"ச்சும்மா ட்டமாஷ்" மின்னிதழின் சென்னை நிருபர் மாலினி பார்த்தசாரதிக்கு திராவிட திலகம், பதிவர் திரு புதுகை அப்துல்லா அளித்த பேட்டி பதிவுலக நண்பர்களுக்காக இப்பதிவில் வெளியாகிறது.
மாலினி: வணக்கம், திரு புதுகை அப்துல்லா, உங்க பெயரே வித்தியாசமா இருக்கு, பெயர் காரணம் சொல்லுங்க!
புதுகை: வணக்கம் மாலினி அண்ணே! என் இயற்பெயர் கூட என் ஊர் பெயரையும் சேர்த்திருக்கேன் அண்ணே! அதான் என் பெயர் அப்படி இருக்கு.மாலினி: அப்படியா? அப்துல்லா என்ற ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லையே! எந்த மாவட்டத்தில் இருக்கு?
புதுகை: அண்ணே! இந்த நக்கல் எல்லாம் 'ச்சும்மா ட்டமாஷோ' -ட நிறுத்திக்கணும், புரிஞ்சிதா! புதுகை ஊரு, அப்துல்லா பேரு!...ம் அடுத்த கேள்வி!மாலினி: நீங்க ஏன்! எல்லோரையும் அண்ணே! அண்ணே! என அழைக்கிறீர்கள்?
புதுகை: தமிழ்மனத்தில் இருக்கிற எல்லாருக்கும் அது ஏன்னு தெரியும், உங்களுக்கு தெரியாதா?மாலினி: அது தெரியும்! ஆனா என்னையும் அண்ணே -ன்னு கூப்பிடுறீங்களே! அது கொஞ்சம் ஓவரா தெரியலையா?
புதுகை: உங்கள மட்டும் இல்ல, பாரிஸ் பதிவர் ராப் -ஐ கூட அண்ணேன்னு தான் கூப்பிடுவேன், அவரும் என்னை தங்கச்சி -ன்னுதான் கூப்பிடுவார்.மாலினி: !!!!!!!
புதுகை: என்னாண்ணே! பேஸ்த்தடிச்சு போய்ட்டிங்க! பயப்படாம அடுத்த கேள்விய கேளுங்க!மாலினி: ஈழம் பிரச்சினைக்கு என்ன காரணம் -னு நீங்க நினைக்கிறீங்க?
புதுகை: தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. இதுதான் பிரச்சினை!மாலினி: புதுகை சார்! உங்க பதில் எனக்கு புரியலைன்னாலும் பரவாயில்ல, படிக்கறவங்களுக்காவது புரிய வேணாமா? குழப்பாம சொல்லுங்க, ஈழப்பிரச்சினைக்கு என்ன காரணம்?
புதுகை: ஓட்டு அரசியலுக்கு வந்தாச்சு. கம்முன்னு ஈழம், தமிழ் -ன்னு வாய்ச்சவடால் விட்டு ஓட்டு பொறுக்காம எதுக்கு கம்யூநிஸ்ட்டுகள் உண்ணாவிரதம் இருக்கணும்? அதனால வந்த பிரச்சினை தான் இது. எப்படியோ பிரச்சினை ஒரு வழியா தீர்ந்தது. நிம்மதியா இருக்கு அண்ணே!மாலினி: என்னது பிரச்சினை தீர்ந்ததா? என்ன சொல்றீங்க!
புதுகை: அதான்! பாசில் வந்துட்டு போனாரே! பிரச்சினை தீர்ந்த மாதிரிதான! என்னண்ணே, இல்லன்றிங்களா? (முறைக்கிறார்)மாலினி: சரி என்னமோ போங்க! பிரச்சினையை யார் தீர்த்தது -ன்னு நினைக்கிறீங்க?
புதுகை: வேற யாரு? எல்லாம், எங்க பாஸ் தான் காரணம்.மாலினி: (உண்மையில் கடுப்பாகிறார்) இந்த ஒரு தரம் மன்னிச்சிடுங்க புதுகை, இனி உங்கள பேட்டி எடுக்கவே வர மாட்டேன். தயவு செய்து, உங்க பாஸ் எப்படி காரணம் -னு விளக்குறீங்களா?
புதுகை: சரி சரி அழாதீங்க அண்ணே! சொல்றேன். எங்க பாஸ் எனக்கு ஒரு வாரம் லீவு கொடுக்காம இருந்திருந்தா நான் பாசில் -லோட படகு வீட்டுக்கு போய் டேரா போட்டிருக்க மாட்டேன். போகாம இருந்திருந்தா பாசில் அலறி அடிச்சிட்டு டெல்லி வந்திருக்க மாட்டார். ஈழம் பிரச்சினை தீர்ந்திருக்காது அல்லவா?மாலினி: அண்ணே! உங்க கால காட்டுங்க!!! (மவுன மாகிறார்)
புதுகை: என்னண்ணே! கேள்வி அவ்வளவு தானா?மாலினி: இன்னும் ஒரு கேள்வி இருக்குண்ணே!
புதுகை: என்ன! "அந்த பாசில் வேற, இந்த பாசில் வேற, அப்பறம் எப்படி உங்க பாஸால பிரச்சினை தீர்ந்தது?" அப்படின்னு கேட்க போறிங்களா?மாலினி: ச்சே ச்சே! நான் ஏன் அப்படியெல்லாம் கேட்கப்போறேன்! ஏதாவது மொக்கை பதில் இல்லாமையா இருக்கும் உங்க கிட்ட?
புதுகை: புரிஞ்சா சரி! கேளுங்கண்ணே உங்க கடைசி கேள்விய.மாலினி: "ச்சும்மா ட்டமாஷ்" வலைப்பூ பற்றி உங்கள் கருத்து.
புதுகை: பதிவு தலைப்புல எவன் பேரையாவது போட்டு வம்பிழுக்கறது, எவன் பதிவிலாவது போய் சண்டை வாங்கிட்டு வர்றது -இதெல்லாம் பண்ணாம பதிவு எழுதினா உங்க வலைப்பூ -வை படிக்கிறத பத்தி யோசிக்கலாம். Read More......