Showing posts with label போலிடோண்டு. Show all posts
Showing posts with label போலிடோண்டு. Show all posts

Thursday, September 17, 2009

போலிடோண்டு விவகாரம்-பேட்டி-1,செந்தழல் ரவி,பகுதி3

· 12 comments

பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


15. TBCD உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?

குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?

16. TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்?

நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

17. நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?

விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.

18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?

எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?

19. சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?

தெரியாது.

20. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?

உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.

21. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?

என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான்.

மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.

ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

22. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும்.

[முற்றும்]

Read More......

போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 2

· 26 comments

பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


6. அவனது தொடர்பில் நீங்கள் பதிவுகள் எழுதியுள்ளீர்களா? ஆம் என்றால் எத்தனை? அவை எம்மாதிரியானவை?

விடாது கருப்பு யார் என்று கண்டறியவேண்டு என்ற ஆவலில் இமெயில் தொடர்பை ஏற்படுத்தி, அந்த சமயத்தில் என்னுடைய நன்பர் ஒருவர் சொன்ன ஒரு கருத்தாக்கத்தை பதிவாக்கினேன். வோல்கா நதியில் இருந்து வந்த அறிவாளிகள் ரஷ்யர்கள், சுகோய் விமானத்தை அந்தரத்திலேயே பல்டி அடிக்கவைக்கும் அவர்கள் தான் பார்பனர்கள் என்று எழுதினேன். அதன் பின் வேறு எந்த பதிவும் எழுதவில்லை. ஆனால் பிரச்சினையில் நானும் விடாது கருப்புவின் ஒரு ஆசிரியர் என்று காட்ட போலி டோண்டு முனைந்தபோது இதனையும் பயன்படுத்தினான்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை விளக்கவேண்டும். முகமூடி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருப்பார். போலி டோண்டுவின் அல்லக்கை நீ என்று நான் நம்பவில்லை. ஆனால் போலி டோண்டுவை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக நீ சென்ற தூரம் அருவருப்பானது என்று. என் மனதில் எப்போதும் அரித்துக்கொண்டிருப்பது இது. போலி டோண்டு முயன்று நிறுவியது போல டோண்டு சாரின் மனைவி மகள் படத்தை நான் போலி டோண்டுவுக்கு அளிக்கவில்லை. போலி டோண்டு தளத்தில் எந்த ஆபாச பதிவும் எழுதவில்லை. யாருக்கும் எந்த ஆபாச பின்னூட்டமும் போடவில்லை.

போலி டோண்டு எபிசோடுக்கு முன்பே அல்லது இடையிலோ, எதிர் கருத்து சொல்பவர்களை கொஞ்சம் அரகண்ட் ஆக எதிர்கொண்டது உண்மை. ஆனால் ஆபாச பதிவு எழுதவோ, ஆபாச பின்னூட்டம் போடவோ என்னுடைய மனது ஒப்புக்கொள்ளாது என்பதை முகமூடிக்கு தெளிவுபடுத்த ஆசை.

போலி நடத்திய குழுமத்தில் பிறரது மடல் முகவரியை அவர்கள் அறியாமலேயே இணைக்க பொறிவைப்பது போன்ற மின்மடல்கள் பலருக்கும் வந்தன. அம்மடலில் இருக்கும் கார்பன் காப்பி முகவரிகளில் doondu@gmail.com -யும் இருக்கும். அம்மடல்களுக்கு 'ரிப்ளை ஆல்' கொடுக்கும்போது அது போலிக்கும் சென்று, பிறகு அவர்களும் அவன் நடத்தும் குழுமத்தில் உறுப்பினர்போல் இணைக்கப்படுவர். உங்களுக்கும் இதுபோன்ற மடல்கள் வந்ததா?

உண்மை. இருபத்தைந்து மின்னஞ்சல்களில் நடுவில் டூண்டு என்ற ஐடியும் தொக்கி நிற்கும், ஆனால் அதன் டிஸ்ப்ளே பெயர் டோண்டு என்று இருக்கும். ஆக ஒரு ஓவர் லுக் செய்துவிட்டு ரிப்ளை செய்தீர்கள் என்றால் நீங்கள் டூண்டுவுக்கு மின்னஞ்சல் செய்வது போன்றே தோற்றப்பாட்டுடன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும்.

இதில் எனக்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.

போலி டோண்டுவை நான் பொது தளத்தில் எதிர்க்க ஆரப்பித்த பின், என்னுடைய நிறுவனம் தாய் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. என்னுடைய மின் அஞ்சல் ravindran.antonysamy@lgsonfindia.com என்பதில் இருந்து ravindran@lge.com என்று மாறிவிட்டது.

திடீரென ஒருநாள் லக்கிலுக் போன் செய்து, உங்கள் மின்னஞ்சல் ஸ்க்ரீன்ஷாட்டை போட்டிருக்கிறான் பாருங்கள் போலி. நீங்கள் அப்படி மின்னஞ்சல் அனுப்பினீர்களா என்று கேட்டான். டூண்டு தளத்தை திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அப்படியே ravindran.antonysamy@lgsonfindia.com என்ற மின்னஞ்சலில் இருந்து டூண்டு ஜிமெயிலுக்கு மின் அஞ்சல் போன மாதிரி ஒரு ஸ்க்ரீன்ஷாட். அதில் ஜிமெயிலில் வரும் ஐக்கான்கள் உட்பட பர்பெக்டாக இருந்தது கண்டு அதிர்ந்தேன். இது ஒரு எடுத்துக்காட்டு.

7. ravindran.antonysamy@lgsoftindia.com என்ற முகவரியில் இருந்து அவ்விதமான மடல் ஒன்று சிலருக்கு சென்றுள்ளது. அதில்doondu@gmail.com என்ற போலியின் முகவரியும் cc -யில் இருந்தது. இது பற்றிய உங்கள் விளக்கம் என்ன?

வேறு ஒருவர் மின்னஞ்சலை போல உருவாக்கி அனுப்பும் அளவுக்கு அவனுக்கு தொழில்நுட்ப அறிவு உண்டு.

8.ஆபாசமாக எழுதியது, உங்களை தாக்கியது, பதிவுலகின் மீது அக்கறை இவற்றில் எது மூர்த்திக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற என்னத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது?

என்னைப்பொறுத்தவரை, மிகுந்த சுயநலத்தோடு, என்னை தாக்கியமைக்கு முதலில் அவனுக்கு தண்டனை தரவேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால், அவனது ஒவ்வொரு ஆபாச தாக்குதல் வார்த்தைகளும் இரண்டு நாளைக்கு உள்ளத்தை விட்டு அகலாமல் தொண்டையில் சிக்கிய மீன் முள் போல உறுத்திக்கொண்டிருக்கும். மற்ற இரண்டுக்கும் பதில் அளிக்கவிருப்பமில்லை.

9. ஆபாசமாக எழுதியது மூர்த்தி மட்டுமல்ல என்கிறபோது வேறு எவர்மீதேல்லாம் புகார் அளித்துள்ளீர்கள்? வேறு யாரும் அவ்வாறு அளித்துள்ளார்களா? ஆம் எனில் அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன?

மூர்த்தியின் எல்லை மீறிய செயல் புகார் அளிக்க காரணம். பெங்களூர் தமிழர்களுக்கு பிரச்சனையான ஒரு நேரத்தில், என்னுடையது போல ஆர்க்குட் முகவரி ஒன்றை உருவாக்கி, அதில் என்னுடைய தொலைபேசி எண்ணையும் இட்டு, அதன் மூலமாக கன்னட சலுவளி சங்கங்கள், கன்னட வலைப்பதிவர் கூட்டமைப்புகள், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஆர்க்குட்டர்களுக்கு, கன்னடன் எல்லாம் முட்டாள்கள், தமிழன் ஒவ்வொருவனும் ஒரு கன்னடனை கொல்லவேண்டும் என்கிற ரீதியில் நூற்றுக்கனக்கான இடங்களில் எழுதினான்.

அப்படி எழுதும்போது, என்னுடைய கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட என் மனைவியும் இது போன்ற குழுமங்களில் உறுப்பினர் என்பதால் என்னுடைய கவனத்துக்கு உடனே வர, நாங்கள் இதனை பெங்களூர் காவல் அதிகாரிகளிடம் கொண்டு சென்று, அதன் பிறகு அவர்களுடைய அறிவுரையின் பேரில் சென்னை காவல் நிலையம் வந்து புகார் தந்தோம்.

மூர்த்தி மீது மட்டும்தான் புகார் அளித்தோம். பாதிக்கப்பட்ட உண்மைத்தமிழனும், டோண்டுவும் இதில் இணைந்துகொண்டார்கள். உண்மைத்தமிழன் அண்ணனை முதலில் சந்தித்து, புகாரை தட்டச்சினோம். வழக்குரைஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனை சந்தித்தி அவருடைய சட்ட ரீதியான ஆதரவையும் பெற்றேன்.

10. போலியால் ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளானது தவிர்த்து வேறு பல வழிகளிலும் தொல்லைக்குல்லானதாக தெரிவித்துள்ளீர்கள். அவை எவ்விதமானவை?
முந்தைய பதில் இதற்கும் பொருந்தும். திருமதி துளசி கோபாலிடம் மின்னஞ்சல் அனுப்பி டோண்டு மனைவி மகள் படத்தை பெற்று ஆபாச பதிவு எழுதியதாகவும், போலி டோண்டுவோடு தொடர்பில் இருந்ததாக போலி மின்னஞ்சல் ஸ்க்ரீன் ஷாட்கள் மூலமும், விடாது கருப்பு தளத்தில் நான் ஆசிரியர் என்பது போன்ற கட்டமைக்கப்பட்ட பிம்பமும், வலைப்பதிவின் மூலம் நான் ஆண்டுகணக்கில் பெற்ற நன்மதிப்பை தூள்தூளக்க போதுமானதாக இருந்தது. திருமதி துளசியும், நான் மதிக்கும் வாத்தியார் அய்யாவும், சிவஞானம் ஜியும், காசி சாரும் என்னை பற்றி என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு எப்படி உண்மைகளை புரியவைப்பது என்று குழம்பியே பெரும் மன உளைச்சல் அடைந்தேன். மேலும் நான்கு மாத கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு சென்று புகார் தரவேண்டிய அலைச்சலுக்கும் உள்ளானதால் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கப்பட்டேன். மேலும் என்னுடைய அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, மனித வள அதிகாரிகளிடம் மூர்த்தி சொன்னது என்ன தெரியுமா ? ரவி என்பவர் அலுவலக நேரத்தில் இணையத்தில் பார்ப்பணர்களை தாக்கி எழுதுகிறார் என்பது. இதனால் அவர்கள் என் மீது வைத்திருந்த நன்மதிப்பும் உடைந்து தூளானது.
11. பார்பநீயப் பதிவர்களால் மிகுதியாக வெறுக்கப்படும் நீங்கள் டோண்டுவுடன் எவ்வாறு நெருங்கிநீர்கள் என்று கூற முடியுமா? 'ஊசி ஏற்றுவதுபோல்' உங்களை தாக்கிய பதிவர்கள் அல்லது பதிவுகள் எவை?

இணையத்தில் பார்ப்பணீயப்பதிவர்கள் என்று நான் யாரையும் கருதவில்லை. அரவிந்தன் நீலகண்டன், ஜெயராமன், ஜடாயு, ம்யூஸ் இந்துத்துவம் எழுதுவார்கள். அதில் உள்ள சில கருத்துக்களை எதிர்த்துள்ளேன், அவர்களும் என்னை பதிவு போட்டு குமுறியுள்ளார்கள். பொதுவாக முகமூடி எழுதும் நான்கு வரியில் நாற்பது உள்குத்துகள் இருக்கும். ஒருமுறை ஒரு இந்துத்துவ பதிவில் 'ரவீந்திரன் அந்தோனிசாமி' என்று என்னுடைய முழு பெயரை எழுதியதன் மூலம், நீ கிறிஸ்தவ மதம், அதனால் கருத்து சொல்ல வந்துவிட்டாயா என்பது போல கேட்டார். என்ன தான் நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்று தலைபாடாக சொன்னாலும், இந்துத்துவ பதிவர்கள் என்னை மதத்தை வைத்து தாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள். ஒருமுறை முத்து தமிழினி சொன்னார். முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும் என்று. அதுபோல.

12. 'முகமூடி குத்துவார். ஆனால் வலிக்காது. கொஞ்ச நேரம் கழித்து வலிக்கும்'- இது பற்றி உதாரணம் தந்து விளக்க முடியுமா?
இந்த இடத்தில் தேவை இல்லாதது இது. ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

13.டோண்டு பற்றி சாதரணமாக பலருக்கும் அப்போது தெரிந்திருந்த நிலையில் உங்களுக்கு தெரிந்தது என்ன?

மற்றவர்களுக்கு தெரிந்தது தான் எனக்கும். ஆனால், அவருக்கு தெரிந்த சில தனிப்பட்ட தகவல்கள் போலி டோண்டுவிடம் சென்றுவிடும். நான் ஒருமுறை பெங்களூர் கே ஆர் புரம் பிக் பஸாரில் இருந்தேன். அப்போது டோண்டுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. என்னுடைய மனைவி ஜெர்மன் படிக்கவேண்டும் என்பதை பற்றி விசாரிக்க நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அழைத்திருந்தார். அப்போது என்னுடைய மனைவி என்ன சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டார். சொன்னேன். அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய மனைவியின் சமூகத்தை சொல்லி திட்டி போலி டோண்டுவிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

14. பதிவுலகில் போலிடோண்டு தொடர்பாக நடக்கும் ஒவ்வொரு சச்சரவுகளின் போதும் கோவிகன்ணனை நீங்கள் தாக்கிவந்துள்ளீர்கள். அவரும் எதிபதிவுகள் இட்டுள்ளார். மூர்த்தியுடனான முந்தய பழக்கங்களில் நீங்கள் இருவரும் எவ்விதம் மாறுபடுகிறீர்கள் என்று கூறமுடியுமா?

மூர்த்தி தான் போலி டோண்டு என்று ஆயிரம் முறை நிரூபித்த பின்னும், மூர்த்தி என்னுடைய நன்பர், அவர் போலியா என்று தெரியாது. என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதிய விடாது கருப்பை பார்த்து தன்னுடைய பெரியார் பற்றிய அறிவை வளர்த்தேன் என்றெல்லாம் சொன்னால், கோபம் வருமா வராதா ?

<[தொடரும்]

Read More......

போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 1

· 12 comments

தொடர் பேட்டியின் முதலில் பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி வெளியாகிறது. தொடர்ந்து சிலரது பேட்டிகளும், எஞ்சிய பாகங்களும் வலையேற்றப் படும். இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


1.மூர்த்தியுடன் உங்கள் நட்பு முறிந்தபோது அவன் எவ்வாறு பதிவுகளில் எழுதிவந்தான்? ஆபாசங்களை தொடங்கியிருந்தானா? இல்லையா?

ஆபாச சைபர் கிரிமினல் மூர்த்தியுடன் 'நட்பு' என்ற சொல் அருவருப்பை தருகிறது. நான் பதிவுலகின் உள்ளே நுழைந்தபோதே மூர்த்தி ஆபாசங்களை தொடங்கியிருந்தான். டோண்டு பதிவுக்கு பின்னூட்டினால், ஆபாச அர்ச்சனைகள் பின்ன்னூட்டமாக வரும். டோண்டு அவர்கள் ஒவ்வொரு பதிவாக சென்று, தன்னுடைய கண்டுபிடிப்பான எலிக்குட்டி சோதனை பற்றி விளக்கிக்கொண்டிருப்பார். என்னுடைய இரண்டாவது பதிவில் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html பின்னூட்டம் இட்ட ஒரே ஆளும் அவர்தான். போலி டோண்டு இவரா அவரா என்று என்னுடைய சம காலத்தில் பதிவுலகுக்கு வந்த லக்கிலுக்கும் நானும் அரட்டையில் விவாதித்துக்கொண்டிருப்போம். அதற்கு அடுத்த வாரத்தில் Doondu என்ற நபர் தான் போலி என்று கண்டுகொண்டேன். சாதாரனமான பின்னூட்டங்கள் வரும் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_26.html (இதில் Doondu வை நான் போலி என்றே விளித்து எழுதியுள்ளதை பார்க்கலாம்) மற்றும்
http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_25.html போன்ற பதிவுகளை பாருங்கள். இதே நேரத்தில், போலி டோண்டு தளத்தில் இருந்து வரும் பின்னூட்டங்களின் மூலம், டோண்டு என்பவர், ஆண் பெண் கற்புநிலை பற்றி கேவலமாக எழுதுவதாகவும், சாதி வேறுபாட்டை மருபடி கொண்டுவர முயல்வதாகவும், இதனை தாங்கள் ஒரு குழு அமைத்து எதிர்த்து வருவதாகவும் அறிவித்தனர். டோண்டு பதிவில் பின்னூட்டம் எதுவும் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது அந்த பின்னூட்டங்கள். போலி டோண்டு யார் என்று கண்டுபிடிக்க ஆவல் இருந்ததால், டோண்டு பதிவில் பின்னூட்டங்கள் எதுவும் போடாமல் அமைதி காத்தேன். அதனால் என்னுடைய மின்னஞ்சலும், அவர்களுடைய லிஸ்டில் சேர்ந்தது. இது தான் நீங்கள் சொல்லும் தொடர்பு. மற்றபடி நடவடிக்கைகளை அறிய முயன்று, டோண்டுவை எதிர்ப்பது போன்று ஒன்றிரண்டு மின்னஞ்சல்களும் என்னுடைய முகவரியில் இருந்து அனுப்பியுள்ளேன்.

2. நட்பு முறிய உடனடிக் காரணம் என்ன?

சென்ற கேள்வியின் நீட்சியாக இதற்கு பதில் அளிக்கலாம். இந்த நேரத்தில் நான் பார்ப்பணீய எதிர்ப்பு, வெங்காயம், பெரியார், கடவுள் நம்பிக்கை துறப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்று கொஞ்சம் ட்ரான்ஸ்பார்ம் ஆகியிருந்தேன்.

ஜெயராமனை கேள்வி எழுப்பி பதிவு http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_22.html, இந்த பதிவில் ஜெயராமன் சொல்லியிருப்பது உண்மையான உண்மைகளே. என்னுடைய புரிதல் தவறு என்று பின்னால் உணர்ந்தேன்.

டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று கும்மியடித்த டோண்டு மற்றும் ம்யூஸை நோக்கி http://tvpravi.blogspot.com/2006/08/blog-post_19.html , இந்த பதிவின் பின்னூட்டத்தில் கும்மிகளும் ஆரம்பம்.

விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று நம்பி http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_28.html அவரது விடாப்பிடியான தேவையில்லாத பார்ப்பன எதிர்ப்பை சாடும் விதத்தில். இதில் விடாது கருப்பு மூர்த்தியின் பின்னூட்டத்தில், பார்ப்பன ஜாதியை தாழ்ந்த சாதி என்று எழுதியதை பார்த்தவுடன், விடாது கருப்புவின் உண்மையான நோக்கத்தில் சந்தேகம் வந்தது. அவனுக்கும் மூர்த்திக்கும் தொடர்பு இருக்கும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தேன்.

இருந்தாலும், அவ்வப்போது வரும் பார்வேர்டு பின்னூட்டங்களை படிப்பது, மற்றும் போலி யார் என்று ஷார்ட் லிஸ்ட் செய்ய முயல்வது, வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் என்ற முயற்சி, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிய முயற்சி, திடீரென ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, ஓடிப்போறேன்யா பதிவுலகத்தில் இருந்து என்று ஒரு பதிவு போட்டுவிட்டு அப்புறம் அமைதி, பிறகு ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இராது என்பதுபோல மீண்டும் மொக்கைகள்.

எல்லோரும் அய்யோ அம்மா என்று புலம்பும் ஆபாச அர்ச்சனைகள் எனக்கு வருவதில்லை, காரணம் டோண்டு பதிவில் பொதுவாக நான் பின்னூட்டம் போடுவதில்லை. ஒருவகையில் பயம், ஒருவகையில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணம், ஒருவகையில், போலியார் சாதி ஒழிப்பு விடுதலை இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட டோண்டு என்ற கிழட்டுப்பார்ப்பன சாதிவெறி மிருகம் எக்கேடோ கெட்டுப்போவுது என்ற அலட்சியம். இருந்தாலும் டோண்டு ஏதாவது தவிர்க்கமுடியாத வகையில் பதிவை போட்டுவிடுவார், அதில் பின்னூட்டம் போட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் பின்னூட்டம் போட்டோம் என்றாலும், அதற்கும் இரண்டொரு ஆபாச அர்ச்சனைகள் வரும். வேலைப்பளுவும், வெவ்வேறு திசைகளில் பயணிக்கவேண்டிய கட்டாயங்களும் அதனை தொடர்ந்து பாலோ செய்யவிடாமல் தடுத்தன.

இதன்பின் விடாது கருப்புவுக்கு எதிராக விட்டது சிகப்புவும், மூர்த்தியின் இன்னொரு தளமான ஸ்பெஷல் ஆப்புவும், மூர்த்தியின் போலி தளமான கரு.மூர்த்தி என்ற தளமும், டூண்டு தளத்தின் தினம் ஒரு ஆபாச அர்ச்சனைகளும் ஆரம்பமாயின. வஜ்ரா சங்கர், என்றென்றும் அன்புடன் பாலா, அன்னியன் ரமணி, முகமூடி, திருமலை, காசி என்று போலி மூர்த்தியை கருத்தளவில் எதிர்த்தவர்கள் அத்துனைபேருக்கும் போலி தளங்கள், டோண்டு பதிவில் பின்னூட்டம் போட்டதால் கே எஸ் அதியமானுக்கு போலி தளம், அரவிந்தன் நீலகண்டனுக்கு போலி தளம் என்று டாப் கியர் எடுத்திருந்தது போலி பிரச்சினை.

ராபின்ஹூட் ஒரு படி மேலே போய், மூர்த்தியின் திருமண போட்டோவை இணையத்தில் வெளியிட்டு, போலி டோண்டு என்பது மூர்த்தி தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். ராபின்ஹூட் மகேஷ், நீங்கள் ஏற்கனவே அவர் பெயரை ஒரு பதிவில் குறிப்பிட்டுவிட்டதாக நியாபகம், பெங்களூரில் இருப்பதால், அது அருண் ஆக இருக்ககூடும் என்று மூர்த்தி சந்தேகப்பட்டு, அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே என்னையும் அவனது சந்தேக வட்டத்தினுள் கொண்டுவந்திருந்தான்.

இந்த குறிப்பிட்ட பதிவை நான் இட்டது தான் நானும் இந்த சுழலில் சிக்க காரணம். http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html இந்த பதிவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல்களுக்கு உள்ளானேன். அவை பொதுவாக வருவன போல் அல்லாமல் என்னுடைய மிக அதீதமான தனிப்பட்ட தகவல்களோடு இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டேன். இந்த நேரத்தில் மூர்த்தி என்பவர் தான் போலி டோண்டு என்றும், கோவி கண்ணன் அவர் நன்பர் என்றும் அறிந்துகொண்டேன். கோவி கண்ணனும், தன்னுடைய சட்னிவடை என்ற பதிவை பற்றி சொல்லியிருந்தார், அதிலும் ஆபாச தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. என்னுடைய இந்த பதிவில் ஆபாச அர்ச்சனை செய்தது போலி டோண்டு மூர்த்தி தான் என்று கோவியாரிடம் சொல்ல, இல்லை என்று அவர் சாதித்தார். அதற்குள் போலி டோண்டுவை தொலைபேசியில் அழைத்து ஒரு பிரபல பதிவர் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். அது நான் தான் என்றும் அவனது சந்தேகம். என்னுடைய நம்பரை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கோவி கண்ணன் அளித்தார். மேலும் என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட பெண்குரலில் ஒரு அழைப்பு வந்தது, அதில் தான் தான் போலியார் என்றும், என்னுடைய பதிவில் ஆபாச பின்னூட்டங்களிட்டது பார்ப்பணர்களின் வேலை என்றும், உன்னுடைய ஸ்டேட் கவுண்டரில் என்னுடைய ஐபி இல்லை, அதாவது அதற்குள் கோவியார் அதனை போலி மூர்த்தியிடம் பாஸ் செய்திருந்தார், ஆகவே தமிழ் இணைய பிதாவான தன்னிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்ரு எச்சரித்தார் போலியார். கொஞ்சம் கூட ஆண்மையற்ற அந்த குரல் போலியுடையதாக இருக்காது என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் போலிக்கு கொடுக்கப்பட்டிருந்த பில்டப் அப்படி.

அதன்பின் டோண்டுவுக்கு ஒரு பின்னூட்டம் இட, ஆட்டோமெட்டிக்காக உருவானது என்னுடைய போலி வலைப்பதிவும், http://tvpravi.blogspot.com/2007/07/blog-post.html போலி பின்னூட்டங்களும்.

இவன் தான் போலி என்று தெரிந்துவிட்டதால்

மலேசியா மனநோயாளி என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html
ரீட் நோட்டிபை மூலம் அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை விடாது கருப்புவும், டூண்டுவும் ஓரே ஐபியில் இருந்து திறந்ததால் விடாது செருப்பு என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_8094.html
அப்போது போலியார் என்றெல்லாம் எழுதி லக்கிலுக் பதிவு எழுதியதால் லக்கிலுக் மீதும் டென்ஷன், இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம் http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_6734.html, பின்னால் லக்கிலுக் பதிவு நீக்கப்பட்டது. அதன்பிறகு லக்கிலுக்கையும் க்ளோஸாக வாட்ச் செய்து, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டுகொண்டதால் மட்டுமே அவருடன் நட்பை தொடர்ந்தேன்.

டோண்டு ராகவன் ஒரு பதிவில் சொன்னது போல ப்ரவுணி புள்ளிகளுக்காக லக்கிலுக் போலி டோண்டு மூர்த்தியுடன் இணைந்தாரா, அதன் பின் மூர்த்தியால் ப்ளாக் மெயில் செய்யப்பட்டாரா என்பது எல்லாம் எனக்கு தெரியாது.

3. 'அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான்' என்று கூறுகிறீர்கள். எப்படி அனுப்பினான்? மடலிலா. அரட்டையிலா அல்லது தொலைபேசியிலா? அந்த அசைன்மேன்டின் உள்ளடக்கம் என்ன? அவன் ஏன் உங்களுக்கு அனுப்பி இருந்தான்?

அரட்டையில் இல்லை. மடலில்.

4. 'என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.' என்று கூறுவதில் உள்ள முரணை விளக்குங்கள்? யாரென்றே தெரியாத நபரிடம், அதுவும் ஆபாசங்களை செய்துவரும் நபருக்கு எவ்வாறு பாஸ்வேர்டை தந்தீர்கள்? இது உலகில் எவருமே செய்யத்துணியாத ஒன்று அல்லவா? மேலும் உங்கள் ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வைத்து போலி என்ன செய்தான்?

இது என்ன ஸ்விஸ் வங்கி பாஸ்வேர்டா யாருமே செய்யத்துணியாத என்று பில்டப் எல்லாம் ? அதுவும் எனக்கு நன்கு பழக்கமான கோவியார் கேட்கிறாரே என்று கொடுத்தேன். அவன் அதை வைத்து என்ன செய்தான் என்று தெரியது.

5.போலியின் குணாதிசியம் பற்றி உங்கள் தெரிந்தவை என்ன?
கேள்விக்கு கேள்வி சைக்கோ என்ற வார்த்தைக்கு என்ன குணாதிசியங்கள் அகராதியில் உள்ளன ?

[தொடரும்]

Read More......

Wednesday, September 16, 2009

போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 5

· 7 comments

சில காரணங்களுக்காக இத்தொடரின் மூன்றாவது நான்காவது பகுதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஐந்தாவது பாகம் வெளியாகிறது. பேட்டிகளுக்குப் பிறகு மீண்டும் அவ்விரண்டு பகுதிகளும் வெளியாகும்.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.



போலிடோண்டு ஒரு திராவிடப் பதிவர் என்றும் அவன் பார்ப்பனீயப் பதிவர்களால் தாக்கப்பட்டான் என்றும் அவன் பதிலுக்கு ஆபாசமாக தாக்கத்தொடங்கினான் என்றும் ஒற்றை வரி கருத்துகள் புதிய பதிவர்களிடம் இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் விஷயம் அதைவிட சிக்கலானது. கருத்தியல் கூறுகள் ஏதும் அவனது எழுத்தில் இல்லை. ஒரு மனநலன் பிறழ்ந்தவன் போல் ஆபாசங்களை வாரியிறைத்து வந்துள்ளான். எவ்வளவு திடமானது கொண்டவரையும் அவை ஆடிப்போகச்செய்யக் கூடியவை. உதாரணத்திற்கு

////அடேய் தேவுடியா மகனே முது்துப்பேட்டை பரக்கத்...ஒன் பொன்டாட்டி கூதில என் செங்கோலை பாய்ச்ச...டோண்டு என்ன உன் அம்மாள போட்டு ஒழுத்தானாடா அவசாரி மகனே?/////


இத்தகு ஆளுக்கு தீவிரமான கொள்கைகள் ஏதும் இருக்கும் என்று எவரும் கருத முடியாது. அவனது ஈகோவுக்கு தீனிகள் கிடைக்கும்போது அவன் மூர்க்கமானான். இவனது ஆபாசங்களை ஒப்பிட்டால் பிறரது ஆபாசங்கள் வீச்சு குறைந்தவையே எனினும் அவைகளுக்கு ஆபாசங்களே. இவனுடன் மல்லுக்கு நின்றவர்கள் உண்மையில் இது எதில் போய் முடியும் என்று அப்போது அறியாமலேயே விளையாடியுள்ளனர். ஆனால் அவர்களில் டோண்டுவைத்தவிர எவரும் அவனை முடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. அதை செய்தவர்கள் எப்போதோ அவனுடன் ஏற்பட்ட குறுகிய கால தொடர்பால் அல்லது விளைவுகளை எதிர்நோக்காமல் ஏற்பட்ட பழக்கத்தால் கூனிக் குறுகியவர்களும், அவனால் தாங்கொணாத் துயருக்கு ஆளானவர்களுமே.

முதலில் இத்தகு அழிச்சாட்டியங்களுக்கு சொந்தக்காரனான போலியின் காலத்தை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம். 1) ஆபாசங்களின்றி டோண்டுவை சீண்டிய காலம், 2) பிறகு போலித்தளங்கள் தொடங்கியது, 3) அடையாளங்களை திருடி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு தாக்கியது, 4) பதிவுகளுக்கு வெளியே தாக்குதல்கள் நடத்தியது என கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து 5) இறுதியாக விசாரணையில் ஓய்ந்து போயிருக்கிறான்.

இரண்டாயிரத்து ஐந்து இறுதி மற்றும் இரண்டாயிரத்து ஆறு தொடக்கப் பகுதிகளில் டோண்டுவின் பெயரில் பலரது தளங்களில் பின்னூட்டங்கள் இட்டுவந்தான். அப்போது எழுதிவந்த கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்கும் இவ்வாறு இட்டுவந்தான். அதில் இருந்த உள்ளடக்கம் வித்தியாசங்களின்றி ஒரே மாதிரியாகவே இருக்கும். அப்போது அவனை யாவரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. டோண்டு பெண்களின் கற்பு பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டபோது அதை அவரது குடும்பப் பெண்களுடன் தொடர்பு படுத்தி முதல் ஆபாசப் பின்னூட்டம் இட்டான் ஆபாச பின்னூட்டம் ஒன்றை இட்டான். வழக்கம்போலவே இதையும் எல்லோருடைய பதிவுகளிலும் வேறு வேறு பெயர்களில் இடத் தொடங்கினான்.

தமிழ்மணத்தின் பின்னூட்டத் திரட்டியில் கணிசமான பகுதியை இந்த ஆபாசப் பின்னூட்டங்கள் ஆக்கிரமித்து வந்தன. போலியின் தொல்லை அதிகமாகவே டோண்டு இதை தடுக்க மெனக்கிட ஆரம்பித்தார். ஒவ்வொரு பதிவிற்கும் சென்று பின்னூட்ட மட்டுறுத்தல் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வேளையில் ஈடுபடலானார். பலருக்கும் பின்னூட்ட மட்டுறுத்தல் என்பதையே அப்போதுதான் முதன் முதலாக அறிகின்றனர். எனினும் திறந்து கிடக்கும் பதிவுகளில் தன் வேலையை தொடர்ந்து காட்டிக்கொண்டுதான் வந்துள்ளான் போலி. தினம் தினம் புதிதாக வரும் பதிவர்களுக்கு முதலில் போலி சென்று டோண்டுவை அர்ச்சிக்க, பின்னாலேயே டோண்டு சென்று மட்டுறுத்தலை அறிவுறுத்த என்று இருவரும் வேலை பிழைப்பின்றி இதையே செய்து வந்திருந்தனர். இதுவரையிலும் இவர்களது அக்கப்போர் இருவர் சம்பத்தப்பட்டது என்ற மட்டத்திலேயே இருந்து வந்தது.

தமிழ்மணத்தில் இணைந்திருந்த பதிவுகளில் மட்டுமே இவ்வாறு போலி தொடர்ந்து செயல்பட தமிழ்மணத்தின் வழியாக போலியை கட்டுப்படுத்த டோண்டு முயற்சி செய்கிறார். இதுதான் இந்த இருவர் பிரச்சினை மூன்றாம் நபருக்கும் பிரச்சினையாக மாறியதன் தொடக்கம். மட்டுறுத்தல் செய்யப்பட்ட பதிவுகளில் மட்டும் பின்னூட்டம் திரட்ட வேண்டும் என்று தமிழ்மண நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். முதலில் மறுத்த நிர்வாகம் டோண்டுவிற்கு ஆதரவு பதிவர்கள் மற்றும் சில நிர்வாகிகளின் மூலம் தமிழ்மணத்திலும் மட்டுறுத்தல் கொண்டுவரப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இதை பெருமையாக பலரிடத்திலும் பேச ஆரம்பித்தார். போலிக்கு போலிடோண்டு என்ற பெயரிடப்பட்டு எல்லாராலும் அவ்வாறே வழங்கப்படத் தொடங்கியது. இது போலிக்கு ஆத்திரத்தை கிளப்பவும், டோண்டுவைத் தாக்க வேறொரு உபாயத்தை தேடத் தொடங்கினான்.

முதல் முயற்சியாக போலிடோண்டு தளத்தை doondu.blogspot.com ஆரம்பித்து டோண்டுவின் படத்தை இட்டு ஆபாசமாக எழுத ஆரம்பித்தான். டோண்டு வலைத்தளம் போலவே இருக்கும் அத்தளத்தில் டோண்டு படத்தில் கிடா மீசையை வரைந்து, தலைப்பையும், துனைத்தலைப்பையும் ஆபாசமாக மாற்றி அமோகமாக தம் வேலையைத் தொடங்கினான். டோண்டு எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் அதில் ஆபாசமாக எதிர்பதிவை இடுவான். பதிவர் சந்திப்பு குறித்த இடுகைகள் அவனது போளித்தளத்தில் சிறப்பு கவணம் பெரும். எதிலும் சளைக்காத டோண்டு அவனை இக்னோர் செய்வதை விடுத்து அவனது சீண்டவும் ஆரம்பித்தார். இதில் டோண்டுவிற்கு ஆதரவு கூடியதும் அதை ஒழிக்க அடுத்த திட்டத்தை தீட்டினான். இதன் பிறகுதான் டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் எல்லோரையும் தாக்கத்தொடங்கியது.

டோண்டுவுக்கு பின்னூட்டமிடும் பதிவர்களுக்கு முதலில் நல்லபடியாக ஒரு பின்னூட்டம் இட்டு அவருக்கு பின்னூட்டமிட வேண்டாம் என கேட்டுக்கொள்வான். மறுப்பவர்களுக்கு அடுத்து ஒரு எச்சரிக்கை மடலை அனுப்புவான். அதில் சில சமயம் அவ்வெச்சரிக்கையை மறுப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நிராகரிப்பவர்களுக்கு தனியாக அவர்கள் பெயரில் ஒருதளத்தை தொடங்குவான். ஆட்களின் தராதரத்தை பொறுத்து அவர்களுக்கென்று தனியாக போலித்தளமோ அல்லது வெறும் பின்னூட்ட அர்ச்சனையோ கிடைக்கும். இவ்வாறு இருபதுக்கும் மேற்பட்ட தளங்களை நடத்திவந்தான். இதனால் டோண்டுவிற்கு பின்னூட்ட வரவு குறைந்தது. எனவே அவர் போலியாக சில ஐடி -களை உருவாக்கி பின்னூட்டங்களை இட்டுக்கொண்டார். செர்வாண்டிஸ், முரளி மனோகர், கட்டபொம்மன் போன்றவை அவை. இவ்வாறாக டோண்டுவிற்கு நண்பர்கள் குறைய, போலி டோண்டுவிற்கு எதிரிகள் அதிகமாயினர்.

போலியை அஞ்சாமல் தாகிவந்த ஒருசில ஆரிய பதிவர்கள் இப்போது தங்களை மறைத்துக்கொண்டு தாக்க வேண்டியதாகிப் போனது. குழுமங்களில் கூடியும் தனியாகவும் போலியுடன் மல்லுக்கட்டத்தொடன்கினர். திராவிடப் பதிவர்கள் பெரும்பாலானவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. சிலர் இதற்காக வருத்தப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை. எனவே இவர்களை பயந்தான்கொள்ளிகள் என்று டோண்டு அழைக்கலானார். இது குறித்து ஒரு மூத்த பதிவரை கேட்டபோது,"டோண்டுவிற்கு ஆதரவளித்தல் என் பெயரில் ஆபாச தளம் உருவாகும், பிறர் பதில் தாக்குதல் செய்வதைப் போல மல்லுகட்ட எனக்கு விருப்பமில்லை; சும்மாதான் இருக்க வேண்டும். அதற்கு இப்போதே சும்மா இருந்து விடுவேன். ஒரு ஆபாச தளமாவது மிஞ்சும்" என்றார்.

இவ்வாறு போலிடோண்டு vs டோண்டு + டோண்டு நண்பர்கள் என்று பிரச்சினை பெரிதானது. இந்த காலகட்டத்தில் போலி தனியாக இருந்தாலும் அவனது பலம் ஆபாசத்தாகுதல்தான். அணு ஆயுத வல்லரசு போல் எல்லோரையும் மிரட்டி வந்தான். அவனது பக்கபலம் அவனது தொழில் நுட்ப அறிவு. ஒருமுறை, போலியை மிரட்டும் தொனியில், அவனை அழிக்கப் போவதாக அமேரிக்காவில் வசிக்கும் ஒரு பதிவர் சூளுரைத்தார். தனி டொமைனில் எழுதிவந்த அவரது விபரங்களை டொமைன் ஓனரை அறியும் உத்திகளை பயன்படுத்தி அவரது விபரங்களை போலித்தளத்தில் வலையேற்றினான். அத்துடன் அவர் வெளியேறிவிட்டார். இவ்வாறு வெறியாட்டம் போட்டுவந்த போலிடோண்டுவிற்கு ஆபாசமும் தொழில் நுட்பமும் நெடுநாளைக்கு கைகொடுக்காது என்ற எண்ணம் ஏனோ ஏற்படத்தொடங்கியது. இதனால் தமக்கு ஆதரவாளர்களை திரட்டும் வேளையிலும் சில உத்திகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.

[தொடரும்]

Read More......

Monday, September 14, 2009

போலிடோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை, பகுதி 2

· 47 comments

சென்ற பதிவினை தொடர்ந்து இது இரண்டாம் பகுதி.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


மூர்த்தி தமிழ் வலைப்பூக்களின் மூத்த பதிவர்களில் ஒருவர். தமிழ் வலைப்பூக்கள் உருவான காலக்கட்டத்தில் இருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் இவரும் ஒருவர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் இலக்கியம், இணையம் தொடர்பாக நடந்த கூட்டங்களுக்கு மூர்த்தி கட்டாயம் வருவார். ஒரு வலைப்பூ நடத்தி வந்தார். அவரது வலைப்பூவில் சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. முத்தமிழ் மன்றம் என்ற கருத்து மன்றத்தை நிறுவிய நிறுவனர்களில் மூர்த்தியும் ஒருவர். தேன்கூடு திரட்டி நடத்தி வந்த சாகரன் வடிவமைத்து தந்த மன்றம் இது. ஆனால் பிற்பாடு அதே தேன்கூடு சாகரனையே போலி டோண்டு ஆபாசமாக அர்ச்சித்தது வேறுகதை.

வெங்கடேஷின் கமல் பதிவுக்கு அடுத்து அடுக்கடுக்காக மூர்த்தி மீது தாக்குதல்கள் நடைபெற்றது. ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்படைந்த மூர்த்தி போலி டோண்டுவாக உருமாற்றம் அடைந்திருக்கிறார். இது ஒரே இரவில் நடந்த விஷயமில்லை. ‘நான் இதுபோல மாறியதற்கு காரணம் என்மீது புகார் கொடுத்தவரே’ என்று பிற்பாடு போலிஸ் விசாரணையில் மூர்த்தி ஒப்புகொண்டதாக சொல்கிறார்கள்.

போலி டோண்டுவாக மூர்த்தி டோண்டுவை தாக்கு தாக்குவென்று தாக்க, டோண்டுவின் சாதிவெறி மீது வெறுப்பு இருந்தவர்களை உள்ளூற திருப்தி படுத்தியது. டோண்டுவும், அவரது பிராமண நண்பர்களும் மட்டுமே போலிக்கு எதிராக புனித யுத்தத்தில் ஈடுபட, சும்மா இருந்தவர்கள் அல்லக்கைகள் ஆக்கப்பட்டார்கள்.

போலி டோண்டு வடிவிலான ஆபாசதாக்குதல்கள் மட்டும் தனக்கு ஆதரவினை பெற்றுதராது என்பதை மூர்த்தி உணர்ந்தார். விடாது கருப்பு என்றொரு வலைப்பூவை உருவாக்கி பெரியார் கருத்துகளை பதிய ஆரம்பித்தார். ஆனாலும் இடை இடையே டோண்டுவையும், பிராமணர்களையும் தாக்கி சூடான பதிவுகள் இடம்பெறும். இப்போது அழிக்கப்பட்டுவிட்ட இந்த வலைப்பூ மட்டும் இருந்தால் பல திராவிட பதிவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கக்கூடும். அன்று இந்த விடாது கருப்பு பதிவுக்கு ஆதரவாக செயல்பட்ட பல திராவிட பதிவர்கள் மற்றும் நண்பர்களை அல்லக்கை என்று குறைகூறி டோண்டுவுக்கு ஆதரவாக மாறிபோயிருக்கிறார்கள். இரு ஆபாசங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்ததற்கு சிலருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக அல்லது நியாயத்தை நம்பும் எண்ணம் கொண்ட பாலபாரதி, முத்து தமிழினி, இன்ன பிற பதிவர்களைபோல் இவர்களும் ஒதுங்கிப் போய் இருக்கலாம் என்ற கருத்து இப்போது பலரிடமும் இருக்கிறது.

போலி டோண்டு, விடாது கருப்பு ஆகிய பதிவுகளோடு சேர்த்து சுமார் இருபது ஆபாச வலைபூக்களை மூர்த்தி நடத்தியதாக தெரிகிறது. டோண்டு குழு போலிசில் அளித்த புகாரில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகமானது. எல்லா வலைப்பூக்களையும் நடத்தியதாக போலிஸிடம் ஒப்புக்கொண்ட மூர்த்தி சாருநிவேதிதாவின் ஈமெயில் ஐடியை மட்டும் தான் ஹேக் செய்யவில்லை என்று விசாரணையில் கூறியிருக்கிறார். மூர்த்தி மீது பழிபோட யாராவது இந்த வேலையை செய்திருக்கலாம் என்று ஒரு தகவல் கசிகிறது. (இது இப்பதிவரளவில் உறுதிப் படுத்தப்படாத தகவல்).

மூர்த்தி விடாது கருப்புவாக கோலோச்சி கொண்டிருந்த நேரத்தில் சிங்கப்பூர் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முன்பு அவ்வாறு கலந்து கொண்டதுண்டு. பதிவர் குழலி, கோவிகண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட வழக்கமான பதிவர் சந்திப்புகள் அவை. பதிவுகளில் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து தி.க தலைவர் வீரமணியை குழலியுடன் சந்தித்து இருக்கிறார் மூர்த்தி. குழலியுடன் மூர்த்திக்கு ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு அல்லது போலி குழலியை தாக்கத்தொடங்கிய பிறகு மூர்த்திதான் போலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததுடன் போலியை தம் ஆதரவாளர்களுடன் எதிர்கொண்டிருந்த டோண்டு வுக்கு ஆதரவு தர தொடங்கினார். காவல் துறையில் போலியை அடையாளப்படுத்த கோவிகண்ணனை கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார். அப்போது மூர்த்திதான் போலி என்பது தமக்கு தெரியாது என்பது கோவிகண்ணனின் தற்போதைய வாதம். அதை உறுதிபடுத்துவது தனது வேலையல்ல என்கிறார். அவரது வாதம் மற்றும் உறுதிப் படுத்த மறுத்தது போன்றவையே அவர்மீதான குழலி மற்றும் செந்தழல் ரவி ஆகியோரது வெறுப்பிற்கு காரணம். இதற்கு ஆதாரங்களாக பலவற்றை ஏற்கனவே கூறியுள்ளனர். அதேசமயம் மூர்த்தியுடன் இவர்களது நட்பை விளக்குவதை விட தன்னை நிரூபிப்பதே தாம் விரும்புவதாக சில விளக்கங்களையும் கோவிகண்ணன் வெளியிட்டுள்ளார். எனினும் இதுபற்றிய ஓயாத சச்சரவுகள் எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன.

2006ல் வலைப்பதிய ஆரம்பித்த லக்கிலுக் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். அப்போது குழலி, முத்து தமிழினி, முத்துகுமரன் ஆகிய மூவரும் திராவிட தமிழர்கள் என்றொரு கூட்டுவலைபூவை நடத்தி கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஒரு கூகிள் குழுமமும் இருந்தது. லக்கிலுக் அந்த குழுமத்தில் இருந்தார். லக்கிலுக்கின் அதிரடி செயல்பாடுகளை கண்ட திராவிட தமிழர்கள் அவரையும் தங்கள் குழுவின் பொறுப்பாளராக சேர்த்து கொண்டார்கள். இது ஆரிய பதிவர்கள் ஒன்றுகூடி ஆபாசமாக நடத்திவந்த விட்டது சிகப்பு என்ற பெயர்கொண்ட குழுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. செந்தழல் ரவியைப் போலவே லக்கிலுக்கும் மூர்த்தியுடன் நட்பில் இருந்தார். போலி ஆபாசங்களை அரங்கேற்றத் தொடங்கியபிறகு அல்லது தாங்களும் தாக்குதலுக்கு ஆளான பிறகு அந்நட்பை தொடர்ந்தார்களா என்பதே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்.

டோண்டுவுடன் சேர்ந்து தாக்குதல்கள் நடத்திய பதிவர்களுடன் டோண்டுவுக்கு இருந்த தொடர்பில் எவ்வித மர்மமும் இல்லை. ஆனால் அவர்கள் யார் என்பதில் மர்மம் நீடித்தது. பல தளங்களை நடத்தியவர்கள் யாரென்று உறுதிப்படுத்தக் கூறி யாரிடமும் யாரும் கோரவில்லை என்று தெரிகிறது. அவர்கள் மீது புகாரை டோண்டுவும் தரவில்லை. புதிதாக டோண்டுவுக்கு அவருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியவர்களும் அதை கோரவில்லை. காவல்துறைக்கு விஷயம் சென்றதும் அப்பதிவுகள் நின்றுவிட்டன. அவர்களின் செயல்பாடுகள் கூட்டாக இருந்தன. பிளவுகள் இல்லை. ஒருவர்மீது ஒருவருக்கு காழ்ப்போ தனிப்பட்ட மனக்கசப்போ இல்லை. ஆனால் மூர்த்தியோ தம் ஆதரவாளர்களை தன செயல்பாடுகளால் இழந்தார்.

அதே நேரத்தில் ஜயராமன் என்பவன் போலிடோண்டு பாணியில் ஒரு பெண் பதிவரை ஆபாசமாக எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருந்தான். இவனை தகுந்த ஆதாரங்களோடு பிடித்தவர் பாலபாரதி. ஜயராமனுக்கு அந்த பெண் பதிவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை தந்து உதவியர்கள் டோண்டுவும், அவரது சீடர் என்றென்றும் பாலாவும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு சல்மா அயூப் ஆபரேஷன் என்று பாலபாரதி பெயர் இட்டிருந்தார். டோண்டுவின் அல்லக்கை என்று எதிரணியினரால் அழைக்கப்பட்ட அவன் ஆதாரங்களோடு மாட்டிகொண்டதில் பதட்டம் அடைந்தார் டோண்டு. போலி என்ன செய்தானோ அதையே டோண்டுவும் அவரது அல்லக்கைகளும் செய்துவந்தார்கள் என்பது அப்போது வெட்டவெளிச்சமானது. டோண்டு தன்னுடைய சக இந்துத்துவா நண்பர்களின் உதவியை நாடினார். ஜயராமனை அவர்கள் காப்பாற்ற பல கட்டுகதைகளை வெளியிட்டார்கள். அவற்றில் ஒன்றுதான் லக்கிலுக் அடியாள்களை வைத்து மிரட்டி ஜயராமனிடம் கையெழுத்து வாங்கியது. உண்மையில் லக்கிலுக்குக்கும் அந்த ஆபரேஷனுக்கு சம்பந்தம் எதுவுமில்லை. இதற்கான ஆதாரம் ரெகார்ட் ஆகியிருப்பதாக தெரிகிறது.

இதே காலக்கட்டத்தில் ராபின்ஹூட் என்று ஒரு பதிவர் மூர்த்தியின் மனைவி போட்டோவை வலைப்பூவில் ஏற்றி நிலைமையை மோசமாக்கினார். பதிலுக்கு போலி, டோண்டுவின் மகள் போட்டோவை வலையில் ஏற்றினார். டோண்டுவின் மெயில் ஐடியில் ஒரே ஒரு எழுத்தை கூடுதலாக சேர்த்து எல்லா பதிவர்களும் டோண்டு அனுப்புவது போல சாட் ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தான் போலி. பல பதிவர்களும் ஒரிஜினல் டோண்டு என்று நினைத்து சாட் அழைப்பை ஏற்று கொண்டார்கள். அதுபோல தொடர்பில் இருந்த ஒரு பெண் பதிவரிடம் இருந்து இந்த போட்டோவை பெற்றானாம் போலி. போலியை போலி பாணியிலேயே மடக்கிய ராபின்ஹூட் ஒரு பெங்களூர் பதிவர். அவரது இயற்பெயர் மகேஷ். தமிழில் அவருக்கு வேறு வலைப்பூ இருக்கிறதா போன்ற விவரங்கள் தெரியவில்லை.


[தொடரும்]

Read More......

Sunday, September 13, 2009

போலி டோண்டு விவகாரம் - ஒரு தகவற்கோவை

· 50 comments

கடந்த சிலநாட்களாக தமிழ் வலையுலகை அல்லோகலப் படுத்திவரும் போலி டோண்டு விவகாரம் பதிவர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாசகர்கள் மத்தியிலும் சில எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம், அவமானம், பதற்றம், பயம், நிம்மதி, அங்கலாய்ப்பு, அருவருப்பு என சில உணர்வுகளை உருவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த விவகாரம் காவல் துறை சம்பந்தப்பட்ட ஒன்றாகிப் போனபின் பல போலித்தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. வலைப்பூக்களும் புதிய பதிவர்களால் நிரம்பி ஆரோக்கிய பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும் அவ்வப்போது புதிய பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிலராலும், வேண்டுமென்ற பிரச்சினையை கிளர வேண்டும் எண்ணத்தில் சிலராலும் இப்பிரச்சினை தூண்டப்பட்டு வருகிறது. ஓராண்டுக்குமுன் பதிவர் இளா -வால் இவ்வாறு ஒருமுறை தூண்டப்பட்டது. தற்போது சிறில் அலெக்ஸ் எழுதிய பதிவால் புதிய பதிவர்களுக்கு அவ்விவகாரம் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் இவ்விவகாரம் குறித்து, இதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பத்தப் பட்டவர்கள் தவிர்த்து ஏனையோர் கருதுவது 'இது தற்போது தேவையற்ற பிரச்சினை' என்பதாகும். ஆனால் அக்கருத்து இப்பிரச்சினை குறித்து முழுமையாக அறியாமலோ அல்லது எதுவுமே தெரியாமலோ இவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆகவே இதுகுறித்து இவ்வலைப்பூவில் முடிந்தவரை ஆதியோடந்தமாக விளக்க, இத்தொடர் பதிவும், வரவிருக்கும் பேட்டிகளும் முயற்சி செய்கின்றன.

உரிமைத்துறப்பு: தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


இந்த கதை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. டோண்டு உட்பட பலரது தளங்களில் இதுபற்றிய செய்திகள் இருந்தாலும் அனைத்தும் சார்புக்கதைகளே. ஒரு முழுமையான விசாரணையை பலரிடம் மேற்கொண்டதின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்படுகிறது.

18-11-2004 அன்று நேசமுடன் வெங்கடேஷ் என்பவரால் எழுதப்பட்ட கமலகாசன் பற்றிய பதிவு (http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1) ஒன்று இவ் விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அப்பதிவில் கமலகாசனை சிலாகிக்கும் ஆசிரியர் அவரது குறிப்பிட்ட இரு பலங்கள் வேறு எவரிடமும் இல்லாதவை என்றும் அவருக்கு அடுத்து அரவிந்தசாமி, மாதவன் ஆகியோரிடம் அவற்றை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

///கமலுக்குப் பின் நான் இருவரை அதுபோன்ற ரிஸ்க் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒருவர் அரவிந்தசாமி. அவருக்கும் கமலைப் போலவே பேசும் முகம், கண்கள். கமலைவிட ஸ்மார்ட்டாய், வெள்ளைவெளேர் என்று வேறு இருந்தார்./////

////மற்றொருவர், மாதவன். இவரும் பாப்புலர் ஹீரோவின் அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றவர். /////பாப்புலர் ஹீரோ பிம்பத்தில் இருந்து சட்டென ஒரு கேரக்டர் ஹிரோ உயரத்துக்கு இவர் போகவேண்டும். அதற்கான அத்தனை வளங்களும் அவரிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ////

பதிவர் ஒரு பிராமணர் என்பதை பின்னூட்டங்களில் அறிய முடிகிறது. பிராமணல்லாதோரை விட பிராமணருக்கு கூடுதல் தகுதிகள் உள்ளன என்பதுபோன்று இணையத்திலும் இதழ்களிலும் எழுதப்பட்ட பதிவுகளும், கட்டுரைகளும் எண்ணற்றவை இருந்தாலும் இப்பதிவுதான் போலி டோண்டு விவகாரத்திற்கு ஆணிவேர். அப்பதிவில் 'வழிப்போக்கன்' என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர்தான் விசாரனைக்குள்ளான பதிவர் மூர்த்தி என்று கருதப்படுகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட அவரது பின்னூட்டங்களில் அவர் அனைத்துவித கண்ணியத்தையும் கடைபிடித்திருக்கிறார். சூத்திரனை சோற்றுக்கு போய் மாடு மேய்க்கச் சொல்லும் ஒரு பின்னூட்டத்திற்கும் பொறுமையாகவே பதில் அளிக்கிறார். ஆனால் அவரது கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு வந்த அனானிமஸ் பின்னூட்டங்கள் அவரை மூர்க்கமாகவும் ஆபாசமாகவும் தாக்கியுள்ளன.

இன்று புனிதராக தனக்கு தானே பட்டம் கட்டி கொண்டிருக்கும் டோண்டு ஒரிஜினல் பெயரிலும், அனானிமஸ் மற்றும் முரளிமனோகர் பாணியில் வேறு வேறு பெயர்களிலும் தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பதை காணலாம். குறிப்பாக 'கமல் ரசிகன்' என்ற பெயரில் வந்த பின்னூட்டம் மிக மோசமானது. வழிப்போக்கனாக அங்கு கண்ணியமாக வாதிட்டது மூர்த்தி தானா என்பதை உறுதிகூட செய்யாமல், அது மூர்த்தியே தான் என்று முத்திரை குத்தி மாற்றி மாற்றி அடுத்தடுத்து அவரவர் வலைப்பதிவில் கும்மியிருக்கிறார்கள் பிராமண பிரியர்கள். சம்பந்தபட்ட சுட்டிகள் இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை, பலரும் பதிவுகளை அழித்துவிட்டார்கள். அவை கிடைத்தால் இன்றைய புனித பிம்பங்கள் அப்போது எவ்வளவு புனிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்து தன் மீது குத்தப்பட்ட ஆபாச முத்திரை மூர்த்தியை மூர்க்கம் கொள்ள செய்தது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட போலியின் பொதுவான செயல்பாடு எதுவாக இருந்தது? டோண்டுவின் பதிவில் யாரும் பின்னூட்டம் இடக்கூடாது என்று பகிரங்கமாக மிரட்டப்பட்டார்கள். மீறி பின்னூட்டம் இட்டவர்களின் பதிவுகளுக்கு ஆபாச பின்னூட்டங்கள் வரும். இந்த பின்னூட்டங்களையும் டோண்டு பெயரிலேயே போட்டதால் மூர்த்திக்கு போலி டோண்டு என்று பெயர் சூட்டப்பட்டது. பலரும் இந்த சாக்கடையில் கல்லெறிய தயங்கி ஒதுங்கி நின்றார்கள்.

பிரச்சினையை தொடக்கத்திலேயே முடித்திருக்க டோண்டுவால் முடிந்திருக்கக் கூடும். போலிடோண்டுவின் எதிர்வினை ஆபாச பதிவுகளை நிறுத்துவது தொடர்பாக டோண்டு ஆதரவாளர்களும் அதை நிறுத்தி விட்டு தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்திருக்கலாம். வேறு சிலர் அவ்வாறு பிரச்சினையை முடித்திருக்கின்றனர். ஆனால் டோண்டுவால் பிரச்சினை பெரிதானது. பிரச்சினையில் ஒதுங்கி நின்றவர்கள் சிலரை பற்றிய தகவல்கள் டோண்டுவால் போலிடோண்டுவுக்கு போனதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக டி.பி.ஆர் ஜோசப், சிவஞானம்ஜி ஆகிய மூத்த பதிவர்களை சொல்லலாம். இவர்களை பற்றி போலியிடம் டோண்டுவே போட்டு கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, டோண்டு பின்னூட்டமிடும் அப்பாவி பதிவர்கள் டோண்டுவுக்கு பதில் பின்னூட்டமிடும்போது அவர்கள் போலி டோண்டுவால் தாக்கப்பட்டார்கள். இதற்கிடையே, டோண்டுவுக்கும் போலி டோண்டுவுக்கும் இடையில் ஆபாச சேட்டிங் பலமுறை நடந்துள்ளன. பதிவர் சந்திப்பு ஒன்றில் ‘மூர்த்தி தேவடியா மகன் போனில் திட்டினான்’ என்று டோண்டு சொன்னதை சந்திப்பில் கலந்துகொண்ட, இவ்விஷயத்தில் சம்பந்தப்படாத பதிவர்கள் மூலம் அறியப்படுகிறது.

போலியும் டோண்டுவும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக மாய்ந்துக் கொள்ளும்போது ஒதுங்கி நின்றவர்கள் பயந்தான்கொள்ளிகளாக கருதப்பட்டனர். பலர் பதிவெழுதுவதை நிறுத்தினர். ஆனால் சிலர் போலியின் அல்லக்கைகளாக பெயர்சூட்டப்பட்டனர். போலியுடன் தம் தொடர்பை மறுத்த அல்லது துண்டித்துக்கொண்ட பலரும் அப்பெயரை பெற்றுக்கொண்டனர். அப்பெயர் பெற்றவர்களில் சிலர் பிறகு போலியிடம் தமக்கேற்பட்ட மனக்கசப்புகளால் தம் ஆதரவை டோண்டுவுக்கு வழங்கத் தொடங்கினர். போலியை போலி பாணியிலேயே தொடர்ந்து தாக்கி வந்த பலருக்கு டோண்டுவிடம் இருந்து என்ன பட்டம் கிடைத்தது என்று தெரியவில்லை. இதன் பிறகு ஆபாசமாகத் தாக்கிக் கொண்டவர்கள் மற்றும் அமைதியாக இருந்தவர்கள் என்று இருந்த இரு பிரிவு மாட்டிக்கொண்டவர்கள், மாட்டிவிடுபவர்கள் என்று மாறிப்போனது.

இந்நிலையில் தமக்கு ஆதரவு திரட்ட டோண்டு செய்த சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. சென்னையில் பதிவர் சந்திப்பு என்று அறிவிப்பார். ஏழெட்டு பேர் விபரம் தெரியாமல் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் கூடுவார்கள். போண்டா சாப்பிடுவார்கள். அன்று மாலையே பதிவர் சந்திப்பு பதிவு ஒன்றை டோண்டு போடுவார். சந்திப்பில் போலியை ஒழிப்பது எப்படி என்று பேசியதாக எழுதுவார். இது போதாதா? சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவர் பெயரிலும் போலி தளம் ஆரம்பித்து விடுவான் போலி டோண்டு. இவ்வாறாக டோண்டு – போலி டோண்டு என்ற இரு நபருக்கும் மட்டுமே இருந்த பிரச்சினையை மிக கவனமாக போலி டோண்டு – தமிழ் பதிவர்கள் என்று வளர்த்தெடுக்க டோண்டு பிரயத்தனப்பட்டார். 2005, 2006 மற்றும் 2007 ஆகிய மூன்றாண்டுகளில் போலி டோண்டு தமிழ் வலைப்பூக்களில் கடுமையான வெறியாட்டம் ஆடி வந்திருக்கிறான். சகட்டுமேனிக்கு கண்ணில் கண்ட எல்லோரையுமே ஆபாசமாக அர்ச்சித்து மன உளைச்சலை கொடுத்து வந்திருக்கிறான்.

எப்படி இருந்தாலும் போலியை உருவாக்கியவர் என்ற முறையிலும், போலி டோண்டு தற்போது வலைப்பூக்களை விட்டு விலகி விட்டதாலும் டோண்டுவே அப்போது இருந்த ஆபாசசூழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஆகிறார்.


[தொடரும்]

Read More......

Monday, September 1, 2008

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, இறுதி பாகம்

· 46 comments

பதிவர் கோவி கண்ணன்

கோவி கண்ணன் அவர்களின் பேட்டியின் முதல் மற்றும் இரண்டாவது பாகங்களைத் தொடர்ந்து இறுதி பாகத்தை இப்போது வெளியிடுறேன்.

பெண்கள் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துள்ளோர், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைபாடுவோர் போன்றோரின் உண்மை முகம் போலிடோண்டுவின் இரண்டாம் முகத்தில் இருந்து ஏதாகிலும் வேறானதா?

துபற்றி அண்மையில் ஒரு விவாதம் ஓடியது, பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவதால் பெண்களின் குரல்களுக்கு பின்னனி கொடுக்கும் அளவுக்குக் கூட அவர்களின் எழுத்தின் தன்மை இல்லை என்றும் சொல்லப்பட்டது. பெண்களின் சிந்தனையும் அவர்களின் உணர்வுகளும் வேறானது. ஒரு பெண் அவளுக்கான உரியமையுடைய பெயரில் ஆண்கள் எழுதுவதென்பதை ஆணின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தவிர்த்து வேறு பெண்கள் பெருமையானதாக கருதவில்லை என்றே சொல்கிறார்கள். பெண் பெயரில் எழுதுபவர்களில் பெண்ணுக்காக எழுதுபவகளின் விழுக்காடு மிக மிக குறைவே. அதிலும் பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டு வசைபாடுதல், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைப்படுபதல் என்பது தன்னை மறைத்துக் கொண்டு வசைபாடும் போலி டோண்டு வகையராக்களின் செயலை ஒத்தது தான். ஒரே பெரிய வேறுபாடு போலி டோண்டுவின் வலைப்பதிவு வசையின் தொகுப்பாக இருந்தது. இவர்கள் அந்த அளவுக்கு அதற்காக நேரம் ஒதுக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம். அப்படியும் முயன்றிருக்கிறார்கள் அதற்கு நல்லொதொரு உதாரணம் சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாமியர்களைத் திட்டி எழுதப்பட்ட பதிவு. மேலும் ஒரு பெண் பதிவரின் பெயரில் போலிப் பதிவு ஆரம்பிக்கப்பட்டதும் அதை எழுதியவர் யார் என்று வெளியே தெரிந்ததும் பதிவர்கள் அறிந்ததே.

ன்னரை ஆண்டுகளுக்கு முன்பு, போலிடோண்டுவை ஒத்தோ முரண்பட்டோ தங்கள் போலிப்பதிவுகள் மூலம் பல பெண் பதிவர்களை வெளியேற்றி, வலையெங்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதுதான் வலைக்கலகம் செய்தோரின் வெற்றி. இப்போது, தமிழ்மணத்தை நிர்மூலமாக்கும் ஒற்றை குறிக்கோளுடன் இயங்கும் சிலரின் போலிப்பதிவுகளும் அதை ஒத்தே இருக்கின்றன. அவ்வகையில், தமிழ்சூழலில் திடீரென கிடைத்த இந்த எழுத்து சுதந்தரத்தின் மீது இரண்டாம் முறை சம்மட்டி விழும் என நினைக்கிறீர்களா?

போலி டோண்டுவை ஒழிக்கிறேன் என்ற பேரி்ல் மற்ற பதிவர்களின் மீது சிலர் ஆயுதம் வீசினார்கள், அதில் குறிப்பிடக்கூடிய சொல்லாடல் 'க்ராஸ் பயர்' என்பது. இந்த தாக்குதலின் இலக்கு என் மீதும் விழுந்திருக்கிறது. இந்த தாக்குதலை என்மீது தொடுத்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே மதித்து எதிர்வினை ஆற்றினேன். ஏனென்றால் அவர் என்னுடன் மணிக்கணக்காக பேசி இருக்கிறார். மற்ற இருவரில் ஒருவர் அந்த வார வீக் எண்ட் ஜொள்ளுக்கு கவர்ச்சி படம் கிடைக்காத கடுப்பில் என் மீது எரிந்துவிழுந்து, அதனை அவரது அரங்கில் 'A' படம் ஓட்டுவதற்கான விளம்பர போஸ்டராகவே பயன்படுத்தினார். நோக்கம் தெரிந்த பிறகு அதற்கு எதிர்வினை ஆற்றி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மற்றோருவர் அவர் தான் பழகியதே துப்பறியத்தான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு என்னைப் பற்றி 100 விழுக்காடு பொய்யான தகவலை பதிவில் எழுதினார். அவரே என்னுடன் பழகியது ஒருபோலியான, திட்டமிட்ட ஒன்று என்பதை அறிவித்துவிட்ட பிறகு, உணர்ச்சிவசப்பட்டு, அவரை மதித்து எதிர்வினையாற்றும் அளவுக்கான தகுதி்யைக் கூட நான் அவருக்கு கொடுக்க விரும்பவில்லை.

இதுபோன்றே பலருக்கும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தே வருகிறது. அண்மையில் நண்பர் டிபிசிடி சென்னை சென்றிருந்த போது, எனக்கு நெருங்கியவர் என்ற காரணத்தால் 'அவரை சந்திக்கவேண்டாம், எச்சரிக்கை!' என்றெல்லாம் குறுந்தகவல் அனுப்பினார்கள். வசந்த ரவி என்ற பெயரில் எழுதிய பதிவர் 'போலி' என்று கிளப்பிவிட அவர் அந்த பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார். பதிவர் கவிதா மீது போலிஸ் வழக்கு பாயும் என்று மிரட்டப்பட்டார். அவர் அதற்கு பயப்படாவிட்டாலும் 'தாதா'க்கள் உலாவும் இடத்தில் தானும் இருக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

போலியின் செயல் இழிவானது, போலி பக்கத்திற்கு சென்று படிக்கும் போது அங்கே ஆபாச அரங்கேறியிருப்பது தெரியும். இங்கே தமிழ் திரட்டியில் பலரையும் தனிமனித தாக்குதல்களாக திட்டிக் கொண்டே பதிவுகள் வரும் போது அதனை படிப்பவர்களும் மிக அதிகமே. அடுத்தவரின் மனைவியின் பெயரில், குறிப்பாக, போலியாக செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டை கூறி மூர்த்தியின் மனைவி புகைப்படத்தைப் போட்டு திட்டி எழுதப்பட்ட பதிவுகளை திரட்டியிலேயே பார்த்திருக்கிறோம். பலர் அறியும்படி, நடவடிக்கை என்ற பெயரில் இதை செய்து வந்தனர் சிலர். திரட்டி நிர்வாகம் கூட இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்ததா என்று தெரியவில்லை. இடுகையை நீக்காமல் மெளனம் சாதித்தார்கள். பிரச்சனைக்குரியவர் மூர்த்திதான், மூர்த்தியின் மனைவி அல்ல. அவன் செய்தான் நான் செய்தேன்; இதே குற்றச் சாட்டுகளைத்தான் இருபக்கம் சொல்லிவருகிறார்கள்.

போலி விவாகரத்துக்குள், ஏன் திடீர் எதிர்ப்பு தோன்றியது? அதுபற்றி நன்கு தெரிந்தாலும் அதனுள் செல்ல எனக்கு விருப்பமுல்லை. போலி விவாகரம் முற்றுவதற்கு முன்பு, அடுத்த பிரிவினருக்கு ஆதரவுடன் செயல்படுவதாக மூர்த்தி மற்றும் மூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னோர் என இருப்புறத்தாரும் என்னை குற்றம்சாட்டினர். நான் நடிப்தாகவும் கிளப்பிவிட்டனர். பைசாவுக்கு பிரோயனம் இல்லாத இந்த குற்றச் சாட்டால் அவர்களது சந்தர்பவாதம் எத்தகைய மோசமானது என்று புரிந்துகொண்டேன். அவரவருக்கான ஞாயங்கள் என்ற பெயரில் எல்லோரும் தாக்குதல் தொடுத்தனர். என்னைப் பற்றிய தூற்றல்களை பதிவர்கள் புறம் தள்ளினார்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். தமிழ் பதிவுகளில் தங்கள் எழுத்திற்கு கிடைத்த மரியாதையை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டு, தங்களை வலையுலகின் காவலர்களாக நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாகவே கண்டபடிக்கு நடந்து கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களுக்கான அடையாளாமாக மாறி போலி டோண்டுவைப் போலவே பலரால் வெறுக்கப் படுவபவர்களாக அவர்களின் நிலையும் செல்லக்கூடும். இங்கே எவரையும் இதை எழுதாதே என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒருவரின் எழுத்துக்கு மாற்று கருத்து இருந்தால் நாகரீகமாக எதிர்வினை ஆற்றலாம். சில தாதாக்கள் வெளிப்படையாகவே 'நீ எழுதாதே மூடிக் கொண்டு போ' என்றெல்லாம் எழுதுவதைப் பார்த்து பதிவர்கள் முகம் சுழிப்பது குறைவு; ஆனால் பலரும் அதைப் பார்த்து சிரி.......க்கிறார்கள்.

தாதாக்கள் என்று தெரிந்தே இருந்தாலும் பதிவுலகில் யாரும் புறக்கணிக்கமாட்டார்கள். அவை மனநலமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. நாளைக்கே விடாது கருப்பு பதிவு தமிழ்மணம் அனுமதியுடன் இணைக்கப்பட்டால் நாலுபேர் அதைப் படித்து கருத்தும் சொல்வார்கள். அவர்களிடமெல்லாம் சென்று உனக்கு வரலாறு தெரியுமா / புவியியல் தெரியுமா என்றேல்லாம் கேட்கவோ அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பவோ முடியாது. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன்? பல தாதாக்கள் மீண்டும் பவிசாக எழுதும் போது பதிவர்கள் பழசை மறந்து அவர்களுக்கு பின்னூட்டம் போடவே செய்கிறார்கள்.

தாதாக்களின் அச்சுறுத்தல்களைப் பதிவர்கள் புறம் தள்ளுவார்கள்,அது நடந்தேறி வருகிறது. அண்மையில் என்னுடன் சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவரிடம் "கோவி மலேசிய பதிவரைப் பற்றிச் மறைக்காமல் சொன்னாரா?, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே" என்றெல்லாம் குழப்பி விட முயன்றார்கள். அதை அந்த பதிவர் புறம்தள்ளிவிட்டார். ஒருவரின் எழுத்துச் சுதந்திரம் சில சைக்கோக்களால் முடங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு பதிவுலகம் பலவீனமானதல்ல என்பதே என்கருத்து.

போலி செய்த அதே போலிப்பதிவு வேலையை இவர்களும் இவர்களுக்கான ஞாயங்களின் பேரில் செய்துவருவது நகைமுரண் தான். தமிழ்மணத்தை ஒழிக்கிறேன் என்று செயல்படுபவர்களின் செயலுக்கான காரணம் மிக வெளிப்படையானது என்பதை தமிழ்மண திரட்டி நிர்வாகமும் பதிவர்களும் அறிவார்கள். அதற்கான எதிர்வினையை தமிழ்மணமும், தமிழ்மணத்தால் வளர்ந்த பதிவர்கள் சிலரும் சரியாக செய்துவருகிறார்கள். அதுபற்றி கருத்துக் கூற ஒன்றும் இல்லை.

குசேலன் தோல்வியடைய குசேலன் தான் காரணமா?

ங்கேயும் குசேலன் பற்றிய கேள்வியா ? படத்தில் கதையில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளிப்படம் போன்றது தான் குசேலன், இதை தோல்வி என்றே சொல்ல முடியாது, ஏனெனில் இதுவரை 20 கோடி வசூல் செய்யப்பட்டு இருக்கிறதாம். படத்தயாரிப்பாளர்களின் இலக்கு, பேராசை 100 கோடி லாபம் ஈட்ட வேண்டுமென்பதே, அவ்வளவு பணம் ஈட்ட, தரம் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை. இந்த திரைப்படத்திற்கு ஆன செலவுகள் உச்ச நடிகரின் சம்பளத்தைத் தவிர்த்து 5 கோடி ஆகி இருந்தால் கூட இவர்கள் அதற்கு மேலும் 15 கோடி லாபம் பார்த்து இருக்கிறார்கள். பொதுவாக் சினிமாவில் 1 : 2 தான் லாப பார்முலா, அந்த வகையில் பார்த்தால் செலவுகளைவிட 3 பங்கு லாபம் ஈட்டி இருக்கிறது. 'தோல்வி' என்பதெல்லாம் எதிர்தரப்பும், பேராசைக்கார தயாரிப்பாளர்களின் புலம்பலே அன்றி வேறெதும் இல்லை. 5 கோடி செலவு செய்துவிட்டு 15 கோடி லாபம் பெற்ற பிறகு படத்தின் தோல்வி / வெற்றி என்ற விவாதமெல்லாம் அபத்தம் தானே. குசேலனுக்கு 20 கோடி வசூல் மிக மிக அதிகம். குசேலன் தயாரிப்பாளர்கள் திரை ரசிகர்களை ஏமாற்ற முயன்றதில் பாதி அளவுககு வெற்றிதான் பெற்றிருக்கிறார்கள்.

முழுக்க ஏமாறாமல் திரைரசிகர் சுதாரித்துக் கொண்டதைப் படத்தின் தோல்வி என்று சொல்ல முடியுமா?

விஜயகாந்த்தின் குறிக்கோள் என்னவாக இருக்கும்?கட்சி தொடங்கும் போது எம்ஜியாருக்கும் கொள்கையென்று ஏதும் இருக்கவில்லையா?

விஜய்காந்தின் அரசியலை ஒரு நல்ல அரசியலாக நான் எனது பதிவுகளில் எழுதியதே இல்லை. 'மதச்சார்பற்றது' என்று கூறிக்கொண்டு கட்சி ஆரம்பித்தவர் நாள் தேதி, நட்சத்திரம், எண்கணிதம் பார்த்து கட்சிப்பெயரை வைத்தார். அவ்வாறே கட்சியையும் தொடங்கியவர் என்பதால் தனது திறமை என்று மக்களை கவர என்ன சொல்லப் போகிறார் இவர் என்பதே பெரிய கேளவியாக எழுந்தது. கட்சி தொடங்கிய அன்று புதுமனைப் புகுவிழா போலவே நெற்றியில் திருநீற்றுடன் காணப்பட்டார். இதை மாற்று மதத்தினர் ரசிக்கவில்லை. ஹீரோவாகவே நடித்தவர் மார்கெட் இழந்தால் என்ன செய்வதென்ற கேள்விக் குறியில் எழுந்ததே வி.காந்ததின் அரசியல் பிரவேசம் என்கிறார்கள். வி.காந்தின் அலுவலகத்தில் வேலைசெய்வோர் அவர் சாதியைச் சேர்ந்தவர் என்ற குற்றச் சாட்டு இருக்கிறது, பாமக சாதிக்கட்சி என்று அறிவித்து வெளிப்படையாக செயல்படுவதைப் போல் இவர் செய்தால் விமர்சனம் வருவது குறையும். குடும்ப கட்சி என்று பிறர் கட்சிகளை குற்றம் சொல்லும் இவரின் கட்சியும் அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் படியே இயங்குகிறது என்றே சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்யும் போது இவருக்கான கொள்கைகள் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஈழத்தமிழ்ர்கள் பற்றி உருகுகிறார், இந்தியா இலங்கைக்கு ஆயுதம் விற்பதை எதிர்க்காமல் சப்பைப் கட்டுகிறார். எல்லாவற்றிலுமே இரட்டை நிலைப்பாடு. விஜயகாந்த் தன் கொள்கைகளால்(!) வளரும் வாய்ப்பு குறைவே, திராவிடக் கட்சிகள் தங்களின் போட்டி அரசியலால் பாமக வை வளர்த்தது போல் வளர்த்துவிட்டால் உண்டு.

திரை நாயகன் பற்றிய புரிதல்கள் எம்ஜிஆர் காலத்திற்கும் வி.காந்த் காலத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் ஏற்பட்ட வெறுப்பில் தங்களின் விருப்பம் (சந்தர்ப்பம் வேண்டி) நாடி சென்ற ரசிகர்கள் தான் வி.காந்த் கட்சியில் இருக்கும் தொண்டர்களில் குறிப்பிட்ட விழுக்காடு என்றே சொல்லப்படுகிறது. வி,காந்தின் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அளவுக்கு பற்று கொண்டவர்கள் அல்ல.

ங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?

ண்மையில் சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதிய போது 'நீங்களெல்லாம் இதை பெரியவிசயமாக எழுதுகிறீர்களே' என்று உயர்வைக் கற்பித்து ஒரு கேள்வியும் இட்டு இருந்தனர். மனிதர்கள் எல்லோருக்குமே கலை, இலக்கியம், இசை இதில் எதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்கும். பொருளீட்டல் தவிர்த்து அன்றாட வாழ்வில் பொழுது போக்கும் ஒரு அம்சம் தானே. அதில் முதன்மையாக வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டவை திரைபடங்கள். திரைததுறையில் பணி புரியும் பல்வேறு திறமையால் சாதனை புரிபவகளில் பலரை எனக்கு பிடிக்கும். பாடகர்கள் எஸ்பிபி, டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சின்ன குயில் சித்ரா, பி.சு்சீலா, நடிகர் / நடிகைகளில்
பத்மினி, நாகேஷ், சிவாஜி கனேசன், நாசர், ரகுவரன், கமலஹாசன் ஆச்சி மனோரமா, சில்க்ஸ்மிதா, நதியா, ரீமா சென், ஸ்ரீதேவி,வைகைபுயல், கவுண்டர், விவேக், 'படிக்காதவன்' வரை ரஜினிகாந்த் என பிடித்தவர்களின் பட்டியல் நீளும். ஏபிநாகரஜனின் வசனங்கள் பிடித்தவை, தில்லான மோகானாம்பாள், முதல்மரியாதை, சேது, அழகி, கமலின் கமர்சியல் கலந்த கலைப்படங்கள், இன்னும் நிறைய படங்கள்.. இங்கே எழுதி மாளாது. சுருக்கமாக சொல்வதென்றால் நல்ல படைப்புகள், படைப்பாளிகள் என பொதுவாக ரசிக்கப்படுவையே தான் எனது விருப்பங்களும்.

'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?

ட்டாமாஷ் என்ற பெயரில் வலைப் பதிவு இருந்தாலும், பதிவில் இடுகைகளில் பெரும்பாலானவை எல்லாம் சீரீயஸ் பட்டாசு வகையாகவே இருக்கிறது. ஒரு வரி எழுத்தினாலும் அதன் பொருளை நகைச்சுவை வடிவிலோ, அழுத்தம் கொடுத்தோ எழுதும் உங்கள் எழுத்துக்கள் அதிலுள்ள கருப்பொருளை பதியவைத்திருக்கிறது. நான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் போது கண்ணில் பட்ட இடுகை பெங்களூரை சீரழித்துவரும் வடநாட்டவர் பற்றியது.

"இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ."

அதை படு கமாடியாக நீங்கள் எழுதி பதிவு செய்திருப்பதைப் படித்த போதே தெரிந்தது, வாசகர் நாடி அறிந்து சரியான எழுத்தில் தனது கருத்தைக் கொண்டு சேர்ப்பவர் இவர் என்றே அறிந்து கொண்டேன்.

நான் பதிவுலகிற்கு வந்த பிறகு வந்த பதிவர்களில், எழுத ஆரம்பித்து வெகு சில நாட்களிலேயே அனைவராலும் படிக்கப்படும் வெட்டிப்பயல் பாலாஜி, டிபிசிடி, பெ.மகேந்திரன், மோகன் கந்தசாமி மற்றும் பரிசல்காரன் ஆகியோர் அனைவரின் கவனத்தைக் ஈர்த்தவர்கள் என்று மற்ற பதிவர்களிடம் சொல்வதுண்டு. தளபோட்சுத்ரி என்ற இலக்கிய வடிவத்தை நீங்கள் எழுதிய போதுதான் அப்படி ஒன்று இருப்பதை அறிந்து கொண்டேன்.

பொதுவாக பாலியல் சார்ந்த வற்றைப் பொதுவில் பேசினால் தன்னைப்பற்றிய பிம்பம் நசுங்கிவிடுமே என்று பலபதிவர்கள் எழுதத் தயங்குவர்; நீங்கள் ஒரு வெளிநாட்டு பாலியல்தொழிலியாளியிடம் பேட்டியை தமிழில் மொழிப் பெயர்த்துப் போட்டு பதிவு செய்திருந்தீர்கள். தன்னைப்பற்றிய இமேஜ் இது என்று எவரும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வகையில் நீங்கள் எதையும் மிகத் துணிவாக எழுதுவது பாராட்டக் கூடியது. இதுபோன்று பிம்பத்துக்குள் சிக்காமல் பதிவு எழுதுபவர்கள் லக்கிலுக் மற்றும் ஜ்யாவ்ராம் சுந்தர் ஆகியோர் மட்டுமே எனக்கு தெரிகிறார்கள்.

உங்கள் கேள்விகளைப் பார்த்த போது இவ்வளவு தெரிந்தவருக்கு எனது பதில்கள் எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஐயப்பட்டே பதில் அளித்தேன். நான் அங்கே எழுதியிருப்பவையாவும் பதிவுலகில் எழுத வந்த பிறகு அறிந்து கொண்டவைதான். எனது வாசிப்பு அனுபவங்களின் வழி எனக்கு ஏற்பட்ட சமூகம் தொடர்பான எண்ணங்களை வைத்தே உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். பதிவுலகிற்கு வந்து குறுகிய காலத்தில் சமூக நலன் தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் பலவற்றைத் தொட்டு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது, பதிவுலகம் உங்களுக்கு மற்றொரு களம் தான். மற்றபடி அரசியல், சமுகம் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்றே உங்களின் எழுத்துக்கள் வழி உங்களைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் எழுதுவது பயனா என்று ஆராயாமல் நமது கருத்துக்களை விதையாக்கினால் என்றோ ஒரு நாள் நல்ல சூழலில் அது முளைவிட்டு பயிராகும். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து விதையாக்குங்கள். வாழ்த்துக்கள்.





வார இருதிநாட்களை எனக்காக ஒதுக்கிய நண்பர் கண்ணனுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வலைப்பூவின் 75 -வது பதிவில் மீண்டும் அவரது பங்களிப்பைக் வேறொரு வடிவத்தில் கோருவோம்.

Read More......