Showing posts with label சில்ப்பா குமார். Show all posts
Showing posts with label சில்ப்பா குமார். Show all posts

Thursday, June 11, 2009

என் பிகருக்கு கல்யாணம் அல்லது கந்தசாமி பெண் பார்த்த கதை

· 44 comments

நேற்று விடியற்காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேசாத என் அம்மா அழைத்திருந்தார். எனது திருமண முயற்சிகளில் சொர்ந்துபோனவர் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று எல்லாவற்றையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்தமுறை கூட என் திருமண விஷயமாக எங்களிருவருக்கும் பெருத்த சண்டையாகி தொலைபேசி இணைப்பை பாதியிலேயே துண்டித்திருந்தார். இம்முறை அழைப்பு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை சொல்வார் என்று நினைத்திருந்தேன்.

"டேய், இதுதான் ஃபோன் நம்பர். அஞ்சே அஞ்சு நிமிஷந்தான், அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பேசினன்னு தெருஞ்சுதுன்னா கொன்னுடுவேன்!" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதற்கு முன் பலமுறை பெண் பார்த்து படங்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை திறந்து கூட பார்க்காமலே "அந்த அஞ்சு நிமிஷ மேட்டர் என்னாச்சு என்று தான் கேட்பேன். நான் முதலில் ஒகே சொன்னால் அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்பார். இது வேலைக்காகாது, முதலில் அஞ்சு நிமிஷம், பிறகுதான் ஓகே என்று வாதிட்டுப் பார்த்தேன். விடாப்பிடியாக நிராகரித்துவிட்டு அடுத்த பெண் தேட ஆரம்பித்துவிடுவார். பெண் அழகாக இருந்தால் நான் அஞ்சு நிமிஷ மேட்டர் பற்றி எதுவும் பேச மாட்டேன் என நினைத்துவிட்டார் போலிருக்கு.

நல்ல ஃபிகரெல்லாம் இப்படியே கைநழுவிப்போக, வேறொரு உபாயம் செய்தேன். சும்மானாச்சும் ஓகே சொல்லி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு பிறகு பிடித்தால் ஒப்புக்கொள்வோம், இல்லாவிட்டால் இழுவையாக நீட்டி பிறகு மறுத்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஒரு சுமாரான ஃபிகர் படம் வந்தபோது ஓகே சொல்லிவிட்டு அஞ்சு நிமிஷத்திற்கு அனுமதி வாங்கினேன். நிச்சயம் நிராகரிக்கும் எண்ணத்துடன் பேச்சை தொடங்கினேன்.

என்ன பேசினோம் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குள் என் மனசாட்சி.

"ஹலோ!, நான் மோகன் பேசறேன், நியூ ஜெசியிலேர்ந்து, மிஸ். கவிதாகிட்ட பேசமுடியுமா?"

"ஹாங்... நான்தான் பேசறேன், எப்படி இருக்கீங்க? அப்பா எட்டு மணிக்கு போன் பண்ணுவீங்கன்னு சொன்னாரு?!"

(எட்டு அஞ்சு தான ஆகுது! இதுவே லேட்டா?) ஏன், வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?

அதெல்லாம் இல்ல, ஃபிரன்ஸ் கால் பண்ணுவாங்க, மிஸ் பண்ண முடியாது!

(நியூஜெர்சி கால் -ஐ விட சைதாபேட்டை கால் முக்கியமா?) அப்படியா? சாரி!

"சரி விடுங்க! ஃபோன்ல பேசினா ஒன்னு கேட்கனும்னு இருந்தேன், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா!"

(வாட் ஏ டெட்லி கொஸ்டின் ?!?)"சிகரெட்டா! நானா!..ஏன் கேட்கிறீங்க!"

"சும்மாதான் கேட்டேன்"

"இல்ல தம் அடிக்கமாட்டேன்!"

"அப்புறம் ஏன் உங்களுக்கு தொண்டை பெருசாயிருக்கு?"

"தொண்டையா?, சிகரெட் பிடிச்சா தொண்டை பெருசாகும்னு யாரு சொன்னா?,(பயங்கர கண்டுபிடிப்பா இருக்கே!) உதடுதான் கறுப்பாகும்!"

"ஆமாம் உங்க உதடு கருப்பாதான் இருக்கு! நீங்க சிகரெட் பிடிப்பீங்கதான?"

(என்னங்கடா இது!!)"இத பத்தி அப்புறம் பேசுவோம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"

"நீங்கதான சம்பாதிக்கப் போறிங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அத சொல்லுங்க!"

"MS"

"எந்த ஃபீல்டு?"

(ம்ம்..என்ஃபீல்டு)" ஐடி"

"என்ன டெக்னாலஜி"

"ஜெ2ஈஈ"

"ஒ! அப்படியா? ஸ்பெஸிபிக்கா என்ன?"

(ஏன், வேற வேல வாங்கித்தரப் போறியா!) "Struts, Hibernate"

"Struts ஒண்ணா டூவா"

(ஆஹா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?!!?) "ஒன் பாயின்ட்..."

"ஓல்டு டெக்னாலஜி" -இன்னுமா அப்டேட் பண்ணல?"

"(சரி, அந்த வெள்ளக்காரன்கிட்ட மாத்த சொல்றேன்!) சரி உங்களப் பத்தி சொல்லுங்களேன்!"

அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?

"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?"

"அங்க யாரையாவது லவ் பண்ணிங்களா!"

"(லவ்தான!!) ஆமா, இப்ப ஒரு ஸ்பானிஷ் காரிய லவ் பண்றேன்! இதுக்கு முன்னாடி ஒரு கருப்பிய லவ் பண்ணேன், அதுக்கு முன்னாடி..."

"சும்மா கத உடாதிங்க, நீங்க ஒரு தொட நடுங்கின்னு உங்கம்மா சொல்லிட்டாங்க!"

"சரி... நிறைய பேசிட்டம்னு நினைக்கிறேன்... என் அம்மா கிட்ட சொல்லி உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்!, வச்சிடவா?"

"அதெல்லாம் வேணா எதுக்கு! நான் எங்கப்பாகிட்ட என் முடிவ சொல்லிட்டேன்!"

"(முடிவே பண்ணியாச்சா!)என்ன சொன்னீங்க!"

"வேற இடம் பாக்க சொல்லி!"

"வேற எடமா? அப்பறம் என்ன ம்ம்..மசி... எதுக்கு போன் ல பேசின!"

"எனக்கு இஷ்டமில்ல, உங்க வீட்லதான் திரும்ப திரும்ப கால் பண்ணாங்க!"

"ஆ.!!?!?..."

அப்போது பல்பு வாங்கியவன்தான், அதன் பிறகு இந்த அஞ்சு நிமிஷ மேட்டர் வேலைக்காகாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் இந்த முறை எப்படியாவது தெளிவா பேசிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்து, மனதிற்குள் ஓரிரு முறை சொல்லிப்பார்த்து இருக்கிறேன். என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது. இம்முறை எப்படியும் ஃபிகர மடிச்சிட... மன்னிக்கவும் பெண்ணிற்கு பிடித்த மாதிரி பேசி அசத்த வேண்டும். இந்த முறையும் பல்பு வாங்கினால் அம்மா பார்க்கும் பெண்ணை ஃபோட்டோ
பார்க்காமலே கூட திருமணம் செய்ய வேண்டிவரலாம்.

நம் பதிவுலகில் தங்க மணிகள் பற்றிய அனுபவப்பதிவுகள் நிறைய வந்துள்ளன. திருமணத்திற்கு முன் இவ்வாறு பல்பு வாங்கி பிறகு மீண்டவர்கள் யாராவது இருந்தால் ஐடியா கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அதான் ஒரு சிறு மொக்கை. பொறுத்ததருள்வீராக! தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை என்று ஏதாவது பஜார் புத்தக மேதாவிகள் சொல்லக்கூடும். இதற்கும் ஒரு மாப்பு கேட்டுக்கிறேன்!

Read More......

Wednesday, April 1, 2009

தரும(மற்ற) புரி - நாங்களும் ரவுடிதாண்டா!

· 12 comments

ஈகைத்தருமம் நிறைந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சிசெய்த பகுதிகளை உள்ளடக்கியது இன்றைய தருமபுரி மாவட்டம் என்று நாம் படித்திருப்போம். நான் அங்கு படித்த ஓரிரு வருடங்களில் தருமபுரி நகரம் தருமம் நிறைந்த நகரமா என்பதை அறிய முடியாவிட்டாலும் அது ஒரு ரவுடிகள் நிறைந்த இடம் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வீட்டுக்கொரு ரவுடி என்ற பாரம்பரியத்தைக் கொண்டது அந்நகரம். நெசவாளர் காலனி முனுசாமி, வென்னாம்பட்டி ரவி, பள்ளித்தெரு ராஜா, பஸ்டாண்டு ரசாக், டி.ஆர் -ஐ தாக்கிய எஸ்.ஆர், ஸ்டேடியம் ஜிம் குமார், என்று பலர் அங்கு ரவுடிப் பள்ளிகள் நடத்தி சேவை செய்து வந்தனர். அரசியல் ரவுடிகளை விட சுயேச்சை ரவுடிகளுக்கு நல்ல மவுசு இருந்தது. இவர்கள் தவிர காக்கி உடையில் பல ரவுடிகள் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் இருந்தார்கள்.

இவர்களில் ஜிம் குமார் தான் எனது ஜிம் மாஸ்டர். பள்ளித்தெரு ராஜா -வுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. இவர்கள் தவிர ஆராயி என்ற பொம்பள ரவுடி ஒருவர் ரயில்வே ஸ்டேசன் அருகில் இருந்தார். வெகு குறுகிய காலமே இவர் அப்பகுதியை ஆட்சி செய்தார். திடீரென ஒருநாள் அவர் காணாமல் போய்விட்டார். ரொம்ப கவர்ச்சியான ரவுடியாகிய இவருக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் பணம் கறப்பதுதான் முக்கிய தொழில். இரவு ஒன்பது மணியானதும் ரயில்வே ஸ்டேசன் சாலையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சிலம்பம் பயிற்சி செய்வார். சேலையை வேட்டிபோல் மடித்து கட்டிக்கொண்டு ஓரிரு அல்லக்கைகளுக்கு கற்றுத்தருவார்.

ஒருமுறை சில ஆந்திரா மாணவர்கள் ஆராயியிடம் மாட்டிக்கொண்டனர். பணம் பறித்துக்கொண்டு சிலர் கன்னத்தில் அறையும் கொடுத்திருக்கிறார். அவர்களில் கொஞ்சம் தைரியமான மாணவர் ஒருவர் "உன் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். உடனே கோபத்தின் உச்ச்சிக்கே போய்விட்ட ஆராயி தன் மார்பை திறந்து காட்டி இருபுறத்திலும் பச்சை குத்தியிருந்த தன் பெயரை பார்த்து படித்துக்கொள் என்று சொல்லிவிட்டாராம். பார்த்து பயந்துபோய் அலறிவிட்டார்கள் அம்மாணவர்கள். ஒரு துடுக்கான மாணவர் தனக்கு தமிழ் சரியாக படிக்கத்தெரியாது என்றும் அதனால் பொறுமையாக பார்த்து படித்து பெயரை தெரிந்து கொள்வதற்காக இன்னொருமுறை திறந்து காட்டச்சொல்லி கேட்டிருக்கிறார். செமைக்கடுப்பான ஆராயி அவரை அடித்து துவைத்துவிட்டார்.


பெரும்பாலும் போலீஸ்காரர்களுக்கு உற்ற தோழர்களாகத்தான் ரவுடிகள் இருப்பார்கள் என்பது உலக வழக்கு. ஆச்சர்யமான ஒருவிசயம் என்னவென்றால் போலீஸ்காரர்களுக்கும் பள்ளித்தெரு ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தும். மனிதர்களில் வேறுபாடு பாராட்டாமல் எல்லோரையும் ஒரே விதமாக மொக்கை போடும் இவரது இயல்பு தான் அதற்கு காரணம். போலீஸ்காரர்கள் இவரது தலையைக் கண்டாலே அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

அரசு மருத்துவமனைக்கு பின்னால் ஒருபகுதியில் நான் எனது கல்லூரி நண்பர்களுடன் தங்கி இருந்த சமயத்தில் ரயிலடித் தெருவில் ஒரு சூதாட்ட கிளப் இருந்தது. காலையில் இருந்து மாலை ஆறுமணிவரை சீட்டாடிய களைப்பில் நம்ம பள்ளித்தெரு ராஜா கிளப்புக்கு வெளியே ஒருமணிநேரம் ரெஸ்ட் எடுப்பார். ஆறுமணி வாக்கில் நான் வீட்டுக்கு வரும்போது என்னைப் பிடித்துவைத்து ஒருமணிநேரம் மொக்கை போட்டுவிட்டுத்தான் அடுத்த இரவு ரவுண்டுக்கு சீட்டாட செல்வார். அதேபோல் காலையில் ஒன்பது மணிக்கும் ஒரு மொக்கை உண்டு.

அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு காலையில் ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலையை ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் செய்துவந்தார். மகா வெகுளியான அந்தப் பெண் குண்டலப்பட்டியிலிருந்து காலையில் தருமபுரி வந்து அப்பகுதியில் இருந்த சுமார் முப்பது கடைகளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்துவிட்டு மாலைவரை வேறெங்கோ வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வார். அந்த சீட்டாட்ட கிளப்புக்கும் அவர்தான் தண்ணீர் பிடித்து வைப்பார். அரசு மருத்துவமனையில் அச்சமயம் பணியாற்றி வந்த கண்ணன் என்ற ஆப்டீசியன் அந்த கிளப்பில் சீட்டாடி பணத்தை விடுவது வழக்கம். தண்ணீர் வைக்க அந்த பெண் கிளப்புக்கு சென்றால் அவ்வப்போது அவரிடம் சில்மிஷம் செய்யும் வேலையை இவர் நெடுநாளாக செய்து வந்திருக்கிறார். நம்ம ராஜா அங்கு இல்லாவிட்டால் கண்ணனுடன் சேர்ந்து சில மைனர் குஞ்சுகள் அப்பெண்ணை அலரவைப்பார்கள். இதனால் அப்பெண் தினமும் என்னிடம் வந்து ராஜா கிளப்புக்கு வந்துவிட்டாரா என்று கேட்டுவிட்டுத்தான் அங்கு தண்ணீர் வைக்க செல்வார். சமயங்களில் வெகுநேரமாகியும் ராஜா அங்கு வந்திருக்க மாட்டார். அந்நாட்களில் அப்பெண் பயந்து பயந்து அங்கு சென்று வருவார். எனக்கு எப்போதும் காலை வகுப்புகள் அரசு மருத்துவ மனையிலும் மாலை வகுப்புகள் பெரியாம்பட்டி கல்லூரியிலும் நடக்கும். காலை வகுப்புகளை பெரும்பாலும் கட் அடித்துவிட்டு கிளப்புக்கு எதிரில் இருக்கும் எங்கள் வாடிக்கையான செட்டிநாடு மெஸ்ஸில் ஆச்சியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பேன். இதனால் கிளப் சங்கதிகளும் அப்பெண் பற்றியும் எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.

அப்பகுதியில் இருத்த ஒரு ஜவுளிகடையில் புதிதாக ஒரு டைலர் வந்திருந்தார். வெகு அபூர்வமாக பேசுவார். அவரை பார்த்தாலே நோன்ஜான்களுக்குக் கூட அடித்து பணம் பிடுங்கத்தோன்றும். சவுத் -இலிருந்து வந்தவராம். அநாதை என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட மனிதர் திடீரென்று ஒருநாளில் இருந்து எங்கள் மெஸ்சுக்கு காலையில் வந்து என்னை தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிவிட்டுப் போகும் வழக்கத்தை மேற்கொண்டார். இது எனக்கு வினோதமாக தோன்றினாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் அவரை கேட்கவில்லை. அவரும் அதற்குமேல் எதுவும் பேசமாட்டார்.

ஒருமுறை ஜி.எம் தியேட்டருக்கு நண்பர்கள் ஏழெட்டு பேராக இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல முதல் அரைமணி நேரத்திலேயே நான் மட்டும் தனியாக வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தியேட்டரில் இருந்து யாரோ என்னை தொடர்ந்து வருவதுபோல் தோன்றினாலும் வீட்டுக்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன். அந்த டைலர் என்னை தொடர்ந்து வந்து அருகில் நெருங்கினார். முகம் உப்பியிருந்தது. நிறைய அழுதிருப்பார் போல இருந்தது. "என்னங்க ஆயிற்று, என்ன விஷயம், ஏன் என்னை தொடர்கிறீர்கள் என்று கேட்டேன்?" பொலபொலவென அழ ஆரம்பித்த அந்த டைலர் தன் மனைவியின் தாலியை ஆப்டீசியன் கண்ணன் பறித்துக் கொண்டதாகவும் மேலும் தன் மனைவியின் சீலையை அவிழ்த்து அவமானப் படுத்தியுதாகவும் சொன்னார். நான் கண்ணனுடன் மருத்துவமையில் பணிபுரிவதாக நினைத்து என்னிடம் சொன்னார் போலிருக்கு. எனினும் அவர் இந்த விசயத்தைச் சொன்னவுடன் எனக்கு கோபத்தில் தலை பாரமாகிவிட்டது. வெறியில் பற்கள் இறுகின. கண்ணனின் கதையை இன்றோடு முடமாக்குவது என்று முடிவெடுத்தேன். சினிமா விட்டு நண்பர்கள் வருவதற்குள் இதை சமயோசிதமாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன்.

எனது பைக்கில் அவரை அழைத்துக் கொண்டு நேராக பள்ளித் தெருவுக்குப் போனேன். ராஜா இந்நேரம் குடித்துவிட்டு தன்னிலை மறந்து இருப்பாரென்று நன்றாக தெரியும். அவரை அணுகுவது ஆபத்தானதும் கூட. போகும் வழியில் அவரிடம் மீதிக்கதையைக் கேட்டுக்கொண்டேன். அந்த தண்ணீர் எடுத்து வைக்கும் பெண்ணை இவர் சில நாட்களுக்கு முன்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். என்னைப் பற்றி அந்த பெண் நல்லவிதமாக அவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தினமும் காலையில் ஏன் என்னை தேடி வந்து அவர் வணக்கம் வைத்துவிட்டு செல்கிறார் என்று புரிந்தது.

பயங்கர மப்பில் இருந்தாலும் ராஜா என்னைப் பார்த்ததும் "வாடா, இங்க என்ன பண்ற? இவன் யாரு?" என்றார். நான் விசயத்தை முழு மூச்சில் ஆவேசத்துடன் சொன்னேன். அவர் அதை காதில் போட்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. வழக்கமான மொக்கையுடன் போதையில் வேறு ஏதோ பேச ஆரம்பித்தார். கடுப்பாக இருந்தாலும் பத்துநிமிடம் குறுக்கே எதுவும் பேசாமல் பொறுமையாக மொக்கையை கேட்டேன். இதற்குமேல் இங்கே வேலையாகாது என்று நினைத்து "அண்ணே! வந்து..." என்று அரைமனதுடன் மீண்டும் விஷயத்தை ஆரம்பித்தேன். இருந்தாற்போல் இருந்து திடீரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "அதான் சொல்லிட்டல்ல, திரும்ப எதுக்குடா சொல்ற!" என்று முறைத்தார். பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; "வண்டியை எடுடா என்று கூறி" பின்னால் அமர்ந்து கொண்டார். "அண்ணே அவரும் என்கூட வந்தாருக்காரு, வண்டியில அவரும் வரட்டும்னே!" என்றேன். "அவன் எதுக்குடா?" என்றார். "என்னது, அவன் எதுக்கா! அவருக்குக்காகத்தானே உன்னையே பாக்க வந்தேன்!" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் கதையை அவருக்கு சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தேன். நான் திரும்ப சொல்வது மொக்கை போல் தெரிந்தது போலிருக்கு அவருக்கு. "சரி சரி அவனையும் ஏறச்சொல்லு! என்றார்.

கண்ணன் வீட்டில் வண்டியை நிறுத்தியதும் "நீ வீட்டுக்கு போ, நான் அப்பறமா வரேன்" என்று சொல்லிவிட்டு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் ஏதாவது செய்வார் என்று கூட்டிவந்தால் இவர் அவனுடன் சேர்ந்து சீட்டாட வந்தவர் போல் கூலாக என்னை போகச்சொல்லுகிறாரே என்று ஏமாற்றமாக இருந்தது. கயவர்கள் பற்றி கலைஞரிடம் மக்கள் முறையிட்டால் அவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து வெறுப்பேற்றுவது போல அந்த சூழல் இருந்தது. அங்கேயே நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அவனுடன் சேர்ந்து வெளியே வந்தார். கண்ணன் சிரித்த முகத்துடன் வந்தான். டைலாரைப் பார்த்ததும் நக்கலாக "என்னடா, இங்க என்ன பண்ற? கட்டச்சி வீட்ல இருக்காளா? வா அவள பார்க்க போவோம்" என்றான். நான் அவரைப் பார்த்தேன். அவரது கண்ணில் பயம் தொற்றிக் கொண்டது. அவர் வீட்டிற்கு ஓட ஆரம்பித்தார். எதுவும் பேசாமல் இருந்த ராஜா எட்டி அவர் சட்டையை பிடித்தார்.

"ஆஹா நிலைமை வேறுமாதிரியாகப் போகிறதே" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஒரு புதிய திட்டத்தை வகுத்தேன். நண்பர்களை இப்போது அழைக்க நேரமில்லை. போதையில் இருக்கும் ராஜா மற்றும் கண்ணனை இந்த டைலர் தனியாக சமாளிக்க முடியாது. என்ன ஆனாலும் சரி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சமாளித்தாக வேண்டும் என நினைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் நடந்தேன். டைலரின் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டு ராஜா முன்னாள் நடந்தார். கண்ணன் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

மெலிதாக எரியும் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அந்தப்பெண் மூலையில் படுத்திருந்தார். கண்ணனும் ராஜாவும் உள்ளே நுழைந்தனர். பின்னால் நானும் டைலரும் திகிலுடன் சென்றோம். ராஜாவுக்கு உள்ளே சரியாக எதுவும் தெரியவில்லை போல. "யேய்!!" என்று கத்தினார். ராஜாவுடன் கண்ணனைப் பார்த்ததும் அந்தப் பெண் வீல் வீல் என அலற ஆரம்பித்தார். எனக்கு அது பலியாட்டின் கனைப்பை போல் அபாயமாகத் தோன்றியது. டைலரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார். இனியும் தாமதிக்க முடியாது என்றெண்ணி இருவரையும் விளக்கிவிட்டு ஒரே ஓட்டமாக அப்பெண்ணை நெருங்கினேன். என்னைப்பார்த்ததும் கன நேரத்தில் ஓடிவந்து என் பின்னால் நின்றுகொண்டார். என் சட்டையை பின்புறமாக கொத்தாக பிடித்துக்கொண்டு "அண்ணா காப்பாத்துங்கண்ணா, காப்பாத்துங்கண்ணா!" என்று பதற ஆரம்பித்தார். ஈழக் கொடுமைகள் தொடர்பான வீடியோவில் பள்ளிச்சிறுமிகள் போர் விமானங்களைக் கண்டு வீறிட்டு அலறும்போது நமக்கு எப்படி மனம் பதைபதைக்குமோ அதுபோன்ற பதைப்பு எனக்கு அப்போது ஏற்பட்டது. இனி உயிரே போனாலும் இப்பெண்ணை எவனும் தொட அனுமதிக்கக் கூடாது என்று முடுவேடுத்தேன். அவரது உதறல் எனக்கு எச்சரிக்கை உணர்வையும் ஆவேசத்தையும் வரவழைத்துவிட்டது. அப்பெண்ணை ஒரு மூலைக்கு நகர்த்தி அரணாக நின்றுகொண்டேன்.

தான் அப்பெண்ணை தாக்கப்போவதாக நான் நினைக்கிறேனென்று ராஜா புரிந்து கொண்டார். போதையும் தெளிந்திருந்தது. "நீ ஏன்டா பேயறைந்த மாதிரி நிக்கிற" என்று என்னைப் பார்த்து சொன்னவாறே கண்ணன் தலையில் ஒரு எத்து எத்தினார். முடியை கொத்தாக பிடித்து இழுத்துவந்து அப்பெண்ணின் காலருகே அவனை கிடத்தினார். அப்பெண் இப்போது என் பின்னாலிருந்து வெளியே வந்து என் கையைப் இருகப்பற்றிக்கொண்டார். ராஜா எத்த காலை தூக்கியதைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு மீண்டும் அப்பெண்ணின் காலில் விழுந்தான் கண்ணன். "எங்கடா அந்த தாலி?" என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த அரைப்பவுன் தாலியை பாக்கேட்டிலிருந்து அப்பெண்ணின் காலுக்கடியில் வைத்தான் கண்ணன். பிறகு எங்கள் மூவரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு கதவை சாத்தி அரைமணிநேரம் கண்ணனை அடித்தார். பிறகுதான் சற்று நிம்மதியாய் இருந்தது.

ஒருவழியாக வெளியே வந்த ராஜா வண்டி சாவியை கேட்டார். பள்ளித்தேருவுக்குப் போன எந்த வண்டியும் திரும்ப வராது என்று எனக்கு நல்லாவே தெரியும் என்றாலும் எதுவும் பேசாமல் சாவியை கொடுத்தேன். திரும்பவும் கண்ணனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கோ போனார். இன்னமும் திகில் விலகாத இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குப் போனேன். உடனடியாக ஆச்சிக்கு போன் செய்து செட்டியாருக்கு தெரியாமல் ஒருநிமிடம் வந்துபோகும்படி சொன்னேன்.

அவர் வந்ததும் நான் சுருக்கமாக சொன்ன அந்த கதையைக் கேட்டு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். "உனக்கென்ன பயித்தியமா, இதெல்லாம் உனக்கு தேவையா?" என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்துவிட்டார். பின்னாலே செட்டியாரும் வந்துவிட அவருக்கு ஆச்சியே அவரது வெர்சன் கதையை சொல்ல ஆரம்பித்தார். ராஜா எடுத்துச் சென்ற வண்டிக்காக செட்டியார் என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே விஷயம் தெரிந்து நண்பர்கள் தியேட்டரில் இருந்து வந்துவிட்டனர். "நாமே கண்ணனை துவைச்சி தொங்கப் போட்டிருக்கலாம், ராஜாவை கூப்பிட்டு பிரச்சினையை ஏன் பெரிசு பண்ணின?" என்று நண்பர்கள் பேச ஆரம்பித்தனர். ("அடப்பாவிகளா! நல்லது நினைச்சி ஏதாவது செஞ்சா ஏண்டா திட்டறிங்க !") கொஞ்ச நேரத்தில் கண்ணன் வண்டியை எடுத்துவந்து வீட்டில் பார்க் செய்துவிட்டு, சைடு லாக் போட்டுவிட்டு சாவியை வெளியிலிருந்தே வீசிவிட்டு வேகமாக சென்றுவிட்டான். ராஜா சொல்லி அனுப்பி இருப்பார் போலிருக்கு.

சிறிது நேரத்தில் அனைவரும் என்னை கும்முவதை நிறுத்திவிட்டு அவ்விருவரையும் தேற்ற ஆரம்பித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டதை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டனர். செட்டியார் தனது ஆதிகாலத்து மகிந்திரா வேனை எடுத்துக்கொண்டு வந்தார். அனைவரும் தொபபூர் பஞ்சாபி தாபா சென்று அவர்களுக்கு திருமண விருந்தைக் கொடுத்தோம். பிறகு வேனில் ஏற்றி இருவரையும் குண்டலபட்டி அனுப்பிவைத்தோம். கடைசியாக வேனில் ஏறும்போது அப்பெண் என்னிடம் அவரது பாட்டி மீன் குழம்பு நன்றாக செய்வார் என்றும் குண்டலப்பட்டி ஒருமுறை நான் வரவேண்டும் என்றும் சொன்னார். டைலர் வழக்கம்போல் "வணக்கம் சார்" என்று மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறிக்கொண்டார்.

எனக்கு சீ ஃபுட் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்று நான் அப்பெண்ணிடம் ஏனோ சொல்லவில்லை.

Read More......

Saturday, November 22, 2008

அடல்ட்ஸ் ஒன்லி: மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் !!!

· 5 comments

ப்போதெல்லாம் சென்னையில் இன்டர்நெட் ஸ்பீட் சொம்மா தூசு கெளப்புதாமே! அதை நம்பி இந்த பதிவை வலையேற்றுகிறேன். வீடியோக்களை பார்த்து பிபீ எக்கச்சக்கமா ஏறும் சமயத்தில் யூ டியூப் திக்குச்சுன்னா அமிஞ்ச பீடி கணக்கா ஆர்வம் அடங்கிப்புடும் அல்லவா?

வேற்று மொழி பாடல்கள் பாஷை புரியலைன்னாலும் சில சமயங்கள் ஈர்ப்பதுண்டு. இதோ, என் நெஞ்சை நக்கிய ஒரு சில மாற்றான் வீட்டு கில்மாகள் உங்கள் பார்வைக்கு! கதற கதற கண்டு ரசியுங்கள்!




பாடுபவர்: நடாஷ்ஜா, மொழி: ஸ்பானிஷ்,
ஊர்: ஜாமைக்காவில் ஏதோவொரு முட்டுச்சந்து


வீடியோவில் பாடி தோன்றும் கில்மா ஒரு ஜமைக்கா பிரஜை. சென்ற ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனதாக கூகுள் கூறுகிறது. இப்பாடல் ஸ்பானிய மொழியில் வெளியாகி பிறகு ஆங்கில ரீமிக்சுடன் ஹோபோக்கன் பார்களில் பட்டையை கிளப்பி வந்தது.இந்த இணைப்பில் உள்ள ஒரு பின்னூட்டத்தில் வரிகள் ஆங்கிலத்தில் உள்ளன. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு காப்பி அனுப்பவும்.










எழுதி பாடியவர்: ஸ்பானிஷ் மைக்.
ஊர்: நியூயார்க்/உலவும் இடம்:யூ டியூப்
மொழி: அரைகுறை ஸ்பானிஷ்

ந்த வீடியோவில், மிஸ்டர் மைக், தனது ஸ்பானிய ஒன் சைட் காதலிக்காக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு அதை அவரிடமே பரிட்சித்து பார்கின்றார். அரை குறை ஸ்பானிஷ் -ல் அவர் பாடும் இந்த பாடல் மிக வேடிக்கையாக இருப்பதாக மொழி அறிந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இணைப்பில் அவரது பேட்டியையும் பார்த்துவிடுங்கள்.

இதுபோல் ப்ரீ லான்ஸ் யூ டியூப் சென்ஸ்சேசனஸ் நிறைய உண்டு. உதாரணத்திற்கு இந்த பிலிப்பினோ அமெரிக்கன் நர்சின் கைவண்ணத்தை பாருங்கள். அவரது வலைப்பூ இங்கே










பாடுபவர்கள்: திருமண கச்சேரி குழுவினர்,
ஊர்: அல்ஜீரியா, மொழி: அரபி

ரு திருமண வீட்டில் நடைபெறும் இசை கச்சேரி இது. ஆடும் பெண்கள், அந்நிகழ்ச்சிக்கு வந்த திருமணமான பெண்கள். 'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம். ஆண்ட்டிகளை ரசிப்பதில் ஆட்சேபனை உள்ளவர்கள் அடுத்த வீடியோவிற்கு போகலாம்.















ஊர்: பிரேசில், மொழி: பிரேசில்

ம்பா நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலந்துகட்டி அடிக்கும் இந்த கோழிகள் எல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள். பிரேசில் மொழிப்பாடல் புரியாவிட்டாலும் மெட்டு நம்மூர் சினிமா பாடல்களை ஒத்துள்ளது. பிரேசிலுக்கே உரிய முக்கால் நிர்வாண நடனங்கள் இதில் குறைவு என்றாலும், தொடர்புடைய வீடியோக்களில் நிறைய உண்டு. அட! நிறைய என்று சம்பா நடனத்தை சொன்னேங்க!














பாடியவர்: ஹபிப் கொய்ட்டி,
ஊர்: மேற்கு ஆப்பிரிக்கா,
மொழி: மாலி

ன்ன, இந்த பாடலை எங்கோ கேட்டது போல் உள்ளதா? உங்கள் விஸ்டா ஆபரேட்டிங் சிஷ்டத்துடன் சாம்பிள் மியூசிக் சில வந்திருக்குமல்லவா, அவற்றை மறுமுறை கேட்டுப்பாருங்கள், அவற்றில் இது இருக்கும். மாலி இசைக்கலைஞரான ஹபிப் கொய்ட்டி கிட்டார் வாசிப்பதில் ஒரு விற்பன்னர். சாம்பிளுக்கு இந்த இணைப்பில் உள்ளதை கேளுங்கள்.தவற விடாதீர்கள்!















பாடியவர்:என்ரிக் இக்லெஸியஸ்,
ஊர்: மாட்ரிட், ஸ்பெயின்,
மொழி: ஆங்கிலம், மூலம்: ஸ்பானிஷ்

ன்ரிக் இக்லெஸியஸை பற்றி அறிமுகம் தேவை இல்லை. இவர் 2002 -லிருந்தே இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஸ்பானிய மொழியிலமைந்த ஒரிஜினல் பாடலின் ஆங்கில வடிவத்திற்கு மூன்று விதமான பாடல் சூழல் உள்ளன. இந்த வீடியோவில் உள்ள சூழல் ஒரு மெக்சிகோ நாட்டு கிராமப்புறம். மெக்சிகன் நடிகை சல்மா ஹயாக், அக்கால நெவேடா போலீஸ்காரர் போன்ற ஷெரீப் போன்றோர் வருவதும் மெக்சிகன் சூழலுக்கு வலு சேர்ப்பவையாயிற்றே! வரிகள்











பாடியவர்கள்: ரே சார்லிஸ் மற்றும் குழுவினர்
ஊர்: ஆல்பனி, ஜியார்ஜியா, அமேரிக்கா.,
மொழி: ஆங்கிலம்.

றுபதுகளின் இசைக் கலைஞர் ரே சார்லிஸ் ஒரு பார்வையற்ற பியானிஸ்ட். ஹிட் த ரோட் ஜாக் (Hit the Road Jack) என்ற இந்த பாடல் மிகச்சிறந்த ஐந்நூறு பாடல்களில் ஒன்றாக வரிசைபடுத்தப் பட்டுள்ளது. வரிகளை இங்கே பாருங்கள்






















பாடியவர்கள்: ஒருவர் அரப், மற்றொருவர் யூதர்,
மொழி: ஆங்கிலம் மற்றும் அரபி பியூசன்

ருவரும் ரட்கர்ஸ் பல்கலை கழக மாணவிகள் என கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்தது இல்லை. தொன்னூறுகளில் இந்தியாவில் சக்கை போடு போட்ட 'தீ தீ' என்ற அரபு பாடல் வரிகளும் மெட்டும் லேசாக இப்பாடலில் தென்படுகின்றதா? வரிகளை இங்கே பாருங்கள்


















மொழி: உய்கூர்

சீனா வியட்நாம் எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த உய்கூர் இனத்தவர். இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முழுக்கவும் வேறான தேசிய இனம் சீன வல்லரசில் எம்மாதிரியாக காலம் தள்ளுகிறது என்ற தகவல் இணையத்தில் கிடைக்கலாம். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி வேண்டாம்.

இப்பாடலில் சீன பாதிப்பு தெரிந்தாலும் இது தனித்தன்மை வாய்ந்த பாரசீக நடனமாக கூறுகிறார்கள்.











பாடியவர்: நகீது அக்தர்,
ஊர்: குஜராத், பாகிஸ்தான், மொழி: உருது

பாகிஸ்தானின் மிகப்பிரபலமான பாடகர். இது ஒரு சாமி பாட்டு மாதிரி தெரியுது, மொழி தெரிந்தவர்கள் கண்டறிந்து சொன்னா தேவலை



























பாடியவர்: தாலேர் மெகந்தி
மொழி: பஞ்சாபி, ஊர்: பஞ்சாப், இந்தியா

தாலேர் மெகந்தி பற்றி நான் எது சொன்னாலும் அது புதிய செய்தியாக இருக்காது, எனவே அடுத்த வீடியோவுக்கு அப்பீட்டு!



























பாடியவர்: ஜேம்ஸ்
மொழி: ஹிந்தி, ஊர்: பங்களாதேஷ்

து ஒரு ஹிந்தி பாட்டு.(அப்படியா!)































பாடியவர்: நாகூர் ஹனிபா,
ஊர்: தமிழ்நாடு, மொழி: தமிழ்

திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் குழுக்களோடும்

மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்,

முழங்கு சங்கே!!!

Read More......

Thursday, November 20, 2008

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா... லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...

· 19 comments


படம்: டிஷ்யூம்,
பாடகர்: சுக்வந்தர் சிங், பாடகி: காயத்ரி,
இசை: விஜய் ஆண்டனி

தினமுன் தமிழ் மனத்தின் முகப்பை பார்வையிடும்முன் பழைமைபேசியின் வலைப்பூவை ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம். அவரது பதிவொன்றில் பதிவர் ஸ்ரீராம் இட்ட பின்னூட்டம் பார்த்ததும் கீழ்க்கண்ட பாடல் நினைவுக்கு வர, மாந்தனைய (மாந்தநேய?) அன்பர்களுக்காக அப்பாடல் வரிகள்!

















வெல்கம் டு த டேன்ஸ்...

ம்ஹே... ம்ஹக்...
ம்ஹே... ம்ஹக்...

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


ஹேய்... கிட்ட நெருங்கி வாடி கர்லாகட்ட ஒடம்புக்காரி
பட்டா எழுதித்தாரேன் பஞ்சாம்ருதம் உதட்ட தாடி
தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி


சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

டேய்.. கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


பொத்தி வச்ச புயலா நீ -தங்கம்
கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி -உன்னை
திங்கப்போறேன் தரியா நீ

சாத்திவச்ச கதவா நீ -உள்ள
ஊத்தி வச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ -உன்ன
என்னப்போறேன் கொடுடா நீ.

தெப்ப கொளத்துல
முங்கி குளிக்கையில்
உன்ன தொட்ட மீனு
வெந்துடிச்சே!

கட்ட எறும்புங்க
உன்ன கடிச்சதும்
சக்கர நோயில்
செத்துருச்சே!

சேட்டு முதுகுக்காராராராராரா (வர வர வர வம்சிபுக்கரு) ராராரா...

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா... (என்னடா??!!)
பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...


தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

சேல
கட்டி வந்த மயிலா நீ -என்ன
முட்ட வந்த முயலா
உடம்பில மருதாணீ -இப்ப
வைக்கப் போறேன் ரெடியா நீ

சுட்டெரிக்கும் பகலா நீ -என்ன
சொக்க வைக்கும் இரவா நீ
எந்திரிச்சு மெதுவா நீ -என்ன
தாண்டி வரும் களவானீ

வங்க கடலில
வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய
தாண்டிடுச்சே!

நெஞ்சுக்கிடையில
புது புயல் சின்னம்
உன்ன இடிச்சதும்
போங்கிடுச்சே!

சேட்டு முதுகுக்காரிரிரிரிரிரிரிரி(வர வர வர வம்சிபுக்கரு)ரிரிரிரி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா (வர்றேன்...)
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா (தர்றேன்...)
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா (போறேன்...)
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர..

Read More......

Sunday, October 26, 2008

நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு

· 8 comments

ஒக்கேனக்கல் பிரச்சினை போல் ஈழப்பிரச்சினையிலும் கலைஞர் பல்டி அடிப்பார் என ஏனோ என்னுள் ஒரு பட்சி கூறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால் கலைஞரின் நிலைப்பாட்டை நாராய் கிழித்து எனது பதிவில் தொங்கவிடும் எண்ணத்தில் இதுவரை ஈழம் தொடர்பாக பதிவெதுவும் எழுதாமல் இருந்தேன்.

"அடடடா! கந்தசாமியின் கொசுக்கடி தாங்கலடா!" என குமுறும் நண்பர்களே! அவசரப்படாதீர்கள், இன்றைய பதிவு பேசும் விசயத்திற்கு இன்னும் ஓரிரு வரிகளுக்குள் வந்து விடுகிறேன்.

இந்நிலையில் ஈழம் தொடர்பான எனது கேள்விகளுக்கு தமிழ் சசி பதிலளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து, பதிவுலக இண்டலக்சுவல்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளேன்.

இதற்கிடையே, நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் அழைப்பை ஏற்று சினிமா தொடர் கேள்வி பதிலை இப்பதிவில் எழுதுகிறேன். "குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன்" என்று கூறும் சுந்தர் வாரம் ஒருமுறையாவது சினிமா பார்த்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். நானும் அப்படியே. எனினும் நான் இதுவரை பார்த்த தமிழ்ப்படங்களில் ஒரு இருபது சத படங்களை மட்டுமே மூன்றுமணி நேரம் தொடர்ந்து பார்த்துள்ளேன். பெரும்பாலானவை கமலஹாசன் படங்களே!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


பத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். எனது பெற்றோரின் பெரும் தடையை மீறி எனது உறவினர் ஒருவருடன் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தை பார்த்தேன். எனக்கு அப்போது ராதிகாவிற்கும் பிற துணை நடிகைகளுக்கும் முக வித்தியாசம் தெரியவில்லை. படத்தைவிட அரங்கின் வாயிலில் நடந்த பட்டாசு வெடிக்கும் வைபோகத்தில்தான் மனம் லயித்திருந்தது.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். கமலஹாசன் படங்கள் என்றால் முதல் நாள் முதல் சோ -தான் எப்போதும். ஆனால் தசாவதாரம் பிரிவியூ சோ பார்த்தேன். டிக்கெட் கிழித்து தந்த குஜராத்தியுடன் ஸ்டூடண்ட் ஆபருக்கான வாக்குவாதத்தில் முதல் பத்து நிமிடங்கள் படத்தை தவற விட்டேன். படம் முடியும் முன்பாக எழுந்து சென்று பாக்ஸ் ஆபிசில் மீண்டும் சண்டை, அடுத்த சோ விற்க்காக டிக்கட் எனக்கு வழங்குமாறு.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பம்மல் சம்பந்தம். டீவிடி வைத்துள்ளேன். நகைச்சுவை படங்களிலும் மனதை உருக்கும் காட்சிகளை சீரியஸ் கெடாமல் வைக்க கமலகாசனால்தான் முடியும். 'ஏண்டி சூடாமணி' பாடல் ஒரு ஒப்பாரி வகைப்ப்பாடலாகும். கானா பாடல்களை விரும்பி கேட்பேன். புளியந்தோப்பு பழனியுடன் எனக்கு பழக்கம் உண்டு.

4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மகாநதி. ஆற்றாமையால் கமலகாசன் அழும் காட்சிகளிலெல்லாம் நானும் அழுதேன். நான் முழுமையாக பார்த்த படங்களில் அழாமல் பார்த்த படங்கள் மிகக்குறைவு. சோகக்காட்சிகளில் மட்டுமின்றி, தத்ரூபமான காட்சிகள், நிதர்சனங்களை சொல்லும் காட்சிகள், பெற்றோர் உதாசீனப்படுத்தப்படும் காட்சிகள், குழந்தைகள் இயல்பாய் நடிக்கும் காட்சிகள், ஆண்டான் அடிமை காட்சிகள், நவீன நிலபிரபுக்கள் விட்டேந்தியாக நடக்கும் காட்சிகள் என பல சமயங்களில் அழுவேன்.

5. உங்களை மிகவும் தாக்கிய அரசியல் சம்பவம்?

அண்ணாமலை படத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தபோது, ரசிகர் ஒருவர் தீக்குளித்ததாக வந்த செய்தி பகீரென்றிருந்தது. பிறகு, ரஜினி ரசிகர்களின் பல கிறுக்குத்தனங்களை கேள்விபடுகையில் சகஜமாகிப்போனது.

6. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

குருதிப்புனல் திரைப்படத்திற்கு டிக்கட் கிடைக்காமல் செங்கல்பட்டு சென்று பார்த்தேன். அதில் அவிட் எடிட்டிங் செய்திருக்கிறார்கள் என அறிந்து அதுபற்றி செய்தி சேகரித்துக்கொண்டு பிறகு உன்னிப்பாக படத்தை பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.

7. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

விகடன், குமுதம் இதழ்களில் உள்ள சினிமா செய்திகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவற்றில் உள்ளவை எல்லாம், கிசு கிசு, வரவிருக்கும் படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் வித்தியாசமான படம் என்று தாடியை சொரிந்து கொண்டு எந்த டைரக்டராவது தரும் பேட்டிகள் என இவைதான் இருக்கும். 'திரை' என்ற இதழை நான் சென்னையில் இருக்கும்போது படிப்பதுண்டு. ஏனைய சிறுபத்திரிக்கைகள் போல் இவற்றிற்கும் நான் சந்தா பெறாத காரணத்தால் அவ்விதழை ஏரியா ஏரியாவாக தேடியலைந்து வாங்குவதே சுவாரசியமான அனுபவம்தான்.

8. தமிழ்ச்சினிமா இசை?

கமலகாசன் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமாவில் பிடித்த விஷயம் சினிமா மெல்லிசைதான். வரிச்சிறப்புள்ள பாடல்கள் பிடிக்கும். "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா?", "மூங்கில் காடுகளே!, வண்டு முனகும் பாடல்களே!", "ஆழ்வார்பேட்டை ஆண்டவா", "வா வா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டு", கொஞ்சநாள் பொறு தலைவா", "மாஞ்சோலை கிளிதானோ", "செந்தூர் முருகன் கோவிலிலே", "இன்பம் பொங்கும் வெண்ணிலா", "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" போன்ற பாடல்கள் எனக்கு மிகுதியாக பிடிக்கும். என் தங்கையும் என் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு பாட ஆரம்பித்தால் ஒரே இசை கச்சேரியாக இருக்கும். சில ஆண்டுகளாக இதை தவற விடுகின்றேன்.

9. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாள படங்களை தொலைகாட்சியில் நடுவிலிருந்து பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிகள் எனக்கு தெரியாததாலும் சப்-டைட்டில்கள் கிடைக்காது என்பதாலும் மெனக்கிடுவதில்லை. பிரபலமான படங்களை அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சில பெங்காலி படங்களை பார்த்ததுண்டு. பதேர் பாஞ்சாலி, மகாபுருஷ், பிரதிவண்டி போன்றவை. பொல்லாதவன் திரைப்படம் பை சய்க்கில் தீவ்சின் ரீஜிநலைஸ்ட் வடிவம் ஆகும். கிட்டத்தட்ட, அல் பசினோ வின் அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். சென்ட் ஆப் வுமன் எனக்கு பிடித்த ஒன்று. தவிர, எ ப்வ்யு குட் மென், ஸ்லீப்பிங் வித் எனிமி, ரெசர்வாயர் டாக்ஸ், ப்யூட்டிபுல் மைன்ட், பிரட்டி வுமன், டான்சிங் வித் உல்வ்ஸ் போன்றவற்றையும் முழுசாக பார்த்துள்ளேன். என் வழமைபோல், பல படங்களை பாதிக்குமேல் பார்ப்பதில்லை. பர்பக்ஸன் இருந்தாலே படம் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.

10. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நான் பவித்ரா மருத்துவமனையில் பணி புரிந்தபோது, வாரம் இருமுறையாவது அங்கு ஷூட்டிங் நடக்கும். டபுள்ஸ் பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சியில் மருத்துவராக நடிக்க சொன்னார் பாண்டியராஜன். சங்கோஜத்தால் மறுத்தேன். நடிகை சங்கீதா (அப்போதைய பெயர் ரசிகா என நினைக்கிறேன்) என்னை என் புஜத்தில் ஒருமுறை கிள்ளினார். குஷ்பூவும் சரத்குமாரும் கட்டிப்பிடித்தபடிதான் எப்போதும் பேசிக்கொண்டனர். கூன் விழுந்த கிழவியான சிம்ரனை நேரில் பார்த்தபிறகு பிடிக்காமல் போய்விட்டது. பிரபு தேவாவுக்கும் மீனவுக்கும் லவ்ஸ் இருந்த சமயம் நாயினும் மோசமாக அவர் ஜோள்ளியது சகிக்க வில்லை. டைரக்டர் பாலா ஓங்கி ஒரு அறை விட்டால் செத்துவிடுவார் போல் இருந்தார். நடிகர் விக்னேஷ்வர் (பசும்பொன் ஹீரோ) லிப்டில் மாட்டிக்கொண்டு விழித்தார். தீனா படத்தில் முப்பது நொடி காட்சியில் நடிப்பதற்குள் அஜித் மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக ரசிக தொல்லையில் சிக்கினார். குளுக்கோஸ் பாட்டிலை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு ஒரு நோயாளி ஷூட்டிங் பார்க்க வந்தார். ஒரு சைனீஸ் துணை நடிகையின் பாய் பிரண்டுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இவைதான் எனக்கும் தமிழ்த்திரை உலகிற்கும் உள்ள தொடர்பு. ஆக்கப்போர்வமானது என்று எதுவும் இல்லை. மறுபடியும் அம்மருத்தவனையில் பணி புரிய நேர்ந்தால் மீண்டும் இந்த சேவையை (:-)) திரைத்துறைக்கு செய்வேன்.



11. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில் நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும். மிஸ்கின், அமீர், பாலா, வெங்கட் பிரபு, விக்ரம், சினேகா, ஜீவா, வடிவேலு, கோவை சரளா, சந்தானம் போன்றோரால் தரத்திலும் மின்னும். விஜய் விரைவில் அரசியலுக்கு சென்று திரைவுலகை காப்பாற்றுவார். கமலகாசன் காலத்திலேயே இந்திய சினிமா என்றால் கோலிவுட் என்ற நிலை ஏற்பட்டு பாலிவுட் இரண்டாம் இடம் பெறும். இந்திய மொழிகளில் தமிழை மிகவும் விரும்புவதுபோல் தமிழ் சினிமாவையும் ரஷ்யர்கள் விரும்புவார்கள். சர்வதேச விருதுகள் பெருகும். தேசிய விருதுகள் குறையும்.


12. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு நிச்சயம் பாதிப்பு இருக்காது. அதற்கு அடுத்த ஆண்டுமுதல் மீண்டும் வந்து மொக்கை போடத்தானே போகிறார்கள்!

பலபேர் நடுரோட்டுக்கு வந்துவிடக்கூடும், பெண்களின் ஆதிக்கத்திலிருந்து சீரியல்கள் விடுபடும். உட்கார்ந்து யோசித்தால் இன்னும் சிலவற்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.

Read More......

Thursday, August 21, 2008

ஆம்! பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கோழிகள்தான்.

· 43 comments

எனது முப்பது வருட வாழ்வில் நான் இதுவரை சந்தித்துள்ள என் வயதொத்த அல்லது குறைந்த பெரும்பாலான பெண்களை பற்றி எனக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நல்ல அபிபிராயம் கிடையாது. மென்மையானவர்கள், பண்பானவர்கள், உழைப்பாளிகள், அறிவாளிகள் என எல்லோரும் பெண்களை குறிப்பிட்டாலும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என சொல்வதே சரியென்று எனக்கு படுகிறது.

உதவி கேட்கும்போது பம்முவதும், மற்றவர்கள் அதை எதிர்பார்க்கும்போது கைவிரிப்பதும் பெண்களுக்கு இயல்பாகவே கைவரப்பெற்ற ஒன்று. ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களிடம் அப்பட்டமாக தென்படுவதை பெரும்பாலானவர்கள் கவனித்திருக்க கூடும். நாகரீகமாக செய்தால் இவற்றை உள்ளரசியலின் கூறுகளாக கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஜனநாயகத்தின் சலனத்தை தீர்மானிப்பதே உள்ளரசியல் தானே! ஆனால் பச்சையாக செய்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எதிராளி இவற்றை அடாவடியாக எதிர்கொள்ள நேரும்.

என்னை பொறுத்தவரை வலிய வந்து ஈசும் பெண்ணின் முதல் பத்து வார்த்தைகளில் அவளது தற்போதைய தேவை என்ன என்பதை கணித்துவிட முயல்வேன். அதில் வெற்றி பெற்றால் உடனடியாக என் கதவை அவள் முகத்தில் இழுத்து சாதிவிட சற்றும் தயங்குவதில்லை. பெரும்பாலானவர்கள் இதை செய்வதில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு பிறகு அப்பெண்கள் தங்கள் இயல்பை காட்டியதும் அவர்கள் மீது வன்மம் கொண்டலைவார்கள்.

இவ்வளவு விவரமான பார்ட்டி போல சீன் போடும் நான் எந்த பெண்ணிடமும் உதவி பெற்றதே இல்லையா? நிச்சயம் பெற்றிருக்கிறேன். எனக்கு உதவியவர் ஆணோ பெண்ணோ எவராயினும் அவருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவிட தயாராகவே இருப்பேன். இடுக்கண் வருங்கால் நழுவுவதோ அல்லது உதவாது போக நேர்கையில் சப்பை கட்டுவதோ நான் கிஞ்சித்தும் செய்வதில்லை. எனது பெரும்பாலான நண்பர்களும் இதை செய்வதில்லை. ஆனால் தோழிகள்? அதை நான் சொல்லவும் வேண்டுமா? ஆம்! பெண்களில் பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகள் தான்.

எல்லாம் சரி! பெண்களுக்குள்ளே எப்போதும் ஓயாமல் நடக்கும் பனிப்போருக்கு நான் மேலே சொன்ன காரணமும் ஒன்றா?

Read More......

Friday, August 8, 2008

பயமாயிருக்கு: ரஜினியை விமர்சிக்காமல் தண்ணி தெளிச்சு விட்டுட்டோம்.

· 16 comments

சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி லகுவாக விமர்சிக்கும் எங்கள் குரல்களின் நியாயங்களை வெறிபிடிக்காத ரஜினி ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எனினும், இதனால் எங்களுக்கே ஒரு புறம் சலிப்பு ஏற்படுவதாலும் சில அன்பான எச்சரிக்கைகள் எங்களை பீதி கொள்ளச்செய்வதாலும் சந்தேகக் கண்களில் இருந்து ஓடி ஒளிந்து கொள்ளலாமென முடிவெடுக்கிறோம்.

"ரஜினி பாஸ்டு அனதர் டெஸ்ட் ஆப் லாயல்டி" -என செய்தி வெளியிட்ட தமிழ் துவேஷிகளாகட்டும், தன்மையான ரசிகராகிய கிரி, இவ்வளவுக்குப்பிறகும் பாலால் கட்டவுட் கழுவிய கோஷ்டிகளாகட்டும் எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தார்கள்.



ரொம்ப நோகாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா போயஸ் கார்டன் பக்கம் பார்த்து கும்பிடுங்க.....நாங்க யாரையும் கும்பிடாம எங்க பொழப்ப பாக்க ஒதுங்கிக்கறோம்.....உங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு மகாநடிகர் !!! அடுத்தமுறை ரோபோவா வந்து மக்களை ஏமாற்றட்டும்...அதுவரை அவரை கண்டுக்கறதா இல்லை !!!!

ச்சும்மா ட்டமாஷ்: தனித்திரு விழித்திரு பசித்திரு.....: எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

Read More......

Thursday, July 17, 2008

முதலிரவுக்கு முந்தய இரவு

· 23 comments

ஒரு கையில் பார்சல், மறு கையில் ஆபிஸ் பேக், காதுக்கும் தோளுக்கும் நடுவே செல்போனில் மிச்சமிருந்த அன்றைய பிசினஸ். முழங்காலால் கதவை முட்டித்தள்ளிய பார்த்தி திடுமென ஒருவினாடி சிலிர்த்தான்.

"அடச்சே! பயந்தே போயிட்டேன்டி!, இருட்டுல ஏண்டி உட்கார்ந்திருக்க, லைட்ட போட வேண்டியத்தான?"

"அத தேடிப்பாத்துட்டுதான் தாண்டா இருட்டுல உட்கார்ந்திருக்கேன் வெண்ண!"

லைட்டை போட்டவன் நபிஷாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். "இன்னைக்குத்தான் உன்ன முழுசா பாக்கறேன்! எப்படித்தான் அந்த கருப்பு கவுன நாள் பூரா மாட்டிகிட்டு திரியிற?

"ம்கும், கட்டிக்க போறவன் நீ பாக்கும்போதே எனக்கு கூசுது, மத்தவங்க பார்த்தா?" பர்தா விஷயத்தில் பலமுறை இவளிடம் பேசி தோற்றவன் அப்பேச்சை அத்தோடு விட்டான்.

"சரி வீடு புடிச்சிருக்கா? இனி நாம இங்கதான்"

"முதல்ல மேரேஜ் ஒழுங்கா முடியுதா பாக்கலாம், நாளைக்கு கையெழுத்து போடும்போது உங்கம்மா வந்து நின்னா நீ ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல எங்கியும் ஒளிஞ்சிக்க முடியாது, என் பர்தா தான்"

"அடச்சே! நாளைக்கும் அந்த கப்பு அங்கிய போட்டுகிட்டுதான் வரப்போறியா?"

சட்டென கடுப்பான நபிஸா, முதுகின் பின்புறம் இருந்த தலையணையை எடுத்து முழு பலத்துடன் வீசுவதுபோல் கவனமாக அவன் அருகில் எறிந்துவிட்டு, இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவள் எறிந்த தலையணையை கைப்பற்றிக்கொண்டு வந்தவன் அவளது இருக்கையின் முன்னிருந்த டீப்பாயை அவளருகே இழுத்து போட்டு அமர்ந்தான்.

"டே.....ய் வேணா....ம்., இன்னும் ஒருநாள் இருக்கு, கிட்ட வந்த சத்தம் போட்டு கத்திடுவேன்" என போலியாக எச்சரித்தவள் கால்களை எடுத்து இருக்கையின் விளிம்பில் வைத்துக்கொண்டு, கைகளால் முழங்கால்களை கட்டிக்கொண்டாள்.

"அய்யயே! இன்னும் தொடவே இல்ல அதுக்குள்ள இப்படி சுருங்கி உட்காந்துட்ட, கல்யானத்துகப்பரம், நைட்டு பூராவும் கெஞ்சரதுலே கழிஞ்சிரும் போலருக்கே!"

"அதை நாளைக்கு நைட்டு பாத்துக்கலாம், இப்ப நீ கொஞ்சம் தள்ளி உட்காரு"

ஆவலுடன் அவளருகே நகர்ந்த பார்த்தி அவள் முறைத்ததும் "ஓ! பின்னாடி தள்ளி உட்கார சொன்னியா? சாரி" என்றான். அவன் குறும்பை ரசித்தவள் அவளையறியாமல் மெலிதாக புன்னகைத்தாள். சற்றே தைரியம் பெற்றவன் அவள் கணுக்கால்கள் இரண்டையும் இருகைகளால் பற்றி அவளது முழங்கால்களை நீட்டியநிலையில் டீப்பாய் மீது வைத்தான்.


இருக்கையின் விளிம்புக்கே வந்து விட்ட நபிஸா, பேலன்ஸ் தவறியவள் போல அவன் மீது சரிந்தாள். அவளது முழங்கை இரண்டையும் அவனது தோள்களில் ஊண்றி நெற்றியோடு நெற்றி இடித்தாள். கடந்த இரண்டுவருட பழக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் இவ்வளவு அருகில் நெருங்கியதில்லை. சில வினாடி மவுனத்திற்குப்பின் தலையை ஒருபுறமாக சாய்த்து அவன் வலது காதில் கிசுகிசுத்தாள். "நாளைக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்குமாடா?"



"அறிவுகெட்டத்தனமா பேசாதடி அர லூசு!" என்று அவளது இடது காதை மென்மையாக கடித்தான் பார்த்தி. வலியை இன்பமாக உணர்ந்த நபிஸா அவன் கழுத்தை மாலையாக சூழ்ந்தவாறே தன் இடதுகையால் அவன் பின்னந்தலை முடியை பற்றினாள். அவளது மூச்சின் ஏற்ற இறக்கங்களுக்கு தக்கவாறு அவனது தலையும் அவள் மார்போடு சேர்ந்து அசைந்தது.

திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவன் தோளில் இருந்து விடுபட்டு அவன் கண்களை வெகு அருகில் பார்த்து கேட்டால் "நீ எந்த சூழ்நிலையிலும் மாறிடமாட்ட இல்ல?".

நொடியில் அவனது முகபாவனை மாறியது. "நீ ரொம்ப பேசற, கொஞ்சம் அடங்கு!" - விரலைச்சுண்டி அவள் மேலுதட்டை தட்டினான். வலிதாளாமல் அவள் உதட்டை உள்மடிக்க அவளது கீழுதட்டை அதே கணத்தில் கவ்வினான் கமலஹாசனின் வழமைபோல. இரண்டு வினாடிகள் பொறுத்தவள் மூன்றாவது நொடியில் அவனை அவனது பின்புறமாகவும் இருக்கையை அவளது பின்புறமாகவும் தள்ளிவிட்டு எழுந்தொடினாள். இதை சற்றும் எதிர்பாராத பார்த்தி அவள் ஓடிய திசையில் தனது இடது கையை வீசினான். அவள் மேலுடையின் பின்பாகம் அவன் கையேடு வருமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

முதுகை சாய்த்து சுவரில் தஞ்சம் புகுந்த நபிஸா கோபம் கொப்பளிக்க அவனை முறைத்தாள். எஞ்சிய அவளது உடை வியர்வையால் நனைந்து தொப்பலாகிப்போனது. தான் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டத்தை தாமதமாக உணர்ந்தவன் தலைகுனிந்தவாறே "சாரி டா" என்றான்.

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு,

"இப்ப எப்படிடா வீட்டுக்கு போறது நான்?, இன்னைக்கு வீட்டுக்கு போனாதான் நான் நாளைக்கு ரெஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு வரமுடியும்?" -பொறுமையாகவே கேட்டாள்.

"நான் வேணா போய் இதே போல ட்ரஸ் வாங்கிட்டு வந்திடட்டுமா?"

"நீ இதே ட்ரஸ்ஸ வாங்கிட்டு வந்தாலும் நான் வீட்ல கண்டிப்பா மாட்டுவேன், ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் நான் வீட்டை விட்டு வெளில வர முடியாது நாளைக்கு"

"சரி இப்ப ஒன்னும் பண்ண முடியாது, பேசாம இங்கவே தங்கிடு"

"ம்க்கும், ரெஜிஸ்டர் பண்ணப்பரம் கூட நம்மள நிம்மதியா உடமாட்டாரு உங்க மாமனாரு, இதுல இன்னைக்கு நைட்டே அவர அலர்ட் பண்ணிடலாம் -ன்றையா?, சுத்தம்"

"என்னதான் பன்னலான்ற நபிஸ்?"

"வேற என்னபன்றது! உசிர கைல புடிச்சிகிட்டு இன்னிக்கு ராத்திரிய ஓட்டவேண்டியதுதான், பர்தாவ அழுக்கு அங்கி, கப்பு துணின்னு கிண்டல் பண்ணியே, இன்னைக்கு அது இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!"

பார்த்திக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை. முதலிரவுக்கு முந்தய இரவு இப்படி திகிலாகிப்போகும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்கக்கூடும்?


டிஸ்கி: எம்மதத்தையும் சேர்ந்த உடை பழக்க வழக்கங்களையும் சிறுமை படுத்தும் நோக்கில் இக்கதையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மதங்களை துச்சமென நினைக்கின்ற, இருவேறு மதத்தைச்சேர்ந்த காதலர்களிடையேயான உரையாடலில் இயல்புத்தன்மை வேண்டி சில பெயர்ச்சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

Read More......

Thursday, July 3, 2008

அடுத்தப் பதிவு ஆகஸ்ட் 8 -ம் தேதி.

· 16 comments

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் மோகன் கந்தசாமி

Read More......

Wednesday, July 2, 2008

எர்ரோட்டிக்கா: மெக்சிகோ மறைவுப்பட நடிகை கெர்ரி யான் பேட்டி

· 14 comments

அமெரிக்க மறைவுப்பட உலகின் முன்னணி நட்சத்திரம் கெர்ரி யான், தோழர் எர்ரோட்டிக்கா -விற்கு அளித்த பேட்டியின் ஆங்கில மொழியாக்கத்தை ச்சும்மா டமாஷ் வாசகர்களுக்காக தமிழ் மொழியாக்கம் செய்து தருவதில் பேருவுவகை கொள்கிறேன். இப்பதிவின் பின்னூட்டங்களுக்கு எர்ரோடிக்கா பதிலளிப்பார், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் வெளியிடுவதுடன் மட்டுறுத்தலையும் மேற்கொள்கிறேன்.


நொடியில் வெடித்து எங்கும் வியாபிக்கும் வகையிலான புகழுக்கு சொந்த்தக்காரர் இந்த 32 வயது மறைவுப்பட நடிகை கெர்ரி யான் ரோட்ரீகஸ். அமெரிக்க மறைவுப்பட சந்தையில் நாற்பது சதம் இவரது குழுவினரிடம் உள்ளது. அது மேலும் ஏற்றம் கண்டு வரும் நிலையில் ஒரு நேர்முகத்திற்காக அவரை சந்தித்தேன். குடும்பத்தினருக்காக அவர் செலவழிக்கும் ஒரு இனிய ஞாயிறு மதிய வேலையை எனக்காக ஒதுக்கினார்.


தொழில் ரீதியில் உங்களை பின்பற்றுவோர், உங்கள் பரம விசிறிகள் தவிர்த்து ஏனையோர்க்காக இதை கேட்கிறேன், எங்கு தொடங்கினீர்கள்? வாழ்வின் பின்பகுதியில் ஏன் மறைவு படங்களுக்கு வந்தீர்கள்?

2004 -வாக்கில் ஜெனிசிஸ் இதழில் நடுப்பக்கங்களுக்கு போஸ் கொடுத்து வந்தேன். அங்குதான் எல்லாம் தொடங்கியது என நினைக்கிறேன். அதற்கு முன் ஸ்பானிய மொழி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தேன். 18 வயதில் ரோட்ரீகஸ் -ஐ திருமணம் செய்த கையேடு இருவரும் புயூபுலோ நகரிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தபோது முதலில் பழங்களை பதனிடும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தோம். அது பழைய கதை. நிலைப்படங்களில் என்ன சாதித்து விடமுடியும்? ஜெனிசிஸ் இதழுக்கு பிறகு எனது இயல்பான அடுத்த தேர்வு ஸ்ட்ரிப் கிளப் -கள் தான். பிறகு மறைவுப்படங்கள்.


ங்கள் அடுத்த முயற்சியான சொந்த மறைவுப்பட நிறுவனம் உங்களுக்கு களப்பணிகளில் இருந்து ஓய்வுதருமா?


ற்போதைக்கு நான் காமிரா முன்பாக தோன்றி வருகிறேன். அடுத்து நானே இயக்கவிருக்கும் மறைவுப்படத்தின் உள்ளடக்க உரிமை என்னிடமே வைத்துக்கொள்ளப்போகிறேன். பிறகு ஜி.ஐ.எல்.எப். வகைப்படங்களில் இருந்து முழுமையாக விலகிவிடுவேன். நாட்கள் முதுமையை நோக்கித்தான் நகரும், இளமையை நோக்கி அல்லவே!


ஜி.ஐ.எல்.எப். வகை தவிர்த்து நீங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் புளித்துப்போன எம்.ஐ.எல்.எப்.வகை பாத்திரங்களே அன்றி "கவர்ச்சியான மனைவி" போன்ற பாத்திரங்கள் அல்ல. ஆனாலும் உங்கள் வெற்றி எப்படி சாத்தியமானது?

நிச்சயம் எம்.ஐ.எல்.எப். வகை மறைவுப் படங்களுக்காகத்தான் நான் விரும்பப்படுகிறேன். நான் அதை விரும்புகிறேனா? தெரியவில்லை. ஆனால் அதோ பாருங்கள், அவர்கள் இருவரும் என் குழந்தைகள்தான். எம்.ஐ.எல்.எப் வகைக்கான வயதுதான் தற்போது என்வயதும். எனவே இவ்வகைப் பாத்திரங்களை ஏற்கும் போது ஒரு இயல்பாகவும், முந்தயநாள் இரவு "ஹோம் வொர்க்" செய்தது போலவும் ஒரு திருப்தியாக செயல் படமுடிகிறது.


நீங்கள் இயக்கப்போகும் மறைவுப் படத்தில் என்ன புதுமை இருக்கும்?


நான் விரும்புவது எல்லாமே கிரேசி ஸ்டப் -கள் தான். எலிவேட்டரில் உறவு, காரில் உறவு, நீச்சல் குளத்தில் உறவு, நெடுஞ்சாலை ஓரத்தில் உறவு என பலவற்றை யோசித்து வைத்துள்ளேன்.



நீங்கள் சொல்லும் எலிவேட்டரில் உறவு வழக்கமாக நாங்கள் பார்த்துவரும் எலிவேட்டரில் உறவு -களிலிருந்து எவ்வாறு வேறானது?

தாவது முடிச்சு கண்டிப்பாக வைப்பேன். செய்யும் போதுதான் அது என்னவென்று முடிவாக தெரியவரும். பெரும்பாலும் ஒரே மாதிரியான காட்சிகளில் வேறுவேறான பெண்கள் தோன்றும் படங்கள்தான் வெளிவருகின்றன. என்னுடையது நிக் ஆர்லியன்ஸ் செய்த வகைபோன்று இருக்கும். அவருடன் நான் பணிபுரிந்த நாட்களில் நான் கற்றவை ஏராளம். அவர் இயக்கிய எந்த படத்திற்கும் "பொசிசன் நிபுணர்களை" நியமித்தது இல்லை. அவரே ஒரு நிபுணர்தான். டிரிபுள் பெனிட்ரேசனுக்கு பிறகுகூட நான் ஆயாசமாக உணர்ந்தது இல்லை. டபுள் டக்கர் தான் அவரது பேவரைட் வகை. அவரது படங்களில் எப்போதும் நெஞ்சைத்தொடும் காதல் கதை ஒன்றை வைத்துவிடுவார். காமம் எப்போதும் காமம் தானே. அதில் வித்தியாசம் ஏது? சொல்லும் விதத்தில் தான் வித்தியாசத்தை வைக்கமுடியும்.


யாரிப்பில் இருக்கும் உங்கள் மறைவுப் படங்களைப் பற்றி சொல்லுங்கள்


விவிட் நிறுவனத்தின் படமொன்று வரவிருக்கிறது. அவர்களது தயாரிப்பு எப்போது தரமானது, ஆனால் வெளிவர நாளாகும். விக்டு நிறுவனத்தின் படமொன்று தயாரிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் உள்ளது. இதில் மகளின் காதலனுடன் எனது உறவைப்பற்றிய கதை உள்ளது.


துவரை நீங்கள் பங்காற்றிய படங்களில் நீங்கள் உறவு கொண்ட துணைகளைப் பற்றி சொல்லுங்கள்.


நான் ஒருபோதும் மனிதர்களின் தராதரத்தை சீர்தூக்கிப் பார்க்கும் வேலையைச் செய்வதில்லை. நான் உடையை களையும் வரை அவர்கள் நண்பர்கள், நான் மீண்டும் அணியும் வரை துணைவர்கள். அவ்வளவே. தொழில் ரீதியில் வைத்துக்கொள்ளும் உறவைத்தவிர வேறெந்த உறவையும் குடும்பத்துக்கு வெளியே வைத்துக்கொண்டதில்லை. என் கணவரை மதிப்பவள் நான். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய உடனேயே கூட கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற தயங்கியதில்லை. ரோட்ரீகஸ் -ஐ முழுமையாக புரிந்து கொண்டவள் நான்.

ங்களது மறைவுப் படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

"முத்தம், பலி மற்றும் அதிவேக பூனைக்குட்டி"


ங்கள் முதல் படம்?

"நிர்வாண மடந்தையின் அந்த எட்டுமணி நேரம்"


முதல் கார்?

ரெனோல்ட் லெக்கார்


பிடித்த உணவு?

லிமா சொபா


பிடித்த பொசிசன்?

மிஷனரி


ங்களால் தவிர்க்கவே முடியாத நவீன வசதி?

ன்டர் நெட் இணைப்பு


முதலில் பார்த்த மறைவுப்படம்?

பெயர் மறந்து விட்டது. அது செஸ்லி லெஇன் நடித்தது.


பிடித்த படம்?

"எ கிளாக் வொர்க் ஆரஞ்"


பிடித்த பொழுது போக்கு ஸ்தலம்?

மேரிக்காவில், சான் டியாகோ


நீங்கள் பார்க்க விரும்பும் நபர்?

ஜானி டெப்


ங்கள் ஞாயிறு என்னால் பாழானதற்கு மன்னியுங்கள்.


ரவாயில்லை. நான் பாட்டியானதும் மீண்டும் வாருங்கள். வருவீர்களா?


-எர்ரோட்டிக்கா


Read More......