Showing posts with label பீத்த பதிவர்கள். Show all posts
Showing posts with label பீத்த பதிவர்கள். Show all posts

Friday, December 12, 2008

மூத்த பதிவருங்கெல்லாம் ரிடையராகி தொலைத்தால் என்ன!

· 71 comments

அவ்வப்போது யாராவது எதையாவது கிளப்பிவிட்டு தமிழ்மணத்தை அல்லோகலப் படுத்துவதால் அச்சமயங்களில் திரட்டியின் முகப்பிற்கு வரவே பகீரென்றிருக்கிறது. சாட்டிலோ தனி மடலிலோ திட்டிக் கொள்ளும் கொள்ளும் நேரம்போக முச்சந்திக்கு வந்து முண்டாசு தட்டுவதும் ஒரு கிக்குதான் போலிருக்கு.

இந்த பரஸ்பர டவுசர் அவுத்துக்கொள்ளும் வைபோகத்தில் பங்கு பெறுவோர் தனித்தனியாகவும் கூட்டாகவும் சில வரலாற்று சாகசங்களை அரங்கேற்றி இருப்பார்கள் என கருத இடமிருக்கிறது. அவற்றை விலாவாரியாக விளக்கிவிட்டு அவர்களது குடுமிப்பிடியை தொடர்ந்தால் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கக்கூடும். இவர்களது ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக படித்து அர்த்தம் ஊகித்து தெரிந்த செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் நம்ம தலைக்கா எகிறி விடுகிறது என்பது சோகமான செய்தி.



இருப்பினும் தற்போது சூடாக பரிமாறிக்கொள்ளப்படும் வசவுகளுக்கு மூலகாரணம் புரியாமல் தவிக்கும், தமிழ்மண அரைடிக்கட்டுகளின் சவுகரியத்திற்காக நான் ஊகித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது உசிதமாகப்படுகிறது. இந்த எபிசோடின் துவக்கம் அமெரிக்காவில் துவ்ங்குவதாகக் கொள்ளமுடியும். புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர் ஒருவர் சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் பற்றி ஒரு பிலாக்கொகிராபி பதிவை எழுதினார். அந்த சிங்கைபதிவருடன் பன்னெடுங்காலமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ள மும்மூர்த்திப் பதிவர்கள் பின்னூட்டத்தில் அதை விமர்சித்திருந்தனர். அந்த மூன்று மூத்த பதிவர்களில் வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும் தனது சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும் டெசிபல் குறைவான விமர்சனத்தை வைக்க, ஐரோப்பா பயணத்திலிருக்கும் ஒரு மூத்த மொக்கைப் பதிவர் வழக்கம் போல் சவுண்ட் பைட்டை கூடுதலாக சேர்த்திருந்தார். அமெரிக்கவாழ் மூத்த பதிவர் அபாண்ட குற்றச்சாட்டு ஒன்றை ஏற்கனவே இவர்மீது வைத்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், சிறிது காலமாக நட்புக்கரத்தை நீட்டிபார்த்து ஓய்ந்துபோன சிங்கைப் பதிவர் இந்த அதிரடி விமர்சனத்திற்கு எதிவினையாக பதிவொன்றை வெளியிட்டுவிட மைனஸ் இருபது டிகிரி சுவீடன் தட்பவெட்பத்திலிருந்து ஒரு பிழம்புப் பதிவு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இந்த பிழம்பை வேடிக்கை பார்க்கச்சென்று முடி பொசுங்கிப் போனவர்களெல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஓட எதிர்த்திசையில் ஒரு சூறாவளி தாக்கத்தொடங்கியது. காண்டின் உச்சத்தை அடைந்து விட்ட கஜேந்திரன் பொறுமை இழந்து சுழன்றடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட புயல்தான் அது. தனது சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின் கோபத்திற்கு காரணம் தான் வழக்கமாக ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு மற்றொரு மூத்த பதிவர் இட்ட அநாகரீகமான பின்னூட்டமேயாகும்.

அநாகரீகப் பின்னூட்டம் என்பது வலை உலகின் சாபக்கேடு என்கிற நிலையில் அப்பின்னூட்டமிட்ட அந்த மூத்த பதிவர் நியாயமான காரணத்திற்கு கீழ்த்தரமான பின்னூட்டத்தை இட்டிருக்கக் கூடாது என வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள் இப்போது கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோலிகுண்டு விளையாட்டில் பேந்தா கட்டி தோற்றுப்போன சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போன்று ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர் தங்களது காமெடிகளால் தமிழ்மணத்தை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் என்பது யாவர்க்கும் தெரிந்ததே. அந்த காமெடி டிராக்குகளுக்கு ஒரு குரூரத்தன்மையை தொடர்ந்து வழங்கிவரும் பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு ஒரு புதிய போர்வாள் கிடைத்திருப்பதாக வேறு சில மூத்த பதிவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஆக, பிழம்பாலும் புயலாலும் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு இடைக்கால போர் நிறுத்தத்திற்கு மூத்த பதிவர்கள் முன்வரவேண்டும். நான்காண்டு காலாமாக நடைபெற்று வரும் இந்த மூன்றாம் தமிழ்மண பாணிபட்டுப்போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என அரசியல்வாதிகள் போல் காமெடி செய்யாமல் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மொத்தமாக எல்லோரும் ரிட்டையராகி ஆளுக்கொரு திரட்டி உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்துமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: நியூ ஜெர்சி காட்டுப் பகுதி ஒன்றில் தனது கடைசிகாலத்தில் ஐயின்ஸ்டீன் தங்கிஇருந்து மாஸ் எனர்ஜி கொள்கையையும் குவாண்டம் பிசிக்ஸையும் ஒருமைப் படுத்த முயற்சி செய்து வந்தார். அவர் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் நான் வசிப்பதால் பிழம்புப் பதிவையும் புயல் பதிவையும் ஒருமைப் படுத்த முடியுமா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். விடை கிடைத்தால் மகிழ்ச்சி. அதற்குள் இரண்டுமே கட்டுடைக்கப் பட்டு அதர பழசாகி பின் அவரவர் வேலையைப் பார்க்கச்சென்று விடுவார்களேயானால் அதுவும் மகிழ்ச்சியே.

[அமேரிக்கா.. இளா.. சிங்கப்பூர்... கோவி... ஓசை... குழலி... ரவி... சுவீடன்... லக்கி... காண்டு... டோண்டு... பெயரிலி... ஐன்ஸ்டீன்... அடச்சே]

Read More......

Wednesday, July 16, 2008

அடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா சாமீ!

· 20 comments

காமக்கதைகளை எழுத்து சுதந்திரத்தினின்று விதிவிலக்கம் செய்வது அது பதிவுலகில் சகஜமாவதை என்றென்றைக்குமாக தடுப்பதாகவே முடியும். மழையில் நனையும் கதாநாயகி தமிழ் சினிமாவாவில் சில ஆண்டுகளுக்குமுன் சகஜமில்லை. அதுபோல் இன்று சகஜமாக இல்லாத காமம் சார்ந்த எழுத்துக்கள் நாளை சகஜமாகிவிடும். சகஜமாவதை தடுக்கும் பத்தாம் பசலிகளுக்கு தமிழ்மணம் செவிசாய்த்துவிட்டதால் அது தடைபடப்போவதில்லை.

காமக்கதைகள் ஒன்றும் புரட்சி வித்துக்கள் அல்ல என்றாலும் சமூகத்தில் உள்ள எழுத்து சுதந்திரத்தின் உயிர்ப்பை உரசிப்பார்க்க தேவையாயிருக்கின்றன. இவைகளை அசூசையாக நினைப்பவர்கள் நடந்துகொண்ட விதம் அற்பமாக உள்ளது. தமிழ்மணத்திற்கு புகாரளித்தவர்கள் தாம் நியாயம் என நினைத்தவற்றை பதிவுகளாக இட்டு காமக்கதை எழுதியவர்களை பெயர் குறிப்பிட்டே சாடியிருக்கலாம். அது ஒரு விவாதத்தையாவது தொடங்கியிருக்கக்கூடும். அதைவிடுத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து தமிழ்மணத்தையும் தடுமாற வைத்துவிட்டனர்.

தமிழ்மணத்திற்கு தடுமாற்றம் இது முதன்முறையா என கேட்பவர்கள் தமிழ்மணத்தின் வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல் மற்றும் வனிகவியலை அறிந்தவர்களாக இருக்கக்கூடும். அடியேன் அறியேன். இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும். அதற்குள்ளாக தமிழ்மணம் தேவையின்றி நடவடிக்கை எடுத்து எழுத்து சுதந்தரம் விஷயத்தில் அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிட்டது. அறிவாளிகளும் வல்லுனர்களும் நடத்தும் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் ஒருவர் கூட இதை முன்னுணராதது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துசுதந்தரம் இன்றேல் வலைப்பூக்களே இல்லை என்பது அறிந்திருந்தும் தமிழ்மணம் தடுமாறியுள்ளது அதன் முன்னறிவிப்பில்லாத நடவடிக்கைகளே காட்டுகின்றன. நிருவாகவியலில் சிறந்த ஒரு நாட்டிலிருந்து இத்திரட்டி நடத்தப்படுவது முரண்.

இதை விட நகை முரண் என்னவென்றால் தமிழ்மணத்திற்கு எதிராக பதிவர் சுதந்தரத்திற்கு கொடிபிடிப்பவர்களில் சிலரது புனிதப்போர்தான். அவர்கள் தங்கள் பதிவுகளில் பின்னூடங்களை செலக்டிவாக வெளியிடுபவர்கள், பின்னூட்டம் எவ்வளவு டீசன்ட்டாக இருந்தாலும். கேட்டால் பெயரை குறிப்பிட்டு நையாண்டி செய்யும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை என பதில் வரக்கூடும். நைய்யாண்டி இல்லாத பின்னூட்டம் வேண்டுமானால் "ஹிண்டு" -வில் எழுதினால் தான் கிடைக்கும்.

அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் போல நாகரீகமான பின்னூட்டங்கள் சிலவற்றைக்கூட வெளியிட முகம்சுழிக்கின்றனர் சில மூத்த பதிவர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மன்னன் படத்தில் கவுண்டர் சொல்வதுதான் நியாபகம் வருகிறது. அடடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!

Read More......

Sunday, June 8, 2008

முகம் சுழிக்க வைக்கின்றனவா சூடான இடுகைகளின் தலைப்புகள்?

· 124 comments

பிரபல பதிவர் ஒருவரின் வெகு சமீபத்திய பதிவில் இடம் பெற்ற ஒரு வாக்கியம் சற்று யோசிக்க வைத்தது. வாக்கியம் இதுதான். ...தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன.....

அப்பதிவில் Puthiya Pathivar என்ற பெயரில் நான் இட்ட பின்னூட்டம் ஏனோ ஏற்கப்படவில்லை என்பதாலும் (தொழில் நுட்ப பிரச்சினையாக இருக்கக்கூடும்), பதிவெழுத வேறு விஷயம் கிடைக்காததாலும் எனது பின்னூட்டத்தையே பதிவாக இடுகிறேன்.

"தொடர்ந்து பதிவேழுதியோ, பதிவர் சந்திப்பு நடத்தியோ பிரபலமாகி விட்டால் பிறகு எங்களை போன்றவர்கள் சூடான தலைப்பைத் தேடி அலையத் தேவையில்லைதான். அதன் பிறகு நட்புக்காக போடற பின்னூட்டங்கள் குவிந்து விடும், படிப்பவர் எண்ணிக்கையும் கூடும், பதிவு சூடான இடுகையிலும் இடம்பெறும். அதுவரை எங்களைப் போன்றவர்கள் தலைப்பில் யாரையாவது வம்புக்கு இழுத்துத்தான் இடுகையை சூடாக்க வேண்டியிருக்கு. நல்ல கன்ட்டேன்ட்டுன்னு நினைச்சு எதையாவது எழுதி, டீசண்ட்டா தலைப்பு வச்சா யாரு பாக்றாங்க, மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல. எங்களுக்குன்னு ஒரு கோஷ்டி சேத்து கும்மி கிம்மி எல்லாம் அடிச்சி கொஞ்சம் பிரபலமானா அப்பத்தான் அவங்க கும்மியில சேத்துக்குவாய்ங்கன்னு நினைக்கிறேன். இப்பக்கூட பாருங்க, என் பதிவு முகவரிய கொடுக்காமத்தான் பின்னூட்டம் போடறேன், கொடுத்தாமட்டும் வந்து பின்னூட்டம் போடப்போறாய்ங்களா என்ன, இல்ல இந்த பின்னூட்டத்துக்குத்தான் பதில் வரப்போகுதா!, இதுக்குப்பேருதான் "தமிழ்மண தீண்டாமை" யோ!

பதிவு பேசிய விஷயத்தை பற்றி தானே நானும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்?
"

மற்றொரு விஷயம். எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்!

சரி, blog -அ பிரபலம் செய்து என்ன பண்ணப் போற, பின்னூட்டம் வந்தாதான் பதிவு எழுதுவியா நீ, இல்லன்னா எழுதமாட்டியா? என்று உள்ளே இருந்த நல்லவன் கேட்டதும், அமைதியாகத்தான் இருந்தேன். "இன்னா மச்சி ஊன் blog ஈயடிக்குது போல" என்று எவனாவுது கேட்டு வெறுப்பேத்தி உட்டுரானுங்க!

Bottom Line: அரை குறை உடையில் நான் எவரையேனும் தெருவில் கண்டால், முகம் சுழிப்பதில்லை, மாறாக முகத்தை திருப்பிக்கொள்வேன். ஏனென்றால், ........அது அப்படித்தான். முகத்தை மட்டும் திருப்பிக்கொள்வேன்.

Read More......