Showing posts with label லக்கி லுக். Show all posts
Showing posts with label லக்கி லுக். Show all posts

Wednesday, September 3, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50:லக்கிலுக் எழுதும் அரசியல் கட்டுரை.

· 19 comments

ண்பர்களே, லக்கி லுக் அவர்கள் எழுதிய இந்த அரசியல் கட்டுரையை எனது வலைப்பூவில் ஐம்பது பதிவுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடுகிறேன். பதிவர் திருமதி ராப் எழுதும் 'லொடுக்கு சுந்தரிகள்: ஒரு பார்வை' என்ற கும்மிப் பதிவும், புதுகை அப்துல்லா எழுதும் ஆராய்ச்சி கட்டுரையும் தொடரவிருக்கின்றன.

தளபதி - காலத்தின் கையில்!!

து 1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை.

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் நடப்பு ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்! எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர். தளபதி மு.க. ஸ்டாலின்!!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன் தளபதி மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் தளபதியும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் தளபதியின் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் தளபதி துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமேயென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, தளபதி மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் தளபதியும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம். சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் தளபதி ஆனார். திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக தளபதி ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

தளபதியோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரது வெள்ளைமனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் தளபதி குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற தளபதியும் துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

தளபதியோடு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமாவை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. குறிஞ்சிமலர் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தளபதியோடு, பாத்திமா இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. குறிஞ்சிமலரில் பாத்திமா நடித்துக் கொண்டிருந்ததால் செய்திகளில் தலைகாட்டவில்லை. உடனே ஸ்டாலின் பாத்திமாவை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று தளபதி சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

தளபதிக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. தளபதியின் தந்தை கலைஞர் தனது 85வது வயதிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக தளபதி இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான்.

வாழைமரத்துக்கு கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் தளபதி இன்னேரம் இன்னொரு மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக கட்சியில் இன்னமும் பத்தோடு பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பது கண்கூடு.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் தளபதிக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இப்போது 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்போம் என்று தளபதி கேட்டுப் பெற முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே தயாநிதி முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போல தந்திரங்கள் மென்மையான குணம் கொண்ட தளபதிக்கு கைவரவில்லை.

1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் தளபதி மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது தளபதியின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி தளபதி ஸ்டாலின் தான். தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த தளபதி, பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார். எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் தளபதியிடம் இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு தளபதிக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் தளபதி இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

தளபதி இவ்வளவு பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

தளபதியையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து தளபதி அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் தளபதியும் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய தளபதி போல அரசியல் பூனையாக பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தளபதி ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்கும் என்று நம்புவோம்.



தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......

Friday, June 20, 2008

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி. (பாகம் - 2)

· 17 comments

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பேட்டியின் முதல் பாகம் இங்கே. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் முன்னேற்றம் விரைவாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? அல்லது இருக்கிறதா?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிச்சயமாக அதிகம். இவ்விஷயத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும் அளவுக்கு மகாராஷ்டிரா மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.

ம்யூநிஷ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் இணையும் அந்த ஆதிக்க எதிர்ப்பு என்ற புள்ளியை பற்றி விளக்குங்கள்.

ந்தப் புள்ளியில் சரியாக இணைகிறார்கள் என்ற தெளிவு எனக்கில்லை. நானெல்லாம் கூட பிறக்கும் போதே அமெரிக்கா ஒழிக என்று சொல்லிக் கொண்டு தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆதிக்க எதிர்ப்பு தான் கம்யூனிஸம் என்றால் திராவிட இயக்கத்தார் அனைவருமே கம்யூனிஸ்ட்டுகள் தான்

ருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் பற்றி உங்கள் அறிதலை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ந்த கேள்வியை வாசிக்கும்போது எனக்கு வாசிப்பு பத்தாது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்தாவது இந்த கேள்விக்கு என்ன பொருள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

ப்போதெல்லாம் சென்னைவாசிகள் மெட்ராஸ் பாசையில் பேசுவதில்லை. எல்லோரும் வடிவேல் பாசையில் பிதற்றுகிறார்கள். தங்கள் சுய அடையாளத்தை இழக்கும் இப்போக்கு ஆபத்தானதா?

ல்லோரும் நினைக்கும் மெட்ராஸ் பாஷை என்பதே மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிலும், ஊடகங்களிலும் சொல்லப்படும் ஒரு பாஷை. அதுமாதிரி பாஷை பேசுபவர்களை மெட்ராஸில் காண்பது அரிதிலும் அரிது. என்ன மெட்ராஸ்காரன் என்ன பேசினாலும் முன்னாடி 'ஓத்தா' போட்டு பேசுவான். அது தான் ஒரிஜினல் மெட்ராஸ் பாஷை.

சென்னை மற்றும் பெங்களூரை அரசியல் தாண்டி ஒப்பிடுங்களேன்!

பெங்களூர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே நன்கு முன்னேறிய நகரம் என்பதாக சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக அறிய முடிகிறது. சென்னை கடந்த பண்ணிரண்டு ஆண்டுகளாக தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இரு நகரங்களுக்கும் பொதுவான அம்சம் போக்குவரத்து நெரிசல் என்பதாக அறிந்திருக்கிறேன். பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.

முன்னேற்றம் என்பது எது? IT பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கிடைப்பதா? அல்லது 12 -ம் வகுப்பு படித்தவர்க்கும் வேலை கிடைப்பதா? பெங்களூர் பற்றி சுஜாதா அப்படி என்னதான் சொன்னார்?

முன்னேற்றம் என்பது எல்லாத்தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதாக தான் பொதுக்கருத்து இருக்கிறது. பெங்களூரில் மக்களின் வாழ்க்கைத்தரம் இப்போது சென்னை மக்களுக்கு இருக்கும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிவிட்டதாக சுஜாதா சொல்லியிருந்தார்.

சென்னை பைலட் தியேட்டரில் உலக சினிமா ஏதும் பார்த்ததுண்டா?

டைசியாக 'இண்டியானா ஜோன்ஸும், கபால முத்திரையும்' பார்த்தேன். அது உலக சினிமாவா என்று தெரியாது. உலக சினிமா என்பதற்கு எது அளவுகோல்?

டிகை ஷகீலா உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் வாசலை இடித்து கட்டுவது குறித்து பரிசீலிப்பீர்களா?

கீலாவுக்காக என் வீட்டுக்கு எதிரில் புதியதாக ஜோதிமஹால் கட்டுவேன். கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு இடைசெறுகல் : இப்போது ஜோதி தியேட்டரில் 'மிஸ் ஷகிலா' என்ற உலக சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது

ங்கள் முழுப்பெயர், பணி, ஊர், குடும்பத்தினர், எதிர் வீட்டு பிகர் பற்றி வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

ன்னுடைய முழுப்பெயர் 'சிறுணை இல.மோகன கிருஷ்ணகுமார்', என்னுடைய பணி விளம்பர ஆலோசகர், ஊர் மடிப்பாக்கம், உலகமே என் குடும்பம் தான், கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது. ஒரு ஃபிகர் திராவிட ஃபிகர் லுக்கிலும், அவளுடைய தங்கை ஆரிய ஃபிகர் லுக்கிலும் இருக்கிறாள்கள். இன்னும் பெயர் இத்யாதி விவரங்கள் விசாரிக்கவில்லை.

ங்கள் படிப்பு மற்றும் தனித்திறமைகள்?


ரசியல் இளங்கலைப் பட்டம், இதைப் படிப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது :-) ஃபிகர் மடிப்பதும் தனித்திறமையில் சேருமென்றால் சுமாரான பர்சனாலிட்டியை வைத்தே நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்.

திவுலகிலும் பொதுவிலும் உங்கள் நெருங்கிய நண்பர் இருவர், தூரத்து எதிரிகள் இருவர் பற்றி குறிப்பிடுங்கள்.

திர்கருத்து கொண்டவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களே. உச்சநீதி, உயர்நீதி என்று நீதியை தரம் பிரித்து வைத்திருப்பது போல நெருங்கிய, தூரத்து என்று நண்பர்களை தரம் பிரிக்க விரும்பவில்லை

ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?


நாமெல்லாம் இலக்கியம் படைக்க இங்கே வரவில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த இன்னொரு வலைப்பூ.

புதிதாக பதிவெழுத வருவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?.


திவெழுதுவதை விட அதிகமாக படிக்கவும். அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் போன்றவர்களின் வலைப்பூக்களை தவறாது வாசிக்கவும். புதிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வாக்கியங்களை எளிமையாக அமைக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் எதை வாசித்தாலும் உங்களுக்கென்று இருக்கும் இயல்பினை இழந்துவிட வேண்டாம். உங்கள் இயல்பு தான் உங்கள் முகவரி


ராபிட் ரவுண்ட்

ழகிரி? ஸ்டாலின்?

ரசியலுக்கு முன்னவர். ஆட்சிக்கு பின்னவர்.


கிலா? நமீதா?

பீப்பாய், அண்டா!!


ண்மைத்தமிழன்? டோண்டு?

பிளேடு பக்கிரி, இண்டர்நேஷனல் மாஃபியா!


சுண்டை கஞ்சி? பதிவர் கூட்டம்?

ப்பு, பிளேடு!!


ரங்கிமலை ஜோதி? ராயப்பேட்டை பைலட்?

கீலா, ஷரன் ஸ்டோன்!



தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி.

· 15 comments

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ர்சனல் கேள்விகளை இறுதியில் வைத்துக்கொண்டு, உங்களைப் போன்றே அதிரடியாக விசயத்திற்குச் செல்வோம். அனானிகள் வந்தால் பெரும்பாலான பதிவர்கள் கதவை இழுத்து சாத்திவிட நீங்கள் மட்டும் அவர்களை உள்ளே கூப்பிட்டு உதைக்கிறீர்களே ஏன்?

ண்மையை சொல்லப் போனால் நான் வெளியிடுவதை விட ரிஜெக்ட்டு செய்யும் அனானி கமெண்டுகள் தான் அதிகம். அனானிகளும் வலைப்பதிவுலகின் ஒரு அங்கம். நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த ஒரு வாரம் மட்டுமே அனானி-அதர் ஆப்ஷனை மூடி வைத்திருந்தேன். சில நேரங்களில் அனானி ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பல நேரங்களில் எரிச்சலை கிளப்புவதும் உண்மை!

"கும்மி", "டவுசர் கிழியுது", "தாவு தீருது" போன்ற சொற்றொடர்களை பதிவுலகில் பிரபல படுத்தியதில் உங்கள் பங்கு என்ன? உங்கள் மற்ற கண்டு பிடிப்புகளை பட்டியலிட முடியுமா?

வை ஏற்கனவே என் மாணவப் பருவத்தில் பயன்படுத்திய சொற்றொடர்கள் தான். எதையெல்லாம் இப்போது பயன்படுத்துகிறேனோ அதெல்லாம் ஏற்கனவே இங்கே இருப்பவை தான் என்பதால் என்னுடைய பங்கு என்று எதுவுமில்லை. நான் கண்டுபிடிப்பாளன் அல்ல, காப்பி அடிப்பவன் என்பதால் எதையும் பட்டியலிட்டு சொந்தம் கொண்டாட முடியாது.

"காண்டு கஜேந்திரன்" என்ற பாத்திரத்தை நீங்கள் உருவாக்கி பிரபல படுத்தியுள்ளீர்கள், அதேபோல் "கஜக்கோல் பாண்டியன்" பாத்திரத்தை உருவாக்கி வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "ஸ்டேட்ஸ் மேன்" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் இந்த பேட்டியில் உறுதி செய்யமுடியுமா?

ஜக்கோல் பாண்டியன் என்ற பாத்திரம் அருமையான கற்பனையாக இருக்கிறது. மேட்டர் கதைகளில் தான் இதுபோன்ற பாத்திரங்கள் இருக்கும். எனக்கு மேட்டர் கதை எழுத வராது.

"பெயரிலி" உடனான பிரச்சினைக்கு பிறகு நீங்கள் "ரூம் போட்டு அழுத" தாக வந்த வதந்தியைப் பற்றி.

பெயரிலியோடு எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. தமிழச்சி பதிவுக்கு நான் பின்னூட்ட ஆதரவு தந்து வந்ததால் அவர் என்னை திட்டினார். பதிலுக்கு திருப்பி திட்டினேன். டோண்டு பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களை போலி டோண்டு திட்டியது போலவே இது ஒரு பாசிஸ நடவடிக்கையாக எனக்கு பட்டதால் என் எதிர்ப்பை முழுமூச்சாக காட்டினேன். மற்றபடி பெயரிலி அண்ணனை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கட்டியணைத்து வரவேற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவருக்கு இருக்காது என்று நம்புகிறேன்.

ங்கள் வலைப்பூவை பிரபலப் படுத்த ஏதேனும் அஜண்டா தயாரித்தீர்களா அல்லது "மகா யக்ன யாகம்" செய்தீர்களா?

ரம்பத்தில் நிறைய பேருக்கு அதிரடியாக பின்னூட்டங்கள் போட்டுவந்தேன். அதை தவிர வேறு எதுவுமில்லை.

திரடியாக பின்னூட்டம் என்றால், ஜல்லி பின்னூட்டமா, கலாய்த்தல் பின்னூட்டமா அல்லது அட்டன்டன்ஸ் பின்னூட்டமா?

ல்லா மாதிரி பின்னூட்டமும். அட்டணண்ட்ஸ் பின்னூட்டம் போட்டால் பேக் பயர் ஆக வாய்ப்புண்டு.

தி. மு. க -வின் வருங்கால தலைவருக்கு எதிர்காலத்தில் பிரச்சினை தரப்போவது யார்? ஜெயலலிதா வா? விஜய காந்த் -ஆ? வீர பாண்டியாரா? அல்லது டோண்டு சாரா?

டந்த கால் நூற்றாண்டாக திராவிட இயக்க சிந்தனைகள் நீர்த்து வருவதாக அல்லது முழுமுனைப்போடு சிந்திக்கப்படாததாக தோன்றுகிறது. இதுதான் எதிர்கால திமுக தலைவருக்கு பிரச்சினையை தரும் என்று கருதுகிறேன். திராவிட இயக்க சிந்தனைகளை தவிர்த்துப் பார்த்தால் திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.

லந்தூர் சட்டமன்ற தொகுதி டிக்கெட் உங்களுக்கு தரப்பட்டால் எத்தனை லட்சம் செலவு செய்வீர்கள்? ப்ளாக்கில் விற்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

நான் இப்போது இருப்பது தாம்பரம் தொகுதி. அதுவும் அடுத்த தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியாக மாறப்போகிறது. ஆலந்தூரில் எனக்கு எப்படி சீட்டு தருவார்கள்? திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நடிகர் சந்திரசேகர் சொன்னதை தான் நானும் சொல்லமுடியும். "தலைவர் தான் செலவு செய்யணும்!"

ரே நேரத்தில் பத்து ஆட்டோக்கள் வந்தால் உங்கள் வீட்டு வாசலில் நிறுத்த இடமிருக்கிறதா?

நிறுத்த இடமிருக்கிறது. வந்த ஆட்டோக்களை நொறுக்கித்தள்ள ஆள்பலமும் இருக்கிறது.

லைவர் கலைஞர் திருக்குறளை கையாள்வதில் லாவகம் மிக்கவர் என்பது எல்லோரும் அறிவர். உங்களுக்கு அதில் பரிச்சயம் உண்டா? சான்றாண்மை அதிகாரத்தில் ஒரு குறளை சொல்லி விளக்குங்கள்.

"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை."


வல்லவராக இருப்போரின் வல்லமையே பணிவோடு நடந்துகொள்வதுதான். எதிரிகளை கூட இந்த அணுகுமுறை மூலமாக நண்பர்களாக்கி கொள்ள முடியும்.

எனக்கு குறளில் அவ்வளவு பரிச்சயமில்லை. பள்ளிப் பருவத்தில் ப்ரேயர் மீட்டிங்கில் குறள்விளக்கம் சொன்னதால் சில குறள்கள் மட்டும் நினைவிலிருக்கிறது.

திராவிட இயக்கம் ஒரு வெற்றி பெற்ற கருத்தாக்கம் என்கிறார் இதழியலாளர் ஏ. கே. பன்னீர்செல்வம். உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக. கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மவுனப்புரட்சியின் வித்து திராவிட இயக்க சிந்தனைகளே. இன்று ஏராளமான தலித்கள் வழக்குரைஞர்களாக, வங்கிப் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக பணியாற்றுவதை பார்க்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமேயில்லாத விஷயங்களாக இருந்தவை இவை.


(தொடரும்)


இப்பேட்டியின் தொடர்ச்சி இன்னும் சில மணிநேரங்களில் வலையேற்றப்படும். ஷகிலா, நமிதா, எதிர் வீட்டு ஜன்னல், டோண்டு, உண்மைத்தமிழன், கம்யூனிசம் என விலாவாரியாக பதிலளித்து உள்ளார்.


தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......