Showing posts with label காண்டு. Show all posts
Showing posts with label காண்டு. Show all posts

Monday, March 2, 2009

ஈலட்டமிளர் பிளாட்ஃபார்ம் -க்கு ஸ்கோப் என்ன?

· 14 comments


மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)


காட்சி 1:
அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.


அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!


காட்சி 2:
புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.

மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?

காட்சி 3:
தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!

அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்!

மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?


அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!


திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?

டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!

காட்சி 4:
வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...

சார், மே ஐ கமின்?

வாங்க தோழர், என்ன விஷயம்?

ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?

ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.

நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?

கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!

அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!

Read More......

Monday, October 27, 2008

கலைஞர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய முகவரி..

· 79 comments

கடந்த பத்தாண்டுகளாக காணாமல் போயிருந்த கலைஞர் இரு வாரங்களுக்கு முன் கிடைத்துவிட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். ஆனால் இப்போது வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டது கலைஞர் அல்ல என்றும் அது கலைஞரின் போலி என்றும் கூறுகின்றன. இனி கலைஞர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ம்ஹ்ம்ம்..துக்கம் தொண்டையை அடைப்பதால் இனி காமெடி கை கொடுக்காது. விஷயம் இதுதான். போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவது என்ற முக்கிய தீர்மானம் பற்றி எதுவும் குறிப்பிடாத ப்ரனாப்-பாசில் கூட்டறிக்கை எண்ணூறு டன் உதவிப்பொருள் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கையில் எவ்வித மாற்றமோ இன்றி பிரச்சினையை எளிதாக முடித்துக்கொண்டது காங்கிரஸ். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் பாசில் பக்ஷே எண்ணூறு டன் பரிசுப்பொருளுடன் கிளம்புகிறார்.

ஒக்கேனக்கல் திட்டத்தில் கலைஞர் அடித்த பல்டியால் மானம் மட்டும்தான் போனது. இப்போது அடிக்கும் பல்டி ஊசலாடும் தமிழனின் உயிரை துச்சமென மதிப்பதாகிறது. நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என்னும் விஷயத்தை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் இந்த குழந்தைக்கு எவரும் எடுத்துச்சொல்லாமல் விட்டுவிட்டனர் போலிருக்கு.

தமிழ்தேசிய கலைஞர்தான் கோட்டை விட்டுவிட்டார். இந்திய தேசிய கலைஞர் என்ன ஆனார். கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை குறித்தும் குள்ள புஷ்கா ப்ரனாப்ஜி அல்வா கொடுத்து விட்டு போயிருக்கிறாரே! 1974 முதல் சமீபகாலம் வரை கட்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நினைத்து வந்தோம். கேள்வி ஏதுமின்றி இலங்கைக்காரன் சுட்டு பிணங்களை அனுப்பிவைக்கும்போது வாய் மூடி இருந்த மத்திய அரசு சொல்லாமல் சொல்லியது நமக்கு அங்கே உரிமை இல்லை என்று. இதற்காகவே மத்திய அரசை நொங்கு எடுத்திருக்க வேண்டும். வாய்மையின் மொத்த உருவமான இலங்கையின் சிறப்பு தூதர் தந்த உறுதிமொழியை பிரனாப்ஜி நா தழுதழுக்க உங்களுக்கு ஒப்பிக்க நீங்களும் கண்ணீர் மல்க ஏற்றுக்கொண்டீரோ!

சரி, முக்கியமானததைத்தான் விட்டுவிட்டீர்கள். சாதித்த ஒரே காரியத்தையும் ஒழுங்காய் செய்தீரா? உணவுப்பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? இலங்கை இராணுவம் விநியோகிக்கும் உணவுப்பொருள் வண்டியில் ஆயுதத்தை ஏற்றி அனுப்ப, புலிகள் தங்கள் வழமைபோல அதை வழியிலேயே தகர்க்க, போன வாரமே சாகாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த தமிழன் உணவுப்பொருளை கண்ணில் பார்த்து விட்டு இந்த வாரம் சாகப்போகிறான்.

ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன். எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ராஜதந்திர கோமாளித்தனம் செய்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும், நீங்களும் பெருவாரியாக வெற்றிபெறுவீர்கள் என்றா? அதீத கற்பனை அய்யா உமக்கு!

நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஒரு முறை கூலி உயர்வு கேட்டு போராடிய கோவை பஞ்சாலைத் தொழிலாளிகளுக்கு எதிராக லாக் அவுட் செய்த முதலாளிகளிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று! "நான் இப்போது ஊட்டி செல்கிறேன், மாலையில் கோவை வரும்போது மாலை இதழ்களில் கூலி உயர்வு பற்றி செய்தி ஏதும் இல்லை என்றால் நாளை காலை இதழ்களில் செய்தி வரும், 'அரசுடமையாக்கப்பட்ட ஆலைகளில் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு' -என்று சொன்னீர்களே!". இந்த நேர்மையும் நெஞ்சுரமும் எங்கே போனது அய்யனே!

நீங்கள் நினைக்கும்போது 'சுவிட்ச் ஆன்', 'சுவிட்ச் ஆப்' செய்ய இன உணர்வு என்ன திரைச்சீலையா? தீர்மானத்தில் கையெழுத்துப்போட்ட கட்சிகள் உம்மை சும்மா விடுவார்கள் என நினைத்தீரா? டி. ராஜாவின் பேட்டியை கேட்டீரா? நீர் டாராய் கிழிபடப்போவது உறுதி.

மிஸ்டர் ஞானி! ப்ளீஸ் கண்டின்யூ!

Read More......

Sunday, October 26, 2008

இந்தியாவில் தேசியம் கற்பனையா?

· 18 comments

சட்டப்படியும் பூகோளப்படியுமே தமிழன் இந்தியனாகிறான். மற்றெல்லாவற்றிலும் அவன் வேறு, ஏனைய இந்தியர் வேறு என்பது வெளிப்படை. ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து வாழ்வது என முடிவாகி அதன்படி தொடர்கிறோம். இது முழுக்கவும் இருதரப்பினரின் நலன் சார்ந்ததேயன்றி உணர்வுப்பூர்வமானதல்ல. எனவேதான் அவர்கள் நலன் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மை தேச துரோகி என்றும் நம் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் நாம் அவர்களை தமிழின துரோகி என்றும் சாடுகிறோம்.

எனில், இந்தியா உண்மையில் யாருடையது? இரு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீரிகள் தங்கள் விளைபொருட்களை ஜம்முவை கடந்து ஏனைய இந்திய மாநிலங்களில் விற்கத்தடையாக சனாதனிகள் போராட்டம் நடத்தினர். அமர்நாத் கோவிலுக்கு நிலம் தராவிட்டால் காஷ்மீரிகள் இந்தியாவில் நுழைய முடியாது என்பது தான் அவர்கள் வெளிப்படுத்த விரும்பியது. இந்தியனாக இருப்பதைக்காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் என்பதால் அவர்கள் விளைபொருட்களை விற்று பணம் பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் ஒரு முடிவை எடுத்தனர். எல்லையை சட்ட விரோதமாகவேனும் கடந்து பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று விளைபொருட்களை விற்பதுபோல் பாவ்லா காட்டுவது தான் அது. இப்போது, போலி நடுநிலையாளர்களும், இந்திய ஆட்சியாளர்களும் சனாதனிகளுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரிகள் தேச துரோகிகள் என்று கூறினர். அப்படியென்றால் தேச துரோகம் என்பது எவ்வளவு ஓரவஞ்சனையோடு நிர்ணயிக்கப்படுகின்றது பாருங்கள். இந்தியா எவ்வளவு கலங்கலாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்! இந்தியா எப்போதும் சனாதனிகளுடையதுதான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பிறகு, இந்த உச்சநீதிமன்றம் செய்யும் உள்ளடி வேலைகள் பற்றி எல்லோரும் அறிந்ததுதான். மூன்று கீழ்நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலிதாவை வெறும் கண்டனத்துடன் விடுதலை செய்தது. காவிரி நீரை திறந்துவிடும்படி தீர்ப்பில் ஏதும் கூறாமல் வெறும் 'டைரக்டிவாக' கர்நாடக மாநிலத்திற்கு ஆணையிட்டது. "நான் குற்றம் செய்தேன் என்று நீதிமன்ற தீர்ப்புகளில் எங்கும் இல்லை" என்று மோடி ஒரு நேர்காணலில் கூறுகின்றார். தமிழக பந்திற்கு எதிராக பஞ்ச கச்சத்தை இறுக்கிக்கொண்டு ஒரு அரசியல் கட்சி போல் ஆவேசத்துடன் வந்தது உச்சநீதிமன்றம். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்?

அயோக்கியத்தனங்களுக்கு எழுத்து சுதந்தரத்தையும், ஜனநாயகத்தையும் பயன்படுத்தி தேசிய பூச்சாண்டி காட்டுவதே பார்ப்பனர்களின் முழுநேர வேலை. இப்படிச் சொல்வதால் நியாயமான பார்ப்பனர்கள் கோபித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் அநியாயத்தை வாய்திறந்து பேசுவதில்லை இந்த நியாயவாதிகள். டபுள் டாக் பகுதியில் தமிழக அரசியலை கிண்டல் செய்ய மட்டும்தான் தெரியும் என்டிடிவி -க்கு. நமது கோரிக்கைகளை செய்தியாகக்கூட வெளியிடுவதில்லை இச்செய்தி நிறுவனம். பரபரப்பு செய்திகளுக்கு ஆளாய் பறக்கும் சி.என்.என்-ஐபிஎன் பேசாமல் ஆபாசப்படம் எடுத்து கூட்டம் சேர்க்கலாம். தி ஹிந்து எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நடந்து கொள்ளும் டைம்ஸ் ஆப் இந்தியா ஈழப்பிரச்சினையில் சுரத்தில்லாமல் கூட செய்தி வெளியிட மறுப்பது முரண்.

இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு? இலங்கை அரசியலமைப்பு சட்டம்போல் அல்லாமல் இந்தியச்சட்டங்கள் போராட்டங்களுக்கு செவி சாய்க்கக் கூடிய ஒன்று. எனவே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்?

0. நம் நலன் பேணும் தேசிய கட்சி ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும். அல்லது உருவாக்க வேண்டும்.

1. ஜெயலலிதாவிற்கு கட்டாய அரசியல் ஒய்வு தந்தாக வேண்டும்.

2. இடஒதுக்கீடு, ஈழம், இந்திய தேசியம் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

3. திருமாவளவன் தன் கட்சியை அதிவேகத்தில் விஸ்தரிக்க வேண்டும்.

4. சனாதன பத்திரிக்கைகளுக்கு தரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும்.

5. சமூகத்தின் மனசாட்சிகளான எழுத்தாளர்கள் ஒரு புரட்சிக்கு வித்திட வேண்டும்.

இவை ஏதும் நடக்காத பட்சத்தில் இந்திய தேசியத்தில் பிடரியில் சம்மட்டியால் அடித்து அதை குற்றுயிர் ஆக்கவேண்டும்.

Read More......

Saturday, July 26, 2008

குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

· 81 comments


மக்கள் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றி பெறாது என்ற அரிச்சுவடி கூட தெரியாத சில அடிப்படைவாத முட்டாள்களே! உங்களுக்கு பிரச்சினையின் மையம் எதுவென்று விளக்க ஒரு மக்கள் தலைவனும் இல்லையா? எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேல் முஸ்லீமல்லாதோர் வாழும் நாட்டில் அவர்களுக்கெதிரான வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. முதலில் உங்கள் எதிரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் உங்கள் எதிரிகள் பலசாலிகள் அல்ல. எண்ணிக்கையும் மிகக்குறைவு. ஆனால் அவர்கள் மிகக் கொடூரமான சூத்திர தாரிகள். ஒட்டுன்னியைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அடுத்தவனை ஏய்த்து, அவன் உழைப்பில் வாழும் சமூக ஒட்டுண்ணிகள் பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? இனப்பெருக்கம் மட்டும்தான் அவைக்கு தெரியும். உண்ணுவது, உறைவது, உபாதைகளையும் அரிப்புகளையும் தீர்த்துக்கொள்வது அடுத்தவர் தயவில் தான். அவ்வொட்டுன்னிகளை ஆதார உயிர்களில் இருந்து பிரித்து பார்க்கத்தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

2002 படுகொலைகளில் பாதிக்கப்பட்டது யார்? படுகொலைகளுக்கு காரணமான அந்த ரயில் எரிப்பில் இறந்தவர்கள் யார்? இரண்டுமே அந்த சமூக ஒட்டுண்ணிகள் அல்ல. ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரிகள். ஐம்பது வருட காஷ்மீர பிரச்சினையானாலும் சரி! இன்றைய இந்தியாவின் துரதிஷ்ட சூழ்நிலையானாலும் சரி! அவர்கள் தான் உங்களுக்கும் எதிரிகள். அவர்களின் வலிமை என்ன? அவர்களின் திரைமறைவு வேலைகள் என்ன? அவர்களுக்கு எதிரான வியூகம் ஏதேனும் உள்ளதா உங்களிடம்? நிச்சயமாக இல்லை.

அவர்களின் வலிமையே அரசியல் அதிகாரமும் ஏவலாட்களுடனான அவர்கள் அணுகுமுறையும்தான். அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரத்திற்கு எதிராக என்ன செய்துள்ளீர்கள் நீங்கள்? வன்னியர் சமுதாயத்தை விட எண்ணிக்கையில் அதிகமான நீங்கள் அவர்கள் போல பதினேழு எம்.எல்.ஏ. -க்கள் வைத்திருக்கிறீர்களா? அவர்களிடம் ஆறு எம்.பி. -க்களும் இரு மத்திய மந்திரிகளும் உள்ளனர். இது எப்படி சாத்தியம்? சாதியம் என்பது கேவலம் என்று கருதப்படுவதாக சொல்லக்கூடிய தமிழகத்தில்தான் வன்னியர்கள் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதுநாள் வரை அடுத்தவன் கையையே எதிர் பார்த்துவந்த பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியை இன்று நீங்களும் காண்கிறீர்கள் தானே?
தமிழ் தேசிய உணர்வு தானே தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தந்தது! 40 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல், இன்று தமிழனுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியும் தானே! ஆனால் தமிழருக்குள்ளே உயர்சாதியினரிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியை இப்போது பார்த்து வருகிறோம்.

ஆகவே, அரசியல் எழுச்சி பெறுங்கள். மத ஒற்றுமை, தேச பக்தி போன்ற சமூக விழுமியங்களை அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவ்விழுமியங்களை போதிக்கும் எந்த அரசியல்கட்சியும் தன்னளவில் பின்பற்றுவதில்லை. எனவே, உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள்.

இன்று நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்களின் அடிப்படை பிரச்சினை என்ன என்பது நாம் அறிவோம்தானே! அவர்களைப் பார்த்து மீண்டுமொரு முறை கூறுவோம். "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

சில கொண்டைகள் கேட்க்கக்கூடும், "உனக்கேன் அக்கறை, அவர்களுக்கு இல்லாத அக்கறை" என்று. சில முஸ்லீம் நண்பர்கள் கேட்க்கக்கூடும், "இந்த ஈரோட்டு வேலையெல்லாம் உங்களுக்குள்ளே வச்சிக்கோ, அதிங்க பிரசங்கி வேலை வேண்டாம்" என. அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்று தான். "என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"

Read More......

Wednesday, July 16, 2008

அடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா சாமீ!

· 20 comments

காமக்கதைகளை எழுத்து சுதந்திரத்தினின்று விதிவிலக்கம் செய்வது அது பதிவுலகில் சகஜமாவதை என்றென்றைக்குமாக தடுப்பதாகவே முடியும். மழையில் நனையும் கதாநாயகி தமிழ் சினிமாவாவில் சில ஆண்டுகளுக்குமுன் சகஜமில்லை. அதுபோல் இன்று சகஜமாக இல்லாத காமம் சார்ந்த எழுத்துக்கள் நாளை சகஜமாகிவிடும். சகஜமாவதை தடுக்கும் பத்தாம் பசலிகளுக்கு தமிழ்மணம் செவிசாய்த்துவிட்டதால் அது தடைபடப்போவதில்லை.

காமக்கதைகள் ஒன்றும் புரட்சி வித்துக்கள் அல்ல என்றாலும் சமூகத்தில் உள்ள எழுத்து சுதந்திரத்தின் உயிர்ப்பை உரசிப்பார்க்க தேவையாயிருக்கின்றன. இவைகளை அசூசையாக நினைப்பவர்கள் நடந்துகொண்ட விதம் அற்பமாக உள்ளது. தமிழ்மணத்திற்கு புகாரளித்தவர்கள் தாம் நியாயம் என நினைத்தவற்றை பதிவுகளாக இட்டு காமக்கதை எழுதியவர்களை பெயர் குறிப்பிட்டே சாடியிருக்கலாம். அது ஒரு விவாதத்தையாவது தொடங்கியிருக்கக்கூடும். அதைவிடுத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து தமிழ்மணத்தையும் தடுமாற வைத்துவிட்டனர்.

தமிழ்மணத்திற்கு தடுமாற்றம் இது முதன்முறையா என கேட்பவர்கள் தமிழ்மணத்தின் வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல் மற்றும் வனிகவியலை அறிந்தவர்களாக இருக்கக்கூடும். அடியேன் அறியேன். இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும். அதற்குள்ளாக தமிழ்மணம் தேவையின்றி நடவடிக்கை எடுத்து எழுத்து சுதந்தரம் விஷயத்தில் அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிட்டது. அறிவாளிகளும் வல்லுனர்களும் நடத்தும் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் ஒருவர் கூட இதை முன்னுணராதது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துசுதந்தரம் இன்றேல் வலைப்பூக்களே இல்லை என்பது அறிந்திருந்தும் தமிழ்மணம் தடுமாறியுள்ளது அதன் முன்னறிவிப்பில்லாத நடவடிக்கைகளே காட்டுகின்றன. நிருவாகவியலில் சிறந்த ஒரு நாட்டிலிருந்து இத்திரட்டி நடத்தப்படுவது முரண்.

இதை விட நகை முரண் என்னவென்றால் தமிழ்மணத்திற்கு எதிராக பதிவர் சுதந்தரத்திற்கு கொடிபிடிப்பவர்களில் சிலரது புனிதப்போர்தான். அவர்கள் தங்கள் பதிவுகளில் பின்னூடங்களை செலக்டிவாக வெளியிடுபவர்கள், பின்னூட்டம் எவ்வளவு டீசன்ட்டாக இருந்தாலும். கேட்டால் பெயரை குறிப்பிட்டு நையாண்டி செய்யும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை என பதில் வரக்கூடும். நைய்யாண்டி இல்லாத பின்னூட்டம் வேண்டுமானால் "ஹிண்டு" -வில் எழுதினால் தான் கிடைக்கும்.

அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் போல நாகரீகமான பின்னூட்டங்கள் சிலவற்றைக்கூட வெளியிட முகம்சுழிக்கின்றனர் சில மூத்த பதிவர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மன்னன் படத்தில் கவுண்டர் சொல்வதுதான் நியாபகம் வருகிறது. அடடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!

Read More......

Wednesday, June 25, 2008

செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூ.

· 56 comments

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூவை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வெகு நாட்களாக வலைப்பூவை தொடங்குவது குறித்து ஜெயலலிதா அவர்கள் யோசித்து வந்தாலும் இப்போதுதான் அவரது எண்ணம் கைகூடியிருக்கிறது. வழக்கறிஞர் ஜோதியின் துரோகத்திற்கு பிறகு, ஆலோசனை கூற தகுந்த ஆட்கள் கிடைப்பதில் சற்றே சுணக்கம் இருந்த போதிலும் இப்போது வெற்றிகரமாக வலைப்பூ தொடங்கப் பெற்றிருக்கிறது. புரட்ச்சித்தலைவி கொடநாட்டில் ஓய்வில் இருப்பதால் ஊட்டியில் இருந்தபடியே வலைப்பூவை நிர்வகிப்பார்

தற்போது வலைப்பூ முழுதும் திராவிட திம்மிகளின் ஆதிக்கம் நிலவுவதால் தலைவியின் பெயரில் வலைப்பூ தொடங்குவது சற்றே ஆபத்தாய் முடியும் என்று கருதி வலைப்பூ வேறொரு பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனையின் பேரில் Valentina என்று ஆங்கிலத்திலும் சகோதரர் வைகோ வின் கெஞ்சுதலின் பேரில் "தமிழரசி" என்று தமிழிலும், அதிமுக ஆஸ்த்தான சோதிடர் "நம்புங்கள்" நாறவாயன் வழிகாட்டுதலின் பேரில் இரண்டையும் கலந்து தமிங்கிலீஷில் ஒரு வலைப்பூ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆறுகொடியே எண்பத்தெட்டு லட்சத்து பண்ணிரெண்டாயிரத்து நூற்றி பதினோரு அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் பெயரில் புரட்சித்தலைவியின் "தான்தோன்றித்தன" தனியியல்புகள் தெறிக்கும் வண்ணம் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தற்குறி கமலகாசனைப் பற்றி அவரது “ஒலக நாயக்கன் “ கொட்டம் அடங்கும் பொருட்டு சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தனியொருவராக சட்டமன்றத்தை கதிகலக்கிய அம்மா இப்போது அதே பாணியில் எதிரிகளை பின்னூட்டங்களில் கலாய்த்து வருகிறார். இதுவரை தன்னை பீனிக்ஸ் பறவையாக காட்டி வந்த தானைத்தலைவி, சிங்க நிகர் செல்வி, புறநானூற்று தாய், நம் புரட்சித்தலைவி அம்மா இப்போது தன்னை அமிஞ்ச பீடி என்று blog caption -ல் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.

“பீடியைப்போலவே மீச்சிறு அளவினள்! புகைக்க நினைத்தால்(உங்களால் முடிந்தால்) நாறடிப்பேன், அமிஞ்ச பீடியாய், நனஞ்ச சுருட்டாய்!”

மகோன்னத மேதா விலாசம் ஸ்திரீ வாலன்டீனா தமிழரசியின் ஆன்லைன் பத்ரிகா -விற்கு இன்றே விஜயம் பண்ணுங்கள்.

....இருங்க இருங்க....இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்க போங்க.

டிஸ்க்கி1: பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன்.

டிஸ்க்கி 2: பதிவில் நான் குறிப்பிடும் பார்ப்பனியம் சார்ந்த கிண்டல்கள் ஜெயலலிதாவைச் சுட்டுவன மட்டுமே. பதிவர் வாலண்டினா, ஜெயலலிதா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என நான் கருதுவது தான்தோன்றித்தன தனியியல்புகள் முதலானவை மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
I don't indulge in targeting people".

இணைப்பு(ஜூன்-26):

செல்வி ஜெயலலிதா, செல்வி வாலண்டினா ஒற்றுமைகள்:

1) இருவரும் கான்வென்ட் ஸ்கூல்

2) தற்போது வாசம்: முன்னவர் கொடநாடு, பின்னவர் ஊட்டி.

3) தலைக்கனம்:
பெரியவர்(1998): "என்னை கேள்வி கேட்பவர்கள் கோர்ட்டுக்கு கருணாநிதி வந்த போது இதே கேள்வியை கேட்டீர்களா?, நீங்களெல்லாம் எடுபிடிகள், உண்மையான பத்திரிக்கைக்காரர்களுக்கு பதில் சொல்லிக்கொள்கிறேன், இங்கிருந்து கிளம்புங்கள் எல்லோரும்"
சின்னவர்: "to see the achievements .... .... .... before scribling here. Any real Film Critics here?"

4) கெக்கே பிக்கே தனம்:
முன்னாள் முதல்வர்: "சேது சமுத்திரம் நிறைவேறினால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சுனாமி வரும்"
இந்நாள் உலற்வர்: ".....அப்படியே ஒரு மளிகைக்கடக்காரரின் பையனாக நடிக்காமல் வாழ்ந்துகாட்டிய பரத், பருத்திவீரன் கார்த்தி சரவனன், நாசர், சீயானாகவே மாறிய... அந்நியன் ரெமோ அம்பி என்று தம்மாத்தூண்டு ஷாட்களில் கலக்கிய விக்ரம், பிதாமகன், ஆறுச்சாமி என்று அசத்திய விக்ரம், பாலக்காட்டு சமையல் காரனாக வந்த மாதவன்...."

5) இங்கிலீஷ்-தமிழ் குழப்பம்:
இரும்பு பெண்மணி: ஓட்டு கேட்க தமிழும் சட்டமன்றத்தில் ஆங்கிலமும் பத்திரிக்கைகாரர்களுக்கு ரெண்டும் கலந்தும் என இவர் கலக்குவது நாம் அறிந்ததுதான்.
இம்சைப் பெண்மணி: "For Lucky once again.. from my post
ஆனால் நம் ஒலகத்த்ரப் படத்தில் முறூக்கேறிய"


6) அப்பீட்டு:
மூத்த செல்வி: "நான் பெண் என்பதால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன்"
இளைய செல்வி: "இன்று புதிதாக எழுதவந்திருக்கிறேன். அதற்குள் ”கேணத்தனமாக எழுதுகிறாள்” என்றெல்லாம் உற்சாகப்படுத்துவது அவசியம் தானா?"


7)

Read More......

Wednesday, May 21, 2008

ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி அன்பார்சுநேட்லி!

· 9 comments

நான் புலம் வந்த பிறகு இதுவரை தினமும் இதை இரு முறையாவது சொல்ல நேர்ந்திருக்கிறது. பெரும்பாலும் வட இந்திய 'தேசி' நண்பர்கள் எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் என்னிடம் இந்தியில் பேசதொடங்கும்போது எனக்கு எரிச்சல் தான் வரும். நாக்கின் நுனிவரை வரும் 'அன்பார்லிமேண்டரி' வார்த்தைகளை இடது புறம் திரும்பி லோ டெசிபலில் உமிழ்ந்துவிட்டு மீண்டும் ஒரு முறை சொல்வேன்,

"ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி, ஐ கஸ் யு நோ தட்". (ங்கோத்தா... )

"தட்ஸ் ஓகே, டோன்ட் வொறி"

(யாருக்குடா இப்ப 'வொறி', வென்று!) "...................."

"பட் ஸ்டில், யு ஆர் ஹியர் டூ இயர்ஸ் நவ் ரைட்"

(அதுக்கென்னடா இப்ப!) "யா, பட் ஐ நெவெர் பீல் லைக் ஐ ஹாவ் டு"

"வொய்?"

(வொய்யா, இதென்ன காசியாபாத் கடைவீதி -ன்னு நெனைச்சியாடா, பர்கர் மண்டையா?) "ஐ டோன்ட் நோ"

"ஐம் சாரி மென்..பெட்டர் லேர்ன் ஹிந்தி"

(யான்டா, இல்லன்னா சாமி கண்ணா குத்திடுமா?) "....................."

"யு நோ ஹிந்தி இஸ் அவர் நேசனல் லாங்குவேஜ்"

(சரி அதை அப்புறம் பாக்கலாம், இப்ப உனக்கு என்ன வேணும்?) "ஓகே, ஸீ ய லேட்டவ்"

இதன் பிறகு தமிழ் பற்றிய அவர்களின் வழக்கமான கிண்டல் எனக்கு புரியாத பக்கிரி பாஷையில்(அதாங்க ஹிந்தி...) அவர்களுக்குள் தொடரும். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைக் காரன்களுடன் அமர்ந்து அந்த டோமர் பசங்களை அவர்கள் காது படவே, அவர்களும் புரிந்து கொள்ளும் மொழியில் விமர்சிப்பதுண்டு. ஒரு தமிழன் புதிதாக கிடைத்துவிட்டால் போதும், தேன் சொரியும் சென்னைத்தமிழில் கிளப்பி வைத்துவிடுவேன் அவர்கள் .....யில். காத்திருக்கிறேன், லெட்ஸ் ஸீ!.

Read More......

Monday, December 24, 2007

மெட்ராஸ் -னா நக்கலா பூடுச்சா!

· 8 comments

சில பேரு இருக்கான் மீடியா-ல, கரிட்டா சொல்நோன்னா இங்கிலீஷ் மீடியா-ல, அவுன்லுக்கு மெட்ராஸ்-ஸ நக்கல் பன்றதான் வேலையே! பெங்களுருன்னா ஒஸ்தி, மெட்ராஸ்-னா சொம்மா. நார்த்தின்டியா காரனுங்கதான் சிஎன்என்-ஐபிஎன்-ல நல்லா ஆக்குபை பண்ணிக்கிட்டு நம்மள தெனம் தெனம் வெறுப்பேத்திகிட்டு இருக்கானுங்கோ. பெங்களூரு ஒரு டப்பா ஊரு. அத போய் சிங்கபூர் ரேஞ்சிக்கி பேசரானுங்கோ. இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ. அம்பது வருசமா நோர்த்ல பப்பு வித்து போநியாவுல. சௌத்ல நாமலாம் அம்பது வருஷமா கஷ்டப்பட்டு (எவ்ளோ ஓரவன்ஜன பன்னானுங்க இந்தி பசங்க) நம்ம ஊருங்கள டெவலப் பண்ணி வச்சா, இவனுங்க வந்து கூடாரம் போட்ருவானுங்கோ போல்ருக்கே! இதுல இவ்னுங்களுக்கொஷ்ரம் நாம இந்தி படிக்கணுமாம்! பொட்டி படிக்கை யோட சென்ட்ரல் ல வந்து இவனுங்க நிக்கும் போது அவனுங்களுக்கு அட்ரஸ் சொல்ரதுக்கொஷ்ரமெல்லாம் நாம இந்தி படிக்க முடியுமா? அது சரி! கன்னடா காரனுங்கல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்குங்கோ. மெட்ராஸ்-ஸ நக்கல் பண்ணா ஜில்லுன்னு தான் இருக்கும் உனுக்கு இப்போ. மெட்ராஸ் ல கேம்ப் அடிக்க முடியாத எரிச்சல்ல "ச்சேய் இந்த பயம் புய்க்கும்" ன்ற மாதிரி நக்கல் தான் அடிப்பனுங்கோ. ஆனா உங்க ஊர அவுனுங்க ஊரா ஆக்கி உங்கள "செகண்டரி சிடிசன்" ஆக்கிடுவானுகோ ஜாக்ரத, அவ்ளோதான் சொல்வேன்.

Read More......