியல் செய்யும் கட்சிகள் என்று சொல்ல முடியாது.

அரபுத்தமிழன் said...
July 30, 2008 at 1:04 AM  

சகோதரர் திரு மோகன் கந்தசாமி அவர்களே! உங்களைப் போன்று அனைவரும் சிந்தித்தால் நமக்குள் நிச்சயம் ஒற்றுமை ஓங்கும்.

அருமையான வரிகள்
===================
// யார் இதை செய்தார்கள் என்று இன்னும் நான் அறிந்து கொள்ளவில்லை. ISI -ஆக இருக்கலாம்,
காஷ்மீர் இயக்கங்களாக இருக்கலாம், மனம் வெறுத்த முஸ்லீம் இளைஞர்களாக இருக்கலாம்,
அல்லது இந்து மத தீவரவாதிகளாக கூட இருக்கலாம். காரணம் யாராக இருந்தாலும் இதற்கு
வாய்ப்பளிப்பது முஸ்லிம்களின் தவறு. எங்கும் அரசியல் அனாதைகள் போல் அடிவாங்குவது,
ஈனஸ்வரத்தில் சிறு எதிர்ப்பை காட்டிவிட்டு மொத்தமாக படுகொலைகளுக்கு ஆளாவது போன்றவை மனம் பதறச்செய்கின்றன.
அரசியல் அதிகாரம் பெற்றால் மேற்கண்ட நான்குபேரும் சற்று யோசிப்பார்கள் அல்லவா? //


//இந்தியாவில் தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தனிநாடு கேட்டோம், இலங்கையில் தனி நாடு கேட்டு வருகிறோம்,
மலேசியாவில் சமஉரிமை கேட்டு கலகம் செய்கிறோம். இதனால் தமிழன் ஒரு பிரிவினைவாதியாக அர்த்தம் கொள்ளமுடியுமா?
சுயமரியாதை கிடைத்தால் தமிழன் எங்கு வேண்டுமானாலும் பிரச்சினையின்றி வாழ்ந்துவிடுவான். அதுபோல் பலநாடுகளில் நடக்கும்
குண்டு வெடிப்புக்குப்பின் சில காரணங்கள் இருக்கின்றன. (எல்லாவற்றையும் நான் ஏற்கவில்லை). இனத்தையே முத்திரை குத்திவிட முடியாது.
எங்கெங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு டிக்னிட்டி பாதிக்கப்படுகிறதோ அங்கோ அல்லது அது சார்ந்த இடங்களிலோ குண்டு வெடிக்கிறது.
பிரச்சினையை குண்டு வெடித்து தீர்க்க முடியும் என நம்புவதுதான் தவறு. இந்தியாவை பொறுத்த வரை குண்டு வெடிக்கத்தேவையில்லை.
சகல தில்லுமுல்லுகளையும் செய்தாவது அரசியல் அதிகாரம் பெற்றால் ஒரு பயலும் ஒன்றும் செய்யமுடியாது.
குஜராத் படுகொலைக்கு காரணம் என்ன?
இந்துக்கள் உணர்ச்சிவசப்பட்டதாலா? உணர்ச்சிவசப்படுவது இயல்பென்றாலும் படுகொலைகளை நிகழ்த்த தைரியம் கொடுத்தது அரசு எந்திரமே!
அவ்வெந்திரத்தை இயக்கும் உரிமையில் முஸ்லிம்களுக்கும் பங்கிருந்திருந்தால் படுகொலைகள் நிகழ்ந்திருக்காது.//


//நேரடி சம்பந்தமில்லை. பொதுப்பிரச்சினையை கண்டுகொள்ளாமல் சொந்தப்பிரச்சினையை கவனித்துக்கொண்டு எல்லா சந்தர்பத்திலும்
அடிவாங்கிக்கொண்டு இளைஞர்களை விரக்திக்கு தள்ளிவிடுகிறார்கள்.
அரசியல் தீர்வை தேடாமல் இளைஞர்கள் சிலர் குண்டு வைக்க கிளம்பிவிடுகிறார்கள்//

Bharath said...
July 30, 2008 at 1:06 AM  

//இதற்கும் இந்திய ஸ்டைல் ஜனநாயகத்தில் ஒரு தீர்வு உண்டல்லாவா? கூட்டணி மூலம் அதிகாரத்தை பங்கு போடலாம். சில தொகுதிகளில் தங்கள் வாக்குகளின்றி எவரும் ஜெயிக்க முடியாதபடி அரசியல் செய்யலாம். இன்றும் பல இடங்களில் அவர்கள் ஓட்டை பெற கட்சிகள் ஆளாய் பறப்பதை பார்க்கிறோம்.//
Muslim league is a permanant ally of DMK and its splinter groups are allies of ADMK(except when they ally with BJP).. இந்திய ஜனநாயகத்தில் % representage இல்லாதவரை இது சாத்தியமில்லை.. உங்கள் கட்டுரையில் முஸ்லிம் என்பதை எடுத்துவிட்டு தலித் என்று போட்டுப்பாருங்கள்.. அதுவும் சரியாக பொருந்திவரும்.. முஸ்லிம்களின் நிலமை தலித்துக்ளை ஒத்ததே.. they have the numbers but its too scattered.. Education is the only way to solve this..

Anonymous said...
July 30, 2008 at 9:14 AM  

//இந்து கிரிமினல்
முஸ்லீம் காவலரை கொன்றான். வேறு பிரச்சினையில் முஸ்லீம் கிரிமினல் இந்து காவலரை கொன்றான். இறுதியில் 18 முஸ்லிம்கள் இறந்தனர்.//

திரும்ப திரும்ப சொன்னதை சொன்னால் எப்படி?

கொலையில் ஈடுபட்டது ஒரு கிரிமினல் மட்டுமல்ல. ஒரு கும்பல்.அந்தக் கும்பல் முஸ்லிம்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டது.

இதற்குமுன் எந்த முஸ்லிமும் இந்துவைக் கொன்றதில்லையா? அப்போதெல்லாம் ஏன் கலவரம் மூளவில்லை?(கிறிஸ்துவ உதாரணம் காட்டினால், நீர் குழப்பிவிட்டீர்.)

காரணம் இதுதான்.வீரப்பன் முஸ்லிம் அதிகாரியை கொன்ற மோட்டிவ் மதமல்ல,தன்னைப் பிடிக்க வந்த அதிகாரி எந்த மதத்தினன் ஆயினும் கொன்றான். அவன் செலக்டிவாக முஸ்லிம்களை மட்டும் கொன்றால் அவன் இந்து தீவிரவாதி எனப்பட்டிருப்பான்.

கோவையில் இந்துக்கள் முஸ்லிம்களை நசுக்குவதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனச் சொன்ன முஸ்லிம் இயக்கத்தினர் செய்ததால் இது முஸ்லிம் தீவிரவாதம் என்ப்படுகிறது.

மேலும் கிறுத்துவர் இந்துக்கள் தமது மதத்தினை முன்னிறுத்தி ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொலை செய்தால் அது மதத்தீவிரவாதம் தான்.

இந்து தீவிரவாதமும் பல பயங்கரவாதச் செயல்கள் புரிந்துள்ளது.அதனை எதிர்க்கிற இந்துக்கள் அதிகம்.உம்மையும் எம்மையும் போல. ஆனால் நான் குறிப்பிட்ட முஸ்லிம் அமைப்பு கோவையில் அக்காலத்தில் முஸ்லிம்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றது. இதை பயன்படுத்தி கொண்டது இந்து அமைப்புக்கள்.

புதுகையாரைப் போல் விவரமான ஆட்கள் அதிகம் இருந்திருந்தால் பிரச்சனை முற்றி இருக்காது.

Anonymous said...
July 30, 2008 at 9:54 AM  

//எல்லாம் சரி, இதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைதானே?, எவன் கண்ணசைத்தால் என்ன? கிரிமினல்களையும் ஆயுத பதுக்கல் காரர்களையும் போட்டு குமுற வேண்டியதுதானே! இதெல்லாம் போலீசுக்கு சொல்லியா தர வேண்டும்?

...தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசம் இல்லை எனலாம். இங்கு மத வெறி அமைப்புகளே பிரச்சினை செய்பவர்கள். திக, திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றை வடமாநில பாஜக போல மத அரசியல் செய்யும் கட்சிகள் என்று சொல்ல முடியாது.//

நல்ல காமெடி. பிரச்சனையே தமிழக பொலிஸில் அரசியல் குறுக்கீடுதான். அரசியல் செல்வாக்குப் பெற்ற சாதாரண கிரிமினலை கைது செய்தாலே மாவட்ட செயலர் குறுக்கிடுவார். இதில் எங்கு போய் செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் அமைப்பினரை கைது செய்வது?

மதானியை சிறை வைத்தற்க்கு பலர் கூப்பாடு போட்டனர். நேற்று செய்திதாளில் வந்த செய்திப்படி மதானி ஒரு தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

போலிஸ் முன்பு நன்றாகத்தான் செயல்பட்டது.(அட்லீஸ்ட் இந்தவிடயத்தை பொருத்தவரையில்). ஆனால் அவர்களீன் கரங்கள் கட்டப்பட்ட போதுதான் அவர்கள் அராஜக வழியை தேர்ந்தெடுத்தனர். இது குறித்து நான் எழுதியுள்ளேன்.

போலிஸ் செக் போஸ்டினை பிய்த்தெரியும் தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது. அது தமிழக அரசியல்வாதிகள் கொடுத்ததுதான். நீர் தமிழக அரசியல்வாதிகளை புகழ்ந்து எழுதி தமாஷ் பண்ணியுள்ளீர்.

தமிழக அரசியல்வாதிகளின் சூடோ-மதச்சார்பின்மைதான் இப்பிரச்சனைக்கு காரணம்.

முஸ்லிம் அமைப்பு ஆயுதங்களை பதுக்கிய போதில் நடவடிக்கை எடுக்க போலிஸை தடை செய்த்து, முதல் காரணம்.

பின்பு போலிஸ் இந்து கலவரக்காரர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர். போலிஸ் முன்னிலையிலேயே சில முஸ்லிம்கள்
கொல்லப்பட்டன்ர். போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்படி கடமை தவறிய போலிஸ் மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. விளைவு கோவை குண்டு வெடிப்பு.

ஆக கோவையில் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் சாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் காரணம்.
முதலில் முஸ்லிம் ஓட்டுக்காக போலிஸ் கையை கட்டிப் போட்டு முஸ்லிம்களை கொன்றனர். பின்பு போலிஸ் கோபித்துக் கொள்ளக்கூடாது என நடவடிக்கை எடுக்காமல் இந்துக்களை கொன்றனர்.

Anonymous said...
July 30, 2008 at 1:42 PM  

//திக, திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றை வடமாநில பாஜக போல மத அரசியல் செய்யும் கட்சிகள் என்று சொல்ல முடியாது.//

ஆமா இவங்க ரொம்ப நல்லவிங்க!

"கடந்த ஜனவரி 11-ம் தேதி நரேந்திரமோடி வந்ததற்கு, எங்களைக் கொடி பிடித்து போலீஸாரே எதிர்ப்பு காட்டச் சொன்னார்கள். நாங்கள் மறுத்ததும், பாதுகாப்புக் கைது என்ற பெயரில் பதினேழு நாட்கள் சிறையில் அடைத்தனர்" -சேக் அப்துல் கபூர் தீவிரவாதியென பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்.
செய்தி: ரிப்போர்ட்டர்.

தமிழக போலிஸாரே பிரச்சனை கிளப்புகின்றனர், பார்த்தீர்களா? இப்படி இந்து அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டி விடுவது பின்பு இந்து இயக்கங்கள் எதிர்வினையாற்றினால் அதை காட்டி முஸ்லிம்களிடையே அரசியல் செய்து ஓட்டு வாங்குவது... இதானே திட்டம்.

தமிழ்நாட்டின் போலிஸ் மந்திரி யாரென யோசித்து கண்க்குப் போட்டாலே புரிந்துவிடும். மக்கா உஷாரு!

கோவை விஜய் said...
August 7, 2008 at 12:08 AM  

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தமிழ் பொறுக்கி said...
August 8, 2008 at 2:04 PM  

காரசாரமான விவாதம் தான்..ஆனா கடைசியில் திலீப் படத்தை போட்டு ஏதோ காமெடி கீமெடி பண்ணுன மாதிரி இருக்கு...

தமிழ் பொறுக்கி said...
August 8, 2008 at 2:10 PM  

இப்போதைக்கு எவனும் இந்துவும் அல்ல, உண்மையான முஸ்லீமும் அல்ல...
மதம் மட்டுமே வைத்திருக்கும் யானைகள்..
சொல்லி பயனில்லை.. இவனுகளுக்கெல்லாம் இலக்கே அப்பாவி நாமதான்..
குண்டு வைக்கும் எவனும் தில் இருந்தா அத்வானி,மதானி, ராம கோபாலன் வீட்டுக்கு வைங்கடா டேய்..
உன் பொட்டத்தனத்தை ஏன் அப்பாவி மக்களிடம் காட்டனும்...

மோகன் கந்தசாமி said...
August 8, 2008 at 2:26 PM  

தமிழ் பொறுக்கி,

/////கடைசியில் திலீப் படத்தை போட்டு ஏதோ காமெடி கீமெடி பண்ணுன மாதிரி இருக்கு...////

பதிவுக்கு பொருத்தமா இருக்கும் -னு நெனச்சி போட்டேன்.

///குண்டு வைக்கும் எவனும் தில் இருந்தா அத்வானி,மதானி, ராம கோபாலன் வீட்டுக்கு வைங்கடா டேய்..////

நச்...

////உன் பொட்டத்தனத்தை ஏன் அப்பாவி மக்களிடம் காட்டனும்...////

ப்ச்...