உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
15. TBCD உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?
குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?
16. TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்?
நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
17. நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?
விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.
18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?
எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?
19. சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?
தெரியாது.
20. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?
உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.
21. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?
என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான்.
மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.
ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
22. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும்.


ஒப்பீட்டளவில் அறுபது ஆண்டுகாலம் என்பது ஜனநாயகப் பரிணாமத்திற்கு மிகக்குறைவு. உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் இன்னும் குழந்தைதான் என்றாலும் அது ஒரு சவலைக் குழந்தை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்னும் நூறாண்டுகாலம் வளர்ந்தபின்னும் அது சவலையாகத் தான் இருக்கும். அடிப்படை நேர்மை இல்லாத கட்சிகள் நிறைந்த மக்களாட்சியில் ஒன்று மற்றதற்கு முன் உதாரணமாக அமைந்து, சுயநலத்தைப் பொறுத்த அளவில் எங்கும் ஒரே கூட்டுக்கும்மியாக உள்ளது. அதிலுள்ள ஓட்டைகள் அனைத்தும் அகலமானவை. ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன. பெரும்கட்சிகளிடம் அவை ஏகலைவன் போல் பாடம் கற்றுக்கொள்கின்றன. பித்தலாட்ட அரசியலை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்றவை திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி. காமராஜர் தொடங்கிவைத்த வாரிசு அரசியல் திமுக வை குட்டிச்சுவராக்கி உள்ளது.
மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் அவரைப்பற்றி உடன்பிறப்புகளுக்கே முழுதாகத் தெரியுமா என்பது கேள்விக்குறியே! திராவிடம் குறித்து அவர் மேடையில் எங்காவது பேசினாரா என்பதுபற்றியும் தகவல் இல்லை. முதல்வரானால் மத்திய அரசிடம் இவர் எதை வலியுறுத்துவார்? அதிக நிதி வேண்டும் அல்லது குறிப்பிட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என வலியுறுத்தக்கூடும். நிதிக்கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ இவரது தலையீடு அல்லது வலியுறுத்தல் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. 
எனது மற்றொரு வலைப்பூவான
2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.

சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.
சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்..jpg)



