Saturday, July 26, 2008

குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

· 81 comments


மக்கள் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றி பெறாது என்ற அரிச்சுவடி கூட தெரியாத சில அடிப்படைவாத முட்டாள்களே! உங்களுக்கு பிரச்சினையின் மையம் எதுவென்று விளக்க ஒரு மக்கள் தலைவனும் இல்லையா? எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேல் முஸ்லீமல்லாதோர் வாழும் நாட்டில் அவர்களுக்கெதிரான வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. முதலில் உங்கள் எதிரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் உங்கள் எதிரிகள் பலசாலிகள் அல்ல. எண்ணிக்கையும் மிகக்குறைவு. ஆனால் அவர்கள் மிகக் கொடூரமான சூத்திர தாரிகள். ஒட்டுன்னியைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அடுத்தவனை ஏய்த்து, அவன் உழைப்பில் வாழும் சமூக ஒட்டுண்ணிகள் பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? இனப்பெருக்கம் மட்டும்தான் அவைக்கு தெரியும். உண்ணுவது, உறைவது, உபாதைகளையும் அரிப்புகளையும் தீர்த்துக்கொள்வது அடுத்தவர் தயவில் தான். அவ்வொட்டுன்னிகளை ஆதார உயிர்களில் இருந்து பிரித்து பார்க்கத்தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

2002 படுகொலைகளில் பாதிக்கப்பட்டது யார்? படுகொலைகளுக்கு காரணமான அந்த ரயில் எரிப்பில் இறந்தவர்கள் யார்? இரண்டுமே அந்த சமூக ஒட்டுண்ணிகள் அல்ல. ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரிகள். ஐம்பது வருட காஷ்மீர பிரச்சினையானாலும் சரி! இன்றைய இந்தியாவின் துரதிஷ்ட சூழ்நிலையானாலும் சரி! அவர்கள் தான் உங்களுக்கும் எதிரிகள். அவர்களின் வலிமை என்ன? அவர்களின் திரைமறைவு வேலைகள் என்ன? அவர்களுக்கு எதிரான வியூகம் ஏதேனும் உள்ளதா உங்களிடம்? நிச்சயமாக இல்லை.

அவர்களின் வலிமையே அரசியல் அதிகாரமும் ஏவலாட்களுடனான அவர்கள் அணுகுமுறையும்தான். அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரத்திற்கு எதிராக என்ன செய்துள்ளீர்கள் நீங்கள்? வன்னியர் சமுதாயத்தை விட எண்ணிக்கையில் அதிகமான நீங்கள் அவர்கள் போல பதினேழு எம்.எல்.ஏ. -க்கள் வைத்திருக்கிறீர்களா? அவர்களிடம் ஆறு எம்.பி. -க்களும் இரு மத்திய மந்திரிகளும் உள்ளனர். இது எப்படி சாத்தியம்? சாதியம் என்பது கேவலம் என்று கருதப்படுவதாக சொல்லக்கூடிய தமிழகத்தில்தான் வன்னியர்கள் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதுநாள் வரை அடுத்தவன் கையையே எதிர் பார்த்துவந்த பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியை இன்று நீங்களும் காண்கிறீர்கள் தானே?
தமிழ் தேசிய உணர்வு தானே தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தந்தது! 40 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல், இன்று தமிழனுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியும் தானே! ஆனால் தமிழருக்குள்ளே உயர்சாதியினரிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியை இப்போது பார்த்து வருகிறோம்.

ஆகவே, அரசியல் எழுச்சி பெறுங்கள். மத ஒற்றுமை, தேச பக்தி போன்ற சமூக விழுமியங்களை அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவ்விழுமியங்களை போதிக்கும் எந்த அரசியல்கட்சியும் தன்னளவில் பின்பற்றுவதில்லை. எனவே, உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள்.

இன்று நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்களின் அடிப்படை பிரச்சினை என்ன என்பது நாம் அறிவோம்தானே! அவர்களைப் பார்த்து மீண்டுமொரு முறை கூறுவோம். "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

சில கொண்டைகள் கேட்க்கக்கூடும், "உனக்கேன் அக்கறை, அவர்களுக்கு இல்லாத அக்கறை" என்று. சில முஸ்லீம் நண்பர்கள் கேட்க்கக்கூடும், "இந்த ஈரோட்டு வேலையெல்லாம் உங்களுக்குள்ளே வச்சிக்கோ, அதிங்க பிரசங்கி வேலை வேண்டாம்" என. அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்று தான். "என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"

Read More......

Thursday, July 17, 2008

முதலிரவுக்கு முந்தய இரவு

· 23 comments

ஒரு கையில் பார்சல், மறு கையில் ஆபிஸ் பேக், காதுக்கும் தோளுக்கும் நடுவே செல்போனில் மிச்சமிருந்த அன்றைய பிசினஸ். முழங்காலால் கதவை முட்டித்தள்ளிய பார்த்தி திடுமென ஒருவினாடி சிலிர்த்தான்.

"அடச்சே! பயந்தே போயிட்டேன்டி!, இருட்டுல ஏண்டி உட்கார்ந்திருக்க, லைட்ட போட வேண்டியத்தான?"

"அத தேடிப்பாத்துட்டுதான் தாண்டா இருட்டுல உட்கார்ந்திருக்கேன் வெண்ண!"

லைட்டை போட்டவன் நபிஷாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். "இன்னைக்குத்தான் உன்ன முழுசா பாக்கறேன்! எப்படித்தான் அந்த கருப்பு கவுன நாள் பூரா மாட்டிகிட்டு திரியிற?

"ம்கும், கட்டிக்க போறவன் நீ பாக்கும்போதே எனக்கு கூசுது, மத்தவங்க பார்த்தா?" பர்தா விஷயத்தில் பலமுறை இவளிடம் பேசி தோற்றவன் அப்பேச்சை அத்தோடு விட்டான்.

"சரி வீடு புடிச்சிருக்கா? இனி நாம இங்கதான்"

"முதல்ல மேரேஜ் ஒழுங்கா முடியுதா பாக்கலாம், நாளைக்கு கையெழுத்து போடும்போது உங்கம்மா வந்து நின்னா நீ ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல எங்கியும் ஒளிஞ்சிக்க முடியாது, என் பர்தா தான்"

"அடச்சே! நாளைக்கும் அந்த கப்பு அங்கிய போட்டுகிட்டுதான் வரப்போறியா?"

சட்டென கடுப்பான நபிஸா, முதுகின் பின்புறம் இருந்த தலையணையை எடுத்து முழு பலத்துடன் வீசுவதுபோல் கவனமாக அவன் அருகில் எறிந்துவிட்டு, இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவள் எறிந்த தலையணையை கைப்பற்றிக்கொண்டு வந்தவன் அவளது இருக்கையின் முன்னிருந்த டீப்பாயை அவளருகே இழுத்து போட்டு அமர்ந்தான்.

"டே.....ய் வேணா....ம்., இன்னும் ஒருநாள் இருக்கு, கிட்ட வந்த சத்தம் போட்டு கத்திடுவேன்" என போலியாக எச்சரித்தவள் கால்களை எடுத்து இருக்கையின் விளிம்பில் வைத்துக்கொண்டு, கைகளால் முழங்கால்களை கட்டிக்கொண்டாள்.

"அய்யயே! இன்னும் தொடவே இல்ல அதுக்குள்ள இப்படி சுருங்கி உட்காந்துட்ட, கல்யானத்துகப்பரம், நைட்டு பூராவும் கெஞ்சரதுலே கழிஞ்சிரும் போலருக்கே!"

"அதை நாளைக்கு நைட்டு பாத்துக்கலாம், இப்ப நீ கொஞ்சம் தள்ளி உட்காரு"

ஆவலுடன் அவளருகே நகர்ந்த பார்த்தி அவள் முறைத்ததும் "ஓ! பின்னாடி தள்ளி உட்கார சொன்னியா? சாரி" என்றான். அவன் குறும்பை ரசித்தவள் அவளையறியாமல் மெலிதாக புன்னகைத்தாள். சற்றே தைரியம் பெற்றவன் அவள் கணுக்கால்கள் இரண்டையும் இருகைகளால் பற்றி அவளது முழங்கால்களை நீட்டியநிலையில் டீப்பாய் மீது வைத்தான்.


இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்ட நபிஸா, பேலன்ஸ் தவறியவள் போல அவன் மீது சரிந்தாள். அவளது முழங்கை இரண்டையும் அவனது தோள்களில் ஊண்றி நெற்றியோடு நெற்றி இடித்தாள். கடந்த இரண்டுவருட பழக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் இவ்வளவு அருகில் நெருங்கியதில்லை. சில வினாடி மவுனத்திற்குப்பின் தலையை ஒருபுறமாக சாய்த்து அவன் வலது காதில் கிசுகிசுத்தாள். "நாளைக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்குமாடா?"



"அறிவுகெட்டத்தனமா பேசாதடி அர லூசு!" என்று அவளது இடது காதை மென்மையாக கடித்தான் பார்த்தி. வலியை இன்பமாக உணர்ந்த நபிஸா அவன் கழுத்தை மாலையாக சூழ்ந்தவாறே தன் இடதுகையால் அவன் பின்னந்தலை முடியை பற்றினாள். அவளது மூச்சின் ஏற்ற இறக்கங்களுக்கு தக்கவாறு அவனது தலையும் அவள் மார்போடு சேர்ந்து அசைந்தது.

திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவன் தோளில் இருந்து விடுபட்டு அவன் கண்களை வெகு அருகில் பார்த்து கேட்டால் "நீ எந்த சூழ்நிலையிலும் மாறிடமாட்ட இல்ல?".

நொடியில் அவனது முகபாவனை மாறியது. "நீ ரொம்ப பேசற, கொஞ்சம் அடங்கு!" - விரலைச்சுண்டி அவள் மேலுதட்டை தட்டினான். வலிதாளாமல் அவள் உதட்டை உள்மடிக்க அவளது கீழுதட்டை அதே கணத்தில் கவ்வினான் கமலஹாசனின் வழமைபோல. இரண்டு வினாடிகள் பொறுத்தவள் மூன்றாவது நொடியில் அவனை அவனது பின்புறமாகவும் இருக்கையை அவளது பின்புறமாகவும் தள்ளிவிட்டு எழுந்தொடினாள். இதை சற்றும் எதிர்பாராத பார்த்தி அவள் ஓடிய திசையில் தனது இடது கையை வீசினான். அவள் மேலுடையின் பின்பாகம் அவன் கையேடு வருமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

முதுகை சாய்த்து சுவரில் தஞ்சம் புகுந்த நபிஸா கோபம் கொப்பளிக்க அவனை முறைத்தாள். எஞ்சிய அவளது உடை வியர்வையால் நனைந்து தொப்பலாகிப்போனது. தான் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டத்தை தாமதமாக உணர்ந்தவன் தலைகுனிந்தவாறே "சாரி டா" என்றான்.

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு,

"இப்ப எப்படிடா வீட்டுக்கு போறது நான்?, இன்னைக்கு வீட்டுக்கு போனாதான் நான் நாளைக்கு ரெஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு வரமுடியும்?" -பொறுமையாகவே கேட்டாள்.

"நான் வேணா போய் இதே போல ட்ரஸ் வாங்கிட்டு வந்திடட்டுமா?"

"நீ இதே ட்ரஸ்ஸ வாங்கிட்டு வந்தாலும் நான் வீட்ல கண்டிப்பா மாட்டுவேன், ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் நான் வீட்டை விட்டு வெளில வர முடியாது நாளைக்கு"

"சரி இப்ப ஒன்னும் பண்ண முடியாது, பேசாம இங்கவே தங்கிடு"

"ம்க்கும், ரெஜிஸ்டர் பண்ணப்பரம் கூட நம்மள நிம்மதியா உடமாட்டாரு உங்க மாமனாரு, இதுல இன்னைக்கு நைட்டே அவர அலர்ட் பண்ணிடலாம் -ன்றையா?, சுத்தம்"

"என்னதான் பன்னலான்ற நபிஸ்?"

"வேற என்னபன்றது! உசிர கைல புடிச்சிகிட்டு இன்னிக்கு ராத்திரிய ஓட்டவேண்டியதுதான், பர்தாவ அழுக்கு அங்கி, கப்பு துணின்னு கிண்டல் பண்ணியே, இன்னைக்கு அது இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!"

பார்த்திக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை. முதலிரவுக்கு முந்தய இரவு இப்படி திகிலாகிப்போகும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்கக்கூடும்?


டிஸ்கி: எம்மதத்தையும் சேர்ந்த உடை பழக்க வழக்கங்களையும் சிறுமை படுத்தும் நோக்கில் இக்கதையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மதங்களை துச்சமென நினைக்கின்ற, இருவேறு மதத்தைச்சேர்ந்த காதலர்களிடையேயான உரையாடலில் இயல்புத்தன்மை வேண்டி சில பெயர்ச்சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

Read More......

Wednesday, July 16, 2008

அடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா சாமீ!

· 20 comments

காமக்கதைகளை எழுத்து சுதந்திரத்தினின்று விதிவிலக்கம் செய்வது அது பதிவுலகில் சகஜமாவதை என்றென்றைக்குமாக தடுப்பதாகவே முடியும். மழையில் நனையும் கதாநாயகி தமிழ் சினிமாவாவில் சில ஆண்டுகளுக்குமுன் சகஜமில்லை. அதுபோல் இன்று சகஜமாக இல்லாத காமம் சார்ந்த எழுத்துக்கள் நாளை சகஜமாகிவிடும். சகஜமாவதை தடுக்கும் பத்தாம் பசலிகளுக்கு தமிழ்மணம் செவிசாய்த்துவிட்டதால் அது தடைபடப்போவதில்லை.

காமக்கதைகள் ஒன்றும் புரட்சி வித்துக்கள் அல்ல என்றாலும் சமூகத்தில் உள்ள எழுத்து சுதந்திரத்தின் உயிர்ப்பை உரசிப்பார்க்க தேவையாயிருக்கின்றன. இவைகளை அசூசையாக நினைப்பவர்கள் நடந்துகொண்ட விதம் அற்பமாக உள்ளது. தமிழ்மணத்திற்கு புகாரளித்தவர்கள் தாம் நியாயம் என நினைத்தவற்றை பதிவுகளாக இட்டு காமக்கதை எழுதியவர்களை பெயர் குறிப்பிட்டே சாடியிருக்கலாம். அது ஒரு விவாதத்தையாவது தொடங்கியிருக்கக்கூடும். அதைவிடுத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து தமிழ்மணத்தையும் தடுமாற வைத்துவிட்டனர்.

தமிழ்மணத்திற்கு தடுமாற்றம் இது முதன்முறையா என கேட்பவர்கள் தமிழ்மணத்தின் வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல் மற்றும் வனிகவியலை அறிந்தவர்களாக இருக்கக்கூடும். அடியேன் அறியேன். இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும். அதற்குள்ளாக தமிழ்மணம் தேவையின்றி நடவடிக்கை எடுத்து எழுத்து சுதந்தரம் விஷயத்தில் அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிட்டது. அறிவாளிகளும் வல்லுனர்களும் நடத்தும் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் ஒருவர் கூட இதை முன்னுணராதது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துசுதந்தரம் இன்றேல் வலைப்பூக்களே இல்லை என்பது அறிந்திருந்தும் தமிழ்மணம் தடுமாறியுள்ளது அதன் முன்னறிவிப்பில்லாத நடவடிக்கைகளே காட்டுகின்றன. நிருவாகவியலில் சிறந்த ஒரு நாட்டிலிருந்து இத்திரட்டி நடத்தப்படுவது முரண்.

இதை விட நகை முரண் என்னவென்றால் தமிழ்மணத்திற்கு எதிராக பதிவர் சுதந்தரத்திற்கு கொடிபிடிப்பவர்களில் சிலரது புனிதப்போர்தான். அவர்கள் தங்கள் பதிவுகளில் பின்னூடங்களை செலக்டிவாக வெளியிடுபவர்கள், பின்னூட்டம் எவ்வளவு டீசன்ட்டாக இருந்தாலும். கேட்டால் பெயரை குறிப்பிட்டு நையாண்டி செய்யும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை என பதில் வரக்கூடும். நைய்யாண்டி இல்லாத பின்னூட்டம் வேண்டுமானால் "ஹிண்டு" -வில் எழுதினால் தான் கிடைக்கும்.

அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் போல நாகரீகமான பின்னூட்டங்கள் சிலவற்றைக்கூட வெளியிட முகம்சுழிக்கின்றனர் சில மூத்த பதிவர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மன்னன் படத்தில் கவுண்டர் சொல்வதுதான் நியாபகம் வருகிறது. அடடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!

Read More......

Friday, July 11, 2008

உதவி பிளீஸ்!

· 29 comments

எனது முந்தய பதிவில் அனானி நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் ஏதும் தர முடியாத நிலையில் உதவி வேண்டி அவரது கேள்விகளையும் எனது பதில் பின்னூட்டத்தையும் பதிவாக இடுகிறேன்.

நண்பர் அனானி!

உங்கள் கேள்விகளுக்கு ஜாதகத்தை நம்பும் எவரேனும் பதிலளிக்கக்கூடும் என காத்திருந்தேன். பிறகு நானே முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் பதிலளிக்க முனைந்துள்ளேன்.

///1. Is the discipline of astrology comprehensive and complete?

நிச்சயமாக இல்லை. ஏனெனில் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட முடியாத ஒன்று விரிவானதாகவும் முழுமையானதாகவும் இருக்க முடியாது.

ஜாதகம் என்பது கோள்களின் இருப்பிடங்களை சங்கேதங்களால் குறியிட்டு வைக்கப்பட்ட ஒரு சுவடி. ஒரு குழந்தை பிறந்ததும் அது முதல் மூச்சை விடும்போது கோள்கள் இருந்த நிலையை குறித்து வைக்கின்றனர். கோள்கள் இடம் மாறும்போது நமது நடவடிக்கைகளும் தக்கபடி மாறுகின்றன என்பது ஜாதகம் கணிப்பதன் அடிப்படை ஆகும்.

ஒரு தெளிவில்லாதா, ஆதாரம் இல்லாத ஒன்று பிரசங்கப்படுத்தப்படும் பொழுது சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நம்மை கேள்விகேட்க தூண்டுகின்றன. நம் கேள்விகள்: 1) பயன்படுத்தப்படும் கோள்களின் அறிவியல் முழுமையானதா? 2) அவை தமது ஆற்றல் மூலம் நம் வளி மண்டலத்தை பாதித்து அதன் ஊடாக மனிதர்களின் சுவாசத்தை கட்டுப்படுத்துகின்றனவா அல்லது வேறு வகையிலா? 3) சுவாசம் வளர்சிதை மாற்றத்தை ஓரளவுக்கு நிர்ணயித்தாலும் நம் வாழ்வு முழுக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமா? 4) அவ்வாறு கட்டுப்படுத்தினால், கோள்களின் நகர்வுகள் ஒரே மாதிரியான விளைவுகளைத்தானே அனைவரிடத்திலும் ஏற்படுத்தமுடியும்? 5) வெவ்வேறான விளைவுகள் என்றால் முதல் சுவாசத்தில் கோள்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் தொடர வேண்டுமல்லவா? எனில் சுவாசித்தலின் வகைகளை விளக்கமுடியுமா?

இவை மிக மிக அடிப்படையான கேள்விகள். இவற்றிற்கே பதிலளிக்க முடியாத நிலையில் கிளைக்கேள்விகளுக்கு ஜாதகம் விடையளிக்கும் என கருத இடமில்லை.

///Which means there is no room for future correction, addition, deletion at all?///

கிளைக்கேள்விகள்: 1) பரிகாரங்கள் எவ்வாறு கோள்களின் நிலைகளை மாற்றி நம் நடவடிக்கைகளை சரிசெய்யும்? 2) ஒரே கணத்தில் பிறந்த பலரில் ஒருவர் பரிகாரம் செய்தால் மற்றனைவரின் குறைபாடுகளும் நிவர்த்தியாகிவிடுமா? 3) பரிகாரம் மற்றும் விதி இவற்றிடையேயான தொடர்பு அல்லது முரண் என்ன? 4) "உறுதியாக நம்புவதற்கு ஒத்திசைவாக காரணங்களை தேடுவது" என்ற சந்தேகத்தின் அறிவியலுக்கும் ஜோதிட கணிப்புகளுக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு மறுப்பது?

இது போன்ற கேள்விகளே நிலுவையில் இருக்க நீங்கள் கேட்கும் இந்த கேள்வி என்றும் விடைதெரியாத கேள்வியாகத்தான் இருக்க முடியும்.

////2. If this science(!?) depends on celestial objects, how does it factor in stars that die, stars that merge/fuse, stars born in future?////
///3. Could some one explain why only the nine planets and 27 stars/galaxies are considered for arriving at a formula? More importantly, why other galaxies, stars and other celestial objects are left out of this equation?////

கோள்களும் விண்மீன்களும் எவ்வளவு இருந்தாலும் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். கோள்களின் தேர்வு எந்த அடிப்படையானது என்ற தகவல் இல்லை. ஆற்றல் தான் ஜோதிடத்தின் அடிப்படை எனில் கணக்கில் எடுக்கப்படாத கோள்களின் ஆற்றல் புறக்கணிக்கத்தக்கதா என்ற கேள்வி வருகிறது. பூமிக்கு வெகு அருகில் உள்ள கோள்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்றால் அவற்றின் உண்மையான சுழற்சிகளுக்கும் ஜோதிடத்தில் நிர்ணயிக்கும் சுழற்சிகளுக்கும் சிறிது கூட சம்பந்தமே இல்லையே ஏன்?

///4. How to determine an astrologer is talented? What if s/he is half-baked or a quack? It ruins the predictions given by that person.////
ஹா ஹா ஹா ஹா

அனானி நண்பரின் கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் முயன்றேன் என்றாலும் என்னால் எதிர்கேள்விகளையும் சிரிப்பையும் தான் பதிலாக தரமுடிந்தது. சோதிட நிபுணர்கள் எவரேனும் பதில் தரக்கூடும். ஆனால் அவை முழுமையானதாகவும் விரிவானதாகவும் இறுதியானதாகவும் இருக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை.

Read More......

Wednesday, July 9, 2008

எமர்ஜென்சி பதிவு: டியர் செந்தழல் ரவி....

· 111 comments

டியர் செந்தழல் ரவி,

////அந்த பதிவு ஒரு தனிநபருக்கானதல்ல...ஒரு கான்ஸெப்ட் / தத்துவத்தை கேள்விகேட்கும் முயற்சியே...////

மிகத்தேவையான ஒரு முயற்சி இது. அம்முயற்சியை நீங்கள் மேற்கொண்ட இடம் .......... எவர் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தால் விவாதத்தை அருமையாக, சுவாரசியமாக எடுத்துசென்றிருக்கலாம். பெயர் குறிப்பிட்டு விவாதம் செய்தால் அதை ஸ்போர்டிவ் எடுத்துக்கொள்ள சுப்பையா சார் என்ன வாலண்டினா தமிழரசி போல் புதிய பதிவரா? நையாண்டியுடன் நீங்கள் கேட்ட நல்ல கேள்விகளுக்கு வெறும் கனல் மட்டும் பதிலாய் வந்தது ஆச்சர்யம் இல்லை. பிரச்சினையின் மய்யத்திற்கே சென்று, கலகம் விளைவித்து, செருப்படி பெற்று ஊரை திருத்த லூசுப்பய பெரியாரல்ல நாம்.

ஒரு ஓரமாக நாம் விவாதம் செய்வோம். ஜோசியம் உண்மையா உடான்ஸா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு பகுத்தறிவதில் உதவுவோம். அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லப்படும் ஆருடங்களுக்கு இயல்பாகவே காரணங்களை மேனுபாக்ச்சர் செய்துகொள்ளும் மனித மனம் நம்மை பகுத்தறிய விடுவதில்லை என்பதை விவாதிப்போம், ஜோசியத்தை முழுமையாக நம்புபவர்கள் பற்றிய கவலையை விடுத்து.

உங்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன். (ஆளுணர பாத்து ஆதரவு கடிதம் கூட கொடுத்துட்டேன்)

நன்றி,
மோகன் கந்தசாமி

டிஸ்கி: ஆகஸ்ட் எட்டுக்கு பிறகு தரும் ஆதரவிற்கு எந்த பயனுமில்லை. அதனால நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதரவு தரவே இப்பதிவு.

செந்தழல் ரவி கேள்விகள்
SP.VR. SUBBIAH பதில்கள்

ஆதரவு தருவோர் ஸ்மைலி பின்னூட்டமாவது இடவும்.

Read More......

Thursday, July 3, 2008

அடுத்தப் பதிவு ஆகஸ்ட் 8 -ம் தேதி.

· 16 comments

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் மோகன் கந்தசாமி

Read More......

Wednesday, July 2, 2008

இலைக்காரன்: எதிரிகளின் எக்காளம் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

· 18 comments

அம்மாவின் புகழ் பாடும் நல்ல நோக்கில் தொடங்கப்பட்ட "அம்மாவின் வலைஞர் பாசறை" இன்று தனி மனிதர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து வருகிறது. அம்மாவின் உண்மைத்தொண்டன் "இலைக்காரன்" அவர்கள் எழுதிய கட்டுரையை பாசறை வலைப்பூ நிர்வாகம் நிராகரித்து அவமானம் செய்துள்ளது. இதனால் "ச்சும்மா ட்டமாஷ்" வலைப்பூவிற்கு தனது கட்டுரையை அனுப்பி பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இலைக்காரனுடன் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், சக பதிவர் என்ற முறையில் அந்த தன் மானச் சிங்கத்தின் கட்டுரையை வெளியிடுகிறேன்.

எச்சரிக்கை: உடன் பிறப்புகளின் பின்னூட்டங்கள் கடுமையாக மட்டுறுத்தப்படும்.



இதய தெய்வம் அம்மாவின் ஆசியுடன் எனது முதல் கட்டுரையை இவ்வலைப்பூவில் தொடங்குகிறேன். இன்றைய தேதியில் இந்திய தேசத்தை பிடித்தாட்டும் பேய்களென விளிக்கத்தக்கன மூன்று. அவற்றுள், அறிவாலயத்தில் வேரூன்றி திராவிட தேசமெங்கும் விழுதுவிட்டு சமூக நீதியின் பேரால் அனுதினமும் அக்கிரமங்கள் செய்துவரும் கிழட்டு ஆலமரம் தி.மு.க. முதன்மையானது. அடுத்தது தொட்டதற்கெல்லாம் தொனதொனக்கும் பத்தாம் பசலிகளான பொதுவுடமைப் பிசாசுகள். மூன்றாவதும் முக்கியமானதும் ஆன குட்டிச்சாத்தான்கள், நம் வலைப்பூவெங்கும் தேசபேதமில்லாமல் வியாபித்திருக்கும் திராவிட திம்மிகள். இவை வேறுயாருமல்ல, நம்மிடமிருந்தே இழிவான சொல்லாடல்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றை நம்மைநோக்கியே எய்யும் தீயசக்க்திகள். சுருங்கச்சொன்னால் நம்ம பிட்ட எடுத்து நமக்கே போடும் பயல்கள்.

இவற்றில் முதல் பிசாசை ஓட்டும் சூட்சமம் அம்மாவுக்கு அத்துபடி. டெல்லியில் அதிகாரத்தை பிடித்தவுடன் பொதுவுடமைப் பிசாசுகளும் ஆணி அடிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த மூன்றாம் வகை சாத்தான்களை ஓட்டுவது மட்டும் நம்மைப்போன்ற தொண்டர்களிடம் காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. தயாராவோம், விருட்டெனவெழுந்து வாருங்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டுவரும் பிராமிணர் அனைவரையும் திரட்டுவோம். நம் சமூக மேன்மையை மீட்டு, திராவிட திம்மிகளை மீண்டும் அடக்கி, 1967 -க்கு முந்தய அந்த பொற்கால சூழலை மறுபடியும் கட்டமைப்போம். அணிதிரண்டு வாரீர்.

இந்த ஆதிக்க மீட்புப்போரில், நம் வியூகங்களை செயல்படுத்த பெருத்த அளவில் உடலுழைப்பு வேண்டுமே! இது எவ்வாறு நம்மில் சாத்தியம்? ஆசிட் வீச்சுகளுக்கும், ஆட்டோக்களுக்கும் மேலிட அனுமதி இனி எளிதாக கிடைக்கும் என்றாலும், செயல் படுத்தப் போவது யார்? பொருட்செலவுகளுக்கு நிதி எப்படி வரும்? எல்லாம் நியாமான கேள்விகள் தான்.

இதற்கு திராவிட திம்மிகளிலேயே ஆள் சேர்ப்பதுதான் சரியான வழி. புரட்சித்தலைவர் என்ற ட்ரம்ப் கார்டு இருக்கும் வரை இதற்கு கவலையில்லை. எனவே, மக்கள் திலகத்தின் படங்களை தூசுதட்டி எடுப்போம். தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ஆட்களையும் பொருளையும் சேர்ப்போம். அம்மா ஓய்விலிருக்கும் இந்த ஆறு மாத காலமும் நாம் பம்பரமாய் சுழல்வோம். அடுத்த ஓய்விற்கு அம்மா தயாராகுமுன், இடைப்பட்ட காலத்தில் அம்மா தரிசனம் பெற்று, அவர் வகுத்துத்தரும் திட்டங்களை செவ்வனே செய்து முடிப்போம்.

வியூகங்களிலிருந்து சற்றும் மாறாமல் உழைத்தோமென்றால் இந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே டெல்லியையும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகமும் நம் வசமாகிவிடும். பிறகு காஞ்சிபுரம் முதல் காசிவரை நாம்தான், செங்கல்பட்டு முதல் நாகர்கோயில் வரை எல்லாம் நமக்கு கீழ்தான்.

அண்ணாவுக்கு இட்ட நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். -ருக்கு இட்ட நாமம் வாழ்க.

ஜெய் பஜ்ரங்கு பலி!

Read More......

எர்ரோட்டிக்கா: மெக்சிகோ மறைவுப்பட நடிகை கெர்ரி யான் பேட்டி

· 14 comments

அமெரிக்க மறைவுப்பட உலகின் முன்னணி நட்சத்திரம் கெர்ரி யான், தோழர் எர்ரோட்டிக்கா -விற்கு அளித்த பேட்டியின் ஆங்கில மொழியாக்கத்தை ச்சும்மா டமாஷ் வாசகர்களுக்காக தமிழ் மொழியாக்கம் செய்து தருவதில் பேருவுவகை கொள்கிறேன். இப்பதிவின் பின்னூட்டங்களுக்கு எர்ரோடிக்கா பதிலளிப்பார், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் வெளியிடுவதுடன் மட்டுறுத்தலையும் மேற்கொள்கிறேன்.


நொடியில் வெடித்து எங்கும் வியாபிக்கும் வகையிலான புகழுக்கு சொந்த்தக்காரர் இந்த 32 வயது மறைவுப்பட நடிகை கெர்ரி யான் ரோட்ரீகஸ். அமெரிக்க மறைவுப்பட சந்தையில் நாற்பது சதம் இவரது குழுவினரிடம் உள்ளது. அது மேலும் ஏற்றம் கண்டு வரும் நிலையில் ஒரு நேர்முகத்திற்காக அவரை சந்தித்தேன். குடும்பத்தினருக்காக அவர் செலவழிக்கும் ஒரு இனிய ஞாயிறு மதிய வேலையை எனக்காக ஒதுக்கினார்.


தொழில் ரீதியில் உங்களை பின்பற்றுவோர், உங்கள் பரம விசிறிகள் தவிர்த்து ஏனையோர்க்காக இதை கேட்கிறேன், எங்கு தொடங்கினீர்கள்? வாழ்வின் பின்பகுதியில் ஏன் மறைவு படங்களுக்கு வந்தீர்கள்?

2004 -வாக்கில் ஜெனிசிஸ் இதழில் நடுப்பக்கங்களுக்கு போஸ் கொடுத்து வந்தேன். அங்குதான் எல்லாம் தொடங்கியது என நினைக்கிறேன். அதற்கு முன் ஸ்பானிய மொழி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தேன். 18 வயதில் ரோட்ரீகஸ் -ஐ திருமணம் செய்த கையேடு இருவரும் புயூபுலோ நகரிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தபோது முதலில் பழங்களை பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தோம். அது பழைய கதை. நிலைப்படங்களில் என்ன சாதித்து விடமுடியும்? ஜெனிசிஸ் இதழுக்கு பிறகு எனது இயல்பான அடுத்த தேர்வு ஸ்ட்ரிப் கிளப் -கள் தான். பிறகு மறைவுப்படங்கள்.


ங்கள் அடுத்த முயற்சியான சொந்த மறைவுப்பட நிறுவனம் உங்களுக்கு களப்பணிகளில் இருந்து ஓய்வுதருமா?


ற்போதைக்கு நான் காமிரா முன்பாக தோன்றி வருகிறேன். அடுத்து நானே இயக்கவிருக்கும் மறைவுப்படத்தின் உள்ளடக்க உரிமை என்னிடமே வைத்துக்கொள்ளப்போகிறேன். பிறகு ஜி.ஐ.எல்.எப். வகைப்படங்களில் இருந்து முழுமையாக விலகிவிடுவேன். நாட்கள் முதுமையை நோக்கித்தான் நகரும், இளமையை நோக்கி அல்லவே!


ஜி.ஐ.எல்.எப். வகை தவிர்த்து நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் புளித்துப்போன எம்.ஐ.எல்.எப்.வகை பாத்திரங்களே அன்றி "கவர்ச்சியான மனைவி" போன்ற பாத்திரங்கள் அல்ல. ஆனாலும் உங்கள் வெற்றி எப்படி சாத்தியமானது?

நிச்சயம் எம்.ஐ.எல்.எப். வகை மறைவுப் படங்களுக்காகத்தான் நான் விரும்பப்படுகிறேன். நான் அதை விரும்புகிறேனா? தெரியவில்லை. ஆனால் அதோ பாருங்கள், அவர்கள் இருவரும் என் குழந்தைகள்தான். எம்.ஐ.எல்.எப் வகைக்கான வயதுதான் தற்போது என்வயதும். எனவே இவ்வகைப் பாத்திரங்களை ஏற்கும் போது ஒரு இயல்பாகவும், முந்தயநாள் இரவு "ஹோம் வொர்க்" செய்தது போலவும் ஒரு திருப்தியாக செயல் படமுடிகிறது.


நீங்கள் இயக்கப்போகும் மறைவுப் படத்தில் என்ன புதுமை இருக்கும்?


நான் விரும்புவது எல்லாமே கிரேசி ஸ்டப் -கள் தான். எலிவேட்டரில் உறவு, காரில் உறவு, நீச்சல் குளத்தில் உறவு, நெடுஞ்சாலை ஓரத்தில் உறவு என பலவற்றை யோசித்து வைத்துள்ளேன்.



நீங்கள் சொல்லும் எலிவேட்டரில் உறவு வழக்கமாக நாங்கள் பார்த்துவரும் எலிவேட்டரில் உறவு -களிலிருந்து எவ்வாறு வேறானது?

தாவது முடிச்சு கண்டிப்பாக வைப்பேன். செய்யும் போதுதான் அது என்னவென்று முடிவாக தெரியவரும். பெரும்பாலும் ஒரே மாதிரியான காட்சிகளில் வேறுவேறான பெண்கள் தோன்றும் படங்கள்தான் வெளிவருகின்றன. என்னுடையது நிக் ஆர்லியன்ஸ் செய்த வகைபோன்று இருக்கும். அவருடன் நான் பணிபுரிந்த நாட்களில் நான் கற்றவை ஏராளம். அவர் இயக்கிய எந்த படத்திற்கும் "பொசிசன் நிபுணர்களை" நியமித்தது இல்லை. அவரே ஒரு நிபுணர்தான். டிரிபுள் பெனிட்ரேசனுக்கு பிறகுகூட நான் ஆயாசமாக உணர்ந்தது இல்லை. டபுள் டக்கர் தான் அவரது பேவரைட் வகை. அவரது படங்களில் எப்போதும் நெஞ்சைத்தொடும் காதல் கதை ஒன்றை வைத்துவிடுவார். காமம் எப்போதும் காமம் தானே. அதில் வித்தியாசம் ஏது? சொல்லும் விதத்தில் தான் வித்தியாசத்தை வைக்கமுடியும்.


யாரிப்பில் இருக்கும் உங்கள் மறைவுப் படங்களைப் பற்றி சொல்லுங்கள்


விவிட் நிறுவனத்தின் படமொன்று வரவிருக்கிறது. அவர்களது தயாரிப்பு எப்போது தரமானது, ஆனால் வெளிவர நாளாகும். விக்டு நிறுவனத்தின் படமொன்று தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் உள்ளது. இதில் மகளின் காதலனுடன் எனது உறவைப்பற்றிய கதை உள்ளது.


துவரை நீங்கள் பங்காற்றிய படங்களில் நீங்கள் உறவு கொண்ட துணைகளைப் பற்றி சொல்லுங்கள்.


நான் ஒருபோதும் மனிதர்களின் தராதரத்தை சீர்தூக்கிப் பார்க்கும் வேலையைச் செய்வதில்லை. நான் உடையை களையும் வரை அவர்கள் நண்பர்கள், நான் மீண்டும் அணியும் வரை துணைவர்கள். அவ்வளவே. தொழில் ரீதியில் வைத்துக்கொள்ளும் உறவைத்தவிர வேறெந்த உறவையும் குடும்பத்துக்கு வெளியே வைத்துக்கொண்டதில்லை. என் கணவரை மதிப்பவள் நான். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய உடனேயே கூட கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தயங்கியதில்லை. ரோட்ரீகஸ் -ஐ முழுமையாக புரிந்து கொண்டவள் நான்.

ங்களது மறைவுப் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

"முத்தம், பலி மற்றும் அதிவேக பூனைக்குட்டி"


ங்கள் முதல் படம்?

"நிர்வாண மடந்தையின் அந்த எட்டுமணி நேரம்"


முதல் கார்?

ரெனோல்ட் லெக்கார்


பிடித்த உணவு?

லிமா சொபா


பிடித்த பொசிசன்?

மிஷனரி


ங்களால் தவிர்க்கவே முடியாத நவீன வசதி?

ன்டர் நெட் இணைப்பு


முதலில் பார்த்த மறைவுப்படம்?

பெயர் மறந்து விட்டது. அது செஸ்லி லெஇன் நடித்தது.


பிடித்த படம்?

"எ கிளாக் வொர்க் ஆரஞ்"


பிடித்த பொழுது போக்கு ஸ்தலம்?

மேரிக்காவில், சான் டியாகோ


நீங்கள் பார்க்க விரும்பும் நபர்?

ஜானி டெப்


ங்கள் ஞாயிறு என்னால் பாழானதற்கு மன்னியுங்கள்.


ரவாயில்லை. நான் பாட்டியானதும் மீண்டும் வாருங்கள். வருவீர்களா?


-எர்ரோட்டிக்கா


Read More......