Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, March 27, 2009

இழவு வீட்டில் சீட்டுக்கச்சேரி

· 26 comments




இறந்து கிடக்கும் ஈழத்தமிழனின் தீராப் பகையாளி ஒருவர் அவன் இழவை எடுக்க வீடுதேடி வந்திருக்கிறார். சும்மா வரவில்லை, கையில் சீட்டுக்கட்டுடன் வந்திருக்கிறார். இதுவரை பிணத்தின் அருகில் நின்று கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உறவினர் ஒருவர் சீட்டுகட்டை கண்டதும் கடைசியாக ஒருமுறை மூக்கை சிந்திவிட்டு தனக்கும் ஒரு கை போடச்சொல்லி சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார். இழவு வீட்டில் ஆரவாரமாக அரங்கேறும் சீட்டுக்கச்சேரி பிணத்தின் அருகாமையால் எவ்விதத்திலும் சோடை போகவில்லை. பகையாளி நபருடன் இழவு வீட்டுக்கு மீண்டும் வந்த முன்னாள் உறவினர் ஒருவர் எல்லோருக்கும் ரம்மி சேர்த்து கொடுத்துக் கொண்டு ஆட்டத்தின் விறுவிறுப்பு குன்றாமல் பார்த்துக் கொள்கிறார்.

இவ்வளவையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தலைவர் வெகுண்டெழுந்துவிட்டார். இழவு வீட்டில் இவர்கள் நடத்தும் சீட்டு கச்சேரி அவருக்கு மிகுந்த வேகாளத்தை உருவாக்குகிறது. தான் பலமுறை அழைத்தும் சீட்டாட வராதவர்கள் இப்போது மும்முரமாக ஆட்டத்தில் லயித்துவிட்டார்களே என்பதுதான் இவரது கோபம். இழவு விழுந்தது தன் வீட்டில்தான் என்பதை சுத்தமாக மறந்துபோனார் இந்த பிதாமகர். ஒரு பொறாமைக்காரியின் முனகலைப் போல பொறுமுகிறார்.

இதற்கிடையே பிணத்தை எடுக்கவிடாமல் அழிச்சாட்டியம் செய்யும் கடன்காரனை எப்படி சமாளிப்பது? மழுப்பலான பதிலை கடன்காரனுக்கு தந்தவாறே உள்ளக்குமுறலை அடக்கிக்கொண்டு பிணத்தை அடக்கம் செய்ய ஆகவேண்டியதை பார்த்துகொண்டிருக்கிறார் ஒரு நபர். எதிர்காலம் பற்றிய அயர்ச்சியுடனும் நிகழ்காலப் பொறுப்புடனும் அந்த நபர் நடந்து கொள்ளும்விதம் இழவு கொடுக்க வந்த அந்த சிறு கூட்டத்தின் மனத உருகச் செய்துவிடுகிறது.

-------------------


சமீபகாலமாக வலையுலக உடன்பிறப்புகளின் பதிவுகளை நோட்டம்விட்டால் அவர்கள் ஒருகருத்தை விடாமல் அங்கலாய்ப்பது புரியும். அம்மா ஆட்சியில் அடங்கி இருப்பவர்கள் இவர்களது ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்களாம்!!. இந்திய கூட்டமைப்பு தரும் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தை இவர்கள் என்னவோ கோபாலபுரத்தின் கொல்லைப் புறத்தில் உற்பத்திசெய்து அறிவாலையம் வழியாக டிஸ்ட்ரிபியூட் செய்கிறவர்கள் போல ஒரே பெருமிதம்தான் போங்கோ!! அம்மா ஆட்சியானாலும் அவங்க ஆண்டை ஆட்சியானாலும் சமூக அக்கறை உள்ளவர்களை கட்டிப்போட முடியாது. இவர்களை எதைச்செய்தாலும் சட்டவிரோதமாகத்தான் செய்யவேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சமூக விரோதிகளுக்கும் சட்டவிரோதங்களுக்கும் சராசரி இந்தியன் பயந்த காலம் மலையேறிவிட்டது என்பதை பெரிய அண்ணன்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கூடவே சிலர் ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு எனவும் அது கருணாநிதிக்கு வேண்டியது இல்லை என்றும் அருட்பேருரை நிகழ்த்துகிறார்கள். விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வேறுவேறு என்று கூறிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இவர்கள் உண்மையில் இருவரும் ஒருவரே என்பதை ஆணித்தரமாக நம்புகிறவர்களாவர். போரில் ஈழத்தமிழன் செத்தாலும் விடுதலைப்புலி செத்தாலும் அதை வேறுபடுத்தி பார்க்காத ஜடங்கள். அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம்.

Read More......

Monday, March 2, 2009

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

· 60 comments

விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.

ணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?

நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.

போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?

போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.

விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?

விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.

ர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

ர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.

டேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

டேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?

மிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.

மிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்

றிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.



கோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?

டுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)

ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?

ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.

ழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?

ண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.

னிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?

மிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.

னிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.

1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது

முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!

முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?

80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.

க்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?

தாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.

லைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

மிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?

நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.

நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.

ங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.

நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.

Read More......

Thursday, February 26, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 3

· 13 comments

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களது பேட்டியின் மூன்றாம் பகுதியுடன் தொடர் நிறைவு பெறுகிறது. வேண்டுகோளின் பேரில் பேட்டியின் ஒலிவடிவம் மின்மடலாக அனுப்பிவைக்கப்படும்.

வி டுதலைப் புலிகளின் தற்போதைய பின்னடைவு எத்தகையது? இதில் இந்திய, இலங்கை அரசுகள் நிம்மதி களிப்பை அடைய உண்மையில் ஏதேனும் இருக்கிறதா? புலிகள் எதற்காகவாவது காத்திருக்கிறார்களா?

பாகிஸ்தான், இந்திய உட்பட பல்வேறு நாட்டு படையினரை எதிர்த்து புலிகள் தனியாக போரிட்டு வருகிறார்கள். படைவீரர்களின் எண்ணிக்கை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதுகிறோம். இது செட் பேக் அல்ல. ஒரு போர்த்தந்திரம். இதை இந்திய அரசும், சிங்கள அரசும் தங்களது வெற்றியாகக் கருதுகின்றன. நிலப்பகுதிகள் சிங்களபடையினர் கைகளுக்கு மாறுவது உண்டு. பிறகு மீண்டும் புலிகள் கைப்பற்றுவார்கள். தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மீது விடுதலை சிறுத்தைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுப்பார்கள்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் அல்ல என்று நிரூபிக்க விடுதலை புலிகளும் முயற்சிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை அறிந்து கொள்ள காங்கிரசும் விரும்பவில்லை. இவற்றிற்கு என்ன காரணம்?

து ஒரு முக்கியமான கேள்வி. படுகொலை நடந்த சமயத்தில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அம்மறுப்பு அறிக்கையோடு அவ்விசயம் நின்றுவிட்டது. பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரன் அதை ஒரு துன்பியலான சம்பவம் என்பதோடு சுருக்கிவிட்டார். தங்கள் நிலையை விளக்க ஏன் அவர்கள் முன்வரவில்லை

ஈழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவை பகைத்துக் கொள்ளவே கூடாது என்று நினைப்பவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ராஜீவ் காந்தி கொலையை செய்திருப்பார்களா என்பதுதான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி. இதை வெளிப்படையாக விளக்கி இருக்கவேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் கருத்துமாகும்.

உண்மையான குற்றவாளிகளை அறிந்துகொள்ள காங்கிரஸ் ஏன் விரும்பவில்லை என்ற கேள்வியும் எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு. நரசிம்மராவ் பிரதமராவதற்காக அவரது நண்பர் சந்திராசாமி அமெரிக்க உளவு நிறுவனத்துடன் சேர்ந்து சதி செய்து இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. சுப்பிரமணியன் சாமி எழுதிய புத்தகத்தில் படுகொலையில் சோனியா காந்தி அம்மையாருக்கே தொடர்பிருக்கும் என்று எழுதியிருக்கிறார். அது அச்சில் வந்திருக்கிறது.

காங்கிரஸ்காரனே ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்தான் என்பது வெளிப்பட்டுப் போனால் அது காங்கிரசுக்கே பேரிழப்பாகும். இதுதான் உண்மைநிலையை அறிய காங்கிரஸ் விரும்பாததன் அரசியல் காரணம் ஆகும்.

டுக்கப்பட்டோர் நலன், ஈழம் தொடர்பில் திமுக அனுதாபிகளை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்துவிட்டது. இனி திராவிட அரசியலில் ஒரு உறுதிப்பாட்டை கைகொள்வதன் மூலம் திமுக -விற்கு ஒரு முழுமையான மாற்று நீங்கள் என்பது அறுதியாகுமல்லவா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?

ழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆனால் அதற்காக திமுக -விற்கு மாற்று விடுதலை சிறுத்தைகள் தான் என்று சொல்லிக்கொள்ளவோ காட்டிக்கொள்ளவோ நாங்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் உண்மையான, நேர்மையான ஈடுபாடு போன்றவற்றால் உங்களைப்போன்ற தமிழ்சொந்தங்கள் ஒரு அரசியல் அங்கீராம் அளித்தாலே அதை ஒரு மகத்தான வெற்றியாக நாங்கள் கருதி மகிழ்ச்சியடைவோம். எதிர்காலத்தில் நீங்கள் சொல்லுகிற இடத்தை விடுதலை சிறுத்தைகள் அடையும், தமிழகத்தில் ஒரு முன்னிலை அரசியல் சக்தியாக எழுச்சி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

னைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும்போதே ஒடுக்கப்பட்டவர்களின் நலனை காத்து நிற்க முடியுமா? பகுஜன் சமாஜ் கட்சி -யை எவ்வாறு எதிர் கொள்ளுவீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் தற்போது அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் மொழியை காப்பதில், தமிழ் இனத்தை காப்பதில், தமிழ் மண்ணைக் காப்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து செயல் திட்டங்களை வகுத்து போராடி வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் முன் முயற்சியில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, நாடுதழுவிய அளவில் எழுச்சியை உருவாக்கியது. இப்போது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு தளம் விரிவடைந்துள்ளது. தலித்துகளின் நன்மதிப்பை பெற்றுள்ள எங்கள் இயக்கம் இவற்றால் மேலும் மத்திப்பை அடையும். பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை பின்னுக்கு தள்ள முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. அதை எதிர்கொள்ளுவதில் சிக்கலும் இல்லை.

லையுலகில் இன்றைய தேதியில் மிக நல்ல சிந்தனைப்போக்கும், பல விவாதங்களும் நடைபெறுகின்றன. இவற்றை நீங்கள் அவதானிகின்றீர்களா? எனில், அவற்றை விடுதலை சிறுத்தைகள் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்?

ணைய தளங்களில் நடைபெறும் விவாதங்களை தொடர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெறவில்லையென்றாலும் அவ்வப்போது அதை அறிந்து கொண்டு வருகிறோம். இணையத்தளங்களில் இயங்கும் தோழர்களோடு கலந்து உரையாடுகிறோம். இனி வரும் காலங்களில் இணையதள ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளவும், ஈடுபாடு கொள்ளவும் விடுதலை சிறுத்தைகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதை தோழமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொடர்ந்து உங்களைப் போன்றோர் எங்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டு நேர்முகத்தை நிறைவு செய்கிறேன். அடுத்தமுறை நேரில் சந்திக்கும்போது விரிவாக பேசுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர் தமிழ்வேந்தன் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்தார்; அவரது இறுதி அஞ்சலிக்காக கடலூர் சென்று கொண்டிருந்த வழியில் திருமா அவர்கள் நமக்காக பேட்டி அளித்துள்ளார். தற்போதைய சூழலில், தினமும் ஓரிரு மணி நேரங்களே உறங்க வாய்க்கும் நிலையில் அவர் தனது ஓய்வு நேரத்தை கணிசமாக நமக்கு அளித்ததற்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்

Read More......